இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

சுருங்கிய உலகம்

நாங்குநேரி வாசஸ்ரீ


விஸ்வநாதன் தாத்தாவும் செண்பகம் பாட்டியும் சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். பேரனைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியை அக்கம் பக்கத்து வீடுகளில் ஒரு வாரமாகப் பகிர்ந்து கொண்டு விட்டார்கள்.

காலையில் கோவில் சென்று திரும்பிய தாத்தாவிடம், ‘கோவில் குருக்களிடம் சொல்லிண்டாச்சா’ என விசாரித்த பாட்டி, இன்னிக்கு எதிர்த்தாத்து லல்லி (லலிதா) சாப்பிடச் சொல்லியிருக்கா. சப்பாத்தியும் பருப்பும் விமானத்துக்கு ஒரு பார்சல் கட்டிக் குடுத்துடுவா என்றாள்.

சரி சரி 11:30 க்கு தயாரா நிக்கணும். மேலாத்து சண்முகம் சார்வாள் அவர் கார்ல ஏர்போர்ட்க்குக் கூட்டிண்டு போவார். இது தாத்தா.

இப்படி விமரிசையாகக் கிளம்பி விமானம் உயரக் கிளம்பியவுடன் பாட்டி பேசத் தொடங்கினாள்.

‘உலகம் எவ்வளவு சின்னது பாத்தேளா. திருச்சிலேந்து கெளம்பி டில்லி போய்ச் சேர மூணு மணி நேரந்தான் ஆறது. மதியம் இங்க சாப்பிட்டுட்டுக் கெளம்பினா சாயங்காலம் காபி குடிக்க அங்க போய்டலாம். எல்லா மனுசாளயும் சுலபமா சந்திக்க முடியறது’ என ஆரம்பித்து, தங்களது ஒன்பது வயதுப் பேரன் என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பான் எனப் பேச்சு திசை மாறியது.

விமான நிலையத்திற்குத் தங்கள் மகன் சுரேஷூடன் பேரன் கார்த்திக்கும் வந்திருந்ததால் ரெட்டிப்பு சந்தோஷம் பாட்டி தாத்தாவுக்கு. வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தன் விளையாட்டுச் சாமான்களைக் காண்பிக்க ஆரம்பித்தான் பேரன். சிறிது நேரம் விளையாடிய பின், அவனை அழைத்துக்கொண்டு கீழிறங்கி நடந்து கொண்டே பேரனிடம் பேச ஆரம்பித்தாள் பாட்டி.

இங்க மொத்தம் எத்தனை வீடுகள் இருக்கு?

நூத்தருபது பாட்டி, நாம இருக்கற பிளாக் ‘பி’ ல மட்டும் இருபது. அப்டி எட்டு பிளாக்கு இருக்கு.

ஆமா. யார் யார்கூடயெல்லாம் தினமும் வெளையாடுவ. அவா பெயரயெல்லாம் வரிசயாச் சொல்லு பாக்கலாம்.

கார்த்திக்கிடமிருந்து பதில் வராமல் போகவே, சரி உடு. நம்ம எதிர் வீட்ல உன்ன மாதிரி சின்ன பசங்க யாரும் இருக்காங்களா. இல்லன்னா மேல , கீழ...

எந்தக்கேள்விக்கும் பதில் இல்லை.

ஏண்டா கண்ணா பாட்டி போரடிக்கறேனா. ப்ரெண்ட்ஸ் கூட வெளையாடப் போணுமா...

இல்ல பாட்டி எனக்கு ப்ரெண்ட்ஸ் னு யாரும் கெடயாது. அக்கம்பக்கத்து வீடுகள்ல யார் யார் இருக்காங்கன்னு தெரியாது பாட்டி. அம்மா, அப்பா வேலைக்கு போகும்போது என்னய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு போவாங்க. பள்ளி முடிஞ்சவொடனே வேலக்கார ஆன்ட்டி என்னய வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. அதுக்கப்புறம் அவுங்க சொல்றபடிதான் நான் கேக்கணும். நான் வீட்டுக்குள்ளயேதான் வெளையாடுவேன். சாயங்காலம் அஞ்சுமணிலேந்து ஏழுமணி வர அவுங்க கண்ணுக்கெதிர சைக்கிள் ஓட்டுவேன். அவ்ளோதான் அனுமதி. அப்பா,அம்மா வந்தப்புறம் வீட்டுப்பாடம் எழுதிட்டுச் சாப்பிட்டுத் தூங்கிடுவேன்.

கேட்கக் கேட்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது பாட்டிக்கு.

வீட்டிற்குள் சென்றவுடன் முதல் வேலையாகத் தன் பிள்ளையை அழைத்துக் கடிந்து சொன்னாள் பாட்டி. கார்த்திக்குக்கு எதிர் வீடு, மேல் வீடு, கீழ் வீட்ல குடியிருக்கறவங்கள அறிமுகப்படுத்தலையா. அவனுக்கு யாரையும் தெரியலையே.

அம்மா இந்த வருசம் கார்த்திக்கோட பிறந்த நாளைக்குத்தான் எல்லாரையும் அழைக்கலாம்னு இருந்தோம். இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருசந்தானே ஆறது எனக்கும் யாரோட பெயரும் தெரியாது. நேரமில்லாததால எப்போதாது ஹலோ, ஹலோ அவ்ளோதான். இங்க நம்ப ஊர் மாதிரி கிடையாது. இந்த சொசைட்டி அலுவலகத்துக்குப் போன் செஞ்சா அவங்க நமக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் அனைத்தையும் செஞ்சுடறாங்க. பால்காரன் முதல் பழக்காரன் வரை வீட்டுக்கேக் கொண்டுவந்து கொடுத்துடறான். பக்கத்து வீட்டுக்காரங்க தயவில தான் வாழணுங்கற அவசியம் இல்லாததால யாரும் யார்கிட்டயும் ஒட்டுறவா பழகறதில்லை. பணம் இருந்தால் போதும் எல்லா வசதிகளும் வீடு தேடி வந்துடும்.

மகனின் இந்தப் பெருமிதமானப் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனாள் செண்பகம் பாட்டி. காலையில தான் உலகம் சுருங்கி விட்டதாச் சந்தோஷப்பட்டேன்.. இப்போ புரியறது. சுருங்கினது உலகம் மட்டுமில்ல. பட்டணத்து நாகரிக மனித மனங்களும் தான்.

காலையிலிருந்த உற்சாகம் குறைந்த நிலையில் இரவிற்குள் பாட்டியின் மனம் திருச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p292.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License