இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பரிகாரத் தொழில்?

முகில் தினகரன்


அந்த அறைக்குள் ஒரு அவஸ்தையான அமைதி பிடிவாதமாய் அமர்ந்திருக்க பிச்சுமணி தன் தொண்டைச் செருமலில் அதை உடைத்தார்.

தலை தூக்கிப் பார்த்த மகளின் அருகே வந்து அவள் தோளைத் தொட்டு, 'த பாரும்மா… நான் மற்ற அப்பாக்களைப் போல காதலுக்கு எதிரி அல்ல… காதலை ஆதரிப்பவன்தான்… அது உண்மையான…நேர்மையான… ஏற்றுக் கொள்ளும் வகையிலான காதலாய் இருக்கும் பட்சத்தில்...”

'அப்பா… எங்க காதலும் உண்மையான… நேர்மையான… காதல்தான் அப்பா” சவிதா மெல்லிய குரலில் சொல்ல,

'ஆனால்… ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லையேம்மா”

'ஏன்?… ஏன்? அப்படிச் சொல்றீங்க?”

'பின்னே என்னம்மா?… ஒரு தொழிலதிபரோட மகளான நீ… ஒரு சாதாரண கல்யாணப் புரோக்கரைக் காதலிக்கறேன்னு சொன்னா… அதை எப்படிம்மா ஏத்துக்க முடியும்?”



'அப்பா… நான் எப்படி ஒரு தொழிலதிபரோட மகளோ… அதே மாதிரி… அவரும் சிட்டியிலேயே பெரிய… புகழ் பெற்ற ஒரு லாயரோட மகன்தான்”

'அவரோட அப்பாதான் லாயர்… இவரு சாதாரண கல்யாண புரோக்கர்தானேம்மா?”

'ப்ச்…திரும்பத் திரும்ப கல்யாண புரோக்கர்னு சொல்லாதீங்கப்பா…அவரு பெரிய லெவல்ல திருமணத் தகவல் நிலையம் வெச்சு நடத்திட்டு வர்றார்… அவருகிட்டயே மூணு பேரு வேலை பார்க்கறாங்க”

அவள் சொன்னதைக் கேட்டு மெலிதாய் முறுவலித்த பிச்சுமணி 'இங்க பாரும்மா… இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை… அவரு எம்.ஏ. படிச்சிருக்காருன்னு சொல்றே… அவரை நேர்ல வரச் சொல்லு… நான் பேசிப் பார்த்திட்டு… நேர்மையானவராயிருந்தா… நம்ம பிளாஸ்டிக் யூனிட்டுக்கு ஜெனரல் மேனேஜராப் போட்டுடறேன்… கொஞ்சமாவது அந்தஸ்தா இருக்குமில்ல?”



கேட்டுக் கொண்டிருந்த கவிதா திடீரென்று அழ ஆரம்பிக்க,

'அட என்னம்மா?… எதுக்கு இப்ப அழறே?… நான் எதுவும் தப்பாச் சொல்லிடலையே...”

'அதில்லைப்பா… நீங்க இப்பச் சொன்னதை நான் ஏற்கனவே அவர்கிட்டப் பேசிட்டேன்… ஒத்துக்க மாட்டேனுட்டார்… அந்தத் திருமணத் தகவல் நிலையத்தை ஒரு போதும் விடவே மாட்டாராம்…”

மேவாயைத் தேய்த்தபடி யோசித்தார் பிச்சுமணி.

; 'சவிதா… நான் வேணா அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?”

அவள் 'சரி”யென்று தலையாட்டி விட்டு, 'அப்பா… ஒரு வேளை அவரு உங்ககிட்டேயும் மறுத்துப் பேசிட்டா… நீங்க கோபப்பட்டு ஏதாவது முடிவெடுத்திடாதீங்கப்பா” அழுதாள்.

மகளின் அழுகையைக் காணச் சகியாதவராய் அங்கிருந்து நகர்ந்தார் பிச்சுமணி.

மறுநாள் மாலை ஆறு மணியிருக்கும், அந்தத் திருமண தகவல் நிலையத்தின் விசிட்டர்ஸ் சோபாவில் ராஜேசுக்காக காத்திருந்தார் பிச்சுமணி.

ஆபீஸிலிருந்த அந்தச் சிறுவன் 'சார்… கொஞ்சம் பொறுத்துக்கங்க சார்… எப்படியும் இன்னும் அஞ்சு நிமிஷத்துல எங்க சார் வந்துடுவார்” என்று முப்பதாவது தடவையாகச் சொல்லி விட்டு தன் மொபைல் போனைக் குடைவதில் மும்முரமானான்.



சரியாக ஆறரை மணிக்கு உள்ளே வந்த ராஜேஸ் விசிட்டர்ஸ் சேரில் அமர்ந்திருந்த சவிதாவின் தந்தையைக் கண்டதும் முதலில் துணுக்குற்று பிறகு சுதாரித்துக் கொண்டு 'சார்…வாங்க சார்… ஸாரி... கொஞ்சம் வெளி வேலை… அதான்”

'இட்ஸ் ஓ.கே” என்றபடி எழுந்தவரைத் தன் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்று தன் மேஜையின் எதிரில் அமர வைத்தான்.

உள்ளே வந்த பையனிடம் 'டேய்…ரெண்டு காபி” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டு 'சொல்லுங்க சார்” என்றான் ராஜேஸ்.

'தம்பி… நான் ஒரு பிசினஸ் மேன்… எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது… எதுவாக இருந்தாலும் வெட்டு ஒண்ணு துண்டு; ரெண்டுன்னு பேசறவன் நான்… அதனால நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன்” என்று பீடிகையுடன் ஆரம்பித்துத் தன் எண்ணத்தைத் தெளிவாய் விளக்கி முடித்தார் பிச்சுமணி.



தன் மகளின் காதலையும் உடைக்க விரும்பாமல் அதே நேரம் இந்தப் பாழும் சமூகத்திற்காக வரப் போகும் மருமகனின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டவும் முயலும் அந்த தந்தையின் உளப் பாங்கினை சிறிதும் பிசகின்றிப் புரிந்து கொண்ட ராஜேஸ்,

'அய்யா… ஒரு தந்தையின் நிலையிலிருந்து நீங்க பேசிய இந்தப் பேச்சையெல்லாம் முழுமனசோட நான் ஒப்புக்கறேன்… ஏத்துக்கறேன்… அதே நேரம்… ஒரு மகனா இருந்து நான் செய்ய வேண்டிய கடமையா நெனச்சுத்தான் நான் இந்த வேலையையே செஞ்சிட்டிருக்கேன் அதை நீங்களும் புரிஞ்சுக்கணும்”

அவர் புரியாமல் நெற்றி சுருக்க,

'ஆமாம் சார்… உங்களுக்கு எங்க அப்பா… பிரபல லாயர்… சிவஞானத்தைத் தெரியும்னு நெனைக்கறேன்…அவர் இதுவரை எடுத்துக்கிட்ட கேஸ்ல கிட்டத்தட்ட எண்பது சதவீதம்… விவாகரத்துக் கேஸ்கதான்… சொல்லப் போனா… எனக்குத் தெரிஞ்சே அவர் சுமார் இருநூறு…முன்னூறுக்கும் மேலான விவாகரத்துக்களை வாங்கிக் கொடுத்திருக்கார்…” சொல்லி விட்டு இரண்டு நிமிடங்கள் நிறுத்திய அந்த ராஜேஸ், மீண்டும் தொடர்ந்தான்.

'சொல்லுங்க சார்….இது எவ்வளவு பெரிய பாவம்… குருவிக் கூட்டைக் கலைக்கற மாதிரியான பாவமல்லவா?… புரோகிதர்கள் ஹோமம் வளர்த்து… மந்திரம் ஓதி…சேர்த்து வைக்கற ஜோடிகளை… சட்டத்தின் உதவியோட பிரிக்கறது… என் மனசுக்குப் பிடிக்கலை சார்… ஓ.கே… எல்லாக் கேஸ்களையும் அப்படிச் சொல்ல முடியாதுதான்… ஒரு சில கேஸ்களுக்கு விவாகரத்துதான் சரியான தீர்வாயிருக்கும்… அதை நான் ஒத்துக்கறேன்… ஆனா… என்னைப் பொறுத்த வரை பல கேஸ்கள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததினால்தான் விவாகரத்தாகின்றன… அதனால தம்பதிகளைப் பிரிக்கற பாவத்தை என் தந்தை தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வர்றதினால… தம்பதிகளைச் சேர்த்து வைக்கற… அதாவது திருமண வரன்களை அமைத்துக் கணவன் மனைவிகளை இல்லற பந்தத்திற்குள் இணைத்து வைக்கற பணியை… இந்தத் திருமண தகவல் நிலையம் மூலமாக நான் செஞ்சிட்டு வர்றேன்..சார்… ஒரு வகைல இதை ஒரு பரிகாரம்னு கூட வெச்சுக்கலாம்”

அவனின் அந்த விளக்கம் மறுப்பேதும் கூற இயலாததாய் இருக்க 'ஓ.கெ…மிஸ்டர் ராஜேஸ்… உங்க கொள்கையை நான் மதிக்கறேன்… போன நிமிடம் வரை… உயர்ந்த தொழில்களால் மட்டுமே அந்தஸ்து வரும்னு நான் நெனச்சிட்டிருந்தேன்… அப்படியில்லை… எந்தத் தொழில் ஆனாலும் அதைச் செய்கிற விதத்தில்… பார்க்கிற கோணத்தில் அந்தஸ்தைக் கொண்டு வரலாம்னு நீங்க நிரூபிச்சிட்டீங்க…” சொல்லியபடியே அவர் நாற்காலியிலிருந்து எழ,

'சார்… ராஜேஸ் சார்” வெளியிலிருந்து ஒரு குரல் அழைத்தது.

'யாரு…கிருஷ்ணசாமி அய்யாவா?… வாங்க!… உள்ளார வரலாம் வாங்க”

வந்து நின்ற பெரியவரின் கையில் ஒரு பழத்தட்டு.

'என்ன சாமி இதெல்லாம்?” ராஜேஸ் கூச்சப்பட்டுக் கேட்க,



'சார்… இனி எங்க பொண்ணுக்குக் கல்யாணம் என்பது கனவுல மட்டும்தான்னு தளர்ந்து போயிருந்த எங்களை ஊக்கப்படுத்தி… நொந்து போயிருந்த சமயங்களிலெல்லாம் உற்சாகப்படுத்தி… இப்ப அவளுக்கும் ஒரு நல்ல வரனை ஏற்பாடு பண்ணிக் குடுத்ததோட நில்லாம … நிச்சயத் தேதியையும் குறிச்சுக் குடுத்து… மண்டபத்தையம் புக் பண்ணிக் குடுத்திருக்கீங்களே… நீங்க… நீங்க… எங்க தெய்வம் சார்” வயதில் மிகவும் மூத்தவரான அவர் இளைஞனான ராஜேஸைக் கையெடுத்துக் கும்பிட,

பார்த்துக் கொண்டிருந்த பிச்சுமணிக்கு புல்லரித்தது. தன்னுடைய இந்த ஐம்பதியெட்டு வயது காலத்தில் இதுவரை தன்னை யாரும் அந்த அளவுக்குப் நெகிழ்ந்து பேசி கும்பிட்டதாக ஞாபகமே இல்லை.

'அப்ப… நான் புறப்படறேன் தம்பி” சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் பிச்சுமணி.

----- ----- ----- ----- ----- ------


வீட்டுக்குள் நுழைந்த அவர் “சவீதா, சவீதா” என்று அழைத்தபடியே போனார்.

அப்பாவின் குரலைக் கேட்ட சவிதா அங்கு வந்தாள்.

'அம்மா… சவிதா… நான் மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசிட்டேன்மா”

'என்ன சொன்னாரப்பா… அந்த கல்யாண புரோக்கர் வேலையை விட்டுட சம்மதிச்சிட்டாராப்பா?”

'இல்லேம்மா… அவர் அதையே தொடர நான் சம்மதிச்சிட்டேன்மா”

அவள் புரியாமல் பார்க்க,

'என் மாப்பிள்ளை திருமண தகவல் நிலையம் நடத்திட்டிருக்கார் என்பதுதான்மா எனக்குப் பெருமை… ஏன்னா அது ஒரு தொழில் இல்லைம்மா… புண்ணிய காரியம்”

சவிதா முகத்தில் சந்தோஷப் பூக்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p139.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License