இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

நிம்மதி இவ்விடம் சூழ்க!

"இளவல்" ஹரிஹரன்


"என்னங்க ஏட்டையா... ஏதாவது மர்டர் கேஸா... இல்லை அடிதடியா... இல்லே தற்கொலையா... காலையிலேயே வந்துட்டீங்க..." தேநீர் குடித்துக் கொண்டே சாமியப்பன் கேட்டான்.

சாமியப்பன் அரசு மருத்துவமனையின் பிணவறையைப் பார்த்துக் கொள்பவன்.

"இல்லேப்பா... இது ஒரு மிஸ்லிங் கேஸ்... காலையிலேயே அழுது புலம்பிக்கிட்டு நிக்குது... அதான் வந்தேன்" ஏட்டையா வேலுமணி பதில் சொன்னார்.

"டேய்... ஏட்டையாவுக்கு ஒரு டீ குடு..."

"ஏட்டையா... டீ குடிங்க... இதெல்லாம் நம்ம வேலையிலே சகஜம் தானே... அது சரி... பார்ட்டி வரலீங்களா..."

"இந்நேரம் வந்திடுவேன்னு சொல்லிச்சிப்பா... ஆ... அதோ வந்துகிட்ருக்கே..."

வேலுமணி காட்டிய திசையில் அவசர அவசரமாக அஞ்சலை வந்து கொண்டிருந்தாள்.

வேலுமணியைப் பார்த்ததும் ஓ..வென்று அழுதாள்.

"அய்யா... எம் புருசனைக் காட்றேன்னு இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்களே... சாமி... அவரக் காணோமின்னு தானே புகார் கொடுத்தேன்... அதுக்காக செத்தவங்கள வைக்கிற இந்த ரூமுக்கு வரவச்சிட்டீங்களே... அய்யோ... நான் என்ன செய்வேன்... அவருக்கு ஒண்ணும் ஆயிருக்கக் கூடாதே..."

"ஏ... ஏய்... இப்ப ஏன் அழுது ஒப்பாரி வைக்கிறே... ஒரு வாரமா... உம் புருசன் காணலியேன்னு சொன்னியே... ஒருவேளை விபத்திலேயோ... மயங்கி விழுந்தோ... அடிகிடி பட்டோ எங்கேயாச்சும் விழுந்து கிடந்து செத்திருந்தான்னா... ஒரு சந்தேகத்துக்குத் தான்... பாத்து உறுதி பண்ணி இங்கே இல்லேன்னா வேற இடந் தேடலாமே... அது தான்..."

ஆனால், அஞ்சலைக்குப் போதாத காலந்தான். சாமியப்பன் பிணவறையில் உள்ள ஒவ்வோர் உடலை துணியை விலக்கி முகத்தைக் காட்டிக் கொண்டே வர... அஞ்சலை இல்லை... இல்லை... என்பது போலத் தலையசைத்து மறுப்புத் தெரிவித்துக் கொண்டே வந்தாள்.

எல்லாம் முடிந்து. அஞ்சலைக்குப் போன சுவாசம் திரும்பி வந்தது போல இருந்தது.

"...இரும்மா... எதுக்கும் அநாதைப் பிணங்கன்னு சொல்லி அதலயெல்லாம் படமா எடுத்து வச்சிருக்கோம்... அதையுங் காட்டிர்றேன்... பாத்திரு..."

கோப்பில் இருந்த புகைப்படங்களைச் சாமியப்பன் காட்டினான். ஒவ்வொரு முகங்களாகப் பார்த்தாள் அஞ்சலை.

அத்தனையும் படுத்த நிலையிலிருந்த பிணங்களின் படங்கள்.


ஒரு புகைப்படத்தின் மீது அஞ்சலையின் கண்கள் நிலைத்தன.

"அய்யோ... என் ராசா... இப்படி நாதியத்துப் போயிட்டியேய்யா... இப்படி அனாதையாச் செத்துப் போகவா இந்த ஊருக்கு வந்தே... வேலை தேடிப் போறேன்... வேலை தேடிப்போறேன்னு தெனம் போயி வருவியேய்யா... பத்து நாளா வரலியே... வரலியேன்னு நான் பாக்காத வழியில்லே... கேக்காத மொழியில்லே... அய்யா... என்னை ஆண்ட ராசாவே போயிட்டியேய்யா... என்னைத் தனிமரமா ஆக்கிப்பிட்டியே..."

அஞ்சலையின் ஒப்பாரி அங்கே கூடியிருந்த கூட்டத்தைக் கண்கலங்கச் செய்தது. ஆறுதல் சொல்ல வழியின்றி இருந்தது.

அந்த இடத்தில் தினம் தினம் இப்படி நிகழ்வது சாதாரணம், அதனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. போவோரும் வருவோரும அப்படியே எட்டிப் பார்த்து உச்சுக் கொட்டிவிட்டுப் போவதோட சரி... அவ்வளவு தான்.

"அய்யா... அய்யா... எம் புருசனோட உடம்பையாவது கண்ணிலே காமிங்கய்யா... அய்யா..."

அழுது புலம்பினாள் அஞ்சலை.

சாமியப்பனைப் பார்த்தார் வேலுமணி.

"ஏட்டையா... ரெண்டு நாள் முன்னாடியே அத அனாதப் பிணம்னு முடிவாகி அடக்கம் பண்ண எடுத்திட்டுப் போயிட்டாங்களே..."

"...யாரு...?"

"அதான்கய்யா... அந்த அமிர்தம்மா... அனாதைப் பிணங்ளை எல்லாம் முறையா அடக்கம் பண்ணுவாங்களே... அவங்க தான்..."

அமிர்தம்மாள்... ஐம்பது வயதிருக்கும், ஒரு சமூக சேவகர்... அரசிடம் தனி ஆணை பெற்று அந்த நகரத்தில், அனாதைப் பிணங்களை முறையாய் மருத்துவமனையிலிருந்து உரிய சான்றுகள் பெற்று தம் சொந்தச் செலவில் நல்லடக்கம் செய்பவர்.


வேலுமணி மேற்கொண்டு விவரங்கள் சேர்த்தார்.

விவரங்களை அஞ்சலையிடம் தெரிவித்தார், "இப்படி ஓர் ஈனப்பிறவியாப் போயிட்டேனே... புருசனக் கூடச் சரியாப் பார்க்க முடியாமப் போச்சே... அந்த ஆளோட ஈமச்சடங்கக் கூடச் செய்ய முடியாம.... இப்படியா அநாதையா ஒரு மனுசன் சாவான்..."

அஞ்சலை தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"அய்யா... யாரோ... ஒரு அம்மா பேரச் சொன்னாங்களே... அனாதைப் பிணங்களை அடக்கம் பண்ணுவாங்கன்னு... அவங்களப் பாக்கணும்யா... எம்புருசன அடக்கம் பண்ணவங்க முகத்தப் பாத்து நன்றி சொல்லணும்யா..."

வேலுமணியிடம் கெஞ்சுவது போலக் கேட்டாள்.

அவர் சாமியப்பனைப் பார்த்தார்.

"அந்தம்மா... காலையிலேயே வந்து போயிட்டாங்கய்யா... இன்னிக்குக் கூட ரெண்டு அநாதைப் பிணங்களக் கொண்டு போயிருக்காங்க... மயானத்துக்குப் போனா அங்கே அவங்களப் பாக்கலாம்..."

"ஏட்டய்யா... ஏதோ புதுக் கேசு வருது... டாக்டர் வந்திருவாரு..." என்றவாறே சாமியப்பன் நகர்ந்தான்.

"அய்யா... சாமி... என்னை மயானத்துக்குக் கூட்டிட்டுப் போங்களேன்... அந்த அம்மாவப் பாத்து ஒரு கும்பிடு போட்டு நன்றி சொல்லணும்யா... அய்யா... என்னப் பெத்த சாமி மாதிரி நீங்க..."

வேலுமணி இளகிய மனதுக்காரர். தர்ம சங்கடமாக இருந்தது. என்ன செய்வது... இந்தப் பெண் வேறு கெஞ்சுகிறாள்.

இன்ஸ்பெக்டர் ஏதாவது சொன்னால்... என்ன செய்ய... சரி... பாவம் இந்தப் பெண்ணுக்கு உதவலாம்... எப்படியும் ஒரு மிஸ்ஸிங் கேஸ் கோப்பு முடிந்துவிடும் என்று நினைத்தார்.

சாலைக்கு வந்தவர் ஓர் ஆட்டோவை அழைத்தார்.

அஞ்சலையை ஏறச்சொல்லி, தாமும் கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்தார்.

"தம்பி... மயானத்துக்கு வண்டிய விடுப்பா... ஆட்டோ சார்ஜ் வாங்கிக்கலாம்..."

நல்லவேளை... ஓசிச் சவாரியாக இல்லாமல் இருந்தால் சரி என்ற நினைப்பில் ஆட்டோ டிரைவர் வண்டியைச் செலுத்தினார்

போகும் வழியெல்லாம் அஞ்சலையின் புலம்பல் தான்.

நல்ல நாளும் அதுவுமா... இப்படி மயானத்துக்குப் போக வேண்டியிருக்கிறதே... என்ன செய்ய... இந்த உத்யோகத்தில் இதையெல்லாம் பார்க்க முடியாதே... ஒரு பாவப்பட்ட சென்மத்துக்கு உதவுன மாதிரி இருக்கட்டும்...

வேலுமணியின் மனதிலோடும் எண்ணங்களுக்கு இடைவேளை கொடுத்தார் ஆட்டோ டிரைவர்.

"சார்... வந்திருச்சிங்க..."

ஆட்டோ டிரைவர் கேட்ட நியாயமான பணத்தை வேலுமணி கொடுத்தார்.

மயானத்தின் உள்ளே சென்று பார்த்தார்... அருகில் நின்றாள் அஞ்சலை.

இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் இடத்தில் ஒரு சிறு கூட்டம் இருந்தது. நடுவில் அமிர்தம்மாள் நின்றிருந்தார்.

"... அதோ... அந்தம்மா... தான்... காரியம் நடந்துகிட்டிருக்கு... அழுது புலம்பி இடைஞ்சல் பண்ணிராதே..."

சற்று எட்டியே நின்றனர் இருவரும்.

குழியில் சவம் இறக்கப்பட்டிருந்தது. அமிர்தம்மாள் மூன்று முறை கைநிறைய மண்ணள்ளி எடுத்துக் குழியிலிட்டார். கும்பிட்ட கைகளோடு மூன்று முறை வலம் வந்தார்.

இடுகாட்டுச் சிப்பந்திகள் மளமளவென குழியை மூடினர்.

மண்மேட்டின் மீது மலர்களைத் தூவி ஊதுவர்த்தி கொளுத்தினார். ஒரு செம்பில இருந்த பாலை மண் மீது மூன்று முறை கைகளால் அள்ளித் தெளித்தார். வானத்தை அண்ணாந்து பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.


ஒருவர் கீதையின் சரம ஸ்லோகத்தைச் சொல்ல, இன்னொருவர் பைபிளிலிருந்து சில வாசகங்கள் சொல்ல, மற்றொருவர் திருக்குரான் ஓத,

"ஹே ஜீவனே... போகும் வழியெல்லாம் உன் ஆன்மா சாந்தி அடைவதாக... இங்கு யாரும் அநாதையில்லை... பிறப்பு இல்லாத நாளும் இல்லை... இறப்பு இல்லாத நாளும் இல்லை... எல்லோருக்கும் சாந்தி உண்டாகட்டும்..."

அமிர்தம்மாளின் நீண்ட பிரார்த்தனையை, அவர் செயலை அஞ்சலை பார்த்தாள்.

கண்களில கண்ணீர் பெருக, ஓடோடி அமிர்தம்மாளின் காலில் விழுந்தாள்.

"அம்மா... .அம்மா... எம்புருசனையும் இப்படித் தான் அடக்கம் பண்ணியிருப்பீங்க... எனக்கு இப்பத் தான்மா நிம்மதியாப் போச்சி... எம்புருசனுக்கு சகல மரியாதையோட நல்லடக்கம் நடத்தியிருப்பீங்க... உங்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் போதாதும்மா... இதெல்லாம் உங்கச் சொந்தச் சிலவிலேயே பண்றீங்கன்னா... உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசும்மா... ஈமச்சடங்கிலேயாவது ஒரு மனிதனுக்கு நிம்மதி கிடைக்கணும். அதை நீங்க கொடுக்கிறீங்கம்மா... எந்த உயிரும் இங்கே அநாதயில்லேன்னு நீங்க பாத்துக்கிறீங்களே... உண்மையிலேயே நீங்க தான்மா பெரிய தெய்வம்..."

ஒன்றும் புரியாமல் அமிர்தம்மாள் நிற்க, வேலுமணி பதில் அளிப்பவராய்த் தலையாட்டினார்.

ஜென்மம் நிறைந்தவர் சென்றவர் வாழ்க!
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க!
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க!
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

மனதைக் கரைக்கும் வண்ணம் தூரத்திலிருந்து காற்றலையில் தவழ்ந்து வரும் பாடல் அந்தச் சூழலை இலகுவாக்கியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p279.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License