இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பூக்கடை

பாரதியான்

இரண்டு தினங்களாகவே மரகதத்தின் மனசு வாடிய கதம்பம் சரம் மாதிரிதான் இருக்கு.பகவதி சொன்ன வெக்கையான தகவல் அப்படி..?

‘ஓ மருமக பூக்கட போடப்போறாலாம்ல...'ஏதோ ரகசியமா ஆரம்பித்து, ‘ஓ மகன் உசுரோட இருக்கையிலேயே சரசுக்கு சித்தி பையன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் வருவான்ல அவன்தான் எல்லா எற்பாடும் செய்றானாம். வேலை செய்ற இடத்தில் ரெண்டுபேரும் தெனமும் சந்திக்கறாங்களாம். என் மகன்தானே மேஸ்திரி, தெரிஞ்ச பொண்ணு இப்படி நடக்குதேனு வருத்தப்பட்டான். உனக்கு எதுவும் தெரியாதா?' அனல் மூட்டப்பட்டது.

மொத்த பூ வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்த ஒரே மகன் திடீறென்று விபத்தில் இறந்து போக,துக்கம் கேட்ட கையோடு, விட்டால் போதுமென மரகதத்தோட நெருங்கிய உறவுகள் ஒதுங்கிப் போகவும். ஆதரவாக நின்றிருந்தது, மருமகள் குடும்பம் மட்டுமே.

‘கைப்புள்ளைய வச்சிக்கிட்டு இவ இங்க எதுக்கு,திருமங்களத்துக்கே கூட்டிப்போறோம். உங்களுக்குனு இங்கேயும் யாருமில்ல நீங்களும் சேந்து வாங்க'சரசோட, அப்பாவும் அம்மாவும் வற்புறுத்தி அழைக்கவும், ‘இல்லப்பா அத்தை பிறந்த ஊரு, நா வாழவந்த வீடு இங்கேயே நாங்க இருந்து விடுகிறோம்' என்றாள். அவர்களும் நிறைய சொன்னார்கள்...

உறுதி குறையாது சரசு சாதித்துவிட, தனக்கான மருமகள் என்று வாயாரிப்போனாள்.

கழுத்துல தாலி கட்டியவனும், வயித்துல புள்ளையா வந்தவனும் அடுத்தடுத்து இல்லாம போயிட்டாங்களே... என்று துக்கம் தாளாது அழுகை முட்டும் போதெல்லாம், மருமக இருக்காங்கற நம்பிக்கையே கண்ணீர் துடைக்கும் கைகளாக மாறும்.

இழப்பீடு வர, சரசு சித்தி மகன்தான்,போலீஸ் ஸ்டேசன்,கோர்ட், வக்கீல் கேஸ்னு சீரழிஞ்சி, ‘இன்சூரன்ஸ்ல ஏதோ சட்ட சிக்கலாம் கேஸ் முடிய நாளாகுமாம்' ன்னு ஒரு நாள் கூற, குடும்பத் தேவை, பிள்ளையின் வளர்ப்பு, எல்லாம் யோசித்த சரசு, அன்றே தெளிவானதோர் முடிவுக்கு வந்தவளாக, ‘அத்த நீங்க புள்ளைய கவனிச்சிக்கிட்டு வீட்ல இருங்க நான் கட்டிட வேலைக்குப் போறேன்' என்றாள்.

‘சித்தால் வேலைக்கு போறதா..?' முதலில் மரகதத்துக்கு வருத்தம்தான். அதை அவள் முகம் காட்டிக் கொடுக்க, எதிர் காலத்தில் இந்த குடும்பம் தன்னிறைவோடு நிற்க வேண்டுமானால்... வருமானம் மட்டுமே முக்கியம். அத்தைக்கு எடுத்துக்கூற, ஒரு வழியாக மரகதம் சம்மதம் தெரிவித்தாள்.



அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ‘மரகதம் உன்னோட மருமக நூத்துல ஒருத்தி ' எதிர்ப்படுக்கையில் இப்படி பெருமை சொல்வார்கள்.மருமகளை நினைத்து உள்ளூரப் பூரித்துப் போவாள்.

அன்னியத்திருந்து வாழ வந்தவ, தன் வாழ்க்கைய இழந்த பின்னும் தியாக மனப்பான்மையுடன் இங்கேயே தங்கிவிட்ட சரசு, இப்போது தன்னிச்சையா ஏன் முடிவெடுக்கனும்? நாளும்,பொழுதும் நல்லபடியா கடந்து கொண்டிருக்கையில் மனசு மாற வேண்டிய காரணம்..?

இரவு, குழந்தையை அமர்த்திப் படுக்க வைத்ததும்,உறக்கமின்றி விழித்து, சுவர்ப் பக்காமாய் ஒருக்களித்து கிடக்கும் அத்தையின் அருகில் போய், “அத்த எந்திரிச்சி உட்காருங்க”என்றதும் தானும் அமர்ந்தாள்.மரகதமும் அதற்கே காத்திருந்த மாதிரி எழுந்து, ’என்னம்மா...சொல்லு..?'ன்னு கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தாள்.

“இந்தச் சனிக்கிழமை சம்பளம் வாங்கிக் கிட்டு வேலைக்கு வரலேன்னு சொல்லிரப்போறேன் அத்தை.”

“ஏம்மா..?”

“மேஸ்திரியோட பார்வையும்,றெட்ட அர்த்தப் பேச்சும் எனக்கு சுத்தமாப் பிடிக்கல, ஒரு வாட்டி எச்சரிச்சும் பார்த்துட்டேன். ஆனா அவன் திருந்தரதா தெரியல, அதான் துஷ்டங்கிட்ட இருந்து விலகலாம்னு...”

“நீ என்ன சொல்றம்மா” உண்மையாகவேப் பதறிவிட்டாள் மரகதம்.

“பயப்பட வேணாம். நாம முள்ளா இருக்கையில் யாரும் கைவைக்க முடியாது, முந்தாநாள் அப்படித்தான் மேஸ்திரி கண்றாவியா பேசிக்கிட்டு இருந்தான். ஆம்பள ஆதரவு இல்லாதவன்னு தைரியமா பேசுறானேன்னு நெனைக்கையில் தற்செயலா போஸ் அண்ணன ரோட்ல பார்த்துக் கூப்பிட, அவர் வரவும் அந்த நாய் ஒதுங்கிருச்சு. புள்ளைய,உங்கள விசாரிச்சுட்டு ‘ஏம்மா இப்படி வெயில திரியற நம்ம பூ வியாபரத்தையே பாக்கலாமே'னு சொல்றார். இப்ப அதுதான் சரினு படுது நீங்க என்ன சொல்றிங்க அத்தை.”

பகவதியோட தம்பி நாய்... அக்காக்காரிட்ட திரிச்சி சொல்லிருக்கோ?

மேலும் சரசு, “இங்க ஊருக்குள்ளேயே பூ வியாபாரம் பண்ணலாம். என்னதான் அப்படி, இப்படினு பேசினாலும் புருஷன் இல்லாதவகிட்ட பூ வாங்குறதானு நிறையபேர் தயங்குவாங்க, அதான் டவுனுக்குள்ள சிவன் கோவில் முன்னால ஒரு பெட்டி காலியா இருக்குனு கேள்விப்பட்டேன். சாமி கும்பிட வாரவங்க இந்த வேற்றும பாக்க மாட்டாங்க, சரினு நெனச்சா ஞாயத்துக்கிழம ரெண்டுபேருமா போய் பாத்து உறுதி படுத்திட்டு வருவோம்” தன்னையறியாது கண்கள் கசிய,

மருமகளின் இரு கைகளையும் இறுக்கமுடன் பற்றி, “நீ ஏ வயித்துல பொறக்காத மகம்மா...”அதற்கு மேல் வார்த்தையின்றி அழுதே விட்டாள், மரகதம்.



சரசுதான் தேற்றினாள்.

அந்த வாரம் வெள்ளிக்கிழமையே பூக்கடை ஆரம்பம்... பழகிய கைத்தொழில்... மரகதமும் தன்னால் முடிந்தளவு பூச்சரம், மாலைகள் கட்டி, மதிய சாப்பாடுடன்,பேத்தியையும் தூக்கிக்கொண்டு,தினம் மினி பேருந்து ஏறிவிடுவாள். கடையில் சாயங்காலம்வரை மருமகளுக்கு, இல்லை, இல்லை மகள் சரசுக்கு துணையாக இருக்கலாமென்ற தெளிந்த மனதுடன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p204.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License