இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

தாய்​மையின் நி​றைவு

முனைவர் சி.சேதுராமன்


“மலர் மருத்துவம​னை” என்று ​பெரிய எழுத்துக்களால் எழுதப்​பெற்று சுற்றிலும் மரங்கள் சூழ பிரம்மாண்டமாகக் காட்சி தந்தது அந்த புகழ் ​பெற்ற மருத்துவம​னை. அதில் மகப்​பேறு மருத்துவராக ​லலிதாவின் பள்ளித் ​தோழி காயத்ரி இருந்தாள். ​பெரிய மருத்துவம​னையில் மருத்துவராகக் காயத்ரி இருந்தாலும் அவர்களது பள்ளி நட்பு ​தொடர்ந்தது.

திருமணமாகி சிலவருடங்கள் குழந்​தையின்றி இருந்த லலிதா அதிர்ஷ்டவசமாக கருவுற்றிருந்தாள், லலிதாவிற்கு மகிழ்ச்சி. எங்​கே தான் தாய்​மைப் பாக்கியத்​தை அ​டைய முடியாம​லே​யே ​போய்விடு​வோ​மோ என்று எண்ணியிருந்த தனது வயிற்றில் இ​றைவன் பால்வார்த்து விட்டான். இ​றைவனுக்கு நன்றி​யை மனதாரக் கூறிக் ​கொண்ட லலிதா தனது ​தோழியிடம் இ​தைச் ​சொல்லிவிட்டு ஸ்​கேன் ​செய்து ​பார்ப்பதற்காகத்தான் மருத்துவம​னைக்கு வந்தாள்.

மருத்துவம​னைக்குள் நு​ழைந்து டாக்டர் காயத்ரியின் அ​றைக்குள் நு​ழைந்தாள் லலிதா. ​நோயாளிக​ளைச் ​செக்கப் ​செய்து ​கொண்டிருந்த காயத்ரி லலிதா​வைப் பார்த்தவுடன் அகமும் முகமும் மலர வர​வேற்று அருகிலிருந்த இருக்​கையில் அமருமாறு கூறிவிட்டு தனது பணி​யைத் ​தொடர்ந்தாள்.

​நோயாளிகள் அ​னைவரும் ​சென்றவுடன் லலிதா​வைப் பார்த்த காயத்ரி, “ஆமா எப்படி இருக்க​றே லல்லி. ஏதாவது வி​சேஷமா?” என்று குறும்பாகக் ​கேட்டாள். அத​னைக் ​கேட்ட லலிதாவிற்கு ​வெட்கமாகப் ​போய்விட்டது. அவள் ​வெட்கப்பட்டுக் ​கொண்​டே விஷயத்​தைக் கூறினாள்.

காயத்ரிக்கு ஒ​ரே மகிழ்ச்சி. “வாழ்த்துக்கள் லல்லி.. வா உட​னே எல்லாத்​தையும் தரவா ​செக்பண்ணி ரிசல்ட்ட ​சொல்லிட​றேன்..வாவா..” என்று தனது ​தோழி​யை அ​ழைத்துக் ​கொண்டு ​லேப்பிற்குள் ​சென்றாள்.

அங்கு முதலில் ஸ்​கேனிங் பார்த்தாள். டாக்டர் காயத்ரியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, லலிதா​வை மறு கண்ணால் பார்த்தாள். "குழந்தை எல்லாம் நல்லா இருக்கா டாக்டர்?" என்ற லலிதாவின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் "லல்லிம்மா… உன்கூட யாரும் வரலையா?" என்று கேட்டாள்.

தன் ​தோழியாக இருந்தாலும் அவளுக்குரிய இடத்திற்குரிய மதிப்பி​னைக் ​கொடுக்க ​வேண்டும் என்பதில் கறாராக இருப்பாள் லலிதா. அதனால் டாக்டர் என்​றே காயத்ரி​யை அ​ழைத்தாள். லலிதா​வை டாக்டரின் ​கேள்வி இயல்பிற்குக் ​கொண்டு வந்தது.

"இல்ல டாக்டர், என் வீட்டுக்காரருக்குத் திடீர்னு ஒரு மீட்டிங், நான் ஆபீஸ்லேந்து நேரா வந்தேன். அதனால என்​னோடு அம்மா கூட வரமுடியல. ஏன் டாக்டர் என்ன விஷயம்? குழந்தை நல்லா இருக்கு இல்லையா?"

"இல்ல…..அது…..வந்து...."

"டாக்டர், ஸ்கேன் பார்த்ததுக்குப் பிறகு உங்க முகம் மாறிப்போச்சு. இப்போ நீங்க என்கிட்ட விஷயம் சொல்லலைனா நான் என்னவோ ஏதோன்னு பயந்து ராத்திரி பூரா தூங்கமாட்டேன். என்கிட்டே என்ன விஷயம்னாலும் சொல்லுங்க டாக்டர்," லலிதாவின் குழந்தை போன்ற முகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி காயத்ரி, "லல்லி உன் ஸ்கேன்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கம்மா" என்று கண்கலங்கியபடி கூறினாள்.

"என்ன டாக்டர்?"

"குழந்தையோட உறுப்புகள் சரியா வளரலை" திடுக்கென்று தனது அடிவயிற்​றைப் யா​ரோ இறுக்கிப் பிடித்துப் பிசைந்தது போல் உணர்ந்த லலிதா நடுங்கிய குரலில், "இது அஞ்சாவது மாசம்தானே டாக்டர் போகப்போக சரியாயிடும் இல்லையா?" என்றாள்.

"சரியாயிடும்னா நான் சொல்லி இருக்கவே மாட்டேன் லல்லி. குழந்தையோட இருதயம் சரியா வளரல. குழந்தைக்கு கிட்னி வளர்ச்சியும் சரியா இல்ல. இப்படி நிறைய குறை இருக்கு" என்று மன​வேத​னையுடன் கூறினாள் காயத்ரி.



லலிதாவின் முகம் இருண்டு போனது. அவளின் ​கைகளைப் பிடித்துக் ​கொண்ட காயத்ரி,"லல்லி இந்தக் கர்ப்பம் முடியற வரைக்கும் வெயிட் பண்றது அனாவசியமான்னு நான் நினைக்கறேன். நீ வேணும்னா வேற ஒரு டாக்டர்கிட்ட இன்னொரு ஒபீனியன் கேட்டுக்கோ. ஆனா இந்தக் குழந்தை நல்லபடியா உயிரோட பிறக்கறது கஷ்டம். அப்படியே பிறந்தாலும் ரொம்ப நாள் அது தாங்காது" என்றாள்.

சிறிது நேரம் அமைதியாக டாக்டர் கூறியதை உள்வாங்கிய லலிதா, "காயத்ரி, நீ டாக்டர் மட்டும் இல்ல என்னோட ​நெருங்கிய ஃபிரெண்டும் கூட. நீ என்ன சொன்னாலும் நான் நம்பறேன். இன்னொரு டாக்டர்கிட்ட போக வேண்டாம்" என்றாள்.

"அதான் ஒரு ஃபிரெண்டா நான் சொல்றேன் லல்லி, குழந்தை... கஷ்டம்." என்று ​​மென்று விழுங்கினாள் காயத்ரி.

"காயத்ரி எதுவும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியாதா?"

"சரி செய்ய முடியுமா முடியாதாங்கறது இப்போ சொல்றது கஷ்டம். குழந்தை பிறந்த பின்னாடி குழந்தையைப் பார்த்துதான் சொல்ல முடியும். ஆனா என்னோட அனுமானம் குழந்தை நல்லபடியா பிறக்கறதே கஷ்டம்".

"குழந்தைக்குச் சிகிச்சை செஞ்சு சரி செய்யக்கூடிய சதவிகிதம் எவ்ளோ காயத்ரி?"

"ஒரு சதவிகிதம்தான் லல்லி. குழந்தை ஆரோக்கியமா பிறக்கும் அப்படிங்கற சதவிகிதம்கூட ஒரு அரைதான். நீ வீட்டுக்குப் போய் உன்னோட கணவர்கிட்ட பேசு. நீ சரின்னு சொன்னா இன்னும் ஒரு வாரத்தில கலைக்க முயற்சி பண்ணலாம். அதுக்கு அப்புறம் முடியாது."

"எதுக்குக் கலைக்கணும் காயத்ரி?"

"நான் சொல்றது புரியலையா லல்லி? குழந்தை சிகிச்சை மூலம் பிழைச்சாலும் ரொம்ப நாள் தாங்காது லல்லி. இவ்ளோ குறைகளோட ஒரு குழந்தை பிறக்கறதே கஷ்டம். அதனால இப்போவே கலைச்சுட்டா உன்னோட துக்கம் ஓரளவுக்குக் குறையும். நீ வேணும்னா இன்னொண்ணு பெத்துக்கலாம்."

"அரை சதவிகிதம் சான்ஸ் இருக்கு இல்ல. அதுக்கு முயற்சி செஞ்சா என்ன?"

"ம்ம்.... வீட்டுக்குப் போய் யோசிச்சு சொல்லு லல்லி."

"என்ன யோசிச்சாலும் குழந்தையைப் பெத்துக்கற முடிவுதான் எடுப்பேன் காயத்ரி" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

*****




ஏதோ முள்படுக்கை மீது படுத்த பீஷ்மர் போல், மீதி ஐந்து மாத கர்ப்ப காலத்தைக் கடந்தாள் லலிதா. காயத்ரியின் அரை சதவிகிதம் உண்மையாகி, குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தைக்கு ​ரேகா என்று பெயரிட்டாள் லலிதா. ​மேலும் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையின் உடல்நலம் பேணுவதில் செலவழித்தாள்.

குழந்தை ரேகாவிற்கு ஒன்பது மாதம் ஆயின. எத்தனையோ சிகிச்சை செய்தும் ரேகா ரொம்ப நோஞ்சானாகவே இருந்தாள்.

"லலிதா, நீ கொஞ்சம் சாப்பிடு" இது லலிதாவின் அம்மா. "இரும்மா ரேகாவுக்குக் கொஞ்சம் சளி பிடிக்கறாப்பல இருக்கு, நான் எதுக்கும் விக்ஸ் தடவிவிட்டு வரேன்."

"இந்தக் குழந்தையை பார்த்துக்கிட்டே இருக்கியே தவிர உன் உடம்பைக் கவனிக்கறியா? அந்தக் குழந்தை இன்னும் எத்தனை நாள் தாங்கப் போகுதோ அதுக்காக உன் உயிரை விடறியே."

திடுக்கென்று நிமிர்ந்தாள் லலிதா, "என்னம்மா சொல்ற? யோசிச்சுதான் பேசறியா? நாளைக்கே எனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தா, எனக்குச் சரி பண்ண நினைப்பியா இல்ல, அதவிட்டு ஒன்​னோட ஒடம்பப்பத்தி யோசிப்பியா? உனக்கு உன் பொண்ணு உடம்பு மாதிரி, எனக்கு என் பொண்ணு உடம்பு முக்கியம் அம்மா. இனிமே இப்படி தத்துபித்துன்னு பேசாதே."

*****




என்னன்னவோ செய்தும், எப்படிப் பார்த்துக்கொண்டும் விதிப்படி ரேகா தன்னுடைய பத்தாவது மாதத்தில், தன்மீது உயிராக இருந்த லலிதா​வை விட்டுப் போனாள். லலிதா​வைத் தேற்ற வந்தவர்கள் விக்கித்துப் போனார்கள்.

என்ன சொல்வது என்று அறியாமல் பலரும் அமைதியாகச் சென்றனர். "நானும் ரொம்பநாள் சொன்னேன் போகப்போற குழந்தைக்காக நீ தேயாதேன்னு, கேட்டாளா?" என்று அம்மா புலம்ப, வெடுக்கென்று எழுந்து வந்தாள் லலிதா.

"அம்மா பிறப்பும், இறப்பும் நம்ம கையில இல்ல. மனுஷனாப் பிறந்தா எல்லோருமே ஒருநா இறக்க வேண்டியதுதான். அது கடவுளோட தீர்ப்பு. நானே ஒரு மாசம் கழிச்சு இறக்கப் போறதா உனக்கு தெரிஞ்சா, அடுத்த மாசம் போற நீ இப்போவே போடின்னு அனுப்பி வைப்பியா சொல்லு? டாக்டர் அஞ்சு மாசத்துல கலைக்கச் சொன்ன கருவ என்னால முடிஞ்ச வரைக்கும் உயிர் கொடுத்தேன். அதனால எனக்கு துக்கம் அதிகமா இருக்கறதப் பத்தி யோசிக்கற நீ ரேகாவால எனக்குத் தாய்மைங்கிற நிறைவு கிடைச்சுதே அதப்பத்தி யோசிக்க மாட்டியா?. எல்லா உயிர்களுக்கும் இறப்பு என்ற முடிவைக் கடவுள் கொடுத்தாலும் தாயால் பிறப்பைத்தான் கொடுக்கமுடியும். என்னால முடிஞ்சவரை நான் என் ரேகாவுக்கு உயிர் கொடுத்துப் பார்த்துகிட்டேன் என்ன மலடிங்ற பட்டத்துல இருந்து கரையேத்தினவ அவதான்…..” என்று சொன்னபடி அழுதாள் லலிதா.

அன்றுவரை மகளாக மட்டுமே லலிதா​வைப் பார்த்த அம்மா, அவளை முதன்முதலாக ஒரு தாயாகப் பார்த்தாள். அங்கு தாய்​மையின் நி​றைவு பூரணமாக பளிச்சிட்ட​தைக் கண்டு பிரமித்து நின்றாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p185.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License