இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

எமன் பூலோக வருகை

வாசுகி நடேசன்


எம தர்ம ராஜாவின் இராச்சியம்.

தர்பார் நடந்து கொண்டிருக்கிறது...

சித்திரபுத்த்திரன் பாவ புண்ணியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவகணங்கள் இறந்த ஆன்மாக்களை அவர்களது கணக்குப் பிரகாரம் நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த யமனாரின் நெற்றிப்பொட்டு சுருங்குவது அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

அவர் மனக் கண்ணின் முன் தராசு. அதில் உள்ள முள்ளு பாவக் கணக்கின் பக்கம் மிகவும் சாய்ந்து கிடக்கிறது.

கலி முற்றிவிட்டதா? என்னதான் பூவுலகில் நடக்கிறது? ஒரு முறை அங்கு சென்று பார்த்து வர அவர் விரும்பினார்.

உருவமா...? அருவமா...? அருவுருவமா…?

எருமையுடன் உருவமாய் உலகில் போனால்... பயத்தால் எல்லோரும் விலகிவிடுவார்கள். மரணத்துக்குப் பயப்படாத உயிர் இன்னும் பூவுலகில் பிறக்கவில்லை என்பது யமனார் கணிப்பாக இருந்தது.

அருவுருவம்… அதுவும் சரிப்படாது... மனிதனிடம் விஞ்ஞான அறிவு பிரமிக்கும் படியாகவுள்ளது. “நானும் ஆய்வுப் பொருளாகிவிடுவோமா?” யமனாருக்குப் பயமாக இருந்தது.

அருவம் தான் பொருத்தமானது. தீர்மானித்துவிட்டார். இனியென்ன பயணம்தான்…

பூலோகம், மனிதர்களின் கோட்டையாய் கிடக்கிறது. யமனார் ஒரு பாடசாலையில் வந்து இறங்கிவிட்டார்.

பெரிய அளவிலான மண்டபம் அது. மாணவர்களால் நிரம்பியிருக்கிறது. மேடையில் ஒரு பேச்சாளர்.

“தன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்”

இந்தக் குறள் எனக்கு நன்கு பிடிக்கும். இதன் பொருள் என்ன தெரியுமா? மாணவர்களே…”

ஓ... மகான் திருவள்ளுவரின் குறள் அல்லவா... யமனாரல் எங்கும் அசையமுடியவில்லை. கட்டுண்டவர் போல அவ்விடத்திலேயே உறைந்து போகிறார்.

மாணவரை ஊக்குவிப்பதற்காக அழைக்கப்பட்ட பேச்சாளர் குமாரமூர்த்தி தொடர்கிறார்.

தன்னைத் தான் விரும்புபவன். பிறருக்கு ஒரு சிறியளவில் கூடத் தீங்கு செய்யக்கூடாது என வள்ளுவர் கூறுகிறார்.

தன்னைத்தான் விரும்புபவன்... அவனைச் சுயநலவாதி என்று சொல்லுவோம். சுயநலன் தனது நலத்துக்காக மற்றவருக்குத் தீங்கு செய்யத் தயங்கமாட்டான் என்றே நாம் பொதுவாக நினைப்பதுண்டு. ஆனால், வள்ளுவர் இங்கு மிக நுட்பமான கருத்தைக் குறிப்பிடுகிறார்.

தன்னை விரும்புபவன் தனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என விரும்புவான். தனக்குத் துன்பம் தருவது பிறருக்கும் அதே அளவிலான துன்பத்தையேத் தரும் எனபதைத் தன்னை பிறர் இடத்தில் பொருத்திப் பார்த்து உண்ர்ந்து கொள்வதால், அவன் பிறருக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டான். உதாரணமாக, தனது பொருளை யாராவது களவெடுத்தால் அந்த இழப்புக்காய் ஒருவனுக்குத் துன்பம் நேருகிறது. எனவே அவன் அத்தகைய துன்பம் பிறருக்கு வரத்தக்க வகையில் நடந்து கொள்ள மாட்டான்.


“ அட... வள்ளுவன் உண்மையில் பெரும் மகான்தான். வள்ளுவனின் இக்குறள்படி நடந்தால் உலகத்தில் கெட்டவர் எவரும் இரார்... கெட்ட செயலும் நடக்காது…”

யமனாருக்குக் குதூகலம் தாங்க முடியவில்லை.

இந்த உயர்ந்த கருத்தினை உலகுக்குப் பரப்புவதற்காகவே குமாரமூர்த்திக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் போல் மனம் குறுகுறுக்கிறது.

குமாரமூர்த்தியின் ஆயுள் காலத்தினை நீடிக்கக் கூட யமனாருக்கு விருப்பம்தான். ஆனால் அது அவரால் முடியாது. விதியை மாற்றும் திறன் பரமசிவனுக்கன்றி வேறு யாருக்கும் கைகூடாததாய் இருந்தது. அதனால், வையத்துள் வாழ்வாங்கு வாழும் குமாரமூர்த்திக்கு வானுறையும் தெய்வப்பதவியை வழங்கத் தீர்மானித்தார்.

ஏனோ குமாரமூர்த்தியினைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் யமனாருக்கு தோன்றியது.

குமாரமூர்த்தி தமது மேலான பேச்சினை நிறைவு செய்தபோது மாணவர்கள் பலத்த கரவொலி செய்கிறார்கள். அக் கரவொலி பேசப்பட்ட பொருளுக்கா அல்லது மேலும் பேசி போரடிக்காமலிருந்ததற்கா என்பது தெரியவில்லை.

அதிபர் குமாரமூர்தியை அழைத்துக் கொண்டு தமது அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு அவருக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. அதன் பின் ஏதோ ஒரு கவரினையும் வழங்குகிறார் அதிபர். யமனாருக்கு அந்தக் கவருக்குள் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அருகில் சென்று உற்று நோக்குகிறார். அக்கவருக்குள் நான்கு ஐந்து ரூபாய் நோட்டுக்கள்.

ஓ… வள்ளுவமும் விற்பனைப் பொருளானதா...? யமனாருக்கு சிறிது ஏமாற்றமாய் இருக்கிறது.

குமாரமூர்த்தி காரை எடுத்துக் கொண்டு பாடசாலை வாசலுக்கு வருகிறார். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால், தெருவில் காரை ஓட்டிச்செல்வதற்கு அவர் வாசலில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த இடைநேரத்தைப் பயன்படுத்திப் பிச்சைக்காரன் ஒருவன் அவரிடம் கையேந்தி நின்றான்.

குமாரமூர்த்திக்கு வேறொரு பட்டிமன்றத்தில் பேச வேண்டியிருந்தது. வாகன நெரிசலைப் பார்த்த போது, சரியான நேரத்துக்குப் போகமுடியுமா? என்ற சந்தேகம் உண்டானது. அதனால், அவர் மனதில் ஒரு வகைப் படபடப்பும் எரிச்சலும் உண்டாகியிருந்தன. தமது மன உளைச்சலைப் பிச்சைக்கரனை வாயில் வந்தவாறு ஏசுவதன் மூலம் தீர்த்துக் கொண்டார். அவர் பிரயோகித்த வார்த்தைகள் யமனாரின் காதுகளில் இரும்பைக் காய்ச்சி ஊற்றியது போல விழுகிறது. பிச்சைக்காரனுக்கு இவையெல்லாம் பழகியிருக்கவேண்டும். அவன் முணுமுணுத்தபடி அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றான்.

“இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று” என்ற குறள் யமனாரின் சிந்தையில் வந்து போனது.

குமாரமூர்த்தி பட்டிமன்றம் நடப்பதாக இருந்த நேரத்துக்குச் சிறிது முன்பாகவே போய்விட்டார். பேச்சாளர் சிலரோடு நடுவரும் வருவதற்குத் தாமதமானதால் அரைமணித் தியாலத்திற்குப் பின்பே நிகழ்ச்சி தொடங்கியது.

இன்றைய நிலையில் வள்ளுவர் நெறி நின்று வாழ்வது கடினமானதா? இல்லையா? என்பதேப் பட்டிமன்றத்தின் தலைப்பாக இருந்தது.

குமாரமூர்த்தி வள்ளுவர் நெறி நின்று வாழ்வது கடினமில்லை என்று வாதாடினார்.

அவரது பேச்சு தலைப்போடு ஒட்டியதாகவோ, பொருளாழம் உள்ளதாகவோ இருக்கவில்லை. மாறாகப் பெண்களைக் குறை கூறுவதன் மூலம் சபையோரைச் சிரிக்க வைத்துக் கரகோசத்தைத் தட்டிச் செல்வதாகவே அமைந்தது. வந்திருந்த சபையோரும் ஆழமான கருத்துக்களைக் கேட்டுத் தமது வாழ்வை நெறிப்படுத்த வந்தவர்களாகத் தெரியவில்லை. சிறிதுநேரம் சிரித்துப் பொழுது போக்க வந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதனால், அவரது பேச்சுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகப் பட்டது.

யமனாருக்குச் சலிப்பாகவிருந்தது. ஆனாலும், தமது தீர்மானத்தைத் தானே மீற விரும்பவில்லை. அவர் குமாரமூர்த்தியைத் தொடர்ந்தார்.

பட்டிமன்றம் முடிய வெகு நேரமாயிற்று. வீடு வந்து இரவுச் சாப்பட்டை முடித்தவர் நிம்மதியாகத் தூங்குவதற்காக இரண்டு கிளாஸ் மது அருந்துகிறார் குமார மூர்த்தி. அவர் மாணவருக்கு மது அருந்துவதன் கேடு பற்றிக் கூறியது யமனார் நினைவில் வந்து போகிறது.

மறுநாள் சாவகாசமாக எழுந்து கொள்கிறார் குமாரமூர்த்தி. காலைச் சாப்பட்டை முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் முகநூலைப் பார்க்கிறார். அதில் மூழ்கியும் போகிறார்.

“என்னப்பா இண்டைக்கும் கம்பஸ்சுக்கு லேற்றா போகப் போறீங்களே...”

மனைவியின் குரலால் விழிப்படைந்தவராய் மணியைப் பார்க்கிறார். மணி பதினொன்றைக் காட்டுகிறது. இரண்டு வகுப்புகளுக்கான நேரம் கடந்திருந்தது. மாணவர்கள் காத்திருந்துவிட்டுப் போயிருப்பார்கள். அதைப்பற்றி அவர் சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர்களுக்கு வருகை தராததற்கு ஏதாவது காரணத்தைச் சொல்லிவிடலாம்... மனதுக்குள் திட்டமிடுகிறார்... ஒரு மணிக்கு துறைசார் ஒன்று கூடலுக்கு போய்வரலாம் எனத் தீர்மானித்துக் கொள்கிறார்.

கலைப்பீடத்தில் உள்ள துறைகள் சிலவற்றுக்கு விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது... பீடாதிபதி துறைகள்தோறும் விரிவுரையாளர்களைப் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தார்.

கல்வியியல் துறைத்தலைவர் என்ற வகையில் குமாரமூர்த்தியும் சில பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டியிருந்தது.

விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர்களின் நான்கு பெயர்களை துறை சார்ந்த ஏனைய விரிவுரையாளர்கள் ஏகமனதாக வழங்கியிருந்தனர். எனினும், குமாரமூர்த்தி அப்பெயர்களுடன் தாம் வழங்கும் ஒரு பெயரையும் சேர்க்குமாறு அவர்களை வற்புறுத்தினார். வேறு வழியின்றிப் பட்டியலில் ஐந்தாவதாக அப்பெயரை இணைக்க ஏனையவர்கள் இணங்க வேண்டியதாயிற்று. ஆனாலும், அவர்களில் முதலிரு இடங்களில் இருந்தவர்களே மிகவும் தகுதியானவர்கள் என்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே மற்றவர்கள் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திக் கூறியிருந்தனர்.

ஒன்று கூடலின் போது கல்வியியல் துறைக்குத் தற்சமயம் ஒரு விரிவுரையாளரையேத் தேர்ந்தெடுக்க முடியும் எனப் பீடாதிபதி கூறிய போது குமாரமூர்த்தி சிறிதும் தயங்காது தம்மால் வற்புறுத்திச் சேர்க்கப்பட்ட ஐந்தாம் நபரையே விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கும்படி பரிந்துரைத்தார். அதனால் ஏனைய விரிவுரையாளர்களிடம் உண்டாகும் அதிருப்தியை வேறுவழிகளில் சமாளித்துக் கொள்ளலாம் எனவும் கணக்குப் போட்டார்.

அவரால் பரிந்துரைக்கப்பட்ட கவிதா அவரது உறவினள் என்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவள் என்றும் கதையொன்று ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் அடிபட்டுக்கொண்டிருந்தது.

தகுதி அடிப்படையில் முதலிடத்தில் இருந்த பகீரதன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். போர் சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டவன். குடும்பத்தின் ஒரே உழைப்பளியான தந்தை செல்லுக்குப் பலியாகிவிட பகீரதனையும் அவனது இரண்டு தங்கைகளையும் வளர்ப்பதற்கு பகீரதனின் தாய் கலைமகள் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை. இன்று இரண்டு குமர் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பும் பகீரதனிடம் இருந்தது.


இத்தனையும் குமாரமூர்த்திக்கு நன்கு தெரிந்தே இருந்தது.

. தகுதி மிகக் குறைந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தகுதி நிறைந்தவரது வாய்ப்பைப் பறித்துவிட்டார் குமார மூர்த்தி. பகீரதனின் ஏமாற்றமோ அவன் அடையவிருக்கும் வருத்தமோ அவருக்குப் பொருட்டாக இல்லை. பகீரதனின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்க அவர் எள்ளளவும் முயலவில்லை.

வாய்ச்சொல் வீரனாக, சுயநலவாதியாக இருந்த குமார மூர்த்தியின் வக்கிரங்களை பார்த்த யமனாருக்குத் தலை சுற்றியது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனக் கருதினாரோ என்னவோ, இன்னும் பூலோகத்தில் இருக்கப் பிடிக்காதவராய் யமலோகம் திரும்புகிறார் அவர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p319.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License