இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அப்பா... அம்மா... அட்வைஸ்...!

‘பரிவை’ சே. குமார்


நான் திவாகர்... வயது 27.

வேலை தேடிக்கொண்டிருக்கும் முதுகலைப் பட்டாதாரி. கிடைக்கும் வேலையை விட விரும்பும் வேலைதான் முக்கியம் என்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

மற்றபடி என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. என்னைப் போல் தண்டச்சோறுகளான நண்பர்களின் சங்கமத்தில் தெருமுனை டீக்கடையே பெரும்பாலான நேரங்களை விழுங்கியது. சிகரெட்டும் டீயுமே எங்கள் சங்கமத்தில் அதிகம்.

மாலைவேளைகளில் பெண்களைக் சைட் அடிப்பதும் கேலி செய்வதும் உண்டு. இதைச் சொல்வதில் எனக்கு எப்பவும் வெட்கமோ வருத்தமோ பயமோ இல்லை. இளைஞன் ஒருவன் பெண்ணைப் பார்க்கவோ கேலி பேசவோ செய்யவில்லை என்றால்தான் யோசிக்க வேண்டும்... அவன் இளைஞன்தானா என்பதை... இன்று இளைஞிகள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது இல்லையா..?

"இப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்குத் திரியிறதா உத்தேசம்...?" அப்பாதான் கேட்டார்.

"வேலை கிடைக்கும் வரை..." படக்கென்று சொன்னேன்.

"வேலை கிடைக்கும் வரை.. சரித்தான்... இந்த வேலைக்குத்தான் போவேன்னு நின்னா எப்படிக் கிடைக்கும்... கிடைக்கிற வேலையில ஏறிக்கிட்டு அப்புறம் நினைக்கிற வேலைக்கு முயற்சிக்கணும்..."

"அப்படியெல்லாம் ஏறிட்டா... அப்புறம் விருப்பப்படுற வேலையைப் பிடிக்க முடியாது... உங்கள மாதிரி நாற்காலிய தேய்ச்சிக்கிட்டு குப்பை கொட்ட வேண்டியதுதான்..."

"என்ன செய்ய... அன்னைக்கி நானும் படிச்ச படிப்புக்கு வேலை வேணுமின்னு உன்னைய மாதிரி ஊரு சுத்தியிருந்தா... எனக்குப் பின்னால இருந்த நாலு பேரைக் கரை சேர்த்திருக்க முடியாதே... நாற்காலியத் தேய்ச்சித்தானே நாலு பேரைக் கரை சேர்த்தேன்... உங்க மூணு பேரைப் படிக்க வச்சேன்..."

"இப்ப எதுக்கு உங்க புராணமெல்லாம்...? யார் கேட்டா அதை...? திரும்பத் திரும்பக் கேட்டுப் புளிச்சிப் போச்சு…" வாய்க்குள் முணங்கினேன்.

"புராணம் இல்லை... வாழ்க்கைதான்... உனக்குப் பின்னால ரெண்டு பொட்டப்புள்ளைங்க இருக்காங்க... ஊரு சுத்துறதால ஒண்ணும் ஆகப் போறதில்லை... டீக்கடைக்காரன் கூட காசு கொடுத்தாத்தான் சிகரெட்டும் டீயும் கொடுப்பான்.... அதைப் புரிஞ்சிக்க..."

"விடுங்க நீங்க... அவன் விருப்பப்படி வேலை கிடைக்கும்... டேய் ஏண்டா அப்பாக்கிட்ட வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... போ... போய் குளிச்சிட்டு சாப்பிட வா..."

அம்மா இடைபுக, நான் நகர்ந்தேன்.



"ஆமா... இப்படியே ஜாமீன் வாங்கியே அவனைக் கெடுத்துடு... சிகரெட் பிடிச்சி உதடெல்லாம் கருத்துப் போயிக் கிடக்கு... நேத்து பார்ல தண்ணியப் போட்டுட்டு சலம்பல் பண்ணியிருக்கான்... என்னோட வேலை பாக்குற ஒருத்தன் பார்த்துட்டு வந்து சொல்றான்... அதையெல்லாமா கேட்டேன்.. அப்படிக் கேட்டிருந்தா இந்நேரம் என்னாயிருக்கும்... தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை திட்டக்கூடாதுன்னுதான் வேலை விசயமாக் கேட்டேன். என்னவோ பண்ணச் சொல்லு... சின்னப்புள்ளையில அவன்தான் சிகரெட் பிடிக்காதீங்கப்பான்னு என்னைத் தடுத்தான்... நான் விட்டுட்டேன்... இன்னைக்கு அவன் அதைச் செய்யிறான்... நான் சொன்னா விடவாப் போறான்... வேலைக்குப் போனா இந்த வெத்துச் சகவாசமெல்லாம் குறையும்... குடி, சிகரெட்டு, பொண்ணு புள்ளைகளைக் கேலி பேசுறது எல்லாம் குறையும்... இருக்கிறத விட்டுட்டுப் பறக்குறதுக்கு ஆசைப்பட்டா எப்பக் கிடைக்கும்...? சொல்லு... போ... போயி உன் சீமந்த புத்திரன் குளிச்சிட்டு வந்ததும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பு... மாநாட்டுக்கு லேட்டாயிரும்..."

என்னைப் பற்றித்தான் பேசுவாருன்னு தெரியும் என்பதால் குளிக்கப் போனவன் "அம்மா..." எனக் கத்தினேன்.

"என்னடா..." என்றபடி உள்ளே வந்தாள் அம்மா.

"என்ன எனக்குப் பண்ணுன உபதேசத்தோட தொடர்ச்சியா... இப்ப என்ன வயசா ஆயிப்போச்சு... கிடைச்ச வேலைக்குப் போன்னு குதிக்கிறாரு... சும்மா சும்மா கத்தக் கூடாதுன்னு சொல்லி வையி..."

"அவரு உம்மேல உள்ள பாசத்துலதானே பேசுறாரு... நீ சிகரெட்டு... தண்ணியின்னு திரியிறதைப் பார்த்துட்டு பல பேரு அவருக்கிட்ட சொல்லியிருக்காங்க... உனக்கு அசிங்கம் தெரியலை... ஆனா அவருக்கு அது அசிங்கம்தானேடா... அதெல்லாம் எங்கிட்டதானே புலம்புறாரு... உங்கிட்ட இதுநாள் வரைக்கும் எதுனாச்சும் கேட்டிருப்பாரா சொல்லு..."

"அம்மா நீயுமா...?"

"இந்த வயசு... எதையும் கேக்கக் கூடாதுன்னு ஒரு வீராப்போட சுத்துற வயசு... யார் என்ன சொன்னாலும் அது கடுப்பாத்தான் இருக்கும்... அதுவும் அட்வைஸ்ன்னா... சொல்லவே வேண்டாம்... சொல்றவங்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கணும் போலத் தோணும்... நாங்களும் இதைக் கடந்து வந்தவங்கதான்..."

"அம்ம்ம்மா... ஆளை விடு... அந்தாளு பரவாயில்லை போல... நான் குளிச்சிட்டு வாறேன்... சூடா இட்லி அவிச்சி வையி..." அங்கிருந்து நகர முயன்றேன்.

"இருடா... எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் உங்கப்பா சிகரெட் பிடிப்பார்ன்னு எனக்குத் தெரியும்... அதுவும் அவர் ஒரு ஜெயின் சுமோக்கர் தெரியுமா...? ஊதித் தள்ளுவாரு... எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்... இது ஆபீஸ் டென்சனைக் குறைக்க... இதை மட்டும் விடச் சொல்லாதேன்னு மறுத்திட்டாரு... ஒரு பொண்ணுக்குப் புருசன் ஆசையா பக்கத்துல வரும் போது, பிடிக்காத சிகரெட் வாசனையும் சேர்ந்து வந்தா எப்படியிருக்கும்... அதையும் பொறுத்துக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தினேன்... நீங்க மூணு பேரு பிறந்தீங்க..."

"ஐயோ அவரு சுயபுராணம் முடிஞ்சி... இப்ப உன்னோட புராணமா... ஐயோ... ஏம்மா... இப்படி மாத்தி மாத்திக் கொல்றீங்க..." கடுப்பானேன்.

"பேச விடுடா... சும்மா சும்மா குறுக்கப் பேசாம..."

"இப்ப இதுக்கு என்ன அவசரம்... மெதுவா உன்னோட சுயபுராணத்தைச் சொல்லலாம்..."

"அவசியமிருக்கு... நான் சொல்லி விடாத சிகரெட்டை... அப்பா சிகரெட் நாத்தம் பிடிக்கலைன்னு சின்னப் பிள்ளையில நீ சொன்னதால... எம்மகனுக்குப் பிடிக்கலையாம்ன்னு சொல்லி... விட்டொழிச்சவரு உங்கப்பா... இப்ப நீ சிகரெட் பிடிக்கிறியே... அது அவருக்குத் தெரிஞ்சிருந்தும் உங்கிட்ட கேட்கலை... கண்டிக்கலை... அப்படி கேட்டாலும் கண்டிச்சாலும் நீ கேக்கப் போறதில்லை... கண்டிப்பாக மல்லுக்கு நிப்பேன்னு தெரியும்...ம்... சரி... எனக்காக இல்லேன்னாலும் உங்கப்பாவுக்காக... அவரோட மனசுக்காக... இதையெல்லாம் குறைச்சிக்க..."

"பிரசங்கம் முடிந்ததா...? நான் குளிக்கப் போகலாமுல்ல..." என நகர்ந்தேன்.

"டேய்..."

"ஐய்யோ இன்னும் என்னம்மா இருக்கு... சண்டேயும் அதுவுமா காலங்காத்தால புருஷனும் பொண்டாட்டியும் அட்வைஸ் பண்ணிக் கொல்றீங்களே... என்னன்னு சொல்லும்மா... எனக்கு வேலையிருக்கு..."

"ஆமா... உன் தங்கச்சி பிரண்ட் ராதிகாவை... அதான்டா நம்ம லட்சுமி மக... அவளைக் ரொம்ப மோசமாக் கேலி பண்ணுனியாம்... நேத்து வந்து ஒரே அழுகை... சொல்லி வைங்க ஆண்டின்னு... ஏன்டா..."

"அழுதாளாக்கும்... எல்லாரையும்தான் கேலி பண்றோம்... எல்லாரும் வீட்டுக்கு வாராளுகளா என்ன... ஜஸ்ட் லைக் ஜாலியா எடுத்துக்கிட்டுப் போவேண்டியதுதானே... இனிமே வந்தான்னா உன்னையவே எம்மருமகளாக்கிக்கிறேன்னு சொல்லு... அப்புறம் கம்ப்ளைண்ட் கொடுக்க வரமாட்டா..." சிரித்தபடி சொன்னேன்.

"அப்படியும் நடக்கலாம்... யாரு கண்டா..."

"அந்த அடங்காப் பிடாரியா... ஆளை விடு தாயி..." இதற்கு மேல் நிற்கக்கூடாதென வேகமாகப் பாத்ரூமிற்குள் ஓடினேன்.

குளித்து... சாமி கும்பிட்டி... திருநீறு இட்டு... அம்மா கொடுத்த ஆவி பறக்கும் இட்லியை காரச்சட்டினியோடு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.

வாசலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்க்காமல் செல்ல நினைத்துத் தலையைக் குனிந்தவாறு வாசலுக்கு வந்தேன்.

"என்ன மாப்ள எதாவது வேலை கீலை கெடச்சதா...?" அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அவரின் நண்பர் சாம்பவசிவம் மாமா சப்தமாக கேட்டதுடன், நான் கேட்காமலே "எங்க வனிதாவுக்கு கூட விப்ரோவுல வேலை கிடைச்சிருச்சு.." என்றார் மகிழ்வோடு.

நான் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் "நிறைய வேலைக்கான இண்டர்வியூ வருதுப்பா... போன வாரம் கூட ராம்கோவுல இருந்து இண்டர்வியூக்கு கூப்பிட்டிருந்தாங்க... கிடைச்ச வேலையை விடப் பிடிச்ச வேலையா அமைஞ்சா அவனோட பியூச்சர் நல்லாயிருக்கும் பாரு... அதான் அவசரப்பட வேண்டான்னு நினைக்கிறோம்... அவன் எதிர்பார்க்கிற வேலை கிடைக்காமலாப் போகப் போகுது..." அப்பா பேசிக் கொண்டே போக, நான் பதில் பேசாது வண்டியை எடுத்தேன்.

டீக்கடையில் டீயுடன் சிகரெட்டையும் நீட்டினான் மணி... ஏனோ சிகரெட்டைத் தவிர்த்தேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p285.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License