இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வாசகர் வட்டம்

அண்டனூர் சுரா


“ ஜீ.............. வணக்கம்“

“ அடடே ....... வாங்க தம்பி . நல்லா இருக்கீங்களா?“

“ இருக்கேன்ஜீ. சமீபத்தில நீங்க எழுதி பிரசுரமாகியிருந்த கதையை படிச்சேன். கதையை விட அந்தக்கதைக்கு கொடுத்திருந்த ஓவியம் படு ஜோர். “

“ ஹி ஹி ஹி.....“

“ அடுத்து நீங்க எழுதப்போற கதை என்னஜீ?“

“ பிராமிஸ்“

“ அதுவும் எ சர்ட்டிபிகெட் கதை தானா ?“

“ இப்ப அது மாதிரி கதை தானுங்களே வாசகர்கள் விரும்பி படிக்குறாங்க. “

“ உங்க காட்டில தான்ஜீ விடாம மழை பெய்யுது“

“ கண்ணு வைக்காதீங்க தம்பி “

“ வயசுக்கு தகுந்த மாதிரியா கதை எழுதுறீங்க?“

“ இளவட்டத்திற்கு பிடிக்கிற மாதிரி எழுதவேண்டாமா தம்பி “

“ அது சரி. அப்ப நான் தொடங்கப்போற இதழுக்கும் அதுமாதிரி கதை ஒன்னு எழுதித் தாங்கஜீ?“

“ என்ன சொல்றீங்க தம்பி! . நீங்க இதழ் ஆரம்பிக்க போறீங்களா?“

“ ஏன் கூடாதா ? “

“ அடடே...... என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. தாராளமாக ஆரம்பிங்க. என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்“

“ நன்றிஜீ. வாழ்த்துகள் மட்டும் போதாது. உங்க படைப்புகளையும் தந்து உதவணும்“

“ நான் அடுத்து எழுதப்போற கதைய உங்க இதழுக்கே தந்திடுறேன் . ஆமாம்........ நீங்க ஆரம்பிக்கிற இதழ் வார இதழா ? மாத இதழா?“

“ வார இதழ்“

“ இலட்ச கணக்குள முதலீடு போடணுங்களே“

“ போட்டாலும் ஒரு வருசத்துல போட்ட முதலீட எடுத்திறலாம்ஜீ“



“ தமிழ்நாட்டுல இருக்கிற வார இதழ்கள் போதாதுனு உங்க இதழ் வேறா? “

“ நம்ம இதழ் முற்றிலும் மாறுபட்டது“

“ எப்படி?“

“ பல உண்மைகளை உடைச்சி காண்பிக்க போகும் இதழ்“

“ அரசியல் இதழா?“

“ ஊகூம்“

“ பின்னே?“

“ விளம்பர இதழ்“

“ என்னது விளம்பர இதழா? என்ன சொல்றீங்க தம்பி.......?“

“ ஆமாம்ஜீ. இன்றைய பெட்டிக்கடைகளில தொங்கும் அத்தனை வார இதழ்களுமே விளம்பரமில்லாம இயங்குவதில்லைங்களே....................“

“ அதனாலே..............?“

“ முழு விளம்பர இதழா கொண்டு வரலாமுனு இருக்கேன்“

“ விளம்பர இதழா? நீங்க சொல்றது நல்லா தெரியலையே“

“ விளம்பர இதழ்னா முழுக்க விளம்பரமே கிடையாது. இடையிடையே குட்டி கவிதை, குட்டி சிறுகதை, குட்டி ஜோக்ஸ்,குட்டி கட்டுரை எல்லாம் இடம் பெறும்“

“ போடுறதுதான் போடுறீங்க. அது என்னது குட்டி ? பெரிய படைப்பா போடுங்களே தம்பி“

“ ஜீ. குட்டினா இத்துனூண்டுனு அர்த்தம் கிடையாது“

“ பின்னே?“

“ நீங்க எழுதுறீங்களே அது மாதிரியான படைப்புக“

“ ஹி, ஹி, ஹி,...................... நீங்க சொல்றது நல்லா இருக்கு தம்பி “

“-----------------------------------------“

“ அட்டைப்படத்தை எப்படி கொண்டு வரலாமுனு இருக்குறீங்க?“

“ நம்மளது விளம்பர இதழ் . அதனாலே ஒரு நடிகையோ , நடிகரையோ அட்டைப்படமா கொண்டுவந்தா பத்தோட பதினொன்னு , அத்தோட இது ஒன்னு ரகமாகிவிடும்.“

“ அதனாலே..............?“



“ தமிழ்நாட்டுல இருக்கிற யாராவது ஒரு பிரபலமான பெண் எழுத்தாளரை அட்டைப்படமா கொண்டு வரலாமுனு இருக்கேன்“

“ அவனவன் த்ரிஸா, நமீதானு போடுறான். நீங்க என்னடானா எழுத்தாளருடைய படத்தை போடுறேனு சொல்றீங்களே............”

“ ஜீ அவங்களோட முழுபடத்தையும் போட்டப்போறதில்ல“

“ பின்ன?“

“ இப்ப உள்ள வாசகர்களை வசீகரிக்கிற மாதிரி கழுத்து , மார்போட நிறுத்திக்கிறலாமுனு இருக்கேன்“

“ எழுத்தாளர் ஒத்துக்கிறணுமே“

“ முகத்தை பார்த்து அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாதளவிற்கு தலையை உள்பக்கமா திருப்பி பின்புறம் மட்டும் தெரியுற மாதிரி..................... “

“ சரிங்க தம்பி. அட்டைப்படம் ஒகே. அட்டையோட உள்படம்?“

“ உள்ளாடை விளம்பரம்“

“ எல்லா இதழ்களும் அதைத்தானே போடுறான்க“

“நான் அதுக்கும் கீழே ஒரு ஹைகூவோ அல்லது ஒரு கவிதையையோ வைக்கலாமுனு இருக்கேன்“

“ இது நல்லா இருக்கே. விளம்பரத்துக்கு எவ்வளவு வாங்கப்போறதா உத்தேசம்?“

“ நல்ல விளம்பரங்களுக்கு சன்மானம் கொடுக்கலாமுனு இருக்கேன்.“

“ இது என்னது புதுசா ?“

“ ஆமாம்ஜீ. நம்மோடது விளம்பர இதழாச்சே.“

“ அதனாலே?“

“ கவிதை , ஜோக்ஸ் , சிறுகதை கொடுக்கிறவங்கக்கிட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு பிரசுரமாக்கலாமுனு இருக்கேன்“

“ இதெல்லாம் நடக்க போற காரியங்களா? படைப்புகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்கஜீ. உங்களுக்கு தெரியாததில்ல. தமிழ்நாட்டுல கவிதை படிக்கிறவங்கள விட எழுதுறவங்க அதிகம்“

“ ஆமாம் அதனாலே.......?“

“ ஆனா இப்ப இருக்கிற இதழ்ங்க பத்து பிரபலமான கவிஞர்களை கையில வச்சிக்கிட்டு அவங்களையே கட்டுரை எழுத வக்கிறதும் , நாவல் எழுத வக்கிறதும் , பேட்டி கொடுக்க வைக்கிறதும்.....................“

“ நீ என்னய்யா எனக்கும் சேர்த்து உலை வைப்ப போல“

“ ஜீ நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. பத்து இதழுக்கு பிறகு உங்களையும் அட்டைப்படத்துல கொண்டு வரலாமுனு இருக்கேன்“

“ உங்கள நான் ஒரு விசயத்துக்கு பாராட்டுறேன் தம்பி“

“ என்னதுக்கு ஜீ?“



“ இதுவரைக்கும் யாரும் கொடுக்காத முக்கியத்துவத்தை ஒரு எழுத்தாளருக்கு கொடுக்க நினைக்கிறீங்களே.......... “

“ அது மட்டுமல்லஜீ . தமிழ் நாட்டுல இருக்கிற எத்தனையோ இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வெளியே கொண்டு வரத்தான் போறேன்“

“ சரி, சரி எங்களை போல பழைய எழுத்தாளருக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க“

“ உண்டு ஜி. ஆனா ஒன்னு “

“ என்ன ஆனா ஒன்னு?“

“ நீங்க கதை எழுதுறவரு. கதை மட்டும்தான் எழுதணும். கவிதை எழுதுறேனு வரிகளை மடக்கி மடக்கி எழுதி அனுப்பி வைக்கக்கூடாது“

“ என்ன தம்பி அப்படி சொல்லீட்டீங்க?“

“ கவிதை நடையில சிறுகதையோ , நாவலோ எழுதிறேனு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நானு என் இதழ்ல பிரசுரிக்க போறதில்ல “

“ நீங்க சொல்றத பார்த்தா வளர்ற பிள்ளை மாதிரி தெரியல“

“ வித்தியாசமாக சிந்திச்சிட்டா பொறுத்துக்கிறமாட்டீங்களே“

“ஹ ஹ ஹ..................தம்பி அது இருக்கட்டும் . அட்டை படத்துக்கு அடுத்து முதல் பக்கம் எப்படி?“

“ ஒரு நைட்டி விளம்பரம். அதுக்குள்ள தெரியுற மாதிரி ஒரு பக்கா கதை .“

“ தம்பி ............. பக்கா கதை இல்ல. பக்க கதை.“

“ ஜீ ஒரு பக்க கதை தான் . ஆனா அது பக்கா கதையாக இருந்தாதான் இதழ்ல இடம் பெறும்“

“ ஜோக்ஸ் உண்டுங்களா?“

“ சிலேடை ரேஞ்சில இருந்தால் வரவேற்கப்படும்“

“ ரெட்டை அர்த்தத்திலதான் இருக்கணுமா?“

“ அப்படியும் இருக்கலாம். இல்ல சில ஆடை சம்மந்தப்பட்டதாகவும் இருக்கலாம்“

“ ஜோக்ஸ்க்கும் பக்கத்தல சித்திரம் போட்டாகணுமே.“

“ ஒரு நல்ல ஓவியரா பார்த்து மொத்தமாக நூறு வரைஞ்சி வச்சிக்கிட்டா , மாத்தி மாத்தி அதையே போட்டுக்கிட்டு இருக்கலாம்“

“ வாசகர்கள் மனசை வசீகரிக்க முடியாதே. “



“ எல்லா ஜோக்ஸீம் அப்படி கிடையாது. கட்டணம் அதிகமாக கொடுக்கிற எழுத்தாளர்களுடைய ஜோக்ஸ்களை உள்ளாடைகளுக்கு கீழே , மேலே , உள்ளே , வெளியே போட்டுறலாம்“

“ நீள படமா? இல்ல சின்னதா ?“

“ நீள படமா கொடுக்க முடியுதோ இல்லையோ. கொடுக்கிற படத்த நீல படமா கொடுத்திட்டா விற்பனையில கொடிக்கட்டி பறக்கும் பாருங்க“

“ கடைசி பக்கம் எப்படி?“

“ அதை நம்பிதான்ஜீ நான் இதழே ஆரம்பிச்சிருக்கேன்“

“ என்ன சொல்றீங்க தம்பி?“

“ ஆமாம்ஜீ. அந்த பக்கத்துக்கு மட்டும் அம்பாதாயிரம் ரூபாய் வாங்கலாமுனு இருக்கேன் “

“அதுல என்னத்த போடப்போறீங்க“

“ சிறுகதை“

“ கடைசி பக்கத்திலயா? எனக்கு என்னவோ அது நல்லதா படல தம்பி“

“ கதைனா சாதாரன கதை இல்ல . குட்டி கதை “

“ குட்டி கதைனா? ”

“ நீ்ங்க எழுதுற ரகம் தான்“

“ அப்ப ஓகே“

“ நடு பக்கம் ?“

“ முக்கிய செய்திகளா இடம் பெற போகுது”

“ அரசியல் நடப்புகள், உலக நடப்புகள் , பொது அறிவு சம்மந்தப்பட்டதா?“

“ நம்ம இதழ் முற்றிலும் ஒரு மாறுபட்ட இதழ்னு சொல்லிட்டு அதை எப்படி போட முடியும்? அதை போட்டாலும் நல்லாவா இருக்கும்? நான் வைக்கப்போறது முக்கியச் செய்திகள் அல்ல. முக்கிய செய்திகள் “

“ அருமை .......அருமை ..........அசத்துறீங்க தம்பி.“

“-------------------------”

“ முதல் இதழ்லோட எதுவும் ப்ரியா கொடுக்க விரும்புறீங்களா தம்பி“

“ பின்னே! மாறுபட்ட இதழாக இருந்தாலும் தமிழ்நாட்டு பத்திரிக்கை கலாசாரத்தை மீற முடியுங்களா?“

“ என்ன ப்ரி கொடுக்கப்போறீங்க?“

“ ஒரு இதழ் வாங்கினா இன்னொன்னு இலவசம்“

“ அதே இதழை ப்ரியா கொடுக்க போறீங்களா?“

“ ஆமாம்ஜி“

” ஏன்?“

“ ஒரே வாரத்துல பத்து லட்சம் இதழ் விற்பனைனு மறு வாரத்துல போட்டுக்கிறலாம் பாருங்க“

“ அப்ப மூணு இதழா கொடுக்க வேண்டியதுதானே “



“ முதலில் அப்படிதான் நினைச்சேன். பிறகு பண்டிகை வாரத்துல அப்படி பண்ணிக்கிறலாமுனு மாத்திக்கிட்டேன்“

“ ஆமா............. இதழோட விலை என்ன? பத்தா, இருபதா?“

“ நீங்க ஒரு ஆளு ஜீ “

“ ஏன் அதுக்கு மேல நிர்ணயிக்கப்போறீங்களா?“

“ அதெல்லாம் கிடையாது. “

“ பின்னே?“

“ இதழ் ப்ரி “

“ நீங்க விலையில்லாம கொடுத்தா அரசாங்க இதழ்னு நினைச்சுக்கிருவாங்களே “

“ அதுக்கு தானுங்களேஜீ அப்படி கொடுக்கிறேன்.“

“ ஏன்?“

“ ஒரே வருசத்துல ஒத்த பைசா செலவு செய்யாம அரசு இதழ்னு பேரு வாங்கிரலாமே “

“ பொருளாதாரம் கையை கடிக்குமே“

“ ஏன் கடிக்குது. நான்தான் படைப்பாளிகளுக்கிட்டேருந்து கறந்திடுறேனே..........“

“ இதழோட பேரு எப்படி வைப்பதா உத்தேசம்?“

“ நம்பர் ஒன் இதழ்“

“ அட ! அது எல்லா தமிழ்நாட்டு இதழ் பெயருக்கு மேலேயோ , கீழேயோ இடம் பெறக்கூடிய வாசகமாச்சே“

“ அதேயே இதழோட பெயரா வச்சிட்டேன்“

“ நம்பர் ஒன் இதழ்?“

“ ஆமாம்ஜீ. ஒரு பெயர் வச்சி அதுக்கும் பக்கத்தில நம்பர் ஒன் இதழ்னு கொடுத்திட்டா இப்ப இருக்கிற இதழுக்கும் நம்ம இதழுக்கும் வித்தியாசம் தெரியாம போயிரும் “

“ அதனாலே நம்பர் ஒன் இதழ்னே பெயர் வச்சிட்டீங்க“

“ ஆமாம்ஜீ“

“--------------------------”

“ என்னஜீ அமைதியாயிட்டீங்க? எப்படி இருக்கு என்னோட ஐடியா?“

“ ஐடியா. பெரிய பொடலங்கா ஐடியா ! “

“ என்னஜீ சரியில்லையா ?“

“ இடத்த விட்டு காலிப்பண்ணுய்யா.“

” ஏன்ஜி?“

“ இப்ப கடைகளில தொங்கற இதழ்கள் மாதிரி தானே நீ சொல்ற இதழும் இருக்கு . என்ன ஒன்னு , நீ ப்ரியா கொடுக்கிறேங்கிறே................ “

“ ஜீ என்னை ஊக்கப்படுத்துங்கஜீ. ஆசிரியர் குழுவில உங்க பேரையும் சேர்த்துக்கிறேன்“

“அதெல்லாம் எனக்கு பிடிக்காது“

“ ஜீ உங்களுக்கு பிடிக்கலைனா இதழ் தொடங்குறதையே விட்டுருறேன்ஜீ. இப்பவே விட்டுருறேன் . ஆனா .....................“

“ என்ன ஆனா.......................?“

“ நான் உங்க வாசகன்ஜீ. “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச்சொல்றே?“

“ உங்க கதைகளை படிச்சு தூக்கத்தை தொலைத்தவன்கள நானும் ஒருத்தன். “

“ என்ன சொல்றே...............!?“

“ ஆமாம்ஜீ. உங்க எழுத்துகளை பூசித்த நீண்ட கால வாசகன் நான் . தொடக்கத்தில திரும்பத்திரும்ப படிக்கிற மாதிரி கதை எழுதின நீங்க, இப்பவெல்லாம் யாரும் பார்த்திருவாங்களோனு திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே படிக்கிறமாதிரி கதை எழுதுறீங்களே ஏன்ஜீ...................? சிறுகதைகளை சிறுகதைகளாகவே இருக்கவிடுங்க. அதை “குட்டி“ கதையா மாத்தி சிறுகதை வாசகர் வட்டத்தை அழிக்காதீங்க. ப்ளீ்ஸ்.................................ஜீ“.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p179.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License