இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வதம்

பாரதியான்

‘அப்பா சீக்கிரமா வாங்க என்னால பொறுத்துக்க முடியல உங்கள் தாமதம் விபரீதத்தில்... விசும்பல், அழுகையின் ஊடே திக்கித்தினறிச் சொன்னதும் தொலைபேசி இணைப்பை துண்டித்துக் கொண்டாள், சுதா.

இருப்பு கொள்ளவில்லை முகுந்தனுக்கு, பதற்றம் பற்றிக் கொண்டது.

அவருக்கு சுதா ஒரே மகள், சிறு வயது முதலே தாயில்லாப் பொண்ணுனு அப்படி வளர்த்தார். அந்தத்தெரு சனமே வாயாரிப் போகும். சுதாவுக்கு அம்மா இருந்திருந்தால் கூட, முகுந்தன் கொடுத்த அன்பை, காட்டிய பாசம், அரவணப்பையெல்லாம் ஈடு செய்திருப்பது சந்தேகமே, இதை அவளே அவ்வப்போது தனக்குள் பதிவு செய்து கொள்வாள்.

காலத்தின் கடமையில் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைக்கிறேன்னு சொந்தத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு வசதியான குடும்பம், படித்த சென்னை மாப்பிள்ளை என்று மணமுடித்துக் கொடுத்தார்.

‘முகுந்தன் சார் தன் பொண்ணை உயரத்துல வெச்சுட்டார்பா...' பிறர் சொல்ல, கேட்க ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தது. எண்ணி முப்பதே நாள்... மாப்பிள்ளை மகேஷ்க்கு நிரந்தரமான வேலை, நல்ல வருமானமோ கிடையாதாம், கையில் வரும் பணம் மதுப்போதைக்கே போதவில்லையாம், சுதா ஏதாவது கேட்டால் அடிமட்ட ஆசாமியென அவளைக் கொடுமைப்படுத்தும் ரகமாம்.

கண்பார்வை துறந்த சூரியப்பார்வை நிலையாய், அப்போது விசாரிக்க, அந்தக் குடும்பமே மோசமான உறவுகள் கூடியதுன்னு சகிக்க முடியாத உண்மைகள் வெளிப்பட்டன. கல் விழுந்த கண்ணாடியென முகுந்தன் நொறுங்கிப் போனார். தனது சொந்தங்களுக்குத் தெரிந்தால் ஏளனமாகப் பார்ப்பார்கள், இளக்காரமாக சுதாவைப் பற்றிப் பேசுவார்கள். அதையே நினைத்து, நினைத்துக் கூனித்தான் போனார்.

‘சுதா ஓ தலையெழுத்து இப்படித்தான்னு இருந்திருக்கும் போது அத மாத்த நம்மால என்னமா செஞ்சிருக்க முடியும். பொறுமையா இருந்து சமாளிம்மா நாளடைவில் உன் கணவர் திருந்துவார்னு நம்பிக்கையா இரு, இது விசயமா அவர்கள் வீட்டில் பேசினாலும் பிரயோஜனமில்லைன்னு படுது, சமயம் பார்த்துத் தனிக்குடித்தனம் போக நீயே யோசனை சொல்லு நானும் அதற்கு ஏற்பாடு பண்ணுறேன் ' தந்தையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவளாகப் பொறுமை காத்தாள், கணவனின் கொடும் தீமைகள் தாங்கி, அப்பா இங்கே வரும் போதெல்லாம் அவர் வேதனைப்படக் கூடாதென, மகிழ்ச்சியாகவே சிரித்தாள்... முகுந்தனுக்காப் புரியாது, மகள் நெனப்பு நிஜெமென்று இருக்கட்டும் என பதிலுக்கு நடித்துக் காட்டி விட்டு, வீட்டில் வந்து தீயில் வீழ்ந்த புளுவென துடிதுடித்து கதறியழுவார்.

நாட்களின் நகர்வில் நம்பிக்கை பொய்த்துப் போனதாகவே பட்டது. அதை உறுதிப்படுத்தி விட்டது சுதாவின் தொலைபேசிக் குமுறல்...தாங்கிக் கொள்ள இயலுமா முகுந்தனால், இதோ கிளம்பி விட்டார்.

அதிகாலையில் ஆட்டோ அந்த வீட்டு முன் நின்றபோது, அங்கே நின்றிருந்த கூட்டம், சோகமயமான சூழல் எல்லாம் பார்த்து, ஒரு கனம் இருதயத்துடிப்பு நிற்க, ஓர் வித தடுமாற்றத்துடன் இறங்கிப் போனார்... ‘பைரவா... ஏம்மகளுக்கு விபரீதம் எதுவும் நடந்திருக்க கூடாது' தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி வாசலில் நின்ற கூட்டம் விலக்கினார்.

இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

ஹாலில் மகேஷ் கிடத்திருக்க, சுற்றி உறவினர்கள் அழுதபடியிருக்க, கணவனின் தலைமாட்டில் இறுகிப் போய் சாய்ந்திருந்த சுதாவோ தந்தையைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு விசும்பினாள், அழுதாள்.



முகுந்தனை மொத்தமாய்க் குழப்பம் தொற்றிக் கொண்டது.

“எப்படிம்மா இது? ” ஆறுதலாக மகளின் தலையை தடவும் போதே, கேள்வி புதைந்திருந்ததை உணர்ந்து “தூக்கத்துலயே போயிருச்சிப்பா” என்றாள் முனங்கலாக.

சம்பந்தகாரர்களிடம் துக்கம் விசாரித்தார்.

“சுதாவ பாதிலயே விட்டுட்டுப் போயிட்டானே மகேஷ்... விதியோட கையில் பொம்மையா ஆயிட்டாளே...” அழுதனர்.

குழப்பம் நீங்காது இருந்த, முகுந்தன். காரியங்கள் முடியும் வரை தங்கிவிட்டார். வீடு கொஞ்சம், கொஞ்சமாக சகச நிலைக்கு வந்துவிட்டது.

மெல்ல முகுந்தனிடம் வந்த சம்பந்தியம்மாள், போலியாக முகம் மாற்றி “சுதா இங்கேயே இருக்கட்டும் எங்களுக்குப் பொண்ணா, இந்த வீட்டுக்கு ஒரு தலைமையா...” அவளை மேலும் தொடரவிடாது கையமர்த்தியதும்,

“இல்லங்க என்னோட பொண்ண நானே கூட்டிப்போறேன். இங்க அவ இருந்தானா மாப்பிள்ளையோட ஞாபகம் நிறைய துயரத்தை கொடுக்கும். சுதாவோட துர்பாக்கியத்தை பார்த்துப் பார்த்து நீங்க வேதனைப்படுவீங்க. நான் அங்கே தனியாளாத்தானே இருக்கேன் கடைசி வரைக்கும் எனக்கு மகளா இருக்கட்டுமே” என்றார்.

தந்தையிடமிருந்து இப்படியானதொரு முடிவுதான் வரவேண்டுமென நினைத்திருந்த சுதாவுக்கு நிம்மதி. கொண்டு போனதையெல்லாம் எடுத்து ‘மனைவி ' என்ற தகுதியை மட்டும் விடுத்து, பிறந்த இடத்திற்கே வந்த மகளுடன், பூமாலை போட்ட தன் மனைவியின் படத்துக்கு முன்னால் நின்ற முகுந்தன் ‘பாத்தியா நம்ம மகளோட கதிய...' நிறைய அழுதபின்.

“சுதா என்னமா நடந்துச்சி..? ” கேட்டார்.

‘மனுஷங்களே இல்லப்பா அவங்க. வாழப்போன முதல்நாளே அத அனுபவிச்சிட்டேன். வெளிய சொல்ல முடியாத அத்தனை வலிப்பா. பொறுமை மீறிய கட்டத்துல உசுர விட்ருரலாம்னு வெறுத்த நிலையில் உங்களுக்குப் போன் பண்ணினேன், திடீர்னு உள்ளுக்குள்ள ஒரு பொறி... அப்படி நாம போயிட்டா இவன் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைச் சிதைக்க புது மாப்பிள்ளையா மாறிடுவான். அது கூடாது என்றுதான் உயிரோட இருக்க தகுதியற்ற நீசனின் பிராந்திப் பாட்டிலில் விஷத்தைக் கலந்து வெச்சிட்டேன். வழக்கம் போல குடிச்சான் என்னை அடிச்சான், குடும்பமே வேடிக்கைப் பார்த்தது... படுத்தான் காலையில் எனக்கு அவனிடமிருந்த நிரந்தரமான விடுதலை, இது கொலை இல்லப்பா வதம்...' அனைத்ததையும் தனக்குள்ளேயே புதைத்து, “அதான் சொன்னேலப்பா ” என்றாள்.

மகளை மேலும் வற்புறுத்தாது, ‘இனி நாம்தான் மகளுக்கு ஆறுதல் ' என நினைத்தார் முகுந்தன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p211.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License