இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பொய்யும் மருந்தாகுமா?

முகில் தினகரன்


அந்தத் தனியார் மருத்துவமனையின் வராண்டா பெஞ்சில் சோகமாய் அமர்ந்திருந்தான் அவன். 'பாவம்… இவனுக்கு என்ன இழப்போ… என்ன துயரமோ?” என்று யோசித்தபடியே சென்று அவனருகே அமர்ந்தேன். இயல்பாகவே பிறர் சோகத்தைக் காணப் பொறுக்காதவன் நான். யாராவது… எங்காவது சோகத்தில் மூழ்கியிருக்கக் கண்டால் நேரடியாக அணுகி அவர்களுடன் எப்படியாவது பேசி… எதையாவது சொல்லி அவர்களது சோகத்தை என்னால் முடிந்த மட்டும் குறைக்கவோ… அல்லது இல்லாமலே போகச் செய்யவோ முயற்சிப்பேன்.

'என்ன தம்பி… நமக்கு எந்த ஊரு?” தணிவான குரலில் பேச்சை ஆரம்பித்தேன்.

'காரமடை”

'ஓ… அப்ப நம்மூருப் பக்கந்தான்… பலே… பலே… அது செரி… என்ன சம்சாரத்துக்குப் பிரசவமா?”

'ம்”

'ஆயிடுச்சா… இல்ல இனிமேத்தானா?”

'பச்… ஆயிடுச்சு…” சலிப்புடன் சொன்னான்.

'சுகப் பிரசவமா... ஆயுதமா?… ஆணா… பெண்ணா?”



'அதெல்லாம் சுகப் பிரசவம்தான்… ஆனாலும் கர்மம்… பொட்டைப் புள்ளையை அல்ல பெத்துப் போட்டிருக்கா… சனியம் புடிச்சவ…”

'ஓ… அதுதான் உங்க சோகமா?”

'பின்னே?… எங்க பரம்பரைல தலைச்சன் எல்லாருக்கும் ஆம்பளைப் புள்ளைதான்… ஹூம்... எனக்குத்தான் இப்படி ஆகிப் போச்சு… இனி எந்தச் சொந்தக்காரப்பய என்னை மதிப்பான்?”

எனக்கு வியப்பாகவும் சற்றுக் கோபமாகவும் இருந்தது. அதென்ன முதல் குழந்தைப் பெண் குழந்தையாப் பொறக்கறது அவ்வளவு கேவலமா?… உண்மையைச் சொல்லப் போனா அதுதான் மங்களகரமான விஷயம்… அப்படி அமையக் குடுத்தில்ல வெச்சிருக்கணும்?…ஹூம்… அங்கங்க எந்தப் பிரச்சினையுமே இல்லாம பிரசவம் ஆகணும் … பெரிய உசுரு… சின்ன உசுரு… ரெண்டும் நல்லவிதமாப் பொழச்சி வரணும்” ன்னு விழுந்து விழுந்து வேண்டிக்கறாங்க… இந்தாளு என்னடான்னா... சுகப் பிரசவம் ஆகி… தாயி சேயி ரெண்டுமே சுகமாய் இருந்தும்… ஒரு உப்புப் பெறாத விஷயத்தைப் பெரிசா நெனச்சுக்கிட்டு இப்படிக் கப்பலே கவுந்த மாதிரி உட்கார்ந்திட்டிருக்கானே… இவனை எப்படிச் சமாதானப்படுத்தி... சாந்தமாக்கறது?



யோசித்தேன். 'ஆங்… கரெக்ட்… அதான் ஒரே வழி..”

'ப்ச்… உங்க பாடு தேவலை தம்பி… எப்படியோ தாயும் புள்ளையும் எந்தவிதச் சேதாரமும் இல்லாமத் தப்பிச்சுக்கிட்டாங்க… எல்லாம் நீங்க செஞ்ச புண்ணியம்… ஹூம்… நான் என்ன பாவத்தைச் செஞ்சு தொலைச்சேனோ தெரியலை எனக்கு இப்படியாயிட்டுது…” என் முகத்திற்கு சோக முலாம் பூசிக் கொண்டேன்.

'அடடே… என்ன… என்ன ஆச்சுங்க உங்களுக்கு?” அவன் தன் சோகத்தை மறந்து, என் சோகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமானான்.

'நானும் என் சம்சாரத்தைப் பிரசவத்துக்காகத்தான் கொண்டாந்து சேர்த்தேன்… பிரசவம் ரொம்பச் சிக்கலாகி... கத்தி போட்டு ஆபரேஷன் பண்ணித்தான் கொழந்தைய வெளிய எடுத்தாங்க… குழந்தை பொழைச்சிடுச்சு… ஆனா… ஆனா… என் சம்சாரம் என்னை விட்டுட்டுப் போயிட்டா தம்பி” குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தேன்.

அவன் தன் நிலை மறந்து என்னை ஆறுதல் படுத்தினான்.

'அவ மேல் உசுரையே வெச்சிருந்தேன் தம்பி… இப்படி ஒரு பொட்டைப் புள்ளையைப் பெத்து என் கையில் போட்டுட்டு போயிட்டாளே தம்பி… இனி நான் என்ன பண்ணுவேன்… தனியாளா எப்படி அதை வளர்ப்பேன்”

என் தோளைத் தொட்டு என்னைச் சமாதானப்படுத்தியவன் முகத்தில் ஒருவித தெளிவு தெரிந்தது. 'நல்லவேளை நம்ம பொண்டாட்டியும், இவன் பொண்டாட்டி மாதிரி பொட்டைப் புள்ளையைப் பெத்து நம்ம கைல போட்டுட்டுப் போகலை… அய்யோ… அப்படியெல்லாம் ஆகியிருந்தா… கடவுளே நெனச்சுப் பார்க்கவே பயமாயிருக்குடா சாமி…”

அவன் மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் இலக்கே அதுதானே?



சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் மெல்ல எழுந்து 'சார்… பாதைல எப்படி மேடு பள்ளங்கள் இருந்திட்டே இருக்கோ அது மாதிரி மனுசன் வாழக்கைலேயும் இன்ப துன்பங்கள் இருந்திட்டேதான் இருக்கும்… நாம மனசத் தளர விடக்கூடாது… நம்ம பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கணும் சார்…” என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் தன் மனைவியைக் காண அவன் செல்ல, அவன் நடையில் உற்சாகம் தெரிந்தது.

'ஆங்… இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அவன் சென்ற பின் சில நிமிடங்கள் கழித்து வந்த என் மனைவியின் நிறைமாத வயிற்றைத் தொட்டுப் பார்த்தபடி 'டாக்டர் என்ன சொன்னாரம்மா?” கேட்டேன்.

'எல்லாம் நல்லபடியா இருக்காம் இன்னும் பத்து நாள்ல பொறந்திடுமாம்… அது செரி இங்க உட்கார்ந்திட்டிருந்த ஆளோட ரொம்ப சீரியஸாப் பேசிட்டிருந்தீங்களே யாரு அவரு?… உங்க ஃபிரெண்டா?”

'யாருக்குத் தெரியும்?… மனுசன் சோகத்துல இருந்தார்… நான் கொஞ்சம் பேசி… அதாவது பொய் பேசி… அந்த சோகத்தை மாத்தி அனுப்பிச்சேன்”

'பொய் பேசியா?… என்ன சொல்றீங்க… ஒண்ணுமே புரியலை…”

'ம்ம்ம்ம்… அது இப்ப வேண்டாம்டா... பிறகு சொல்றேன்…”

அவள் என்னை ஊடுருவிப் பார்க்க,

'வேணா… இப்போதைக்கு ஒண்ணு மட்டும் சொல்றேன்… சில சமயங்கள்ல சில காயங்களுக்கு பொய் கூட நல்ல மருந்தாகுது...”

'அய்ய ரொம்ப தத்துவப் பித்தரா மாறாதீங்க… என்னால முடியலை”

'அப்பக் கௌம்பு… போகலாம்”

இருவரும் கிளம்பினோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p167.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License