இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பர்சில் பத்தாயிரம்?

முகில் தினகரன்


'கே.பி.எஸ்.கல்லூரி”யின் பெண்கள் விடுதியில் அறை எண்.56-லிருந்து வந்த கூச்சலாலும் ஆரவாரத்தினாலும் அந்த இரவு நேரத்தின் அமைதி அநியாயத்திற்கு பாழாகிக் கொண்டிருந்தது. பக்கத்து அறைவாசிகளுக்கு அது மாபெரும் தொந்தரவாய் இருந்த போதிலும் அதை நேரில் போய்க் கேட்கவோ… அல்லது பிரின்ஸிபாலிடம் புகார் கொடுக்கவோ யாருக்குமே தைரியம் இல்லாத காரணத்தால் வாயையும்… காதையும்… அப்படியே தங்கள் அறைகளின் கதவுகளையும் இறுகச் சாத்திக் கொண்டு கிடந்தனர்.

அறை எண் 56-ல் வாசம் செய்யும் நால்வரில் தலைவியைப் போல திகழும் அமுதா ஒரு பணக்கார வீட்டின் ஒரே திமிர் வாரிசு என்பதோடு மட்டுமல்லாது அவளின் தகப்பனார் அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பெரிய தொழிலதிபர் என்பதும் அக்கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவளுடன் மோதுவதென்பது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வதைப் போல என்பதை எல்லோருமே நன்கு அறிவர்.

'த பாருங்கடி… நாளைக்கு காலேஜூக்குக் கட் அடிக்கறோம்… காலைக்காட்சி ஒரு இங்கிலீஸ் மூவி பார்க்கறோம்… மதியம் 'பார்க்-இன்”ல லன்ச்… அப்புறம் அப்படியே ஷாப்பிங் - மால் போறோம்… ஈவினிங் டிரைவ் - இன் போறோம்… கையிலிருக்கற காசையெல்லாம் செலவ பண்ணிட்டு நைட்தான் ரூமுக்குத் திரும்பறோம்… என்ன… ஓ.கே.தானே?”



அவளது அறைத் தோழிகள் மூவரும் கோரஸாய் 'ஓ.கே…டன்..”எனக் கத்தினர்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, 'ஆனாலும் உனக்கு ரொம்பவே சாமார்த்தியம்டி… நிச்சயம் உன்னால அந்த அருணோட பாக்கெட்ல இருந்து பர்ஸை அடிக்க முடியாதுன்னுதான் நெனச்சேன்… பட்… நீ… சாதிச்சிட்டே…” வெள்ளைத் தோல் விஜயா சொல்ல,

'பின்னே?… நான் யாரு…? என்னோட எகஸ்பீரியன்ஸ் என்ன?… இதுவரைக்கும் கிட்டத்தட்ட இருபது... இருபத்தஞ்சு பேர்கிட்ட அடிச்சிருப்பேன்… அவ்வளவு ஏன்… ஒரு தடவ ஒரு பேராசிரியர்கிட்டவே அடிச்சிருக்கேன்னா பார்த்துக்க…” அமுதா பெருமையாய்ச் சொன்னாள்.

'எவ்வளவு பெரிய பணக்காரி நீ… உன்கிட்ட இல்லாத பணமா?... அப்புறம் எதுக்கடி இந்த அல்பத்தனமான பழக்கம்?”

'சும்மா… ஒரு த்ரில்லுக்காக…”

'எப்படியோ கைவசம் ஒரு தொழிலிருக்கு உனக்கு” பாய் கட்டிங் பாவனா சொல்ல,

எல்லோரும் உச்சஸ்தாயில் சிரித்து அக்கம் பக்கத்து அறைக்காரர்களின் வயிற்றெரிச்சலை மொத்தமாய்க் கொட்டிக் கொண்டனர்.

மறு நாள் காலைக் காட்சியையும், மதிய உணவையும் முடித்து விட்டு ஷாப்பிங் மாலுக்கு வந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் அது தேவையா… இல்லையா?… என்பதைப் பற்றிச் சிறிதும் யோசிக்காமல் வாங்கிக் குவித்தது அந்தப் பெண்டிர் கூட்டம். எவன்கிட்டயோ அடிச்ச காசுதானே?

'ஏய்…போதும்டி….அவன் பர்ஸிலிருந்த பத்தாயிரத்தில் ஒன்பதரை காலி… கடைசி ஐநூறுதான் இருக்கு… அது டிரைவ் - இன்ல திங்கறதுக்குத்தான் ஆகும்… வாங்க… வாங்க” ஐஸ்க்ரீம் வழியும் வாயுடன் அமுதா சொல்ல,

'பரவாயில்லைடி அந்த அருண்… பாத்தா படு சாதாரணமா இருக்கான்… பாக்கெட் மணியா…பர்ஸ்ல பத்தாயிரம் வெச்சிருக்கான்…” சிவப்பு சுடிதார் சுகன்யா வியந்தாள்.

'ப்ச்…. அதைப் பத்தி நமக்கென்னடி… ஒரு ஜாலிக்கு பந்தயம் கட்டினோம்… பர்ஸை அடிச்சோம்… அந்த வெற்றியைக் கொண்டாட அதிலிருந்தே பணத்தை எடுத்து செலவு செய்யறோம்… தட்ஸ் ஆல்…” வெகு எளிதாகச் சொல்லிவிட்டு எழுந்து காரை நோக்கி நடந்த அமுதாவைப் பின் தொடர்ந்தது அந்தக் கூட்டம்.



டிரைவ் - இன்.

'ஆர்டர் ப்ளீஸ்..” காரின் கதவருகே வந்து நின்று வெய்ட்டர் கேட்க,

அமுதா ஐட்டங்களை ஒப்பித்தாள்.

'தேங்க் யூ” சொல்லிவிட்டு நகர்ந்த இளைஞனின் குரல் எங்கோ கேட்டது போலிருக்க காருக்கு வெளியே தலையை நீட்டி... 'வெய்ட்டர் … ஒன் மினிட்…” அழைத்தாள்.

திரும்பிய வெய்ட்டரைப் பார்த்து அதிர்ந்தாள்.

அருண்.

தன்னுடன் படிக்கும் சக மாணவிகள் தன்னை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டதற்காய் அவமானப்பட்டு… கூனிக் குறுகிப் போன அருண் ஏதும் பதில் பெசாது பரிதாபமாய் நின்றான்.

'ஹேய்… அருண்… வாட்ஸ்… திஸ் ?… நீ… எப்படி… இங்க?… அதுவும் வெய்ட்டரா?”

'அது… வந்து… அது ஒரு பெரிய கதை… கொஞ்சம் பொறுங்க நீங்க ஆர்டர் பண்ணின ஐட்டங்களை எடுத்திட்டு வந்து பரிமாறிக்கிட்டே சொல்றேன் அந்தக் கதையை…” அவன் ஜாலியாய் சொல்லிவிட்டு நகர காருக்குள்ளிருந்த நாலு பெண்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை.

ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்த அருண் ஐட்டங்களை நீட்டியபடியே நேத்து ஒரு பெரிய சோகமாயிடுச்சு அமுதா…ஊர்ல…எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பொண்ணு… அவ பேரு… சாவித்திரி… என்கூட ஸ்கூல்ல படிச்சவ… நீங்கெல்லாம் எப்படி என் மேல் அன்பு காட்டி அக்கறை காட்டி நட்போட பழகறீங்களோ… அதே மாதிரிதான் அவளும்… போன தடவ நான் ஊருக்குப் போயிருந்தப்ப காலேஜ் பீஸ் கட்ட பணம் புரட்ட முடியாம சிரமப்பட்டேன்… அவ 'டக்”குன்னு தன்னோட தாலியக் கழட்டி என்கிட்ட குடுத்து 'இந்தா இதை வெச்சு காலேஜ் பீஸ் கட்டு… எப்படியும் துபாயிலிருந்து எம்புருஷன் வர இன்னும் மூணு மாசமாகும் அதுக்குள்ளார திருப்பித் தந்துடு” ன்னு சொல்லிக் குடுத்தா… நானும் அதை வெச்சுத்தான் பீஸ் கட்டினேன் இப்ப திடீர்னு அடுத்த மாசம் நாலாம் தேதி எம்புருஷன் வர்றான் தாலிய மீட்டுக் குடுன்னு லட்டர் போட்டுட்டா… நானும் அங்க இங்க வாங்கி பத்தாயிரம் ரெடி பண்ணிட்டு தாலியை மீட்கப் போனேன்… அங்கதான் விதி வெளையாடிடுச்சு…”



'என்னாச்சு?” தெரியாதவள் போல் கேட்டாள் அமுதா.

'போற வழியிலேயே பர்ஸை எவனோ அடிச்சிட்டான்…” சொல்லிவிட்டு மெலிதாய் முறுவலித்தவன் 'சரி…எப்படியும் இன்னும் ஒரு மாசமிருக்கல்ல… அதுக்குள்ளார சம்பாதிச்சு மீட்டுடலாம்னுதான் இங்க இந்த டிரைவ் - இன் ஓட்டல்ல பார்ட் டைம் வெய்ட்டரா சேர்ந்தேன்… அப்புறம் இங்க டியூட்டி முடிஞ்சதும் ஒரு அப்பார்ட்மெண்ட்லே நைட் வாட்ச்மேனா போறேன்…ரெண்டிலேயும் வர்ற வருமானம் போதும் தாலியை மீட்க….”

படு காஷூவலாய்ச் சொன்ன அந்த அருணை பிரமிப்புடன் பார்த்தாள் அமுதா.

இரண்டு தினங்களுக்குப் பிறகு அருண் பெயருக்கு கூரியரில் ஒரு பார்சல் வர யோசனையுடன் பிரித்தான். 'எனக்கு யாரு அனுப்பறது?”

உள்ளே…

அவன் பர்ஸூம்… அதில் ரூபாய் பத்தாயிரமும் இருந்தது.

கூடவே ஒரு கடிதம்… அதில் ஒரே ஒரு வார்த்தை…

'மன்னிச்சிடுங்க”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p153.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License