இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

கருணைக் கொலை...?

பாரதியான்

அந்தச் செய்தியைத் தொடர்ந்து வேறு பக்கத்தைத் திருப்ப யோசனையற்று இருக்க, ‘என்னங்க இன்னொரு டீ வேணுமா...?' சமையலறையிலிருந்து கேட்ட மனைவிக்கு, ஒற்றை ‘ம்...' மை மட்டும் பதிலாக்கியதும், காலை நாளிதழை நான்காக மடித்து பக்கத்து மெத்தை இருக்கையில் வைத்தேன்.

உள்ளுக்குள் நெரிஞ்சிமுள் குத்தும் வலி...

சமூகம் எந்த இலக்கை நோக்கி பயணப்படுகிறது..? அன்பு, ஒருத்தர் மேல் காட்டும் நேசம், ஈவு, இரக்கமெல்லாம் வார்த்தையில் மட்டும்தான் உள்ளதோ... மனிதாபிமானம்... அப்படின்னா என்ன? என்ற கேள்வியாகிவிடுமோ... உறவு, ஒட்டுதல் என்ற நெருக்கம் இப்போது இடைவெளியான ஒன்றாகிப் போனதென்றே தோன்றுகிறது ! பொறுமை, சகிப்புத் தன்மைகளை காலில் போட்டு மிதித்து, வாழ்க்கையை இழுத்து ஓடுகிறான் மனிதன். அவர், இவரென்றில்லாமல் சுயநலப்போக்கில் எல்லோருமே மாறிக்கொள்கிறார்கள்... புரிதலை புரியாமலேயே புறமொதுக்கி, எதிலும் நமக்கானது என்று சிந்திக்க மறுக்கப்படுகிறது, அல்லது அப்படியொரு இணைப்பு தேவையில்லையென உறுதி கொண்டுள்ள தன்னிலை.

கீழ் உதட்டை உள் சுருக்கி, மேல் பற்கள் கொண்டு அழுத்தினேன். மனசுக்குள் இனம் புரியாதவொரு இறுக்கம், ‘ரேகா... டீ என்னாச்சி..?' கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். ஆமா கடந்த நான்கு நாட்களின் காலைப்பொழுது இப்படித்தான் மேலோங்கும் கசந்த வெறுப்பாய், எரிச்சலாய் நகர்கிறது.

‘கேஸ் முடிஞ்சி போச்சு, சிலிண்டர் மாத்தினேன்' தாமதத்திற்குக் காரணம் தெரிஞ்சிக்கங்க, என்னும் பாவனையில் பெரிய சில்வர் டம்ளரைக் கொடுக்கும் நொடிப்பொழுதில், என் நிலைப்பாட்டை நகல் பிடித்துவிட்டாள் போல், ‘இன்னைக்கும் அதே செய்தியா..? இதோ பாருங்க... உங்களால மாறிக்க முடியாது அதனால, நாளையிலருந்து பேப்பர் வாங்கறத நிறுத்திடலாம்' என்றாள்.



‘ஓங்கிட்ட யோசனை கேட்டனா...' முகம் சுழித்து டம்ளரை வாங்க, சிரித்துக்கொண்டே நாளிதழை விரிக்கலானாள் ரேகா.

இதுதான் ரேகாவின் தன்மை! சின்ன விசயமானாலும், இடிமாதிரியானதாக இருந்தாலும் அதைச் சமமாகவே எதிர் கொள்வாள். கோபம் அவளிடம் வரப் பயப்படும். எப்போதும் முகமலர்ச்சியானவள். சோகம், வலி, உடனுக்குடன் துடைத்து, மனதை ஒருநிலை லேசாகவே வைத்திருக்க வேண்டும் என்பாள்.

‘ பூ ' மனசுக்கு சொந்தக்காரி, ரேகா. பக்குவம் நிலை தெரிந்தவள். என்னால முடியலயே... அந்தச் செய்திகளைப் படிக்கப் படிக்க ‘இதென்ன மனிதாபிமானமற்ற செயல், உயிர்,உறவு இங்கே தாழ்ந்து விட்டதா..? என்று நினைக்கையில் ஒவ்வாமையில் நரம்பெல்லாம் முறுக்கி, வலி ஏற்படுகிறது. வெளியுலகம் இங்கே இப்படிதான், இமைகள் சுருக்கி, எதையும் காணாதது மாதிரியே கடந்து போய்விடனும் என்ற நெனப்பே தோன்றவில்லை.

‘ஏங்க இந்த செய்தியா..?' பக்கம் விரித்துச் சரியாகக் காட்டினாள்.

மனநலம் சரியில்லாத, தான் பெற்ற மகளை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி கேட்டு,மகளுடன் வந்துள்ள பெண்மணியின் படத்தைப் பார்க்கவே அருவெறுப்பாகப் பட்டது.



பத்து மாதம் சுமந்த தன்னுடைய ரத்த உயிர்ப்பு என்பதை அவள் உணரவில்லையா...? கருணைக் கொலைக்கு இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என விவாதம் வேற, மூண்று நாட்களாக நாளிதழில் முக்கிய இடம் பிடித்திருந்தன, வாசிக்க, வாசிக்க அப்படியொரு ஆத்திரம். இந்தக் கருணைக் கொலையை மட்டும் சட்டரீதியாக நியாயப்படுத்திவிட்டால்...முன் வருவோரின் மனு குவிந்துவிடும் போல்? எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கியது.

‘எல்லாருமே நம்மலாட்டம் இருக்கனும்னு நெனைக்கிறது பெரிய தப்புங்க' மனைவியை மேலும் பேச விடாது தடுத்து, ஏறிட்டு,‘இருந்தாலும் ரேகா...பெத்தவங்களே முன் வாரது மனித சமுதாய அவலம்.' அதற்கு மேல் ஏனோ எனக்குள் வார்த்தைகள் சிக்கியது,

‘அம்மா...அக்கா முணங்கறா' மாடியறையிலிருந்து மகனின் குரல்.

சுவர் கடிகாரம் பார்த்த ரேகா, ‘மணி ஏழு முப்பதாச்சா...இதோ வாரேம்பா நீ சீக்கிரமாக் கிளம்பு, என்னங்க மாடிக்குப் போங்க நான் சாப்பாடு பிசைஞ்சி எடுத்துட்டு மேல வாரேன்' சொல்லிச் சமையலறைக்குள் நுழையவும், நான் மாடிக்குச் சென்றேன்.

பெரியளவு கட்டில் மெத்தையில் என் மகள் நீளவாக்கில் படுத்திருந்தாள். அப்படியே பாட்டியின் முகச்சாயல், என்னுடைய உருவ அமைப்பு, ஆடாத, அசையாத ஓர் உயிரோவியம் மாதிரி..?

முதல் உயிர்ப்பின் குறைவான வரம்... வரம்தான், ஆறுவருஷ வேண்டுதலின் பலன், அம்மாவின் பெயர்,கோமதின்னு வைத்தேன்.மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட குறை என்றாலும் நிறைவாகவே ஏற்றுக் கொண்டோம். அதன் கருணையால்தானோ என்னவோ,அடுத்து மகன் பிறந்தான்... இதோ சாரதி, பள்ளிக்குக் கிளம்புகிறான்.

முகம் சுழிக்காமல் மகளுக்கு சேவை செய்கிறாள்,ரேகா.நேரத்திற்கு உணவு, தண்ணீர் கொடுத்தால் உள் வாங்கிக் கொள்ளும், தானாக மலம் வெளியேரும், சுத்தம் செய்துவிட வேண்டும், சில நேரம் முக்கல், முனங்கள் வெளிப்படும் அவ்வளவுதான் இயக்கம். நானும் வீட்டில் இருக்கும் போது உதவியாக இருப்பேன். ஒருநாள் கூட சலிப்பு காட்டியது கிடையாது. ஆண்டவனோட நமக்கான படைப்பில் இந்த நிலை உயிர்தானு இருந்திருக்கு அதை வாங்கிக் கொண்டோம். கவனிக்க வேண்டியதுதானே நம் பெற்றோர்களின் முறை, கடமையும்கூட, அனைத்தும் புரியும் ஆறறிவு கொண்ட நாமே ‘ ச்சீனு...' வெறுப்புக்காட்டி ஒதுக்கினால், அது தொப்புள் கொடி சுவாசத்துக்கு அர்த்தமில்லாத செயல், தாம்பத்தியத்தின் மறுதலிப்பு... நிறைவான ஜனனத்தில் மகிழ்ச்சி அடைவது போல், குறைபாடான வெளிப்பாட்டையும் சகிக்கனும்.அதுதானே தர்மநியதி...



இதையேதான் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்...

‘இந்தாங்க கிண்ணத்த பிடிங்க, பையன அனுப்பிக்கிறே'ரேகாதான்.

பிசைந்த சாதக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டேன். பையனுக்கு இட்லி கொடுத்து, பேக் மாட்டிவிட்டு, வேன் ஆரண் சத்தம் கேட்கவும்,அனுப்பியதும் வந்தாள்.

முன்னமே மகளைத் தூக்கி, முதுகுக்குத் தலையனை கொடுத்து, சாய்த்து உட்கார வைத்து, ஈரத்துணியால் முகம் துடைத்திருந்தேன்.

மனசப்போட்டு குழப்பிக்காம வேலைக்கு கிளம்புங்க இனி நான் எல்லாம் பாத்துக்கறேன்' என்ற ரேகாவை ஆச்சரியம் கலந்து பார்த்ததும், ‘உன்னமாதிரியே அம்மாக்கள் அமைஞ்சிட்டா கருணை கொலை வார்த்தையே இல்லாம போயிரும் ரேகா...'மனசுக்குள் எண்ணிக் கொண்டே, வேலைக்குக் கிளம்பினேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p201.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License