இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பதவிப் பிரமாணம்

முகில் தினகரன்


மாலை ஏழு மணி.

தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் எஸ்.எம்.பாலகிருஷ்ணனும், அவரது உதவியாளர் சண்முக நாதனும்.

இடைத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எம்.பாலகிருஷ்ணனின் வெற்றி நிலவரம் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.

அதே போல், வெற்றி பெற்றால் கிடைக்கவிருக்கும் மந்திரி பதவியும் ஒரு ஊசலாட்டத்தில்தான் இருந்தது.

'அண்ணே…எப்பவுமே இடைத் தேர்தல்னு வரும் போது ஆளுங்கட்சிக்குத் தாண்ணே சான்ஸ் அதிகம்… அதனால கண்டிப்பா நீங்கதாண்ணே… ஜெயிப்பீங்க…” உதவியாளர் தன் விசுவாசத்தை வார்த்தைகளாக்கி விரித்தார்.

'ம்ம்ம்…அதெல்லாம் சரிப்பா…மந்திரி பதவின்னு வரும் போது …அந்த மலையனூர் முருகு போட்டியா இருக்கானே?” எஸ்.எம்.பாலகிருஷணன் தன் கவலையைக் கொட்டினார்.

'ஆமாம்ண்ணே…நீங்க சொல்றது சரிதாண்ணே… நம்ம கட்சி ஆளுங்களிலேயே பாதிப் பேர் உங்களுக்கும்… பாதிப் பேர் அந்த மலையனூர்க்காரனுக்கும்தான் மந்திரி பதவின்னு பேசிக்கறாங்க… ரெண்டு பேருமே சரிக்குச் சரியா இருக்கீங்கண்ணே… எனக்கே குறிப்பிட்டுச் சொல்ல முடியலைன்னா பார்த்துக்கங்களேன்…! கட்சித் தலைவர் தேவநாதன் கைலதான் இருக்கு…யாருக்கு மினிஸ்டர் போஸ்ட்ங்கறது”

'ஏதாவது ஒரு புது டிரிக் பண்ணித்தான் மக்கள்கிட்ட ஓட்டைப் பிடுங்கி ஜெயிக்கணும்… அதே மாதிரி ஏதாச்சுமொரு தகிடுதத்தம் பண்ணித்தான் மந்திரி பதவியையும் ‘லபக்‘ பண்ணனும்… அதுக்காகத்தான் நம்ம ஆலோசகர் டேனியல் ஜுலியட்டோட மொபைல் நெம்பரை டிரை பண்ணிட்டே இருக்கேன்… கெடைக்கவே மாட்டேங்குது” எஸ்.எம்.பாலகிருஷணன் சொல்லியபடியே இன்னொரு முறை முயற்சி செய்ய, ரிங் போனது. 'அட…பரவாயில்லை…ரிங் போவுது… ஹலோ…வணக்கம்… நான் எஸ்.எம்.பி. பேசறேன்”



'வணக்கம் எஸ்.எம்.பி.சார்… எப்படி இருக்கீங்க?... எப்படிப் போயிட்டிருக்கு உங்க பிரச்சாரமெல்லாம்?” ஆலோசகர் டேனியல் ஜுலியட் உற்சாகமாய்க் கேட்க,

'ப்ச்….ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை… ஜெயிப்புக்கே ஹோப் இல்லே”

'அய்யய்ய.. என்ன இப்படிப் பேசறீங்க?... நம்பிக்கை வேணும் சார்…வெற்றிக்கே அதுதான் சார் ஆதாரம்”

'யோவ்…அதெல்லாம் பேச்சுக்கு நல்லாத்தான்யா இருக்கும்… நிஜத்துல வரும் போது வயத்தைக் கலக்குதுய்யா” எஸ்.எம் பாலகிருஷ்ணன் தன் உண்மை மனநிலையைச் சற்றும் கூச்சமின்றிச் சொன்னார்.

'ம்ம்ம்… ஓ.கே.சார்… நான் இப்பலே புறப்பட்டு அங்க வர்றேன்”

'வாய்யா.. வா… உன்கிட்ட ஆலோசனை கேட்கத்தான் நானும் காத்திட்டிருக்கேன்” சொல்லி விட்டுப் போனைத் துண்டித்தார் எஸ்.எம். பாலகிருஷ்ணன்.



அடுத்த அரை மணி நேரத்தில் எஸ்.எம் பாலகிருஷ்ணன் வீட்டு ‘மெத்…மெத்‘ சோபாவில் தாடையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார் டேனியல் ஜுலியட்.

'யோவ்…என்னய்யா நீ?... ஏதாச்சும் ஐடியா சொல்லுவேன்னு பாத்தா இப்படிச் சிலையாட்டமா உட்கார்ந்திட்டிருக்கே…” எஸ்.எம்.பாலகிருஷ்ணன் அவசரப்பட,

'சார்... ஒரு ஐடியா… அதுக்கு நீங்க கொஞ்சம் நடிக்கணும்… முடியுமா?”

'யோவ்... ஜெயிக்கறதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்… சொல்லுய்யா… குட்டிக்கரணம் போடணுமா?”

வாய் விட்டுச் சிரித்த டேனியல் ஜுலியட், 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… உங்களோட கடைசி ப் பிரச்சாரக் கூட்டம் எங்கே…? எப்போ?”

'ம்ம்ம்….பதிமூணாம் தேதி… மாலை நாலு மணிக்கு… தெப்பக்குள மைதானத்துல… ஏன்…. எதுக்குக் கேட்கறீங்க?”

'ஓ.கே… அந்த மேடைல… உங்களுக்கு மாரடைப்பு வருது… நீங்க நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சாயறீங்க…உங்களை அள்ளிப் போட்டுக்கிட்டு உங்க பிரச்சார வேன்… கே.ஜி.ஹாஸ்பிடலுக்குப் போவுது… அங்க நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுல அட்மிட் ஆகறீங்க… அடுத்த இரணடாம் நாள் எலக்ஷன்… அன்னிக்கும் நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுலதான் இருக்கீங்க…” டேனியல் ஜுலியட் சொல்லிக் கொண்டே போக,



இடையில் புகுந்தார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், 'ஓ.கே… ஓ.கே… புரிஞ்சிட்டுது… புரிஞ்சிட்டுது… அனுதாப ஓட்டுக்கு அடி போடுறீங்க… அப்படித்தானே?”

'கரெக்ட் சார்… கடைசி நிமிஷத்துல நடக்கறதுதான் மக்கள் மனசுல நிக்கும்… அதுதான் அவங்க ஓட்டைக் கூடத் தீர்மானிக்கும்…” நம்பிக்கையுடன் சொன்னார் டேனியல் ஜுலியட்.

'பார்த்தியா… இதுக்குத்தான்யா நீ வேணும்கறது…” சொல்லிவிட்டு டேனியல் ஜுலியட்டின் முதுகில் தட்டிக் கொடுத்தார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன்.

சிறு வயதில் பள்ளி நாடகங்களில் நடித்த சிறு சிறு அனுபவங்களையும், சினிமாக்களில் பார்த்த மாரடைப்புக் காட்சிகளையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, பதிமூணாம் தேதி மேடையேறி, அனல் பறக்க… ஆக்ரோஷம் தெறிக்க… விழிகள் பிதுங்க… கழுத்து நரம்புகள் புடைத்தெழ… தெப்பக்குள மைதானத்தில் பேசி முடித்த எஸ்.எம்.பாலகிருஷ்ணன், டேனியல் ஜுலியட் ஐடியாபடி,

திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார்....

துடித்தார்.

துடிதுடித்தார்.

திட்டமிட்டபடியே பிரச்சார வேன் அவரை அள்ளிச் சென்று, கே.ஜி.மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தது.

கட்சித் தலைவரும், கட்சியின் இதர முக்கியப் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து அவசர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் தங்கள் வேட்பாளரை காண முடியாமல் கவலையோடு திரும்பினர்.

பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்தச் செய்தியை பரபரப்பாய் வெளியிட்டு எதிர்க்கட்சி வேட்பாளரை சோகத்தில் ஆழ்த்தின.

பிரச்சாரம் ஓய்ந்தது.



வாக்குப் பதிவு தினத்தில் நிலவரத்தைத் தன் உதவியாளர் சண்முகநாதன் மூலம் தெரிந்து கொண்ட எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மகிழ்ச்சியில் மிதந்தார். 'ஹா..ஹா..ஹா.. வெற்றிக்கனியும் எனக்கே… மந்திரி பதவியும் எனக்கே”

நான்காம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப் பட்டதும், ஓடோடி வந்தார் உதவியாளர் சண்முகநாதன், 'அண்ணே….நான் சொன்ன மாதிரியே நீங்க ஜெயிச்சிட்டீங்க”

'பின்னே..சாதாரண நடிப்பா நடிச்சேன்?...சிவாஜி கணேசனையே மிஞ்சுற அளவுக்கல்ல நடிச்சேன்?... சரி..சரி.. மொதல்ல அந்த டேனியல் ஜுலியட்டைக் கூப்பிடு… இந்த ஐடியாக் குடுத்ததற்காக ஒரு பாராட்டு தெரிவிச்சிடலாம்”

மொபைலைத் தன் உதவியாளரிடம் நீட்டிய எஸ்.எம்.பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியின் இடதுபுறம் லேசாய் ஒரு வலி தெரிய, முகத்தைச் சுளித்தார்.

'அண்ணே…டேனியல் சார் லைன்லே” சண்முகநாதன் மொபைலைத் தர,

வாங்கிப் பேசினார் எஸ்.எம்.பாலகிருஷ்ணன். 'யோவ்.. டேனியல்… இனிமேல் நீதான்யா என்னோட நிரந்தர அரசியல் ஆலோசகர்… படா கில்லாடிய்யா நீ… அந்த சாணக்கியனையே மிஞ்சிட்டே போ…”

முதுகிலிருந்த வலி லேசாய் இடம் மாறி நெஞ்சின் இடப் பகுதிக்கு வந்தது. தன் இடது கை கட்டை விரலால் வலிக்கும் பகுதியை இதமாய்த் தேய்த்துக் கொண்டார்.

'எஸ்.எம்.பி. சார்… உங்களை எதிர்த்து நின்னானே அந்த எதிர்க்கட்சி வக்கீல்… டெபாசிட்டே காலியாம்”

'ஹா…ஹா…ஹா…' வலியின் தீவிரம் சிரிப்பை மட்டுப் படுத்த நிறுத்திக் கொண்டார்.

'எஸ்.எம்.பி. சார்…உங்க தலைவர் அறிவிச்சிட்டார்…மினிஸ்டர் உங்களுக்குன்னு… மருத்துவ மனையிலிருந்து திரும்பியதும்… பதவிப் பிரமாணமாம்”



'ஓ! … அ…ப்….ப….டி….யா….?' வலி உச்சமாகி குரல் சற்று விநோதமாய் மாற, போனை அணைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டார் 'எஸ்.எம்.பி.

ஐந்தே நிமிடத்தில் பெருக்கெடுத்த வியர்வையில் அவர் உடல் தெப்பலாய் நனைய, கண்கள் மேல் நோக்கிச் செருக,

'அண்ணே…அண்ணே” தன் உதவியாளர் கூவுவது எங்கோ தூரத்தில் கேட்க.

மெல்ல…மெல்ல... சிவலோகப் பதவியைப் பிரமாணம் செய்து கொண்டார் 'எஸ்.எம்.பி.

பத்து மாதங்களுக்குப் பிறகு,

இடைத் தேர்தல் அறிவிப்பு வர,

'வெற்றி என்னவோ கொஞ்சம் நெருடலாய்த்தான் இருக்கு… ஏதாச்சும் ஐடியாப் பண்ணித்தான் ஜெயிக்கணும் போலிருக்கு…என்ன பண்ணலாம் சொல்லுங்க டேனியல் ஜுலியட்!”

ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்டிருந்த மலையனூர் முருகு தன் அரசியல் ஆலோசகரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p112.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License