இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வடிகால்

முகில் தினகரன்


தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மநாயகத்தை அந்தக் கூச்சல் இடையூறு செய்ய, தன் கவனத்தை மாற்றி அதைக் கூர்ந்து கேட்கலானார்.

'அய்யோ… வேண்டாங்க… அடிக்காதீங்க… வலிக்குதுங்க” என்று ஒரு பெண்மணியின் குரல்.

'வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்… வலிக்கணும்னுதானே அடிக்கறது” என்று வறட்டுக் கத்தலாய் ஒரு ஆண் குரல். கூடவே 'பளீர்…பளீர்” என்று அடி விழும் ஓசைகள்.

'வசுமதி… வசுமதி” மனைவியை அழைத்தார் பிரம்மநாயகம்.

கைகளைத் துடைத்தபடியே அடுக்களையிலிருந்து வந்தவள் 'என்னங்க,..என்ன வேணும் உங்களுக்கு?”

'அதென்ன சத்தம்?... வழக்கம் போல பக்கத்து வீட்டுல ஆரம்பமாயிடுச்சா?”

'ஆமாங்க… அதேதான்... பாவம் அந்தப் பெண்மணி… எப்படித்தான் புருசன்கிட்ட தெனமும் அடி வாங்கிட்டு… அத்தனையையும் பொறுத்துக்கிட்டிருக்காளோ?”



அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிகபட்ச ஓசையுடன் ஒரு 'படார்” தொடர்ந்து அப்பெண்மணியின் உச்சமானதாய் அழுகுரல்.

'அப்படித்தான் என்ன சின்ன வயசுக்காரங்களா அவங்க ரெண்டு பேரும்… அந்த ஆளுக்குக் கிட்டத்தட்ட அம்பது… அம்பத்திரெண்டிருக்கும்… அந்தப் பெண்ணுக்கும் ஒரு நாப்பத்தியேழு… நாப்பத்தியெட்டிருக்கும்… இத்தனை வயசுக்கப்புறம் இதுகளுக்குள்ளார இப்படியெல்லாம் சண்டை வேணுமா?” வசுமதி அங்கலாய்த்தாள்.

'கொழந்த குட்டின்னு ஏதாச்சும் இருந்திருந்தா… இதுக அடங்கியிருக்கும்க… அதுவுமில்லியா... அதான்… இதுக ஆடிக்கிட்டிருக்குதுக”

'அந்தப் பெண்மணியைக் குத்தம் சொல்ல முடியாதுங்க… நானும் அப்பப்ப வெளிய... தெருவுல பொகும் போது... வரும் போது பார்த்திருக்கேன்… ரொம்ப அமைதியான… சாந்தமான முகம்… யாருகிட்டேயும் இரைஞ்சு கூடப் பேசாத குணம்… எனக்கென்னவோ அந்தாளுதான் ரொம்ப முசுடா இருப்பான் போலத் தெரியுது”

இப்போது அடி விழும் சத்தங்கள் மொத்தமாய் நின்று போயிருக்க… மழை விட்ட பின்னும் 'சொத்…சொத்” தென்று சொட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளிகளின் ஓசை போல அப்பெண்மணியின் அழுகைச் சத்தம் மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை.

வாக்கிங் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் பிரம்மநாயகம். கையில் டிபன் கேரியருடன் வேக வேகமாகத் தன்னைக் கடந்து போன அந்தப் பக்கத்து வீட்டு மனிதரைக் கண்டதும் அவரை அழைத்துப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்னவென தோன்றியது அவருக்கு.

'சார்…சார்”

அவர் நின்று திரும்பிப் பார்க்க,

'சார்… நான் பிரம்மநாயகம்… உங்க பக்கத்து வீட்டுலதான் குடியிருக்கேன்… வந்து நாலு மாசமாச்சு… உங்க கூடப் பேசவோ… அறிமுகப் படுத்திக்கவோ முடியலை… சார்… எங்க வேலை பார்க்கறீங்க?” வெகு சிநேகிதமாய்க் கேட்டார்.



முகத்தில் ஒருவித வெறுப்போடு அவரைக் கர்ண கடூரமாகப் பார்த்த அந்த மனிதர், 'அய்யா பக்கத்து வீட்டுக்காரரே… நான் ஏழரை மணிக்குள்ளார ஃபாக்டரில இருக்கணும்… அறிமுகம் பண்ணிக்கிட்டு அரட்டை அடிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை... பிறகு பார்க்கலாம்” என்று அவசரமாய்ச் சொல்லிவிட்டு நடையைத் துரிதப்படுத்திக் கொண்டார்.

'வசுமதி சொன்னது சரிதான்… ஒண்ணாம் நெம்பர் முசுடுதான் இந்தாளு”

அடுத்த வாரத்தில் ஒரு நாள்;

எலக்ட்ரிக் பில் கட்டுவதற்காக ஈ. பி. அலுவலகம் சென்றிருந்த வசுமதி அங்கு காத்திருந்த வேளையில், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி வர சன்னமாய்ப் புன்னகைத்தாள்.

பதிலுக்கு அப்பெண்மணியும் புன்னகைக்க தைரியமாய்ப் பேச ஆரம்பித்தாள். 'உங்களுக்கு ஈ.பி. பில் எவ்வளவு வருது?”

அப்பெண்மணி தன் கார்டைப் பார்த்து விட்டு 'நூத்திப் பத்து” என்றாள்.

'அட… பரவாயில்லையே… எங்களுக்கு நானூறுக்கும் மேலல்லவா வருது”

'எங்க வீட்டுல மின்சார உபயோகம் ரொம்பக் கம்மி… அதுவுமில்லாம…நூறுக்கும் மேல போனா போச்சு… அவ்வளவுதான்… எங்க வீட்டுக்காரர் என்னைக் கொன்னே போட்டுடுவார்”

அவள் வாயிலிருந்தே அவள் வீட்டுக்காரரைப் பற்றிப் பேச்சு வந்து விட இன்னும் கொஞ்சம் தைரியமான வசுமதி, நீண்ட நாட்களாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள்.

'ஒரு நாளல்ல... ரெண்டு நாளல்ல… தினப்படியும் நாங்க எங்க வீட்டுல இருந்து கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்… எதுக்கு உங்க வீட்டுக்காரர் தினமும் உங்களை அந்த மாதிரி அடிக்கிறார்… என்ன காரணம்?”

மெலிதாய் முறுவலித்த அப்பெண்மணி 'காரணத்துக்காப் பஞ்சம்?… ஏதாவதொரு காரணம்… அவருக்குன்னு கெடைச்சிடுது… அடிக்கறார்” சொல்லிவிட்டு அவள் அமைதியாய் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள,

வசுமதியும் அமைதியானாள்.



ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் வசுமதியே தொடர்ந்தாள். 'உங்களால் எப்படி இந்த அளவுக்குப் பொறுத்துக் கொள்ள முடியுது?… எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாம… வரம் வாங்கிட்டு வந்த மாதிரி அவர் குடுக்கற அடிகளை வாங்கிக்கறீங்களே… ஏன் இப்படி?... சொல்லிப் புரிய வைக்கக் கூடாதா?”

பதிலேதும் பேசாது மெல்லப் புன்னகைத்தாள் அந்தப் பெண்மணி.

'என்னடா இவ... நம்ம குடும்ப விஷயங்கள்ல தலையிடறான்னு நெனைக்காதீங்க… திருப்பி ஒரு வார்த்தை கூடவா எதிர்த்துப் பேச முடியாது உங்களால? … எனக்கென்னமோ நீங்க எதிர்த்துப் பேச மாட்டீங்க அப்படிங்கற தைரியத்துலதான் அவர் தொடர்ந்து அடிச்சிட்டே இருக்காருன்னு தோணுது”

அவள் 'குறு..குறு” வென்று வசுமதியின் கண்களையே பார்க்க,

'அய்யய்யோ… புருஷன் பொண்டாட்டிக்குள்ளார பகையை மூட்டி விடணும்கறதுக்காக நான் இதைச் சொல்லலே… ஒரு பொம்பளை அனுபவிக்கற சித்திரவதையை இன்னொரு பொம்பளையால தாங்க முடியல… அதனால சொல்றேன்”

அவள் இப்போதும் வசுமதியின் முகத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



பொறுமையிழந்த வசுமதி மறுபடியும் எதையோ சொல்ல வாயெடுக்க அவளைக் கையமர்த்திய அப்பெண்மணி 'அம்மாடி… முன்ன பின்ன தெரியாத எம்மேல நீ இத்தனை அக்கறை காட்டுறதுக்கு ரொம்ப நன்றிம்மா… நான் எம்புருஷனோட அடிகளையும்… அதோட வலிகளையும் பொறுமையாத் தாங்கிக்கிட்டு ஒரு சகிப்புத்தன்மையோட இருக்கறதுக்கு ஒரு மாபெரும் காரணம் இருக்கும்மா… அது உன்னைய மாதிரி வெளிய இருந்து பார்க்கறவங்களுக்குப் புரியாதும்மா...”

'காரணமா?” வசுமதி ஆர்வமாகிக் கேட்டாள்.

'ஆமாம்மா… ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கணவர் ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளியா… கிட்டத்தட்ட நூறு… நூத்தம்பது பேருக்கு வேலை குடுக்கறவரா… பண பலத்தோட… அதிகார பலத்தோட… செல்வாக்கோட இருந்தவரும்மா… கூட இருந்த பார்ட்னரும்… ஆடிட்டரும் சேர்ந்து பண்ணின தில்லுமுல்லுத்தனத்தால் கம்பெனி 'சட..சட”ன்னு சரிஞ்சு விழுந்திட்டுது… அவங்கெல்லாம் முன்கூட்டியே புத்திசாலித்தனமா தங்களோட சொத்து பத்துக்களை பாதுகாப்புப் பண்ணி வெச்சுக்கிட்டுத் தப்பிச்சிட்டாங்க... இவருதான் பாவம் எல்லாரையும் நம்பி… ஏமாந்து… திவாலாகி… வீடு வாசலை இழந்து… அடுத்த வேளைச் சோத்துக்குக் கூட வழியில்லாதவராகி நடு ரோட்டுக்கு வந்திட்டாரு”

'அடப்பாவமே”

'கடைசில… இப்ப… ஏதோ ஒரு குறைஞ்ச சம்பளத்துக்கு… ஒரு சின்ன கம்பெனில வேலைக்குச் சேர்ந்திட்டாரு… அதன் மூலமா இப்போதைக்கு ஏதோ அரை வயிறு… கால் வயிறு நெறையுது… நல்ல வேளையா ஆண்டவன் எங்களுக்குன்னு குழந்தை குட்டி எதையும் குடுக்கல… இல்லேன்னா பாவம்… அதுகளும் எங்க கூட சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கும்க...”

சில நிமிடங்கள் அமைதியாய்க் கழிய 'சரிம்மா… இதுக்கும் அவரு தெனமும் உங்களை அடிக்கறதுக்கும்… அதுக்கு நீங்க பொறுமை காக்கறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?… இதெல்லாம் வாழ்க்கைல எல்லாருக்கும் வர்ற ஏற்ற தாழ்வுகதானே?” வசுமதி விடாமல் கேட்டாள்.

'அம்மா… அவருக்கு வயசு ஐம்பத்தியொண்ணு… இப்ப அவரு வேலைக்குப் போற எடத்துல... அவரோட மேலதிகாரியா இருக்கற எல்லோருமே… அவரை விட வயசுல குறைஞ்சவங்க… அவங்க ஏவுற வேலையைச் செய்யற ஆள் இவரு… அது அவரை மனசளவுல ரொம்பவே பாதிச்சிருக்கு… ஆனாலும் வயித்துப் பாட்டுக்காக அதை மறைச்சுக்கிட்டு வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு… சமயத்துல வயசுல குறைஞ்ச அவங்க இவரை அதிகாரத் தொணில விரட்டும் போது… திருப்பிப் பேச…. எதிர்த்துக் கேட்க… நாக்கும் மனசும் துடிச்சாலும் பேச முடியாத சூழ்நிலை… ஆரம்பத்திலிருந்தே ஒரு முதலாளியா வாழ்ந்திட்டு… நூத்துக் கணக்கான பேர்களை அதிகாரம் பண்ணிட்டிருந்தவரோட மனசு அது போன்ற சூழ்நிலைகள்ல எவ்வளவு வலிக்கும்னு எனக்குத்தான் தெரியும் அதனால…”

'அதனால…”

'பாவம்… மேலதிகாரிக மேலெ காட்ட முடியாத கோபத்தையும்… ஆவேசத்தையும்… ஆரம்பத்திலிருந்து பழகி வந்துட்ட அதிகாரத்தையும்… ஆக்ரோசத்தையும் அவரு எங்க போயி... யாருகிட்டக் காட்டுவார்?... அவர் என் மேல் காட்டுற கோபமெல்லாம்… எனக்குக் குடுக்கற அடியெல்லாம் அந்த ஆவேசத்தின் வெளிப்பாடுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்… அதனாலதான் அவரோட அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலா என்னை நான் ஆக்கிக்கிட்டு பொறுமையா இருக்கேன்”

அந்தப் பெண்மணி சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்ட வசுமதி தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

'புருஷனோட சுகங்களுக்கும்... சந்தோஷங்களுக்கும் மட்டும் பொண்டாட்டி வடிகாலல்ல… சோகங்களுக்கும்… ஏன்… கோபங்களுக்கும் கூட அவதான் வடிகால்”

ஈ.பி.பில் பணம் பெறுபவர் வந்து கவுண்டரில் அமர்ந்ததும் 'சரி…வர்றேம்மா” என்று சொல்லிவிட்டு நிதானமாய் எழுந்து நடந்த அந்தப் பெண்மணியை பெருமையுடன் பார்த்தாள் வசுமதி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p142.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License