Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

உதிர்ந்த ரோஜா

சந்திரகௌரி சிவபாலன்


பவளமல்லிகை வீட்டு முற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் வண்ணம் வண்ணமாய் வட்டமிட்டிருந்தன. கூந்தலைத் துவாயினால் உலர்த்திய வண்ணம் புத்தம் புதிய நாளின் வருகையை ரசித்த வண்ணம் சுபா முற்றத்திற்கு வந்தாள். ஒரு ரோஜாவை முகர்ந்து பார்க்கக் குனிந்தவளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தாலியானது அம்மலரின் மேல் பட்டதும் அம்மலரின் இதழ்கள் உதிர்ந்து கீழே மண்படுக்கையில் தஞ்சமடைந்தன. தன்னை உருக்குலைத்த தாலியை ஒரு கணம் உற்று நோக்கினாள், சுபா.

அந்த நாளின் இனிமை எங்கோ பறந்து போயின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெரியோர் வாழ்த்த அவள் கழுத்தில் ஏறிய அந்த மாங்கல்யம், சாத்திரம் சம்பிரதாயங்களைக் கேலி செய்வதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது.

அறிந்த குடும்பம், கௌரவமான குடும்பம், அருமையான பெற்றோர் பெற்றெடுத்த ரவி, கனடாவிலிருந்து சாவகச்சேரி வந்தடைந்தான். வாலிப்பான அவன் உடற்கட்டு அவன் வாழ்க்கை பற்றி ஆராயாது சுபா மனதுக்கு வேலி போட்டது. மூத்தோர் பெரியோர் வாழ்த்த ரவி கட்டிய மாங்கல்யம் சுபா மார்பிலே தவள்ந்தது. கல்யாணம் முடிந்தது ரவி கனடா திரும்ப வேண்டிய நாளும் வந்தது. ''எங்களுடைய கல்யாணப்படத்தைக் காட்டித்தான் உங்களுக்கு விசா எடுக்க வேண்டும். எடுத்த பிறகு அறிவிக்கின்றேன். ரிக்கட் போட்டு கனடா வாருங்கள்'' என்று ரவி அழகாகக் கூறி விமானமேறிப் போனவன்தான். கழுத்தில் ஏறிய தாலியும் வயிற்றில் ஏறிய குழந்தையையும் சுமந்து அவன் விசா எப்போது பெறுவான் என்று தவமிருந்தாள், சுபா. மனதில் கவலை கவ்விக் கொண்டால் வயிற்றில் பிள்iளையும் தாக்கத்தை நோக்கும் என்னும் துயர் அறிந்தும் அறியாதவளாய்ச் சுபா பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஆறுமாத காலங்களே ஆசையோடு வளர்த்த பிள்ளை அப்பா யாரென்று அறியாமலே ஆண்டவன் காலடியை நாடிச் சென்று விட்டது. இவ்வாறான சோகத்தில் இருந்தவளுக்கு அன்றொரு நாள் சுகமான செய்தியொன்று வந்தது.

விசா கிடைத்து விட்டதாகவும் கடவைச் சீட்டு எடுத்துக் கொண்டு கனடா வரும்படியும் அனைத்து விபரங்களும் அடங்கிய தபால் கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் தெரியாது குதித்தாள், சுபா. தன்னை வாழவைக்கும் என நம்பிய கனடா மண்ணை அவள் பாதங்கள் தொட்டது. ரவியைக் கண்டவுடன் தன் மனதுள் அடக்கி வைத்திருந்த சோகங்களையெல்லாம் கொட்டி அழுதாள். அவளுக்கு ஆறதல் கூறிய ரவி, கனடாவில் வாழும் தனது அக்கா வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான். அன்று இரவு “ஏன் எங்களுக்கென்று தனியாக வீடு எடுக்கவில்லையா'' என்று சுபா கேட்டாள்.

'' இந்த நாட்டில் வீடு எடுப்பது ஒன்றும் சின்ன விஷயமில்லை. இந்த வீட்டில் சமாளிப்போம். வசதியாக ஏதாவது வீடு கிடைத்தால், தனியாகப் போகலாம்'' என்று கூறிச் சமாளித்தான். சுபாவும் தனிக்குடித்தனம் போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாள் அதுவரை இவ்வீடு அவளுக்குச் சிறையாகவே பட்டது. சுதந்திரம் என்பது சொல்லிக் கொள்ளாமலே அவளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. கட்டுப்பாடு என்பது கணக்கு வழக்கின்றி அவ்வீட்டில் ஆட்சி புரிந்தது.



ஒருநாள் தொலைபேசி அலறியது. அதை எடுப்பதற்காக அவள் ஓடியபோது ' சுபா எதற்காக நீ ஓடுகின்றாய்? இங்க வரும் ரெலிபோன் அழைப்பெல்லாம் உனக்குத்தானா வருகின்றது? அதை அக்கா எடுப்பா'' என்று தடுத்துவிட்டான் ரவி. ஆனால், ஜேர்மனியிலிருந்து சுபாவினுடைய அக்காதான் தொலைபேசி எடுத்துள்ளார் என்று தெரிந்ததும் ' சரிசரி போய்க் கதை. ஆனால், இங்கத்தைய கதை ஒன்றையும் உளறித் தள்ளாதே” என்று கட்டளையாகக் கூறிப் பக்கத்தில் இருந்து விட்டான். அந்நியநாட்டில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், எல்லாம் கிடைக்கும் என்றுதான் இலங்கையில் இருக்கும்போது நினைத்திருந்தாள். ஆனால், வாழ்க்கைச் சுதந்திரத்தையே கனடாவில் சுபா இழந்து நின்றாள். ரவி இரவு வேலை என்று மாதத்தில் சில நாள்களே வீட்டில் தங்குவான். எதற்கெடுத்தாலும் சுபாவில் எரிந்து விழுவான். வேலைக் கஷ்டத்தில் இவ்வாறான போக்கில் ரவி இருக்கின்றான் என நினைத்து எதுவுமே பேசாது காலத்தைக் கடத்தினாள், சுபா. தன்னுடைய துயரை வெளியில் வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாட்டினுள் சுபா அடைக்கப்பட்டாள்.

திடீரென ஒருநாள் ரவி, '' சுபா! இங்கு அக்காவினுடைய வீட்டில் தங்குவது பிரச்சினை போல இருக்கிறது. அடுத்த கிழமை நீ இலங்கைக்குப் போவதற்கு ரிக்கட் போட்டிருக்கிறேன். ஊருக்குப் போ. வீடு எடுத்ததன் பிறகு அறிவிக்கின்றேன். திரும்பி வா. என்ன சரிதானே? '' என்றான், ரவி. முடிவை எடுத்ததன் பின் வினா அவசியம்தான? இதற்குமேல் எதுவும் கதைப்பதற்கு சுபா மனம் இடம் தரவில்லை. கட்டுப்பாடான சூழலில் இருந்து நாட்டுக்குப் போவதே அவளுக்குச் சரியெனப்பட்டது. நகை போட்டு, உடை உடுத்து கண்ணாடி அலுமாரியில் அழகுக்கு வைக்கும் பொம்மையல்லவே அவள். ' சரி அம்மாவையும் பார்க்க வேண்டும் போல்த்தான் இருக்கின்றது. நான் போகின்றேன்” என்றாள்.

நாடு திரும்பும் வேளை வந்தது. விமான நிலையம் வந்தடைந்தாள். சந்தர்ப்ப வசமாக சுபா தனது பழைய சிநேகிதியைக் கண்டாள். விமானத்தினுள் அருகருகே இருப்பதற்காகப் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடித் தனது சிநேகிதியின் அருகே அமர்ந்து விட்டாள். அவள் சிநேகிதியும் '' என்னடி சுபா, எப்படி கனடா வந்த நீ ? எனக்கு ஒரு ரெலிபோன் எடுத்திருக்கலாமே? ரவியோட நின்றாயே? என வினாவுக்கு மேல் வினா எழுப்பினாள். ''அவரை உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள் சுபா. ''இதென்ன என்னுடைய மகளோடதானே ரவியின்ர மகளும் Kindergarden இலே படிக்கின்றா. நான் அடிக்கடி கதைக்கிறனான்'' என்றாள் சிநேகிதி. சுபாவுக்கு நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது. அவளது முகமாற்றத்தை உற்று நோக்கிய சிநேகிதியும் '' ஏன் சுபா ஒரு மாதிரியாய் இருக்கின்றாய்? என்று கேட்டாள்.

''இல்லை. அவர்தான் இலங்கைக்கு வந்து என்னைக் கல்யாணம் செய்து இங்கே என்னை எடுத்தவர். அவருடைய அக்கா வீட்டில்த்தான் இவ்வளவு நாள்களும் நின்றேன். வேறு வீடு எடுத்ததன் பின் என்னைக் கூப்பிடுவதாகச் சொல்லி இலங்கைக்கு அனுப்புகின்றார். என்று கலங்கிய கண்களுடன் விபரத்தை விம்மிவிம்மி வெளிப்படுத்தினாள்.



''ரவியைப் பற்றிய விபரம் முன்னமே நீ அறியவில்லையா சுபா. ஒன்றும் விசாரிக்காமலேயா இந்தக் கல்யாணம் செய்தாய்? எதற்காக இப்போது ஊருக்குப் போகின்றாய். கனடாவிலேயே நின்றிருக்கலாமே என்று கேட்ட சிநேகிதியிடம் ''இல்லை இங்கே இருப்பதைவிட ஊருக்குப் போய் என் அம்மாவின் மடியில் விழுந்து ஓ..... என்று அழுதால்த்தான் என்னுடைய மனப்பாரம் குறையும். என் ஜீவனும் நிம்மதியடையும். என்று கூறி இலங்கை வந்தடைந்தாள்.

காலம் கடக்கின்றது. கனடா செல்லும் காரியம் நடைபெறவில்லை. அப்படியென்றால் ரவிக்கு இவள் யார்? வைப்பாட்டியா? மனைவியா? அவளைக் கனடாவிற்கு அழைத்ததன் காரணம்தான் யாது? புரியாத புதிருக்கு இன்னும்தான் சுபா விளக்கம் தேடுகின்றாள்.

தன்னை உருக்குலைத்த தாலியினால், இப்போது உருக்குலைந்து கிடக்கும் ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தாள், சுபா. ஒரு கல்லாடிக் குவளையினுள் நீரிட்டு அந்த இதழ்களை அதனுள் இட்டாள். உதிர்ந்த இதழ்கள் வாடிச் சருகாகும் வரை அதற்கு வாழ்வளிக்கும் முனைப்பில் இறங்கினாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p101.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License