இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

தனி வீடு

அண்டனூர் சுரா


அம்மா மாட்டுக் கொட்டகைக்குள் சாணத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். முதுமை அவளை முழுவதுமாக தின்னாமல் எலும்பை மட்டும் விட்டு வைத்திருந்தது. காதோர முடிகள் புளிச்சைத்தண்டு நாரைப் போல வெளிர்த்திருந்தன. கொசுவம் மாதிரியான சுருக்கம் முகத்தில் அப்பியிருந்தன.

முடிச்சை அவிழ்க்க இதுதான் சரியான தருணம் என எனக்குப்பட்டது.

“அம்மா ......“

தலையைத் தூக்கிப்பார்த்தாள்.

“நானும் காஞ்சனாவும் கொஞ்ச நாளைக்கு வெளியே தங்கிக்கிறட்டுமா?“

இடுப்பின் பின்புறம் இரண்டு கைகளையும கொடுத்து நிமிர்ந்தாள். நெட்டிகள் பொடபொடவென பறிந்தன.

“நீயும் காஞ்சனா மட்டும் தானா. இல்ல புள்ள மதனும்மா?“

“மதன விட்டுட்டா போக மடியும் ? அவனும் தான்”



சமிஞ்கையாக ஒரு பார்வை பார்த்து விட்டு சாணக்கூடையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“முப்பது வருஷத்துக்கு முன்னாடி சாணிக்கூடை இருக்கிற இடத்தில நீ இருந்தேடா மகனே “

அம்மா எதையும் நேராக பேசக்கூடியவள் அல்ல. அவளுக்கென தனி நடை இருக்கு. சாணத்தை கொட்டிவிட்டு மறுபடியும் சாணத்தை பெருக்கும் போது அம்மாவைப் பார்க்க பாவமாகத் தெரிந்தாள்.

“இரும்மா ....குப்பைய நான் தூக்கிவிடுறேன்.“

முந்தாணையை எடுத்து லபக்கென்று சொருகிக் கொண்டவள் அரை வட்டமடித்து கூடையை இடுப்பில் சாத்திக் கொண்டாள்.

“மாட்டுச்சாணம் உனக்கு இப்ப குப்பையாப்போச்சு?“ என சொல்லிவிட்டு பூமி குலுங்க நடந்தாள்.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேனு இப்படியெல்லாம் பேசுறே?“



கூடையை கீழே போட்டவள் முந்தாணையை கைப்பிடிக்குள் சுருட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டாள்.

“இப்ப நீ பொண்டாட்டி புள்ளைய அலைச்சிக்கிட்டு ஊர விட்டு கிளம்புனா, ஊருசனம் என்னடா சொல்லும். வீட்டுக்குள்ளே எதோ சலசலப்புனு காது கடிச்சிக்கிற மாட்டாங்க?“

“ஊர் சனத்துக்காகவாம்மா வாழ முடியும்?“

“பின்னே........ மனுசன்க துணி உடுத்துறமுனா எதுக்கு உடுத்துறோம்? அடுத்தவங்களுக்காகதான் உடுத்துறோம். “

“அப்படியே பேசினாலும் எத்தனை நாளைக்குத்தான் பேசுவான்க. ஒரு வாரம்? . இல்ல ஒரு மாதம்?”

“நீ பொம்மணாட்டி பேச்சைக்கெட்டுக்கிட்ட அவள் பின்னாடி போறத காலாக் காலத்துக்கும் பேசுவாள்வடா”

என் ஆழ்மனதில் சுருக்கென்று ஒரு தையல் விழுந்தது.

தூரத்தில் காஞ்சனா அன்னக் கூடையை கழுவும் பாவணையில் நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். கீதாரி அசரும் நேரத்தில் வேலியைத் தாண்டும் செம்மறி ஆட்டைப் போல அம்மா என்னை கவனிக்காத நேரம் பார்த்து காஞ்சனாவை கவனித்தேன்.

வாயை நெளித்து இளக்காரம் செய்தாள்.



அம்மாவைப் பேச விட்டால் நிறைய பேசுவாள். காஞ்சனா என்னும் பிம்பம் வேலி படலுக்குள் நிழலாட மனதில் எழும் கொந்தளிப்புகளை மாத்திரையைப் போல விழுங்கிக் கொண்டு அடுத்த வேலைக்கு எட்டுப்போட்டாள். என் நினைவுகளோ கடந்தக் காலத்திற்குள் போய் சொருகிக் கொண்டது.

“நகரத்து பொண்டுக தாலிக்கயிற தங்கத்தில கேட்பாள்வ . தனிக் குடித்தனம் வைக்க சொல்லுவாள்வ. விடிஞ்சா சுடிதார், இருட்னா நைட்டி . தஸ் புஸ்னு மணிக்கணக்கில் பேச்சு. மாமியார் பிரச்சனைக்கு புருசன கோர்ட் படியில ஏத்துவாள்வ. நீ பாத்திருக்கும் பொண்ணு காஞ்சனா எப்படிடா?“

“அப்படியெல்லாம் இல்லம்மா.காஞ்சனா ரொம்ப நல்ல பொண்ணு”

“நானும் விசாரிச்ச வரைக்கும் அப்படிதான் தெரிஞ்சது. அப்பறம் நடக்கப்போற கதையெல்லாம் , கடவுளு நம்ம தலையில போட்ட எழுத்து . கல்யாணத்துக்குப் பிறகு கிராமத்திலேயே இருக்க பழகிக்கிருவாளா?“

“ம். இருப்பாம்மா“

அம்மாவும் நானும் இப்படி பேசிக் கொண்டது நேற்று நடந்தது போலவே இருக்கு . ஆனால் எட்டு வருசமாச்சு.



காஞ்சனா அவசரமாக என்னை அழைத்தாள். நிகழ்காலத்திற்குள் வந்தேன்.

“பேசச் சொன்னா தவளைய முழுங்கிய பாம்பாட்டம் பம்முறீங்க. பெத்த அம்மாக்கிட்ட பேசுறதுக்கே இப்படி. எல்லாம் என் தலைஎழுத்து“

“என்ன நான் பம்முனேன்?“ கோபமாக கேட்டேன்.

“நீயும் அப்பாவும் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருங்க. நான் கொஞ்ச நாளைக்கு வெளியிலே தங்கிக்கிறேனு பட்டுனு போட்டு உடைக்க வேண்டியது தானே”

“நீ நினைக்கிற மாதிரி இல்ல காஞ்சனா ,பெத்தவங்களுக்கிட்டே வார்த்தய அளந்துதான் வைக்கணும்“

“நான்தான் அப்பவே கேட்டேன்ல. தனிக்குடித்தனமா நம்மள வைப்பாங்கலானு? அதுக்கு அப்ப நீங்க என்னச் சொன்னீங்க?“

“வைப்பாங்கனு சொன்னேன்”

“பின்னே ஏன் வைக்கல?“

“கொஞ்சம் பொருத்துக்கோ காஞ்சனா . மதன் படிக்கிற காலத்தில தனியா போயிடுவோம்“

கண்டும் காணாமலும் அதுக்கும் இதுக்குமாக நடந்த அம்மா டீக்கடை போய் திரும்பிய அப்பாவை அழைத்துக் கொண்டு நட்ட நாத்துக்குழியை மறைக்க தண்ணீர் கட்ட கிளம்பி விட்டாள்.

“காஞ்சனா ”

கரு விழிகள் இமைக்குள் சொருக நெற்றியை நிமிர்த்தி பார்த்தாள்.

“சரி உருப்படிகளை எடுத்து வை”

மொட்டு மலர்வதைப்போல மெல்லியதான அவள் இதழ்கள் அசைவுற்றன. அதிலிருந்து ஒரு சொல்லும் வந்து விழுந்தன.

“இப்பவேவா?“

“ம்.இப்பவே தான்.?“

அவளுக்கு கைக்கால்கள் ஓடவில்லை. அவளுடைய மனசு குளிர்ந்தது

”வீடு?“ கேட்டாள்

“பழைய வீட்ல தங்கிக்கிறலாம்”

எரித்து விடுவதைப் போல பார்த்தவள்.. “என்ன விளையாடுறீங்களா?“

“நீ நினைக்கிற மாதிரி இல்ல காஞ்சனா. என்னால அப்படியெல்லாம் திடுதிப்புனு பெத்தவங்கள விட்டுட்டு டவுன்பக்கம் வர முடியாது“



எங்கள் இருவர்களுக்கிடையிலும் கொஞ்ச நேரம் நிசப்தம் நிலவியது.

“இரண்டு மாதம் மட்டும் பழைய வீட்டில் தங்குவோம்..பிறகு உன் விருப்பப்படியே டவுன்“

எனது யோசனை அவளுக்கு சரியென பட்டிருக்கும் போலும் சம்மதித்தாள்.

பழைய வீட்டுக்கும் இப்ப குடியிருக்கும் வீட்டுக்கும் குறுக்கே ஒரு நீரோடைதான். ரோடு சுத்தி வர ஒரு மைல் தூரம் பிடிக்கும்.

தனிக்குடித்தனம் போகப்போகும் குதூகலத்துடன் மகனைத் தேடினாள். மதன் சின்னஞ்சிறு செட்டுகளோடு தெருவில் அவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“மதன்....இங்கே வா உன்னை அப்பா கூப்பிடுறாங்க.”

“போகங்கம்மா நான் விளையாண்டுக்கிட்டுருக்கேன்“

“வாடா அப்பா கூப்பிடுறாங்க“

“போங்க நான் வர மாட்டேன்.“

காஞ்சனா வேகமாக மகனை நோக்கி நடையைக் கட்டினாள். அவன் மண்ணையெல்லாம் குவித்து வீடு கட்டிக் கொண்டிருந்தான். சுற்றிலும் சற்றுச்சுவர் எடுத்திருந்தான் பின்பக்கமாக திரும்பி இரண்டு கால்களையும் ஒன்றுச்சேர்த்து விரல்களால் ரோடு போட்டிருந்தான்.ரோடு வீட்டைச்சுற்றி நெளிந்து வாசலில் வந்து நின்றது.

“மதன்.. இது என்னப்பா வீடா?“

“அய்யே இல்லம்மா. பங்களா“ என சொல்லிக் கொண்டே அவனது விளையாட்டில் துடிப்பாக இருந்தான்.



அவளுக்கு வந்த சிரிப்பை வெடிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காஞ்சனா, மகன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டையும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பங்களாவிற்கு அருகில் குச்சி ஒன்று ஊன்றியிருந்தது.அதைப் பார்த்துக் கேட்டாள் “இது என்னப்பா மரமா?“

“ஊகூம். அது டவர்மா. நாம போன் பேசனுமில்ல“

தூரத்தில் ஒன்றிரெண்டு தென்னம் கீற்றை வைத்து சிறியதாக கொட்டகை ஒன்றும் போட்டிருந்தான். அந்த கொட்டகையை நீண்ட நேரமாக பார்த்திருந்தவள் பிறகு கேட்டாள.

“மதன் என்னப்பா நீ கக்கூசை கொண்டுப்போய் அவ்ளோ தூரத்தில கட்டிருக்கே?“

“என்னம்மா நீ எல்லாத்தையும் தப்புத்தப்பாகவே சொல்றே“

“பின்னே என்னப்பா அது?“

“தனி வீடு வேணுமுனு அப்பாக்கிட்ட சண்டை போடுற மாதிரி எங்கிட்டேயும் நீங்க சண்டை போடக்கூடாதுனு உங்களுக்கான தனி வீடும்மா அது.”

பிரக்ஞை தப்பிய நிலையில் இடுங்கிப்போய் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காஞ்சனா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p114.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License