இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

காணாமல் போனவர்கள்...!

பாரதியான்

அலுவலகம் மொத்தமும் சலசலத்துப்போயிருந்தது. பணி செய்வதை நிறுத்திவிட்டு, ஆளாளுக்கு சக ஜோடிகளை சேர்த்துக் கொண்டு தத்தமது கற்பனைகளுக்கு ஏற்றாற் போல் புள்ளி வைப்பதும். கோலமிடுவதுமாயிருந்தனர்.

“சார், நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மையா..?” பான்பராக் கரைதெரிந்த பல்வரிசை காட்டிக் கேட்டார் காசாளர்.

இதற்காகவே காத்திருந்தார் போல், தன் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிச் சட்டை முனையில் துடைத்துக் கொண்டே “ரெண்டு பேரும் சேர்ந்துபோனா உடனே தெரிஞ்சிருமுனுதான் முந்தாநாள் லீவெடுத்துப் போயிருக்கா நிர்மலா. கதிரு, நேத்து எடுத்துருக்கான். கன்றாவி செய்தி... அதுக எங்கபோயி கும்மாளம் அடிக்குதுகளோ... ” என்றார் தன்னோட வயது தகுதி அறியாது.

“ச்சே, வேலைய விட்டு நீக்கிய மேனஜரால ஆபீஸ்க்கு ஆடிட்டிங் வரப்போகுதுனு முதலாளியே ஆட்டம் கண்டு இருக்காரு இந்த நேரத்துல அதே பிரிவைச் சேர்ந்த ரெண்டுகளும் கேவலச் செயலைப் பண்ணிருச்சிகளே... ஏதோ அப்பப்ப ரகசியமா பேசிக்கிட்டு இருப்பாக, ஆனா இந்த ஒரு மாசமா ரொம்ப ஒட்டுதலாத்தான் நடந்துக்கிட்டாங்க... அது இப்படி ஓடிப்போவதற்கான திட்டம்னு தெளிவா தெரிஞ்சிருச்சி” மாலதியும் சேர்ந்து கொண்டாள்.

“நான்தான் முதலாளிட்டெ இந்த காதலப்பத்தி சொல்லிருந்தேன் அவர் நம்பல இப்ப...” நாடக வருத்தத்துடன் காசாளர்.

“கம்பெனி கணக்கை நேர் செய்ய வேண்டியவங்களே காணாமல் போயிட்டாங்க, ஆடிட்டிங் வந்தா நம்மபாடு திண்டாட்டம்தான்” பொய்யாகச் சலித்தவாறே, “ஏம்மா ராகவி ஓங்கூடத்தானே நிர்மலா நெருக்கமா இருப்பா எந்தக் கோயில், இல்ல ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்னு தகவல் சொல்லிருப்பாளே, ஏனா...தொனை இல்லாம கத்தரிக்கா காதல் வராதாமே...” மூணாவது டேபிளில் வேலையாயிருந்தவளை‘ நீ மட்டும் எப்படி வேலையாய்..' என்னும் பாவனையில் ராகவியை, தலைமைக் கணக்கர் வம்புக்கிழுக்க, அவள் முறைக்கவும்.

“முதலாளி வாரார்...” நடந்து கொண்டே எச்சரித்த பியூன், பைல்களுடன் கேபினுக்குள் நுழைந்தான்.

ஊழியர்களின் வழக்கமான மரியாதையை ஏற்கும் மனநிலையில் முதலாளி இல்லை. ‘நான்கு தலைமுறையாகப் பஞ்சு மில் தொழிலில் இருக்கிற சுவடே இல்லாது இருந்தோமே, இருபத்தேழு வருஷம் வேலை செய்த விசுவாசம் இல்லாம, அதன் மூலமா அடைந்த பல ஆதாயங்களை நெனச்சிப் பார்க்காம, முக்கியமான டாக்குமென்டுகளை எப்படியோ கொண்டு போயிட்டானே கெட்ட ராஸ்கல் 'தனக்குள்ளே ராஜசேகரனை கருவிக் கொண்டார்.

முதலாளி கூப்பிடுவதாக பியூன் வந்து சொல்லவும், பவ்யமாக சென்ற தலைமைக் கணக்கர்.

“சார் அனுமதிச்சீங்கனா அந்த ஜோடி மணக்கோலத்தில் எங்க இருக்காங்கனு தெரிஞ்சி இழுத்துட்டு வந்து...” முடிக்கவில்லை அவர்

“யோ வாராங்க பாருயா ” இருக்கையிலிருந்து எழுந்து, அலுவலக கண்காணிப்பு கம்ப்யூட்டர் திரையை முதலாளி காட்டவும்,தன் இமைகள் சுட்ட எரிச்சல் உணர்வில் விரித்துப் பார்த்தார்.



நிர்மலாவும், கதிரும் சேர்ந்தேதான் வந்தனர்.

ஆத்திரம் தீர மட்டும் முதலாளியைப் பேசவிட்டு, தான் கையோடு கொண்டுவந்த கோப்புகளை அவரிடம் நீட்டியபடியே “ஆடிட்டிங் இனி வராது சார், ராஜசேகரன் மேனேஜர் எடுத்துப் போன முக்கிய பைகள் இதுதான் இந்தாங்க சார்..:” என்றாள் புன்முறுவலோடு நிர்மலா.

வேகமாய் வாங்கி விரித்துப் பார்த்தார். நேர் செய்யப்பட்ட ஒரிஜினல் கணக்குகள். மனசு மொத்தமும் அவருக்கு லேசாக ஆகவும் “எப்படி நிர்மலா இதெல்லாம்..? ” ஆச்சரியத்துடன் கேட்டார்.

“அடுத்த வாரம் என்ன பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வாராங்க சார், நான் வேலை பார்க்கிறேன்னுதான் ஆர்வமா வாராங்க இந்த நேரத்துல ஆடிட்டிங் வந்து நடக்க கூடாதது நடந்து, நான் சும்மா வீட்ல இருக்கேன்னு கேள்விப்பட்டா... எல்லாம் போச்சு அவங்க அப்படியே திரும்பிப் போயிருவாங்க. அத யோசித்து ,

விசயத்தை கதிர் அண்ணனிடம் சொல்லி பழைய மானேசரை நேரில் சந்திக்கப் போனோம்.

“ஆமாம் சார் நிர்மலாவோட இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறவும், ‘ முதலாளி மேல உள்ள கோபத்தில், ஏதோவொரு காரணத்துக்காக கொண்டு வந்த இந்த கோப்பால ஒரு பெண்ணோட திருமண வாழ்க்கையே கேள்விக் குறியாக வேண்டாம், என்னோட மனச திருத்திக்கறேன் 'ன்னு உடனே பைகளை எடுத்துக் கொடுத்துட்டார்.

தொடர்ந்து இதை கதிர் தெளிவாக கூறிய பிறகும் “இத சொல்லிட்டே...” தலைமைக் கணக்கரை மேலும் பேசவிடாது, “முதலாளிட்ட சம்பளத்தை வாங்கிக்கிட்டு அதையும், இதையும் ராஜசேகரன் சார்ட சொல்லி கையேந்தரவங்க நம்ம ஆபீஸில் இருக்காங்களே...அதான், நெனச்ச முயற்சி வெற்றியடைஞ்சா வெளிப்படுத்தலாம். இல்லேன்னா கடவுள் மேல் பாரத்தை வெச்சிரலாம் என்றுதான் ரகசியமா இதில் செயல் பட்டோம் ”



“கதிர் நிர்மலா இன்றைய நிலமைக்கு நீங்க இருவரும்தான் எனக்குத் தொழில் ரீதியான கைகொடுப்பு தெய்வங்கள்...” உணர்ச்சி மேலிட நன்றி மிகுதியோடு அவர்களை ஏறிட்டுப் பார்த்ததும், சட்டென தலைமைக் கணக்கரிடம் திரும்பி ‘ நீயெல்லாம் பொறுப்புல இருக்கற பெரிய மனுஷனாயா..? சுத்தமான ரெண்டு பேரையும் ரொம்ப கேவலமா நெனச்சி பேசித் தொலஞ்சிட்டேயே...' பார்வையாலேயே எரிக்கவும், சூடுபட்ட துடிப்பில் உள் கீழுதட்டை கடித்துக் கொண்ட தலைமைக் கணக்கர் முதல் தடவையாகத் தன் தரம் தாழ்ந்த செய்லுக்கு மனம் வருந்தினார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p219.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License