இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

சன்னலோரம்

‘பரிவை’ சே. குமார்


திருச்சி செல்லும் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு எப்பவுமே இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்து பயணிப்பது மட்டுமே பிடிக்கும். பெரும்பாலும் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் எப்பவுமே என்னோட சாய்ஸ் சன்னலோர இருக்கைதான்... லேசா சன்னலைத் திறந்து வைத்தால் முகத்தில் அடிக்கும் காற்று... கடந்து செல்லும் அசையும் அசையாப் பொருட்கள்... மனிதர்கள்... என ரசிப்போடும்... களிப்போடும் பயணிப்பதில் ஆர்வம் அதிகம்.

சில நேரங்களில் இருவர் அமரும் சீட்டில் சன்னலோரம் அமர்ந்த பின்னர் நம்மருகில் யாருமே அமர மாட்டார்கள். அப்போதெல்லாம் எங்கே நம்மை எழச் சொல்லி விடுவார்களோ என்ற நினைப்போடு பேருந்துக்கு உள்ளே பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் விழிகளை ஓட்டுவேன்.

எனக்குப் பிடித்தது சன்னலோர இருக்கை அதை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துட்டு உள்ளிருக்கையில் அமர்ந்து கூட்ட நெரிசலில் அழுக்கப்பட்டு... அழுத்தப்பட்டு... பிழிந்து எடுக்கப்பட்டு... பின்னர் கசங்கிய சட்டையோடும் உடலோடும் இறங்குவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை.

இப்படித்தான் ஒருமுறை மதுரைக்குச் செல்லக் காரைக்குடியில் ஏறினேன். பேருந்துக்குள் ஏறியதும் இருக்கைகளைப் பார்த்து முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடையிலான இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன்.

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை என்றாலும் பெரும்பாலான சன்னல் இருக்கையை ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அப்போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஏறினாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக என் இருக்கை அருகே வந்து 'எக்ஸ்கியூஸ் மீ...' என்றாள். நானோ அப்போதுதான் மொபைலில் முக்கியமாய் எதையோ தேடுவது போல் நோண்டிக் கொண்டிருந்தேன். அவள் மீண்டும் 'எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களைத்தான்' என்றாள்.

"என்னையா...? உங்களுக்கு என்ன வேணும்...?" என்று அவளை அண்ணாந்து பார்த்துக் கேட்டேன்.

"நீங்க கொஞ்சம் மாறி உக்காரமுடியுமா...?" என்றாள்.

"மாறி உக்காரணுமா..? ஏன்..? பஸ்ல சீட் இல்லையா?" எழுந்த கோபத்தை அடக்கியபடி கேட்டேன்.

"இப்படி எல்லாச் சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டா வர்றவங்க எங்க உக்கார்றதாம்..."

நான் என் மடியைப் பார்த்தேன்... உடனே அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"மேடம் பஸ்ல இடமில்லைன்னா பரவாயில்லை... அதான் நிறைய சீட் காலியாத்தானே இருக்கு... முன்னாடி மூணு பேர் அமர்ற இருக்கையில எல்லாம் ரெண்டு பேர்தானே இருக்காங்க... அங்க போயி உக்காருங்க... அதென்ன குறிப்பா.. என்னமோ நீங்க சீட் போட்டிருந்து அதுல நான் உக்காந்த மாதிரி எங்கிட்ட வந்து நிக்கிறீங்க.. அப்படி சன்னலோர சீட்டுதான் வேணுமின்னா... கண்டக்டருக்கிட்ட போயி கேளுங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் கண்டக்டர் என் அருகில் வந்து "சார்... கொஞ்சம் மாறி உக்காருங்க " என்றார்.

"எதுக்கு சார்... நான் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறேன்... எனக்கு எந்த இருக்கை வேணுமோ அதில் பயணிக்க உரிமை இருக்கா இல்லையா... அதுக்காக ஒரு இடத்தைப் பிடிச்சி... அதுல உக்காந்த பின்னால யாரோ ஒருவருக்காக நான் ஏன் இடம் மாறனும்... அப்படி எதுவும் ரூல்ஸ் வச்சிருக்கீங்களா...? மாறி உக்காந்தா டிக்கெட் ரேட்ல டிஸ்கவுண்ட் தருவீங்களா..?" என்றேன்.

"சார்... விதண்டவாதம் பேசாதீங்க... எல்லா சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்தா எப்படி சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்..."

"அது சரி... இந்த சீட்ல பயணம் செய்யலாம் அப்படின்னு ஒரு மனநிலைக்கு வந்த பின்னால இப்ப ஏறிக்கிட்டு இடமாறி உக்காரச் சொல்றவங்களுக்கு முன்னுரிமையின்னா நான் எதுக்கு பதினைந்து நிமிடமா உங்க பேருந்துல ஏறி உக்காந்திருக்கணும்... கிளம்பும் போது ஏறி இருக்கலாமே... இதே ஒரு பொம்பளை உக்காந்திருந்து நான் வந்து மாறி உக்காருங்கன்னு சொன்னா விட்டிருப்பாங்களா... நீங்க கூட மாறி உக்காரச் சொல்லுவீங்களா...? ஏன் பஸ்ல இருக்கவங்களே இவ்வளவு இடம் கிடக்கையில நீங்க ஏன் சார் அங்க போயி நிக்கிறீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க..."

"என்ன சார் படிச்ச நீங்களே இப்படிப் பேசுறீங்க... பாருங்க... நிறைய லேடீஸ் ஏறுறாங்க... ஜென்ஸ் ஒவ்வொரு ஆளா உக்காந்திருந்தா அவங்களை நான் எப்படி உக்கார வைக்கிறது சொல்லுங்க.... முன்னாடி இருக்கிற சீட்டுக்கு மாறுறதால உங்களுக்கு என்ன பிரச்சினை சார்..."

"ஓகே... சார்... நான் விரும்புற சீட்டுல பயணிக்கத்தான் எனக்கு விருப்பமே தவிர, உக்காந்த சீட்ட மத்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க உக்காரச் சொல்ற இடத்துல உக்காந்து பயணிக்க எனக்கு இஷ்டமில்லை சார்... அவங்க உக்காரட்டும்..." என்றபடி எழுத்து பேருந்தைவிட்டு இறங்க, "சார்... சார்... முன்னால சீட்ல உக்காருங்க சார்... அடுத்த பஸ் இருபது நிமிஷம் ஆகும் சார்...' என கண்டக்டர் முதுகுக்குப் பின்னே கத்திக் கொண்டிருந்தார்.

என்னடா இவன் சீட் மாறி உக்காந்தா என்னன்னு நீங்க யோசிக்கலாம்... ஒரு பெரியவர் வந்து தம்பி எனக்கு சன்னல் பக்கம் உக்காந்தாத்தான் வாந்தி வராது என்றாலோ... சன்னல் சீட்டா இருந்தா குழந்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வருவான் அழமாட்டான் என்றாலோ... மாறிக் கொடுப்பவன்தான் நான்.. ஆனால் சீட் இருக்கும் போது வீம்புக்குன்னே வந்து நிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இறங்கிப் போவதில்லை... அது என் குணமும் இல்லை.

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது... ஒரு சில இருக்கைகள் தவிர மற்ற இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகே காலியாக இருந்தது. 'யாராச்சும் வந்து உக்காந்துட்டா தேவலாம்... இல்லேன்னா எதாச்சும் லேடீஸ் வந்தா மாறி உக்காருங்கன்னு சொல்லுவானுங்க... அப்புறம் சண்டை போட வேண்டி வரும்' என்று நினைத்தபோது ஒரு பெரியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவருக்கு 70 வயசு இருக்கும். என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, டிவியில் மருது படம் ஓட ஆரம்பித்தது.

படம் பார்க்கும் எண்ணமின்றி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

"என்ன தம்பி... படம் பிடிக்கலையோ... வெளியில பாத்துக்கிட்டு வாறீக...?" என்றார் பெரியவர்.

"பாத்த படம்தான் ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது... அதான்"

"இப்ப எல்லாப் படமும் அப்படித்தானே இருக்கு..." என்றவர் டிஏஎஸ் பட்டணம் பொடி பட்டையை இடைவாரில் இருந்து எடுத்தார். "தூக்கம் வராம இருக்க பொடிப் போடுவேன்... உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே..." என்றார்.

"பிரச்சினையில்லை..." என்றதும் கொஞ்சம் பொடியை விரலால் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென்று உறிஞ்சினார்.

அவர் கையை உதறியபோது எனக்குத் தும்மல் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் நிஜாம்லேடி புகையிலை பாக்கெட் எடுத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து உருட்டி, வாய்க்குள் அதக்கிக் கொண்டார்.

அதன்பிறகுதான் அவரின் ஆட்டம் ஆரம்பமானது...

பேருந்து ஏதாவது ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதெல்லாம் என் மீது படுத்து வெளியே எச்சிலை துப்ப ஆரம்பித்தார். வாய்க்குள் எச்சிலோட கொதகொதவென பேச ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது பெரிய மனுசன் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

திருமயம் தாண்டியது மெல்ல தோள் சாய்ந்தார்... தட்டி விட்டுப் பார்த்தும் மறுபடியும் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தார்.... மெல்லிய குறட்டையோடு....

நான் எப்போதும் என்மீது சாய்ந்து தூங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அது எனக்குப் பிடிப்பதுமில்லை... கோபம் தலைக்கேறினாலும் பெரிய மனிதர் என்பதாலேயே அவரை தட்டித் தட்டி விடிவதோடு நிறுத்திக் கொண்டேன்.

புதுக்கோட்டை போவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. 'தம்பி உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேனோ...?' என்று சிரித்தபடி அங்கு இறங்கினார்.

இப்போது பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஆயா வந்து அமர்ந்தது... கையில வேற வெத்தலைப் பெட்டி வச்சிருக்கதைப் பார்த்ததும் ‘ஆஹா புதுக்கோட்டை வரை புகையிலை பார்ட்டி... இனி வெற்றிலை பார்ட்டி இன்னைக்கு யார் முகத்துல முழிச்சமோ தெரியலை’ என்று நினைத்த எனக்குள் பக்கத்து வீட்டு புஷ்பா வந்து சிரித்தாள்... சேச்சே... புஷ்பாவைப் பார்த்துட்டுப் போனா அன்னைக்கு சக்ஸஸ்தான் என நினைத்துக் கொண்டேன்... காரணம் அவ நம்ம ஆளாச்சே.

சரி சன்னலோரமா ஒண்டிக்க வேண்டியதுதான் என சன்னலோடு ஐக்கியமாக...

பேருந்தின் வேகத்தில் காற்றுத் தாலாட்ட...

தூக்கம் மெல்லக் கண்களை அணைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தேன்...

என் தலை மெல்ல அருகிலிருந்த ஆயாவின் தோள் சாய்ந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p280.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License