இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

எது சொர்க்கம்?

நாங்குநேரி வாசஸ்ரீ


எது சொர்க்கம்? உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சிறுகதையாகப் பதிவு செய்து அனுப்புங்கள். முதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம். மற்றும்... ... ...

டேய் இங்க பாருடா. பூக்கள் இதழிலே போட்டி அறிவிச்சிருக்காங்க. அடுத்தவாரம் சனிக்கிழமைதான் கடைசி நாள்.

இன்னும் ஒரு வாரம் இருக்கு. நான் எழுதப்போறேன். ஏதாவது கெடச்சா செலவுக்கு ஆகும்.

சென்னை எம்.சி.சி விடுதியில் என்னுடன் தங்கிப் படிக்கும் என் நண்பன் ரமேஷின் குரல்.

அட. போடா எதையும் யோசிக்கற மன நிலையில நான் இல்ல. அடுத்தவாரம் செமஸ்டர். அதுக்கு ஒழுங்கா படிக்கணும். ராத்திரி பஸ்ல ஏறினேன்னா நாளைக்குக் காலையில திருநெல்வேலி, அப்புறம் அங்கேந்து திருச்செந்தூர். வீட்டுக்குப் போனதிலேந்து ஒரு வாரம் படிப்பு, சாப்பாடு அவ்ளோதான். அதுதான் எனக்கு சொர்க்கம். இது நான்.

டேய் மணி. இப்ப சொன்னியே அதையே எழுதி அனுப்புடா. சரி வா. இப்ப சாப்ட போலாம். அழைத்தான் ரமேஷ்.

பக்கதிலிருந்த தமிழ் பேசும் நேபாளி வைத்திருந்த கையேந்தி பவனில் ஒரு ப்ளேட் சௌமின் சாப்பிட்ட பின்னும் திருப்தி இல்லை. நண்பனின் அறிவுரைப்படி பக்கத்துக்கடை ப்ரூட் சாட்டும் விழுங்கியாகிவிட்டது.

இரவு வார்டனிடம் பர்மிஷன் பெற்று ஆட்டோ எடுத்து பஸ் ஏறி சன்னலோர சீட்டில் அமர்ந்தவுடன் அருமையான காற்று. வாஷ் ரூம் போயிட்டு வந்திருக்கலாம். இன்னும் எட்டு பத்து மணி நேரம் உட்கார்ந்தே போக வேண்டும். சும்மா இருப்பதும் சில நேரத்தில் எரிச்சல் தான். பரவாயில்லை மனதிற்கு வேலை கொடுப்போம். நண்பன் சொன்னது போல் பயணம் முழுவதும் எது சொர்க்கம்? என யோசித்துக் காலை வீட்டுக்குப் போனவுடனே எழுதிற வேண்டியதுதான். திரும்பவும் மனசு சொன்னது ஒரு பாட்டில் மாசா குடிச்சிருக்க.

பஸ் ஹாட்சிப்ஸைக் கடக்கும்போது வாழக்காய் சிப்ஸ் வாசனை. சிறிது தூரத்திலேயே வெங்காயப் பஜ்ஜி. இது எந்த ஓட்டலோ. மனம் மட்டும் ஒருநிலைப்பட மாட்டேங்குது. அப்பதானே யோசிக்க முடியும். வெளியில் பஸ் ஹார்னைப் பொருட்படுத்தாமல் அவசரமாக குறுக்கே செல்லும். சைக்கிள் மனிதன். எது எப்படிப்போனால் எனக்கென்ன என கருமமே கண்ணாக வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர்கள். இந்த நேரத்திலும் இவ்வளவு பேர் வரிசையில் நிற்கிறார்களே. ஆச்சரியப் படுவதற்கு முன்னமே பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் தாத்தா ஆரம்பித்தார்.

இவுக ஒழுக்கமெல்லாம் சாராயம் வாங்குத வரைக்கும் தான் தம்பி. ரெண்டு சுத்து உள்ள போவுச்சுன்னா தலகீழ ஆடுவானுவ. நின்ன எடத்துல ஒண்ணுக்கு அடிச்சிட்டு கெடப்பானுக. மானங்கெட்ட பயலுவ.

ஓ.. அது சாராயக்கடையா... இந்த பெரிசு வேற நெலம தெரியாம ஒண்ணுக்க ஞாபகப் படுத்துது.



கொஞ்ச நேரமாகவே வயிறு குர்ர்... னு கத்துது. பஸ் ஏறுவதற்கு கொஞ்சம் முன்னால சாப்ட ப்ரெட் பட்டர் வேலையா இருக்கும். வயிறு வேர ஒருபக்கம் முட்டிக்கிட்டு நிக்குது. எது எப்டியோ. இப்போ எது சொர்க்கம்?ன்னு யோசிச்சிட்டே தூங்கிறணும். அப்புறம் பஸ் நிக்கும்போது பாத்துக்கலாம்.

தம்பிக்கு ஊரு எந்த ஊரு? பாத்தா நம்ம ஊரு பய போல தெரியுது. பெரிசு என்னை விடுவதாக இல்லை.

வயித்துக்குள்ள ஒரு சூறாவளியே ஓடிட்டிருக்கு. இதுல இவர் வேற. பதில் சொல்ல மனமில்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டேன். மெதுவாக வயிற்று உபாதை அதிகமாகி மூச்சே அடைக்கற மாதிரி வருது. இப்ப என்ன செய்ய...? தெரியவில்லை. பஸ் இருட்டைக் கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. பனை மரங்கள் எதிர்த்திசையில் கால் முளைத்து ஓடிக்கொண்டிருந்தன.

ஊருக்கு வெளிய வந்தாச்சு. கொஞ்ச நேரம் வயத்த இழுத்து பிடிச்சு மனச திச திருப்ப வேண்டியதுதான்.

பெருசு மூக்குப்பொடி டப்பாவிலிருந்து பொடியை இழுத்து விட்டு, “ஏன் தம்பி இப்டி கொடைஞ்சிக்கிட்டு வாரீங்க. சொகுசுப் பேருந்துல கொடுத்த காசுக்கு சீட்ட பின்னால தள்ளிக்கிட்டு அந்தால கெடந்து ஒறங்க வேண்டியதுதானே...”சொல்லிவிட்டு தன் காரியத்தை பார்க்க ஆரம்பித்தது.

டிரைவர் கண்டக்டரை அழைத்து ஏதோ சொல்கிறார். இப்போ எழுந்து விட வேண்டியதுதான். அல்லது வடிவேலு காமெடி மாதிரி டாங்க் வெடிச்சு பஸ் நாறிடும்.

நான் எழுவதைப் பார்த்த கண்டக்டர் பஸ் நிக்கட்டும் தம்பி. அதுக்குள்ள என்ன அவசரம் என்றார்.

பஸ் நிக்கப் போகுதா. ஆகா. கடந்த இரண்டு மணி நேரமாக நான் அழைத்த எல்லாக் கடவுளுக்கும் அவசரமாக ஒருமுறை நன்றி சொன்னேன்.

எங்க நின்னாலும் பரவாயில்ல. இருட்டு தானே. தள்ளி நின்னு ஊத்திட வேண்டியதுதான்.

வெளியில் எட்டிப் பார்த்தேன். பஸ் மெதுவாகச் சென்று பெட்ரோல் பங்க் அருகே நின்றது. எப்படி வெளியில் வந்தேன் எனக்கே தெரியாது.

பெட்ரோல் பங்கின் கழிப்பறை சகசோதியாய் மின்னுவது போன்ற உணர்வு. சுத்தமாக பராமரிக்கிறார்கள். கதவைத் தாளிட்டு மெதுவாக இறக்க ஆரம்பித்தவுடன் உலகமே என் வசப்பட்டது போன்ற உணர்வு.

வெளியில் வந்து கைகால்களைக் கழுவி சுற்றிலும் பார்க்கும்போது நான் வந்த பஸ் ரொம்ப அழகாகத் தோன்றியது.

தம்பி பஸ் டயர்ல காத்து செக் பண்ணுததுக்காக நிப்பாட்டினோம். சட்னு ஏறிக்கிடுங்க. கண்டக்டரின் குரல் காதுக்கு இனிமையாய்.

சீட்டில் உட்கார்ந்தவுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெரிசு எழுந்து தம்பி வாடையடிக்குதோ. துண்டு ஏதும் இருந்தா போத்திக்கிட்டு ஒறங்குங்க.

இப்போது எரிச்சல் வரவில்லை. அவருக்கு என் மீது எத்தனை பரிவு. பாசம்தான் பெருகியது.

ஒரு நிலைப்பட்ட மனத்தோடு யோசித்தேன். எது சொர்க்கம்? என...

என்னைப் பொறுத்தவரை கழிப்பறை தான்.

கழிப்பறை விசிட்டுக்குப் பின் தான் பார்ப்பது, கேட்பது எல்லாமே அழகாகத் தோன்றுகிறது. நாளை திருச்செந்தூர் போனவுடன் எழுதி அனுப்பிவிட வேண்டியதுதான். தீர்மானித்தேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p294.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License