இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

தண்ணீரும் கண்ணீரும்!

முனைவர் சி.சேதுராமன்


கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் சுப்​பையா. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூப்பறிக்கும் போது கையில் குத்திய முள்ளால் ஏற்பட்ட காயம் பழுத்து அதிலிருந்து சீழ் வடிந்தது. மனதை அரித்து கொண்டிருக்கும் வலியில் மற்ற வலிகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. மனது திசை தெரியாது சென்று கொண்டிருந்தது.

அவன் கால்கள் ஊர் எல்லையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தன. அவன் செல்லும் திசை மனித நடமாட்டமே இல்லாத பகுதியாக இருந்தது. மழையோடு சேர்ந்து நீர் நிராகரித்த பகுதியானதால் அங்கு விவசாயமும் நடைபெறவில்லை. தாவரங்களும், தண்ணீரும் இல்லாததால் மேய்ச்சல் விலங்குகளைக் கூட அங்கு காண இயலாது. அங்கு நிறைவேற்றப்படாத ஒரு திட்டத்திற்காக வாங்கப்பட்ட பெரிய தண்ணீர்க் குழாய்கள் விரயமாக இடங்களை ஆக்கிரமித்துக் கிடந்தன. அந்தக் குழாய்களில் ஒன்றினுள் சுப்​பையா படுத்துக் கொண்டான். அவன் கன்னம் வழியாகப் பாய்ந்த கண்ணீர் அந்தத் தண்ணீர்க் குழாயினில் வடிந்து அது உண்டு சேமித்த வெப்பத்தின் வீரியத்தில் ஆவியாகி விட்டது. மனது புகைந்து கொண்டே இருந்தது.

சுப்​பையா எதற்காக அழுகிறான். எப்போதும் அடிக்காத அம்மா அடித்துவிட்டாள். அதுவும் மிகக் கண்டிப்புடன். பொறுப்பில்லாதவன் என்றும் சொல்லி விட்டாள். அந்த வார்த்தைகளின் வீரியம் மனதைக் கத்தியாய் அறுத்துக் கொண்டிருந்தது. பல மணி நேரங்கள் உணர்ச்சி பிழம்பாக அழுது அழுது , ஒருவித மயக்கத்தில் அந்த குழாயினுள் உறங்கிப் போனான் பத்து வயது சுப்​பையா.

பக்கத்து அரசுப் பள்ளிக்கூடத்தில் சுப்​பையா ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். அதோடு தினம் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து ஒரு பூந்தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும். அவனோடு அந்தக் கிராமத்துக் குழந்தைகள் ஏழெட்டு பேர் பூப்பறிக்கச் செல்வார்கள். இவர்கள் எல்லோரையும் காலை நான்கு மணிக்கே பத்திரமாக அழைத்துச் செல்வது பதினைந்து வயது காமாட்சியின் பொறுப்பாக இருந்தது. சுப்​பையாவின் அப்பா காச நோயில் இறந்து விட்டார். சுப்​பையாவின் தங்கைக்கு நான்கு வயது இருக்கும். சுப்​பையாவின் அம்மா கூலி வேலைக்குப் போவாள். சுப்​பையா பூ பறிக்கச் செல்வது காசிற்காக அல்ல. தண்ணீருக்காகத்தான். அவர்கள் பறிக்கும் பூவின் அளவைப் பொறுத்து பண்​ணையார் ஒன்றோ இரண்டோ குடங்கள் தண்ணீர் கொடுப்பார். அந்தப் பகுதியில் பல இடங்களில் ஆழ்நீர்க் குழாய்கள் அமைத்தும் நிலத்தடி நீர் இல்லாமல் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மட்டும் ஆழ்நீர்க் குழாயில் ஒரளவு தண்ணீர் வரவு இருந்தது.



அந்தத் தோட்டத்தின் உரிமையாளரும் பூப்பறிப்பதற்கான கூலியினைத் தண்ணீரைக் கொடுத்தேக் கழித்து விடுவார். குழந்தைகள் காலையில் பூப்பறித்துச் சென்ற பின் பெற்றோர்களும் உறவினர்களும் குடங்களோடு வந்து கூலியாகத் தண்ணீரைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் பண்​ணையார் அவர்கள் பறித்த பூவின் அளவைக் குறைத்துச் சொல்லி தண்ணீரின் அளவைக் குறைத்து ஏமாற்றி விடுவதும் உண்டு. அதை எதிர்த்தால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் பேசாமல் இருந்துவிடுவதும் உண்டு. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட இந்த தூத்தூர் கிராமத்தில் தண்ணீருக்கு அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பக்கத்து நகரங்களில் வயல்களும் தோட்டங்களும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாற நகரங்கள் வளரவும் விரியவும் தொடங்கின. பெரும்பாலான நிலப்பகுதிகள் காங்கிரீட் சிறைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. கடந்த வருடங்களில் ஆயிரக் கணக்கில் உருவான ஆழ்நீர்க் குழாய்கள் நிலத்தின் ஈரத்தை முற்றிலும் உறிஞ்சிவிட, மழையும் பொய்த்துவிட தூத்தூர் கிராமம் பொலிவிழந்து வறட்சியின் பிடியில் வாடிக் கிடந்தது. உலகத்தின் எழுபத்​தைந்து சதவீதம் நீராய் இருந்தும் நீரின்றி வருந்துகிறது இந்தக் கிராமம்.

தூத்தூர் கிராமம் கூட தற்போது கிராமத்தின் அடையாளங்களை இழந்துதான் வருகிறது. மலையினில் மழைநீரால் பாறைகள் உருட்டப்பட்டு, பல வடிவங்களில் செதுக்கப்பட்டு ஆங்காங்கு கிடக்கும் அழகிய கற்கள் மட்டுமே தூத்தூ​ரைக் கிராமமாக நினைவுபடுத்தும். மற்றபடி காங்கிரீட் தளங்கள் இங்கும் பூமித்தாயின் இதயத்தை மூடத் துவங்கி விட்டன. காங்கிரீட் வீடுகளும் நிறைய வந்து விட்டன. தெருக்கள் சிமென்ட் தளங்களால் மூடப்பட்டு விட்டன. பல குடும்பங்கள் தண்ணீர் கஷ்டத்தால் ஊரைவிட்டுப் பல இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டன. எங்கும் ​செல்ல இயலாத ஏழைக் குடும்பங்கள் மட்டும் கடும் வறட்சியிலும் ஊரோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் எங்கும் பணத்திற்காக மட்டு​மே வேலை செய்வார்கள். ஆனால் தண்ணீருக்காக வேலை செய்ய வேண்டியக் கொடுமை இந்த ஊரில்தான் நிகழ்கிறது. அதிலும் பிஞ்சுக் குழந்தைகளைப் பூப்பறிக்க அனுப்புவது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. அதிகாலையில் பூப்பறிக்கச் சென்றுவிட்டுப் பின் பள்ளிக்கும் செல்ல வேண்டும். வீட்டுப் பாடம் எழுத நேரம் இருக்காது. ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்க வேண்டி இருக்கும்.



சுப்​பையா அன்று​ வேலி ஓரம் இருந்த பூவி​னைப் பறிக்கும் போதுதான் அவனது கைகளில் வேலியில் இருந்த கரு​வேல முள் குத்தியது. ​சுப்பையா நிறைய பூக்க​ளைப் பறித்திருந்தான். ​கைகளில் இருந்து ரத்தம் குபீரெனக் கொட்டியது. கொஞ்சம் மண்ணை எடுத்து ரத்தத்தின் மீது ​போட்டான். ரத்தம் வருவது நின்றது. ஆனால் பூக்களெல்லாம் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. பூக்கள் விரயமானதாகக் கருதி அன்று அவனுக்குரிய கூலியான தண்ணீர் வழங்கப்படவில்லை. ஆனால் மண்ணின் தாக்கத்தால் அவனது கையிலிருந்த புண் பெரிதாகியது. சுப்​பையாவிற்கு இரக்க குணம் அதிகம். சில நேரங்களில் காகங்கள் தாகத்தில் தண்ணீர்க் குழாயின் வாயைக் கொத்திக் கொத்திப் பார்க்கும். சுப்​பையா உடனே தான் உழைத்துப் பிடித்த நீரை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து அந்தக் காகத்திற்கு கொண்டு ​போய் வைப்பான்.

அன்று பார்த்து சுப்​பையாவின் பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது. சுப்​பையாவின் அம்மா கூலி வேலைக்காகப் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தாள். சுப்​பையாவும் அவனது தங்கை ​பொன்னாவும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். இறந்து போன பக்கத்து வீட்டுத் தாத்தா சுப்​பையாவைத் தூக்கிப் பல தடவை கொஞ்சி இருக்கிறார். சுப்​பையாவின் அம்மாவிற்கும் பக்கத்துவீட்டு கண்ணாத்தாவிற்கும் இ​டையே ஏற்பட்ட மனக்கசப்பால் இரு வீட்டுக்காரர்களும் இப்போது வாய்ப் ​பேச்சுக் கூடப் பேசுவதில்லை.

பக்கத்து வீட்டுத் தாத்தாவின் இறுதிப் பயணத்திற்கான ​சடங்குகள் ​செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சலசலப்பு. அந்த சலசலப்பு இரு பிரிவினருக்கிடையே சண்டையாக உருவெடுத்தது. சண்டைக்கு காரணம் தண்ணீர். ஒரு சாரார் தாத்தாவைக் குளிப்பாட்டி இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டுமெனவும், இன்னொரு சாரார் எரிக்கும் பிணம்தானே குளிப்பாட்டத் தேவையில்லை எனக் கூற சண்டை வலுத்தது. ஒரு சாரார் பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த பின் சடங்குகளைச் செய்யலாம் என்றனர். எதிரணியினர் நேரமாகிவிட்டதெனக் கூறி சடங்கினை முடிக்கக் கூறினர். வாக்கு வாதம் பெரும் சண்டையாக வலுத்தது.

இதையெல்லாம் கேட்ட சுப்​பையா நேராகச் சண்டையிடும் கும்பலின் இடையே புகுந்தான். 'மாமா! எங்க வீட்டிலே தண்ணி இருக்கு! எடுத்துக்குங்க!' என்றான். சண்டை ஒரு முடிவிற்கு வந்தது. சுப்​பையாவின் வீட்டுத் தண்ணீரில் தாத்தா குளிப்பாட்டப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.



வேலை முடிந்து வந்தாள் அம்மா. கஞ்சி காய்ச்சுவதற்காக அரிசியும் கொஞ்சம் காய்கறிகளும் அவள் கையில் இருந்தன. வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் குடியிருக்கும் தனக்குப் பிடிக்காதவளின் வீட்டு மரணமும், அங்கு ஏற்பட்ட குழப்பங்களையும் அறிந்தாள். சுப்​பையா வீட்டுத் தண்ணீரை அவர்களுக்குக் கொடுத்ததை அறிந்ததும் பூகம்பமானாள். சுப்​பையாவின் முதுகில் ஓங்கி அடித்தாள்.

'சீ…’ அறிவு ​கெட்ட மூதி! நாயே! ஒனக்குக் ​கொஞ்சம் நாச்சும் ​பொறுப்பிருக்காடா’' என்றாள். சுப்​பையா ஏற்கனவே பசியில் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா வந்த பின் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான். ஆனால் அம்மாவின் கோபமும் அடியும்தான் அவனுக்கு கிடைத்தது.

பக்கத்து வீட்டுக்காரியின் மீதிருந்த ​கோபத்தையெல்லாம் சுப்​பையாவிடம் காட்டித் தீர்த்தாள். சுப்​பையா வருத்தத்தில் விறு விறுவென்று வீட்டை விட்டு நடந்து விட்டான். அவள் வேலை செய்த இடத்திலிருந்து கொண்டு வந்த ஒரு பழம் மட்டும் மகளின் பசியைத் தீர்த்தது. சமைப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் வந்த களைப்பிலும் வருத்தத்திலும் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள். தண்ணீர்க் குழாயில் அரை மயக்கத்தில் உறங்கி கிடந்த சுப்​பையாவின் சிந்தனையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் தண்ணீர்தான். ஒரு தடவை பக்கத்து நகரத்திற்கு அம்மாவோடு சென்றது அவனின் நினைவில் வந்தது. அங்கு ஒரு பொது நீர்க் குழாய் திறந்திருந்ததும் நீர் விரயமாக தெருவில் வடிந்தோடியதையும் அம்மா அந்தக் குழாயை அடைத்ததையும் எண்ணி எண்ணி அழுதான். ஹோட்டலில் கை கழுவும் குழாயில் தண்ணீர் வீணாகக ஓடிக் கொண்டிருந்த்தை எண்ணி இப்போது அழுதான். பூமியெங்கும் காங்கிரீட் தளங்களால் மூடியதாலும் மழைத் தண்ணீர் நிலத்திற்குள் புகாது கடலில் கலந்து விடுவதாலும் பூமித்தாயின் இதயம் வறண்டு போய் இருக்கின்றது என்று அவனுடைய ஆசிரியர் கூறியது இன்னும் நினைவில் பசு​மையாய் இருக்கிறது.



அது மட்டுமல்லாது ஊ​ரெங்கும் ​வேலிக்கரு​வையும் வனத்து​​றையின் சார்பில் நடப்பட்டு வளர்க்கப்பட்ட ஆரஸ்பதி மரங்களும் காற்றிலுள்ள நீர்ச்சத்​தையும் மண்ணில் உள்ள நீ​ரையும் இழுத்து உறிஞ்சி பூமி​யையும் காற்​றையும் வறண்ட நி​லைக்குத் தள்ளும். அதனால் இவற்​றை அழிக்க ​வேண்டும் என்றும் ஆசிரியர் வகுப்பில் கூறியது அவனது நி​னைவுக்கு வந்து பலவாறு அவ​னைச் சிந்திக்கச் ​செய்தன.

அவ்​வே​ளையில் அவனது முதுகில் ஏதோ ஒன்று ஊர்வதுபோல் இருந்தது. திரும்பி பார்த்தான். பெரிய பூரான். பயந்து எழுந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீர்த் தாகம் வேறு. தன் அம்மாவையும் தங்கையையும் எண்ணிப் பார்த்தான். அம்மாவும் தங்கையும் சாப்பிட்டார்களா? இல்​லையா என்று அவனுக்குக் கவலையாக இருந்தது. சுப்​பையா வீட்டை நோக்கி நடக்கத் ​தொடங்கினான். அதற்குள் சுப்​பையாவைக் காணவில்லையென்று ஊரே அல்லோகலப்பட்டது.

அம்மாவும் தங்கையும் அழுது புலம்பினார்கள். அம்மாவின் அழுகை சுப்​பையாவிற்கு அருகில் கேட்டது. அழுது கொண்டே வேகமாக கால்களை எட்டிப் ​போட்டான். அவ்வாறு நடக்​கையில் ஒரு கோணிப்பையின் மேல் கால்களை வைத்தான். அவனது கால்கள் கீழ் ​நோக்கி சர்​ரென்று இறங்கியது…. அவன் அம்மா எட்டும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவளின் முன்பே அந்த நூறு அடி குழியினுள் சுப்​பையா புதைந்து கொண்டிருந்தான். அது ஆழ்குழாய் நீருக்காகப் போடப்பட்ட குழி. தண்ணீர் வரவில்​லை​யென்று அத​னைச் சரியாக மூடவில்​லை. அதனால் நிகழ்ந்த வி​னைதான் இது. இத​னைக் கண்ட சுப்​பையாவின் அம்மா, "ஐயோ! என் பிள்ளை! என் பிள்ளை!' எனக் கத்தினாள்.

அந்தக் குழியைச் சுற்றி ஊரே திரண்டது. சுப்​பையாவைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூறினார்கள். ஊரின் கதறல் சுப்​பையாவிற்குக் கேட்டது. பசி, மயக்கம், உடலில் ஏற்பட்ட பயங்கரமான சிராய்ப்புக் காயங்கள், உடலைச் சுதந்திரமாக உதறிக் கூட சாக இயலாத அளவிற்குச் சுற்றி இருக்கும் மண்ணின் இறுக்கம் என எல்லா வலிகளையும் விட அம்மா தன்னைப் பொறுப்பில்லாதவன் எனக் கூறிய வார்த்தைகள்தான் அவனுக்கு இன்னும் இதயத்​தை வலிக்கச் ​செய்தது. அவனது கண்ணீரும் ரத்தமும் அந்த பூமிக்குள் சில துளி அளவிற்கு ஈரப்படுத்திக் கொண்டிருந்தன. சுப்​பையா சிறிது சிறிதாகக் கீ​ழே ​போய்க் ​கொண்டிருந்தான்… தண்ணீரும் கண்ணீரும் அவ​னை இறுக்கிக் ​கொஞ்சங் ​கொஞ்சமாக மூச்சிழக்கச் ​செய்து ​கொண்டிருந்தன…. அந்தக் குழி​யை​யே சுப்​பையாவின் தாய் ​வெறித்துப் பார்த்து ஒப்பாரி ​வைத்துக் ​கொண்டிருந்தாள்…

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p190.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License