இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அந்தி மந்தாரை

‘பரிவை’ சே. குமார்


அதிகக் கூட்டமில்லாத அந்த காபிக் கடையில் எதிர் எதிரே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர் ராகவனும் அனுப்பிரியாவும்... இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். அந்த அலுவலகத்துக்கு அனு வந்து ஒரு வருடம்தான் இருக்கும். ராகவன் ரொம்ப வருடமாக வேலை செய்கிறான். கம்பெனியில் அவனுக்கு நல்ல பெயர். மேனேஜரின் செல்லப்பிள்ளை வேறு. அனு வந்தது முதல் அவளுடன் ஒரு ஒட்டுதல். இருவருக்குமான நட்பு நிறைய விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் வகையில் இருந்தது. ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தால் நமக்கு வேலையில்லை என மற்ற நண்பர்கள் ஓடி விடுவார்கள்.

உதட்டில் பட்டும் படாமலும் காபியை உறிஞ்சிய அனு, "என்ன ராகவ் ஏதோ சொல்லணும்ன்னு சொன்னீங்க... அதுவும் ஆபீஸ்ல பேச வேண்டான்னு சொல்லி இங்க கூட்டியாந்தீங்க... இப்ப பேசாம காபி குடிக்கிறீங்க..." என்றாள்.

"எப்பவும் போல அரட்டை அடிச்சிப் பேச வேண்டிய விஷயம் அல்ல இது... வாழ்க்கை குறித்துப் பேசணும்... அதான்..." ரொம்ப யோசித்துப் பேசினான்.

"என்ன ராகவ்... எப்பவும் தல தோணி போல சும்மா அடிச்சி ஆடுவே... இன்னைக்கு என்னடான்னா டிராவிட் போல ரொம்ப யோசிக்கிறே...?" கிரிக்கெட் பைத்தியமான அனு, கிரிக்கெட்டை வைத்தே அவனைச் சீண்டினாள்.

"ஏய் அப்படியில்ல... கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டிய விஷயம்... அதான்..." ராகவ் வெளியில் பார்த்தபடி சொன்னான்.

"என்ன ராகவ்... என்னைய லவ் பண்றியா..?" என்று நேரடியாக அவள் கேட்க, வாயில் வைத்த காபிக் கோப்பையை படக்கென்று எடுத்தான். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தான்.

"ஏய்... என்னாச்சு... என்னைய லவ் பண்றியான்னுதானே கேட்டேன்..."

"ஆமா அனு.... உன்னைய கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறேன்..."

காபியை வைத்து விட்டு "ஜோக்கெல்லாம் அடிக்காதே ராகவ்... நீ ரகுவரன் மாதிரி... ஜோக்கடிச்சா நல்லா இருக்காது..." என்று சொல்லிச் சத்தமாய்ச் சிரித்தாள்.

"ஏய் சத்தியமா... நான் உன்னை விரும்புறேன்..."

அவள் கோபப்படவில்லை என்பது அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.

"என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?" என்றாள்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணு... அறிவாளி... வேறென்ன தெரியணும்... பேசிப் பழகுனதுல உன்னோட குணமும் தெரிஞ்சாச்சு..."

"ம்... ரொம்ப அழகின்னு வழியலை... குணம் தெரிஞ்சாப் போதுமா... குலம்...?"



"ஏய் என்ன நீ சாதியெல்லாம் பார்த்து வந்தா அது காதலா..."

"அப்ப அழகி, அறிவாளியின்னு பார்த்து வந்தாப் போதுமாக்கும்... சரி... அலுவலகத்துல நான் இப்படி... அது உனக்குத் தெரியும்... ஓகே... அந்த எட்டு மணி நேரம் போக மற்ற நேரத்தில்... அதாவது என் குடும்பம்... உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்...?"

"அது... அது எதுக்கு... இவ்வளவு சந்தோஷமா இருக்க உனக்கு கண்டிப்பாக ரொம்ப சந்தோஷமான ஒரு குடும்பம் இருக்கணும்... அவங்க எல்லாரும் திருமணத்துக்குப் பின்னே நம்ம கூட இருக்கணும்..."

"அது சரி... அப்ப உன் குடும்பம்...?"

"என் குடும்பம்... நான் பாட்டி வீட்லதான் இருக்கேன்னு உனக்குத் தெரியுமே... அப்புறம் என்ன... எனக்கென்ன அப்பாவா... அம்மாவா... சொல்லு..."

"ஏய் ராகவ்... சாரிடா... உன் பாட்டியின்னு கேக்க வந்து அப்படிச் சொல்லிட்டேன்... ஆனா என்னைப் பற்றி என்னோட அலுவலகம் தவிர்த்த வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது... நானும் யாருக்கும் சொல்ல விரும்புறதில்லை... இப்ப நீ சொன்னே பாரு... சந்தோஷமான குடும்பம்ன்னு அப்படி இருக்கத்தான் ஆசை... சரி... என்னைப் பற்றி தெரியணுமின்னா... என்னைக் கல்யாணம் பண்ணனும்ன்னா கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்க்கணும்... அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்... ஓகேயா...?"

"சரி... வா இப்பவே போலாம்..."

"ஏய் இரு... எங்கப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கணுமில்லையா... எனக்கு நீ பிரண்ட்... ஆனா வீட்ல உன்னைத் தெரியாதுல்ல... சோ நாளைக்குப் போவோம்... ஓகேவா... சரி வா... கிளம்பலாம்..." என எழுந்தாள்.

மறுநாள்.

"வாங்க தம்பி... அனு சொன்னா..." என்றபடி வரவேற்றார் அவளின் அப்பா.

"வணக்கங்க..." என்றவன் அனுவின் அம்மாவைத் தேடினான்.

"அப்பா.... சுந்தரராஜன்... ரிட்டையர்டு ஹெச் எம்." என்ற அனு, "உக்காருங்க" என்றாள்.

"அம்மா எங்கே அனு?"

"அம்மா... உள்ள இருக்காங்க... வாங்க...."

அறைக்குள் செல்ல கட்டிலில் படுத்துக் கிடந்த அனுவின் அம்மாவைப் பார்த்ததும் "என்னாச்சு அனு...?" என்றான்.



"நல்லாயிருந்தாங்க... திடீர்ன்னு ஒரு பக்கம் இழுத்துக்கிச்சு... ரெண்டு வருசமாப் பாக்குறோம்... அப்பாதான் பகலெல்லாம் பார்த்துப்பார்... ஈவினிங் நான் வர்றதுக்கு முன்னால தங்கையும் தம்பியும் வந்திருவாங்க... அவ எல்லாம் பார்த்து நான் வர்றதுக்குள்ள சமைச்சும் வச்சிடுவா..."

"சாரி... அனு..."

"ஏய் எதுக்கு சாரியெல்லாம்... இதெல்லாம் நாங்க ரெண்டு வருசமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்... விடுங்க..." என்றவள் "ராகவ் நான் போட்ட காபி சாப்பிட்டதில்லையில்ல... இருங்க சூடா ஒரு காபி கொண்டு வர்றேன்..." என்று நகர்ந்தவள் "சொல்ல மறந்துட்டேன்... இவ என் தங்கை கல்பனா... எம்.சி.ஏ. பண்றா..." என்றவள் "எங்கடி விக்கி..?" என்று தங்கையிடம் கேட்டாள்.

"ரெண்டு வாலும் பின்னால விளையாடுதுக..." என்று சொல்லியவள் ராகவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்... அவனும் பதிலுக்குச் சிரித்தான்.

"தம்பி.. உங்களைப் பற்றி அனு எல்லாம் சொன்னா... நான் வாத்தியாரா இருந்தேன்... அவங்க அம்மாவும் டீச்சர்தான்... எங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ்தான்... அதனால எங்களுக்கு சாதியெல்லாம் இல்லை... ஏன் மதம் கூட இல்லை... அவ கிறிஸ்டியன்... அவ இப்படி ஆனதும் எங்க குடும்பத்துல நடந்த சில நிகழ்வுகளாலும் நாங்க இருந்த சிவகங்கைப் பக்கம் இருந்து இங்கிட்டு வந்துட்டோம்..." என்ற போது அனு காபியோடு வந்தாள்.

காபியை மெதுவாக உறிஞ்சியவன், "வாவ்... என்ன சூப்பரான காபி அனு... நீ காபியெல்லாம் நல்லாப் போடுவியா?" என்றான்.

"ஆஹா... ரொம்பத்தான்... நாங்க எல்லாமே நல்லாச் செய்வோம்... வேணுமின்னா எங்கப்பாக்கிட்ட கேளுங்க..." என்றபடி சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"அவளுக்கு எங்கம்மாவோட கைப்பக்குவம்..."

"சரி... வாங்க காபி சாப்பிட்டுக்கிட்டே மாடிக்குப் போய் கொஞ்ச நேரம் பேசலாம்... அப்பா... மேல போயிட்டு வர்றோம்..." என்றாள்.

"சரிம்மா..."

"என்ன அனு... அம்மா இப்படியிருக்காங்க... சொல்லவே இல்லை..." மாடியேறும் போது மெதுவாகக் கேட்டான்.

"இதெல்லாம் பழகிருச்சு... இதைச் சொல்லி அனுதாபம் தேடணுங்கிறீங்களா...? அப்பன்னா நான் இன்னொன்னையும் சொல்லியிருக்கணுமே..." என்று சிரித்தவள் "அப்பாவோட பிரண்ட் பக்கத்துலதான் இருக்காங்க... அவங்கதான் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தாங்க... நல்ல வீடு... காற்றோட்டமான வீடு.. என்ன ஊரை விட்டு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கு... இருந்தாலும் இங்கிட்டும் நிறைய வீடு வந்திருச்சில்ல... பின்னால சின்னதா ஒரு தோட்டம்... எங்களுக்குப் பிடிச்சிப் போச்சு... இன்னொன்று தெரியுமா...? இந்த வீட்டோட ராசி வந்து ஒரு வருசத்துக்குள்ள அம்மாவோட நிலமையிலயும் கொஞ்சம் மாற்றம் இருக்கு... எங்களுக்கும் மனக்கஷ்டமெல்லாம் நீங்கி கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம்..." என்றாள்.

மேலிருந்து பின்பக்கமாக பார்த்து 'விக்கி அவனைக் கூட்டிக்கிட்டு மேல வா..." என்றவளிடம் "அது யார் அந்தப் பொடியன்...?" என்றான்.

"இருங்க வரட்டும் சொல்றேன்..." என்றவள் "எங்க அம்மாவோட நிலமைக்கு காரணமே நாந்தான்னா நம்ப முடியுதா?" விரக்தியாய்ச் சிரித்தாள்.

"என்ன சொல்றே...?"



"ம்.." என்றவளின் கண்கள் முதல் முறையாக கலங்குவதைப் பார்த்தான். அலுவலகத்தில் பார்த்த அனுவுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை... அதுவும் சோகமான வாழ்க்கை இருப்பதும்... அவள் கண் கலங்குவதும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் "அம்மா" என அவளை அணைத்துக் கொண்ட பொடியனைப் பார்த்ததும் வாயடைத்து நின்றான்.

"ராகவ்.. இது என் தம்பி... விக்கி... காலேஸ்ல படிக்கிறான்... இது என்னோட பையன் சந்தோஷ்..." என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு மகனுக்கு முத்தம் கொடுத்தாள்.

"அனு...?"

"அதிர்ச்சியா இருக்குல்ல... பட்டாம்பூச்சி மாதிரி ஆபீஸ்ல திரியிற அனுவுக்கு குழந்தையா... அப்படின்னு ஆச்சர்யமாவும் இருக்குல்ல... ம்... என்னோட பையன்... எனக்கும் கார்த்திக்குக்கும் பிறந்த பையன்... எங்களோட நாலாண்டு திருமண பந்தத்துக்குக் கடவுள் கொடுத்த பரிசு இவன்..."

"கார்த்திக்...?"

"அவனுக்கு என்னைப் பிடிக்கலை... ரொம்ப ஜென்டிலா நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொன்னான்... அவனுக்கு அவனோட ஆபீஸ்ல ஒருத்தி செட்டாயிட்டா... சரியின்னு சொல்லி... அப்பா அம்மாவோட எதிர்ப்புக்கு இடையில விவாகரத்துக்கு கையெழுத்துப் போட்டுட்டேன்... போடலைன்னா அவன் அவ கூட போவான்... அவன் கட்டுன தாலியை சுமந்துக்கிட்டு நான் வீட்டுக்குள்ள கிடக்கணும்... எனக்கு அது பிடிக்கலை... இப்ப நீ கேட்ட மாதிரி யாராவது ஒருத்தன் அப்ப என்னைக் கேட்டிருந்தா... அவனை விவாகரத்து பண்ணிக்கலாமான்னு நான் கேட்டிருக்க முடியுமா..? இல்ல அவனை வேணான்னு உதறிட்டு போயிருந்தா இந்தச் சமூகம் சும்மா விட்டுடுமா...? ஓடுகாலின்னு சொல்லும்... இன்னும் கேவலாமா.... அ... வேண்டாம் விடு... சமூகத்துல ஆண்களுக்கு ஒரு சட்ட திட்டம்... பெண்களுக்கு ஒரு சட்ட திட்டம்... என் முடிவு என் தங்கை, தம்பியோட வாழ்க்கையை பாழாக்கக் கூடாதுன்னுதான் ரொம்ப யோசிப்பேன்... பட்... அம்மாதான் என்னோட வாழ்க்கை முடிஞ்சி போன அதிர்ச்சியில விழுந்துட்டாங்க... அப்பா எனக்கு ரொம்ப ஆதரவு... இப்பவும் நாங்க எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கோம்..."



"சாரி அனு... சந்தோஷமா வலம் வர்ற உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கலை... எல்லாத்துக்கும் சாரி..."

"எல்லாத்துக்கும்ன்னா... நேத்து சொன்னதுக்குமா?"

அவன் பதில் பேசலை.

"பாரு என்னைப் பற்றி தெரிந்ததும் நீ யோசிக்க ஆரம்பிச்சிட்டே... என்னோட தங்கை... ரொம்ப நல்லவ... அவளைக் கட்டிக்க உனக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்... நான் இப்படியே அம்மா, அப்பா, தம்பி, என்னோட பையன்னு வாழ்ந்துடுறேன்..."

"உனக்கென்ன வயாசா ஆயிருச்சு.... இப்படியே இருக்கேன்னு சொல்றே...?"

அனு சிரித்தாள்.

"பாருங்க ராகவ்.... நான் என்ன இருந்தாலும் செகண்ட் ஹேண்ட் வண்டிதானே... கூடவே ஒரு ஸ்டெப்னியையும் வச்சிருக்கேன்... எவன் கட்டிப்பான்... பாருங்க... அறிவாளி அப்படி இப்படின்னு சொன்ன நீங்களே இப்ப யோசிக்கிறீங்கதானே..."

"ஏய் அப்படியெல்லாம் இல்லை... நாளை முடிவு சொல்றேன்... நேரமாச்சு... நான் இப்ப கிளம்புறேன்..." என்றவன் வேறெதுவும் பேசவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் அலுவலகம் போனவள் ராகவைத் தேடினாள். அவன் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லியிருப்பதாகத் தெரிந்த போது அவன் அவளைத் தவிர்ப்பதை உணர்ந்து இதுதான் நடக்கும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

மதியம் அவனுக்குப் போன் பண்ணலாம் என முயற்சித்தாள். எதிர்முனையில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. சே... எல்லா ஆண்களும் போல்தான் இவரும்... நான் கட்டிக்கன்னு நிக்கலையே... வேண்டான்னுதானே சொன்னேன்... எதுக்கு இப்படி... அவன் மேல் அவளுக்கு கோபத்துடன் வெறுப்பும் வந்தது.

அப்போது அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரிலேட்டிவ் ஒருத்தவங்க திடீர்ன்னு இறந்துட்டாங்க... பாட்டியக் கூட்டிக்கிட்டு கிராமத்துக்கு வந்திருக்கேன்... போன்ல சார்ஜ் இல்லாததால சார்ஜ் போட்டிருந்தேன்... அதான் போன் எடுக்கலை... தப்பா நினைச்சிருப்பே இல்ல... இப்பவும் கால் பண்ணினா சரியாக் கேக்காது... அதான்... அப்புறம் நல்ல செய்தி இங்கிருந்து சொல்ல முடியாது. நாளைக்கு நம்ம பையனைக் கூட்டிக்கிட்டு ரெண்டு பேரும் பெருமாள் கோவில் போறோம்... சரியா... என்றிருக்க, அவளுக்குள் முதல் முதலாய் பட்டாம்பூச்சி பறந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p272.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License