இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கொய்யாப்பழக் கிழவி

முகில் தினகரன்


வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். அந்தக் கிழவிதான் நின்று கொண்டிருந்தாள். 'க்கும்…இவளுக்கு இதே வேலையாப் போச்சு… வீட்டு மரத்திலிருந்து விழற கொய்யாப் பழங்களைப் பொறுக்கி ஒரு கவர்ல போட்டுட்டு வந்து 'இந்தாங்க”ன்னு குடுக்க வேண்டியது… அப்புறம் 'ஒரு பத்து ருபா குடு சாமி கொய்யா பழத்துக்கு”ன்னு கையை நீட்ட வேண்டியது… குழந்தைகளுக்குத்தானே? மனசார சும்மா குடுக்கலாமே... இதிலே கூட ஒரு வியாபாரமா?”

“என்ன பாட்டி கொய்யாப் பழமா?” கேட்டபடியே வாசலுக்குச் சென்று திரும்பிய என் மனைவி ராணியின் கையில் கொய்யா பழங்கள்.

“ஏங்க… ஒரு பத்து ருபா குடுங்க”

என்னிடம் வந்து கேட்டவளை முறைத்தேன். “காசு குடுத்து வாங்கிட்டு வந்தா தர்றா?... வீட்டு மரத்திலிருந்து விழற பழங்கதானே?… அதைக்கூட குழந்தைகளுக்குச் சும்மா குடுக்க மாட்டாளா கெழவி?”

“ப்ச்.. சீக்கிரம் குடுங்க… பாட்டி நின்னுட்டிருக்கா!”

முனகிக் கொண்டே குடுத்தேன்.



கிழவியை அனுப்பி விட்டு வந்த ராணியிடம் கேட்டேன். 'போன தடவ இந்தக் கிழவி வந்தப்ப… “காபி சாப்படறியா பாட்டி”ன்னு நீ ஒரு வார்த்தைக்குக் கேட்டெ…அதுவும்…'சரி”ன்னு சொல்லி வாங்கிக் குடிச்சுட்டுப் போயிடுச்சு…அந்தக் காபிக்கு நீ காசு வாங்கியிருக்கலாமல்ல?”

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு என்னை மேலும் கீழும் பார்த்த ராணி “போங்க…எனக்கு அடுப்படில வேலையிருக்கு” சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

அந்தக் கிழவி வீட்டிலிருந்து கூச்சல் கேட்டது. கிழவியின் மருமகள் குரல். “அய்யோ… யாராவது வாங்களேன்… கெழவி பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறாளே!”

நான் வெளியே வந்து தெருவைப் பார்த்தேன். எல்லா வீட்டுக் கதவுகளும்… ஜன்னல்களும் திறந்திருந்தும் யாரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

“ராணி….ராணி…” உள் பக்கம் திரும்பி அழைத்தேன்.

வந்தவளிடம், “யாரது... கத்தறது… கெழவி மருமகதானே?” கேட்டேன்.

“ஆமாங்க… அய்யய்யோ… கெழவிக்கு என்னமோ ஆயிடுச்சு போலிருக்கே… பாவம்… ஆம்பளையில்லாத வீடாச்சே” கிழவி மகன் ரெண்டு வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்த பின் மாமியாரும் மருமகளும் மட்டும்தான் அந்த வீட்டில்.

“அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு அவ கத்தல் காதுல விழலையா?…இல்லை விழுந்தும் விழாதது மாதிரி இருக்காங்களா?”

“அதெல்லாம் நல்லாவே விழும்…ஆனாலும் யாரும் வர மாட்டாங்க”

“ஏன்?…ஏன் அப்படி?”

“அது செரி… அக்கம் பக்கத்துக்காரங்களோட அப்படி இப்படிக் கொஞ்சம் அனுசரிச்சுப் போனாத்தானே ஆகும்? தொட்டது தொண்ணூறுக்கும் சண்டைக்கே நின்னா யாரு வருவாங்க அவசர ஆத்திரத்துக்கு? சொல்லப் போனா நான் ஒருத்திதான் அதுக ரெண்டோடவும் சண்டை போடாம பேசிட்டிருக்கேன்”



எனக்கு மனசு கனத்துப் போனது. “என்னடி இது?…சக மனுஷி ஒருத்தி கஷ்டப் படும் போது… உதவி செய்யாம இப்படி வன்மம் பேசுறது சரியாடி?”

“அப்படியா?… அப்ப ஒண்ணு செய்யங்க!… நீங்க போங்க… போய் உதவி செய்யுங்க”

ராணி நக்கலாய் சிரித்தபடி சொல்ல, காத்திருந்தவன் போல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன்.

என் வேகத்தைப் பார்த்து ராணியே வியந்து போனாள். “பரவாயில்லையே….கெழவி வந்தாலே என்னைத் திட்டித் தீர்ப்பீங்க… இப்ப “பொசுக்”குன்னு உதவி செய்யக் கிளம்பிட்டீங்களே”

கிழவி வீட்டிற்குச் சென்று நிலைமையை ஆராய்ந்தேன். உடனடியாகக் கிழவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து கிழவியின் மருமகளிடம் சொன்னேன்.

“அய்யய்யோ… அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுற ஆம்பளையில்லாக் குடும்பமாச்சே இது... ஆசுபத்திரிக்குப் போனா ஐநூறு ஆயிரம்னு இல்ல கேப்பாங்க…” இப்பவே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணம் தைரியத்தை வரவழைக்க நானே ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து, கிழவியைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மருமகளையும் உடன் அழைத்துக் கொண்டு மருத்துவ மனையை நோக்கிப் பறந்தேன். மருத்துவ மனையில் அவர்களுடனேயே இருந்து கிழவிக்குத் தேவையான சிகிச்சைகளை ஏற்பாடு செய்து… முடித்து… கிழவிக்கு ஓரளவுக்கு நினைவு திரும்பியதும் இரவு வாக்கில் வார்டில் கொண்டு சேர்த்து விட்டு “தைரியமா இருங்க... நான் போயிட்டு காலைல வர்றேன்…” என்று சொல்லி கிழவியின் மருமகள் கையில் ஐநூறு ரூபாயைத் திணித்து விட்டு வந்தேன்.

மறுநாள் கிழவியைப் பரிசோதித்த டாக்டர் “ஷி இஸ் ஆல்ரைட் நவ்… நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்ல, மீண்டும் ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கிழவியையும் அவள் மருமகளையும் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டு “அப்பாடா…” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. அது எனக்கு ஒரு புதுவித அனுபவமாயிருந்தது. சகமனிதனுக்கு உதவி செய்யும் போது இப்படியொரு அற்புதமான சந்தோஷ உணர்வு நம்முடைய மனசுல…உடம்புல….நாடி நரம்புகள்ல ஊடுருவி ஒரு புதிய சுகானுபவத்தைக் கொடுக்கும் என்கிற ரகசியம் இந்த மனித சமுதாயத்திற்கு இன்னும் புரியாமலேயிருப்பது எனக்கு அதிசயமாயிருந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு,



வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். கிழவிதான்.

எழுந்து வாசலுக்குச் சென்று “என்ன பாட்டி… இப்ப எப்படியிருக்கு பரவாயில்லையா?” கேட்டேன்.

என் பின்னாடியே வந்த ராணி என் குசல விசாரிப்பை புன்முறுவலோடு ரசித்தபடி நின்றாள்.

“ம்…ம்… பரவாயில்ல சாமி… எங்க மறுபடியும் எந்திரிச்சு நடக்க முடியாமப் போயிடுமோன்னு பயந்தேன்… எஞ்சாமி புண்ணியத்துல எந்திரிசுட்டேன்.” சொன்னபடியெ கொய்யாப் பழக் கவரை நீட்டினாள் கிழவி.

ராணி முன் வந்து வாங்கிக் கொண்டாள்.

'சரி... சரி... எந்திரிச்சுட்டோம்கற தைரியத்துல பழைய மாதிரி நடந்திட்டிருக்க வேண்டாம்… பாத்து பத்திரமா இருந்துக்க… என்ன?” சொல்லி விட்டுத் திரும்பினேன்.

“ஒரு பத்து ரூவா குடு சாமி…கொய்யாப் பழத்துக்கு” கிழவி கேட்க,

நொந்து போய் ராணியைப் பார்த்தேன். அவள் கையில் தயாராய் வைத்திருந்த பத்து ரூபாயை அவளிடம் தந்து அவளை அனுப்பி விட்டு 'இப்பத் தெரியுதுங்களா… அக்கம் பக்கத்துக்காரங்க… ஏன் அன்னிக்கு அத்தனை சத்தம் கேட்டும் கேட்காதது மாதிரி இருந்தாங்கன்னு…” என்றாள்.

நான் சுத்தமாய் வாயடைத்துப் போனேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p129.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License