இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

முகத்துவாரம்

முகில் தினகரன்


அந்தப் பத்திரிக்கையில் கவிதைப் போட்டியின் முடிவு வெளியாகியிருந்தது. மிகுந்த நம்பிக்கையோடு பக்கத்துப் பெட்டிக்கடைக்குச் சென்று பத்திரிக்கையை வாங்கி அங்கேயே பிரித்துப் பார்த்தான் கிருஷ்ண பிரசாத். அடுத்த நிமிடத்தில் அவன் நம்பிக்கைக் கோட்டை 'சட..சட” வெனச் சரிய, அவன் முகம் சோக முலாம் பூசிக் கொண்டது.

'என்ன தம்பி …திடீர்னு மூஞ்சி பேஸ்தடிச்சாப்புல ஆயிடுச்சு?... என்ன சமாச்சாரம்?” கடைக்காரர் பேப்பரை எட்டிப் பார்த்துக் கேட்க,

'ம்… அது… ஒண்ணுமில்லை!” வழியும் அசடைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாய் அந்த முதல் பரிசுக் கவிதையை நிதானமாய் வாசித்தான் கிருஷ்ண பிரசாத்.

மனைவி!
வாலிப வயதில்
உன் மேனியில் முளைக்கும்
இன்னுமொரு வெளியுறுப்பு!
வெளியுறுப்புத்தான் ஆனாலும்
உள்ளுறுப்புக்கள் மொத்தத்தையும்
உற்சாகமாய் இயக்கும்
புடவை கட்டிய ரிமோட்!...மனைவி!
உன் சோகங்களைச் சுட வந்த
வெல்வெட் தோட்டா!
உன் துயரங்களைத் துடைக்க வந்த
அனிச்சமலர்த் தூரிகை!
கவலைகளைக் களைய வந்த
கந்தர் சஷ்டிக் கவசம்!
தாம்பத்ய சுகத்தை
உனக்குத் தந்து விட்டு
பிரசவ வேதனையைத்
தான் மட்டும் ஏற்கும்
அருள்மிகு மனைவியேஸ்வரியம்மன்தான்!



தொடர்ந்து படிக்கப் படிக்க அவன் விழிகள் விரிந்தன. உதடுகள் அவளையுமறியாமல் 'அருமை…அருமை” எனக் கூவின. அதிலும் அந்த முத்தாய்ப்பு வரிகள் கிருஷ்ண பிரசாத்தின் மனதை நெகிழச் செய்து, கண்களின் ஓரத்தில் ஈரக்கசிவையே ஏற்படுத்தி விட்டன.

விவாகரத்து வீச்சரிவாளால்
‘வெடுக்‘கென்று மண(ன)ம் அறுக்கும்
வெத்து வேட்டுக் கணவர்களே!
புரிந்து கொள்ளுங்கள்
விவாகரத்துத் தீர்ப்பு வெற்றி மாலையல்ல...
சட்டப்பூர்வ தற்கொலை அனுமதி!

'ச்சே!.. இதை எழுதியவன் நிச்சயம் தன் மனைவி மேல் அபரிமிதமான அன்பும்… பாசமும்... அளப்பரிய காதலும்… மோகமும்… ஏன்?... பக்தியும் கொண்டவனாகத்தான் இருப்பான்!.. ஆஹா… என்னமா எழுதியிருக்கான்…'அருள்மிகு மனைவியேஸ்வரியம்மன்”னு மனைவியை ஒரு தெய்வமாகப் போற்றி… கடைசியில் ‘விவாக ரத்து‘ என்பது 'ஆண்களுக்கான சட்டப்பூர்வ தற்கொலை அனுமதி”ன்னு… வாவ்… கிரேட்… கிரேட்! ”

அந்தக் கவிஞரை நிச்சயம் நேரில் சந்தித்துப் பாராட்டியே தீர வேண்டும் என்கிற ஆவலில் பரிசு பெற்ற கவிஞரின் பெயரையும் முகவரியையும் புத்தகத்தில் தேடினான்.

கவிஞர். துரை ஜீவானந்தம், கோவை.



'ப்ச்!...போன் நெம்பர் குடுத்திருந்தா… ஒரு கால் போட்டுப் பாராட்டியிருக்கலாம்!... அட... முகவரியாவது முழுசாக் குடுத்திருந்தா ஒரு கடிதம் போட்டுப் பாராட்டியிருக்கலாம். இப்படி மொட்டையாக் ‘கோவை‘ன்னு மட்டும் போட்டா எப்படி?” அந்தப் பத்திரிக்கையையும், அதன் எடிட்டரையும் மானாவாரியாய்த் திட்டித் தீர்த்துவிட்டு, அதன் அலுவலகத் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தான் கிருஷ்ண பிரசாத்.

'ஹலோ… ஆதித்யா மாத இதழ் ஆபீஸ்தானே?”

'யெஸ்… நீங்க யாரு?”ஒரு பெண் குரல் இயந்திரத்தனமாய்க் கேட்டது.

'ம்ம்… நான்… கிருஷ்ண பிரசாத்… உங்க பத்திரிக்கையோட நெடுநாள் வாசகன்!... ம்ம்… எனக்கு இந்த வார இஷ்யூல வெளியாகியிருந்த கவிதைப் போட்டி முடிவுகள்ல முதல் பரிசு பெற்ற கவிஞர். துரை ஜீவானந்தத்தின் போன் நெம்பர்… அட்ரஸ் வேணும்!.. கிடைக்குமா?”

'கொஞ்சம் லைன்ல இருங்க… சப்-எடிட்டருக்கு கனெக்சன் குடுக்கறேன்!.. அவர் கிட்டக் கேளுங்க!”

காத்திருந்தான். 'யெஸ்… சப்-எடிட்டர் ஹரிதாஸ் ஹியர்”

கிருஷ்ண பிரசாத் அவரிடம் தன் தேவையை மீண்டுமொரு முறை சொன்னான்.

'நீங்க எதுக்குக் கேட்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” சப்-எடிட்டர் துருவினார்.

'ம்... வாழ்த்துக் கூறத்தான்! பாராட்டுக் கடிதம் போடத்தான்!... வேறெதுக்குக் கேட்பாங்க?”

'அப்ப உங்க பாராட்டுக் கடிதத்தை எங்க ஆபீஸ் அட்ரஸூக்கே அனுப்பிச்சிடுங்க!.. நாங்க அவருக்கு ஃபார்வேர்ட் பண்ணிடறோம்!”

'ப்ச்… இதென்ன வம்பாயிருக்கு… நானே நேர்ல அவரைச் சந்திச்சுப் பாராட்டணும்னு ஆசைப்படறேன்… நீங்க ஏன் குறுக்க பூந்து என்னைத் தடுக்கறீங்க?” கோபமாய்க் கேட்டான் கிருஷ்ண பிரசாத்.

'சார்… அதெல்லாம் முடியாது… வேணுமின்னா எங்க பத்திரிக்கை ஆபீஸூக்கு அனுப்புங்க… அவ்வளவுதான்!”



கடுப்பான கிருஷ்ண பிரசாத், 'ஹல்லோ… ஏன் சார், இப்படிப் பிடிவாதம் பிடிக்கறீங்க?... நான் உங்க பத்திரிக்கையோட ஆரம்ப கால வாசகன்… இதுதான் நீங்க வாசகர்களுக்குக் குடுக்கற மரியாதையா சார்?”

பிரசாத்தின் அந்த வார்த்தைகள் சப்-எடிட்டரை லேசாய்க் கரைத்து விட, 'நீங்க…இவ்வளவு தூரம் கேட்கறதினால சொல்றேன்…முதல் பரிசு பெற்ற அந்தக் கவிஞர். துரை ஜீவானந்தம் ஒரு தூக்கு தண்டனைக் கைதிங்க!... கோவை மத்திய சிறைல இருக்கார்!... அவரோட சிறை முகவரியை நாங்க தரக் கூடாது”

ஆடிப் போனான் கிருஷ்ண பிரசாத். 'என்ன… கொடுமை இது!... மயிலிறகு வார்த்தைகளை வெல்வெட் நூலில் கோர்த்து மனதின் கழுத்துக்கு மென்மையாய் அணிவித்த கவிஞன் ஒரு தூக்குத் தண்டனைக் கைதியா?... என்ன... என்ன குற்றம் இழைத்து விட்டது அவனின் பொற் கரங்கள்?”

'கொலை!”

'என்னது?... கொலையா?... அவனா?... அந்தக் கவிஞனா?... யாரை?... யாரைக் கொலை செய்து விட்டான் அவன்?”

மெலிதாய்ச் சிரித்த சப்-எடிட்டர் தணிவான குரலில் சொன்னார், 'மனைவியை!”

மறுமுனையில் கிருஷ்ண பிரசாத் வாயடைத்துப் போய் மௌனம் காக்க.

'என்ன சார்… அமைதியாயிட்டீங்க?... அவர் கொன்னது தன்னோட மனைவியை… அதுக்கு அவனுக்கு கெடைச்சிருக்கறது தூக்கு!... கூடிய விரைவில் அது நிறைவேற்றப்படவும் உள்ளது!”

'ஓ.கே.சார்… ரொம்ப நன்றி வெச்சிடறேன்!” சுரத்தேயில்லாமல் சொல்லி விட்டு, நிதானமாய்ப் போனை வைத்து விட்டு, கண்களை மூடி அமர்ந்தான் கிருஷ்ண பிரசாத்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p149.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License