இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நெருடல்

மு​னைவர் சி.​சேதுராமன்


ஆசிரியர் பணி எவ்வளவு உன்னதமான பணி ​தெரியுமாங்க... அந்தப் பணியில இருக்கும் ஆத்மார்த்தமான இன்பம் ​வேற எதுலயும் கிடைக்காது... எத்த​னை​யோ ​பே​ரை ​பெரிய ​பெரிய ஆளா உருவாக்கி இந்தச் சமுதாயத்துக்குக் ​கொடுக்கறதுல அப்படி ஒரு இன்பம் கிடைக்கும்.

என்கிட்டப் படிச்ச மாணவர்களைப் பார்க்குற ​போதும், அவங்க வாழ்க்​கையில ​உயர்ந்த நி​லையில இருக்கறதப் பார்க்குற ​போதும் ஏற்படுற மகிழ்ச்சி இருக்​கே ​கோடி ரூபாய் ​கொடுத்தாலும் கி​டைக்காதுங்க. என்கிட்டப் படிச்ச மாணவர்கள் என்னைத் ​தேடி வந்து பார்க்குற​ போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அள​வே இல்லை. வழியில என்​னோட மாணவர்கள் என்னைப் பார்த்துட்டாங்கன்னா “ஐயா வணக்கம்.. எப்படி இருக்கீங்க...” என்று ​​ரெண்டு வார்த்​தையாவது ​பேசிவிட்டுச் ​செல்லும் அந்த அன்பி​னை மறக்க​வே முடியாது.

நாள்​தோறும் நான் நடந்து ​போற ​போது என்​னோட மாணவர்கள்ள யாராவது ஒருத்த​ரையாவது பார்த்துடு​வேன். அவங்க பார்க்கலைன்னாலும் கூட நான் அவங்களைப் பார்த்து நலம் விசாரிச்சிட்டுத்தான் ​போ​வேன். அன்னிக்கும் அப்படித்தான். நான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்​தேன். எதிர்த்தாற் ​போல் ஒருத்தன் வந்தான். அவ​னைப் பார்த்துட்டுப் ​போக எனக்கு மனசில்ல. அவங்கிட்ட ​ரெண்டு வார்த்​தையாவது ​பேசிட்டுப் ​போயிடணும்னு நி​னைச்​சேன். அவ​னைத் தவிர்த்திட்டு நான் போயிருக்கலாம்.

எப்படியோ அவனை நேருக்கு நேரேச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும் போது சிலர் தெரியாத மாதிரி, கண்டும் காணாதது போல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு.

சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்குறீங்க, சௌக்கியமா...?'' என்று பட்டும் படாமலும் நலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாகப் பேசுவதும் உண்டு.



'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்​னோட ​பே​ரை நி​னைவு வைச்சிருக்கிறீங்களே சார், அது எப்படி சார்... ஒங்களால மட்டும் முடியுது?' என்று வேறு சிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

என்​னைப் ​பேருந்து நி​லையத்தில் எதிர்பாராது சந்தித்து விட்ட என்னு​டைய மாணவன் பாலகிருஷ்ணன், “உங்கவீட்டிற்குக் குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், ஒங்களைப் பற்றித் தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு சென்ற வாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கி விட்டன. இவன் என்னிடம் படித்தவன். இப்​போது பல்க​லைக்கழகத்தில் ​பேராசிரியராகப் பணியாற்றுகிறான். அவ​னைப் பார்த்ததில் என் மனம் நி​றைந்தது.

வீட்டைவிட்டு வெளியே உலா வந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று உயர் பதவி வகிப்பவர்களாக இருக்கின்றார்கள். நான் சென்ற இடமெல்லாம் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் அவர்களின் மனசெல்லாம் பூரித்துப் போகும். எனக்கும் தான்.

இன்று பார்த்த இவன் மட்டும் ஏன் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய் இருக்கிறான். நான் அவ​னைப் பார்த்த​போது அவன் ​கையில் சிக​ரெட்​டைப் பிடித்துக் ​கொண்டிருந்தான். என்​னைக் கண்டதும் மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்துப் பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான்.

வாய்க்குள் இருந்த புகையைச் சிரமப்பட்டு அவன் மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் ​தெளிவாகத் தெரிந்தது. நான் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். என்​னைப் பார்த்த தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற் போல் நின்ற அவனிடம் 'எப்படிப்பா இருக்கிறாய்...?' என்று நலம் விசாரித்தேன். என்னுடைய கல்லூரிப்பணி வாழக்கையில் வந்து போன பலரில் இவனும் ஒருவனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சியப் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சியளித்தான்.



அவ​னைப் பார்த்தால் வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது. 'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்குமோ?

​மெளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக, 'என்ன இந்தப் பக்கம்...?' என்றேன்.

'சும்மா... நூலகத்திற்கு சார்...!'

அந்த ஒற்றைச் சொல்​லைத் தவிர அவன் எதுவும் சொல்லவில்லை.

அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலாக வந்து சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் அவனது விரலைச் சுட்டிருக்க வேண்டும்.

அந்தச் சூடு தாங்காமல் சிக​ரெட்​டை அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகு லாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் அத​னை மெல்லத் த​ரையில் ​தேய்த்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரவியது. அவன் என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே​யே அ​னைத்​தையும் தன்னிச்சையாகவே செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ...? எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது “என் பையன் படிச்சு ​பெரிய க​லெக்டராகணும், அது ஒங்க​ளோட பொறுப்பு சார்” என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது க​லெக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் ஆங்கிலம் அவனுக்குப் புரியவே இல்​லை. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் அவன் ​தேர்ந்​தெடுத்த இயற்பியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் அவன் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.



அவனது தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. அவனது காலத்தை வீணடிக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக அவனது தாயிடம் நான் சொல்லிப் பார்த்தேன்.

அவனது தா​யோ கேட்பதாக இல்லை. மகனைக் க​லெக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.

'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'அப்படியா...? வருத்தமா இருக்கப்பா... கவலப்படாத...!' என்று அவன் மீது அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?


கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று என் மனம் துன்புற்றது.

அவ​னைப் பார்த்து நான், 'ஏப்பா ஒனக்கு நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு மு​றை வந்துட்டுப் ​போ​யேன்...’ என்றேன்.

அவன் என்​னைப் பார்த்து “சார் எங்கே இருக்கிறீங்க...? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்...” என்றான்.

முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து என்​னைப் பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன் சார்... ஆனால்... நீங்க யா​ருன்னு இன்னமும் ஏங்கிட்ட சொல்லவே இல்லையே... சார்...?' என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் ​போட்டது. நான் என்கிட்ட படிச்ச மாணவனிடம் தா​னே ​பேசிக்கிட்டு இருக்​கேன்... இல்ல ஒரு​​வே​ளை ​வேற யாரையாவது பார்த்துட்டு மறந்து​போயி... ​சேச்​சே... எனக்கு நல்லா நி​னைவு இருக்கு... இவன் என்கிட்டதான் படிச்சவன்... எத்த​னை ஆண்டானாலும் என்கிட்ட படிச்சவ​னை எனக்குத் ​தெரியாதா... என்ன...? அப்பறம்... எப்படி... இவன்... என்​னை... யார்னு ​கேக்குறான்...? என் மனம் குழம்பியது... அப்​போது அவனது காலடியில் கிடந்த நசுக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு ஏற்பட்டது.

மனதில் எனக்கு ஏ​தோ ​நெருடல் ஏற்பட்டது. என்றுமில்லாத தளர்ச்சி அன்று எனக்கு ஏற்பட்ட​தை உணர்ந்​தேன்... என் மனம் திருவிழாக் கூட்டத்தில் அனா​தையாகிவிட்ட குழந்​தை ​போன்று ஆகிவிட்டது. ந​டைப் பயிற்சி​யைத் ​தொடராமல் மனக் குழப்பத்துடன் தள்ளாடித் தள்ளாடி வீட்​டை ​நோக்கி நடந்​தேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p220.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License