இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மகளுக்கு வரும் கடிதம்!

முகில் தினகரன்


தபால்காரர் சொன்ன அந்தத் தகவல் சுந்தரத்தின் மேல் கோடையிடியாய் இறங்க மொத்த உடலும் ஒரு அதிர்வு வாங்கித் தள்ளாடியது.

“அய்யா... தபால்காரய்யா... மெய்யாலுமா சொல்லுறீங்க?” தழுதழுத்த குரலில் மீண்டும் கேட்டார்.

“ஆமாங்கய்யா... உங்க மக தமிழ்ச்செல்விக்கு ‘ஆனந்தன்’ங்கற பையன்கிட்டயிருந்து அடிக்கடி கடுதாசி வருதுங்கய்யா... ஆரம்பத்துல மாசத்துக்கு ஒண்ணுதான் வந்திச்சு... அப்புறம் வாரம் ஒண்ணு வந்திச்சு… இப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் தவறாம வருதுங்கய்யா... நானும் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னுதான் இருந்தேன். ஆனா பின்னாடி, அதுவே ஒரு விபரீதமாய்ப் போயி… “ஏம்ப்பா... ரொம்ப நாளா நடக்குது... நீயாவது ஒரு வாrத்தை என்கிட்ட சொல்லியிருக்கக் கூடாதா?”ன்னு நீங்க என்கிட்ட கேட்டுடக் கூடாது பாருங்க?... அதான்”

சுந்தரத்தின் மனதிற்குள் இனம் புரியாதவொரு கலக்க மேகம் சூழ்ந்து துயர மழையைத் தூவ ஆரம்பிக்க,

“எங்க குடும்பத்து மேல அக்கறை வெச்சு நீங்க சொன்ன இந்தத் தகவலுக்கு ரொம்ப நன்றி தபால்காரய்யா... மேற்கொண்டு இதை நான் பார்த்துக்கறேன்... நீங்க கௌம்புங்க”



தபால்காரர் சென்றதும் வீட்டிற்குள் நுழைந்த சுந்தரம் மனைவி தேவகியை அழைத்து, அந்த வேதனையைச் சொல்ல வாயடைத்துப் போய் சிலையாய்ச் சமைந்து நின்றாள் அவள்.

உள் மனம் ஓலமிட்டது.

“கண்ணில் உறுமணியோ?... எங்கள் கலி தீர்த்த பெட்டகமோ?... பொன்னில் உறும் ஒளியோ?... பூவில் உறும் வாசனையோ?... கொடிக்கால் மருக்கொழுந்தோ?... கோதையில்லாப் பூச்சரமோ?”ன்னு தாலாட்டுப் பாடி சீராட்டி வளர்த்த என் மகளா இப்படி?

அங்கு நிலவிய அவஸ்தையான அமைதியை தன் கனைப்பின் மூலம் கலைத்த சுந்தரம், “தேவகி… இது ரொம்ப சிக்கலான பிரச்சினை... எடுத்த எடுப்புல அவளைக் கூப்பிட்டு இதைக் கேட்டுவிட முடியாது… கேட்கவும் கூடாது... ஏன்னா... அவளும் இப்ப இருக்கற காதல் வேகத்துல, “ஆமாம்... அப்படித்தான்... நான் அவனைக் காதலிக்கறேன்... அவனைத்தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்” ன்னு சொல்லிட்டான்னா... அதை என்னால தாங்க முடியாது… அதனால கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்” நிதானமாய்ப் பேசினார்.

“பாவிப் பொண்ணு... நம்ம குடும்ப மானத்தையே சந்திக்குக் கொண்டு வந்திடுவா போலிருக்கே” தேவகி வாய் விட்டுப் புலம்ப,

“ச்சே... மொதல்ல உன் புலம்பல் நிறுத்து... அவ வர்ற நேரமாச்சு” மனைவியை அடக்கியவர் மெல்ல நடந்து ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்தார்.

மூளைக்குள் சிந்தனை வண்டுகள் தாறுமாறாய்ப் பறந்து தலைவலியைச் சீதனமாய்த் தந்து கொண்டிருந்தன. “எப்படி?... எப்படி இந்தப் பிரச்சினையை எதிர் கொள்வது?... வயசுப் பொண்ணுகிட்ட நேருக்கு நேர் ஒரு அப்பாவால இந்தப் பிரச்சினையைப் பேச முடியுமா?... பேசினா என்னாகும்?... கடவுளே”



அன்று முழுதும் கணவனும் மனைவியும் இறுகிய முகத்துடனேயே இருந்தனர்.

தன் பெற்றோரிடம் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தைத் தமிழ்ச் செல்வியால் உணர முடிந்தும் அதற்கான காரணத்தை யூகிக்க முடியாது போக அவளும் ஒருவித இறுக்கத்தில் சிக்குண்டு தவித்தாள்.

மறு நாளைக்கு மறுநாள்.

வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை கேட்க கூடத்திலிருந்த சுந்தரம் எழுந்து வாசலுக்கு வரும் முன் உள் அறையிலிருந்து புயலெனப் பாய்ந்து வந்த தமிழ்ச் செல்வி தபால்காரர் நீட்டிய கடிதத்தை அவசரமாகப் பறித்துக் கொண்டு அதே வேகத்தில் உள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

கடுப்பான முகத்துடன் சுந்தரம் மனைவியை நோக்க அவள் தர்மசங்கடமாயப் பார்த்தாள்.

இதற்கு மேலும் இந்தப் பிரச்சினையை மூடி வைத்து, பெரிய வம்பை விலைக்கு வாங்க விரும்பாத சுந்தரம் இன்றே அதைத் தீர்த்து விடும் முடிவுடன் எழுந்து மகளின் அறையை நோக்கி நடந்து உள்ளே பார்வையைச் செலுத்தினார்.

பரபரப்படன் கடிதத்தைப் பிரித்து கண்களில் ஆர்வம் மின்ன அதைப் படித்த தமிழ்ச்செல்வியின் முகத்தில் சாகாவரம் பெற்ற சந்தோஷம்.

சுந்தரத்திற்கு அடிவயிறு பற்றியெரிந்தது. “பாவி மகளே... எவனோ எழுதிய கடுதாசிக்கு இத்தனை உற்சாகமா? குடும்ப மானம்... மரியாதை... கவுரவம்... எல்லாம் பறிபோய்க்கிட்டிருக்கே... அது புரியலையா உனக்கு?... பதினாறு வயசு மோகம் உன் கண்ணை மறைக்குதா?… த்தூ...”



படித்து முடித்ததும் கடிதத்தை நெஞ்சொடு சேர்த்தணைத்து மகிழ்ந்த தமிழ்ச்செல்வி அதை மடித்து தன் பெட்டியில் பத்திரப்படுத்தப் போகும் போது,

சடாரென அந்த அறைக்குள் புகுந்தார் சுந்தரம். “கேடு கெட்ட சிறுக்கி மவளே... என்னடி நெனச்சிட்டிருக்கே உம் மனசுல?... இங்க என்னடி நடக்குது... குடும்பமா… இல்ல கூத்தா...?”

திடீரெனப் புகுந்து கத்தலாய்ப் பேசிய தந்தையை மிரட்சியுடன் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.

“அப்பா… நீங்க... ” வாய் குழறியது. உடல் நடுங்கியது.

“எவண்டி அவன்... உனக்கு கடுதாசி மேல கடுதாசி போடறவன்?... எத்தனை நாளா நடக்குது இந்த அசிங்கம்?... சொல்லுடி…”



தன் கணவனின் கோபத்தை நன்றாக அறிந்து வைத்திருந்த தேவகி மகளை அவருடைய தாக்குதலிலிருந்து காப்பாற்றும் விதமாய் ஓடி வந்து அவளருகில் நின்று கொண்டாள்.

கடுவன் பூனையைக் கண்டு நடுங்கி இங்குமங்கும் ஓடிய கோழிக்குஞ்சு தாய்க் கோழியைக் கண்டதும் அதன் இறக்கை நிழலில் ஒதுங்குவதைப் போல தாயின் முதுகுக்குப் பின்னால் பதுங்கினாள் தமிழ்ச்செல்வி.

“தேவகி... அந்தச் சனியன்கிட்ட நீயே கேட்டுச் சொல்லு... யாரந்த திருட்டுப்பயல்ன்னு” ஆக்ரோஷத்தை மனைவி மேல் காட்டினார் சுந்தரம்.

“கேட்கறாரில்ல?… சொல்லுடி... யாரவன்?”

“ம்ம்… வந்து… வந்து... பேனா நண்பன்…பேரு ஆனந்தன்” தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“ரெண்டு பேரும் காதலிக்கறீங்களா?” அடுத்தக் கேள்வியை “படக்”கென்று வீசினாள் தேவகி.

“சசீய்... யார் சொன்னது அப்படின்னு?”

“ஊரே சொல்லுது” இடையில் புகுந்து கத்தலாய்ச் சொன்னார் சுந்தரம்.

“ஊரு ஆயிரம் சொல்லும்... அதை நீங்க நம்பறீங்களா?”

“நம்பாம என்னடி பண்றது?... காதலிக்காமலா கடுதாசி மேல கடுதாசி போட்டுக் கொஞ்சறான் அந்தப் பயல்?”

தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரே தன் மேல் சந்தேகப்பட்டு அபாண்டமாய்ப் பேசுவதைத் தாங்க முடியாத தமிழ்ச்செல்வி தரையிலமர்ந்து “ஓ”வென அழுதாள்.

“ம்... பண்றதையும் பண்ணிட்டு அழுகை வேறயா?... யாரை ஏமாத்த இந்தப் பசப்புத்தனம்?” ஆத்திரத்தில் சுந்தரம் வரம்பு மீறிப் பேச,

சடாரெனத் தலையைத் தூக்கி தந்தையை எரிக்கும் பார்வை பார்த்த தமிழ்ச்செல்வி அதே வேகத்தில் எழுந்து தன் பெட்டியைத் திறந்து அதிலிருந்த ஆனந்தனின் கடிதங்களை எடுத்து விசிறியடித்தாள்.

அறையெங்கும் தாறுமாறாயச் சிதறிய கடிதங்களைக் காட்டி, “பாருங்க... எடுத்து நல்லா படிச்சுப் பாருங்க... அதுல எங்காவது ஒரு இடத்துல நீங்க நெனைக்கற மாதிரி... ஏதாவது இருக்கான்னு பாருங்க” கத்தினாள்.

தன் காலடியில் விழுந்த ஒரு கடிதத்தை எடுத்துப் படித்த சுந்தரம் அதில் பாட சம்மந்தமான கேள்வி பதில்களே இருக்க, இன்னொரு கடிதத்தை எடுத்தார். அதிலும் அப்படியே... ‘பரபர’வென்று எல்லாக் கடிதங்களையும் அவசர அவசரமாகப் படித்துப் பார்த்து விட்டு மகளை தர்ம சங்கடமாய் நோக்கினார்.

“என்னப்பா… உங்க சந்தேகம் தீர்ந்திடுச்சா இல்ல இன்னும் இருக்கா?”

“இல்லம்மா… அது… வந்து…” ஏதோ சொல்ல வாயெடுத்தவரை கையமர்த்திய தமிழ்ச்செல்வி

“அப்பா... என்னோட பேனா நண்பன் ஆனந்தனும் என்னை மாதிரியே ஒரு ப்ளஸ் - டு மாணவன்… டியூசன் போய்க்கிட்டிருக்கான்.! நம்ப வசதிக்கு என்னால் டியூசனெல்லாம் போக முடியாது... அதனால் பாட சம்மந்தமான என்னோட சந்தேகங்களை நான் அவனுக்கு எழுதுவேன்... அவன் தன்னோட டியூசன் ஆசிரியர் கிட்டக் கேட்டு அதுக்கான பதில்களை எனக்கு அனுப்புவான்... இதுவும் ஒரு வகை குரூப் ஸ்டடிதான்... இதோ இதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தபால்காரர் கொடுத்துட்டுப் போன கடிதம்... ஆனந்தன் 'மாதிரி வினாத்தாள்” அனுப்பியிருக்கான்… இதுல இருக்கற கேள்விகள் தொண்ணூறு சதவீதம் பரிட்சைல கேட்க வாய்ப்புண்டுன்னு எழுதியிருக்கான்... அதைத்தான் பத்திரப்படுத்தி வெச்சேன்” என்றபடி தன் பெட்டியின் அடியிலிருந்த அந்தக் கடிதத்தையும் எடுத்துக் காட்டினாள்.

சுந்தரம் ஒருவித குற்ற உணர்ச்சியோடு மகளைப் பார்க்க,

“அப்பா... சிறுசுக நாங்க ஒழுங்காத்தான் போய்கிட்டிருக்கோம்.. பெரியவங்க நீங்கதான் கண்டபடி அசிங்க அசிங்கமாச் சந்தேகப்பட்டு எங்க மேல் சேற்றை வாரி இறைக்கறீங்க... பச்சைக்கலர் கண்ணாடி போட்டுக்கிட்டுப் பார்த்தா எல்லாம் பச்சையாத்தான் தெரியும்... மொதல்ல உங்க சந்தேகக் கண்ணாடியக் கழட்டி எறியுங்க..” என்று மூச்சு விடாமல் பேசியவள் பேச்சை நிறுத்தி சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தாள்.

“வேண்டாம்பா... தெளிந்த நீரோடை மாதிரியிருக்கற எங்க மனசுல விஷத்தைக் கலக்காதீங்கப்பா... ப்ளீஸ்”

மகளை நேருக்கு நேர் பார்க்கத் திராணியற்று தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாதவராய்ப் போனார் சுந்தரம்.

அன்று ப்ளஸ்-டு ரிசல்ட்.

“அப்பா... நான் பாஸாயிட்டேன்... ரெண்டு பாடத்துல நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட்” முக மலர்ச்சியுடன் சொன்ன மகளிடம்,

“கண்ணு... மொதல்ல அந்த ஆனந்தன் தம்பிக்கு ஒரு நன்றிக் கடுதாசி போட்டுடு கண்ணு” என்றார் சுந்தரம்.

ஆம். அவர் மனமும் சிறுசுகளைப் போல் பண்பட்டுவிட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p145.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License