இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

என் சாவுக்கு நாலு பேர்!

முகில் தினகரன்


அறைக்கதவு 'தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு பாய்ந்து சென்று கதவைத் திறந்தான்.

கண்ணன் நின்றிருந்தான் கலவர முகத்துடன்.

'டேய்…கண்ணா…என்னடா?…என்னாச்சு?…ஏன் ஒரு மாதிரி பதட்டமாயிருக்கே?”

சட்டென்று உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டவன் தன் பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து. அந்தக் குறுந் தகவலைக் காட்டினான்.

'என் சீனியர்களான சுரேஷ்....கண்ணன்…வேணு…மற்றும் சக்தி ஆகியோர் என்னை மிகவும் கீழ்த்தரமாக ராகிங் செய்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்…என் சாவிற்கு இந்த நால்வருமே காரணம்…இப்படிக்கு….சீனிவாசன்.”

அந்தக் குறுந் தகவலைப் படித்து முடித்ததும், சுரேஷூக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

'அய்யய்யோ….என்னடா இது?..சும்மா வெளையாட்டுக்கு ராகிங் பண்ணப் போக…அது இப்ப பெரிய பிரச்சனை ஆயிடும் போலிருக்கே..” சுரேஷ் புலம்ப,

'இந்த மெசேஜ் உன் மொபைலுக்கும் வந்திருக்குமே?”



சுரேஷ் தன் மொபைலில் தேடினான். 'ஆமாம்டா…எனக்கும் வந்திருக்கு…நான்தான் கவனிக்கலை”

'நம்ம நாலு பேருக்கும் மட்டும் மெசேஜை அனுப்பிட்டு அவன் எங்கியோ போயிட்டான்”

'எங்கடா போயிருப்பான்?,” சுரேஷின் குரல் நடுங்கியது.

”எனக்கென்னடா தெரியும்?…மெசேஜ் வந்ததும் உடனே அவன் ரூமுக்கு ஓடிப் போய்ப் பாரத்தேன்… அங்க அவனோட ரூம் மேட்ஸ் மட்டும்தான் இருந்தாங்க… அவனைக் காணோம்… நான் அவங்ககிட்ட கேட்டேன்… நேத்திக்கு ராத்திரி எட்டு மணிக்கு எங்கியோ கிளம்பிப் போனானாம்… அப்புறம் திரும்பி வரவே இல்லையாம்…”

'நேத்திக்கு ராத்திரி எட்டு மணின்னா… அப்ப நைட் பூராவும் வரவேயில்லையா?”

'ஆமாம்டா…” சொல்லிவிட்டுக் கையைப் பிசைந்தான் கண்ணன்.

அப்போது கதவு லேசாகத் தட்டப்பட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனரே தவிர போய்க் கதவைத் திறக்கவில்லை.

தொடர்ந்து கதவு பலமாக இடிக்கப்பட்டதும்;

'யாராயிருக்கும்டா?” சுரேஷ் கிசுகிசு குரலில் கேட்டான்.

'தெரியலையேடா….” கண்ணன்.

'திறக்கலாமா?”

'ம்..”



மெல்ல நடந்து சென்று நிதானமாய்க் கதவைத் திறந்தான் சுரேஷ்.

வேணுவும்…சக்தியும்!

'உள்ளார வாங்கடா…உள்ளார வாங்கடா” அவசரமாய் அவர்களை இழுத்து அறைக்குள் நுழைத்து கதவைத் தாழிட்டான் சுரேஷ்.

'என்னடா…மெசேஜ் பாத்தீங்களா?” கண்ணன் கேட்க,

'அதைப் பாரத்திட்டுத்தான் மிரண்டு போய் ஓடி வந்திருக்கோம்” என்றான் வேணு.

'சரி… அந்த சீனிவாசனைப் பத்தி ஏதாவது தகவல்?”

'ம்ஹூம்…” உதட்டைப் பிதுக்கினான் சக்தி.

சில நிமிட அமைதிக்குப் பின்

'டேய்… எப்படியம் இன்னும் கொஞ்ச நேரத்துல…அவன் தூக்குல தொங்கிட்டதாகவோ… ரெயில் தண்டவாளத்துல கெடக்கறதாகவோ… இல்ல விசம் குடிச்சு செத்திட்டதாகவோ… தகவல் வரும்… அப்புறம் நம்ம நாலு பேரையம் தேடிட்டு போலீஸ் வரும்…” சுரேஷ் சொல்ல இடைமறித்தான் சக்தி

'அதெப்படி... குறிப்பா நம்ம நாலு பேரை மட்டும் தேடிட்டு வரும்?”

'அட ஞானசூன்யம்… போலீஸ் மொதல்ல அவனோட மொபைல் போனைத்தான் குடையும்… அப்படிக் குடையும் போது அதுல அவன் நமக்கு அனுப்பின மெசேஜ் இருக்கும்… அது போதாதா? அவன் தற்கொலைக்கு காரணம் நாம்தான் என்பதற்கு?”

'டேய்…இதிலிருந்து தப்பிக்கணும்… அதுக்கு என்ன வழி… அதைச் சொல்லுவியா… அதை விட்டுட்டு… போலீஸ் வரும்… நாய் வரும்னுட்டு….”

'ம்ம்ம்… ஒரே வழியிருக்கு… நாம நாலு பேரும் மொதல் வேலையா ஹாஸ்டலை விட்டு வெளியெறி… அவனவன் சொந்த ஊருக்குப் போறோம்…”

'சுத்தம்…ஏண்டா தப்பிக்க வழி கேட்டா... மாட்டிக்க வழி சொல்றே… நாம் இங்க இல்லேன்னதும் நேரா நம்ம சொந்த ஊருக்குத்தான் வரும் போலீஸ்… அதனால நாம என்ன பண்ணறோம்… ஒரு மாசத்துக்கு லீவு போட்டுட்டு… நார்த் சைடு போய்டுவோம்…”



'நார்த்துல எங்க?”

'ம்…டெல்லி போய்டுவோம்டா… அங்க எங்க மாமா இருக்கார்… மிலிட்டரி ஆபீஸர்… ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்… நான் போனா ரொம்ப சந்தொஷப்படுவார்…” சுரேஷ் சொல்ல,

'சரி…நீ போய்டுவ…நாங்க?”

'அய்யய்யோ... நாம நாலு பெரும் தாண்டா…”

அடுத்த சில நிமிடங்களில் அவசர அவசரமாய் லீவ் லெட்டர் எழுதி பக்கத்து அறைக்காரனிடம் கொடுத்து 'ஊரில எங்க சித்தப்பாவுக்கு ரொம்ப சீரியஸாம்… இப்பத்தான் தகவல் வந்தது… நான் உடனே கௌம்பறேன்… இவனுகளும் என் கூட வர்றானுக… இந்த லீவ் லெட்டரை நாளைக்கு எங்க புரபஸரிடம் சேர்த்துடுப்பா… ப்ளீஸ்..” போலிச் சோகம் பூசிய முகத்துடன் சொல்லி விட்டு,

ரயில் நிலையம் நோக்கிப் பறந்தனர் அந்த நால்வரும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு,

கல்லூரியில் எந்தப் பிரச்சினையும் இல்லை… எல்லாம் சுமுகமாகவே போய்க் கொணடிருக்கின்றது என்பதை தொலைபேசியில் விசாரித்துத் தெரிந்து கொண்டு ஊர் திரும்பினர்.



மறுநாள் காலை 9.15.

கல்லூரி நுழைவாயிலில் நின்று நிலைமையை நிதானமாய் ஆராய்ந்து கொண்டிருந்த அந்த நால்வரும் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நபரைக் கண்டதும் அதிர்ச்சி வாங்கினர்.

சீனிவாசன்.

வெகு இயல்பாக தங்களைக் கடந்து சென்ற அந்த சீனிவாசனை 'டேய்…சீனிவாசா…” அழைத்தான் சுரேஷ்.

'அடடே... நீங்களா?… என்னாச்சு? ரெண்டு மாசமாத் தலைமறைவாயிட்டீங்க போலிருக்கு” கிணடலாய்க் கேட்டான்.

'ஏண்டா தற்கொலை பண்ணிக்கப் போறதா மெசேஜ் அனுப்பிச்சிட்டு எங்கேடா போனே?”

'சும்மா… ஊர் வரைக்கும் போயிருந்தேன்… மறுநாள் ஈவினிங்கே வந்திட்டேனே…”

'என்னது மறுநாளே வந்திட்டியா? அப்ப நீ தினமும் காலேஜூக்கு வந்திட்டுத்தான் இருக்கியா?”

'ஆமாம்… அதிலென்ன சந்தேகம்?”

'அடப்பாவி… அப்புறம் ஏண்டா… எங்களுக்கெல்லாம் அப்படியொரு மெசேஜ் அனுப்பிச்சே?”

'அதுதான் அமைதிப் படையோட அட்டாக்”

'ச்சை… கிறுக்கா… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா…” சுரேஷ் ஆத்திரமாகிக் கத்த,

'நீங்கெல்லாம் என்னோட சீனியர்ஸ்!… உங்க கூடவெல்லாம் மோத என்னால முடியாது… அதனால் என்னைக் கேவலமா ராகிங் செஞ்ச உங்களை சைலண்ட்டா அட்டாக் பண்ணணும்னு நெனச்சேன்… பண்ணிட்டேன்…”

அவன் சொல்வது முற்றிலுமாய்ப் புரியாது போக, அவர்கள் நால்வரும் விழித்தனர்.

'கண்ணுங்களா… நம்ம காலெஜ்ல அட்டண்டெண்ஸ்ல ரொம்ப ஸ்டிரிக்ட்… அதிகமா லீவ் போட்டா எக்ஸாமே எழுத விட மாட்டாங்க! நீ எப்பேர்ப்பட்ட கொம்பனாயிருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது… அனேகமா இப்பவே நீங்க நாலு பேரும் கிட்டத்தட்ட அறுபது நாளுக்கும் மேல லீவு போட்டுட்டீங்க… ஸோ… இந்த செமஸ்டர் உங்களுக்கெல்லாம்… கோவிந்தா… கோவிந்தா” சீனிவாசன் சிரித்தபடி சொல்லி விட்டு விசிலடித்தவாறே நடக்க,

அவனை எரித்து விடுவது போல் பார்த்தபடியே நின்றனர்.

சுரேஷூம்… கண்ணனும்… வேணுவும்… சக்தியும்…

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p128.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License