இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

நீங்களே சொல்லுங்கள்...!

முனைவர். தமிழப்பன்


"வாங்க அத்தே" என்று நான் வாய் மூடும் முன்னரே...

"ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு அடுக்குமா இந்தக் குறும்பு.? நாம என்ன அறுத்துக் கட்டுற சாதியா?

மின்சார அடுப்பில் சோளப் பொரிகள் துள்ளிக் குதிப்பது போலச் சொற்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு என் முகத்தில் வந்து விழுகின்றன.

"என்ன செய்யறது அத்தே வேறு வழியில்லே"

"ஏன் நாங்களெல்லாம் இல்லியா, ஓர் உதவி ஒத்தாசைக்குத்தானே நாங்க இருக்கோம்!"

நான் அமைதி காக்கிறேன். உதடுகள் ஒட்டிக் கொண்டு விட்டன. முன்னர் ஓர் உதவி கேட்டுப் போய் முகத்திலடித்தாற் போலப் பேசியனுப்பிய நிகழ்ச்சி நிழலாடுகிறது.

"வந்ததுதான் வந்தீங்க. மத்தியானம் இருந்து உண்டுட்டுப் போகலாம்."

"நான் என்ன தலைவாழை இலை போட்டுச் சாப்பிடவா வந்தேன். அந்தச் சிவப்பி சொன்னா. என்னாலே நம்பவே முடியல. எதுக்கும் உன்னையே கேட்டுடலாமேன்னு வந்தேன். ஆனா நீ செய்தது அழிச்சாட்டியும் போட்டது போட்டபடியே கிடக்குது நான் வரேன்"

"வாங்க அத்தே" என்று நான் சொன்னதை வாங்கியும் வாங்காமலும் எங்கள் சின்ன மாமியார் புறப்பட்டுச் செல்ல அந்த நேரம் பார்த்து என் மகன் தேனப்பன் வர,



"பாத்தியாடி இவனை. அப்பத்தா வான்னாவது சொல்றானா பாரு. இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான். அரும்பு ஏற ஏறக் குறும்பு ஏறிப்போச்சு" என்று படிகளில் இறங்கிப் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்;

"எதுக்குத்தா இப்படி வாராதது வந்துட்டுப் போகுது"

"ஒண்ணுமில்லடா சும்மாதான் வந்தாக"

"அப்பச்சி அப்படி முடியாமக் கிடக்கையிலே கூட எட்டிப் பாராதவுக இப்ப ஏன் அள்ளித் தெளிச்சாப்லே வந்துட்டுப் போகனும்."

"நீ வா சாப்பிடுவா"

செத்துப்போன என் சொந்த அத்தையுடன் கூடப் பிறந்தவர்தான் வந்து போனவர். கூடப் பிறந்தே குடலையறுக்கறா என்று என் அத்தை சொல்லிச் சொல்லி மாய்வார்கள்.

நன்றாக வாழ்ந்த குடும்பம் எங்கள் குடும்பம் பர்மாவிற்குக் கொண்டு விற்கப்போய் ஆடிக்குத் தை ஒரு வருடம் என்று கணக்கெழுதித் "திரைகடலோடியும் திரவியம்" தேடிய குடும்பம்தான்.

குதிரை பிடிக்கவும் சமக்காளம் மடிக்கவும் கூப்பிட்ட குரலுக்கு என்னன்னு கேட்கவும் ஆளும் அம்பும் நிலமும் நீச்சும் பெட்டியடிக் கணக்குப் பிள்ளைகளும் இருந்த சுற்றுக்கட்டு வீடு. பர்மா அடைபட்டுப் போன பின் என் மாமனாரும் தேனப்பனின் அப்பச்சியும் எங்கள் பங்காளிகளைப் போல வட்டிக்குக் கொடுத்து வாங்கும் தங்கள் குலத் தொழிலையே செய்தாலும் அதன் நீக்குப் போக்குத் தெரிந்து நீச்சலடித்து ஈடு கொடுக்க முடியவில்லை. கறாராகப் பேசி வட்டிக்கு வட்டி, கிட்டி போட்டு வாங்கத் தெரியவில்லை. ஈவும் இரக்கமும் எங்களை வறுமைப்பட வைத்து விட்டது.



என் அத்தை கட்டுக்கழுத்தியாகப் போன பின்னர் என் மாமனாரும் காடுதலை வரை விரித்த நடைமாற்றிப் பேரன்மார்கள் அதில் நெய்ப்பந்தம் பிடிக்கச் சென்று விட்டார்கள். அதன் பின்னர் இருப்பதை வைத்து எப்படியோ காலத்தை ஓட்டினோம். இப்போது வந்து போன என் சின்ன மாமியார் அப்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதே இல்லை. கைப்பண்டம், கருணைக் கிழங்கு, கடிச்ச பாக்கிலே கால் பாக்கு கொடுக்காத ஈகைக் குணம், எங்காவது பார்த்தால் கூட அடுத்த சந்தில் நுழைந்து போய்விடுவார்கள். இவருக்கும் அந்த சிவப்பி ஆச்சிக்கும் ஊர் வம்பளப்பதே வேலை. ஏதாவது துரும்பு கிடைத்து விட்டால் போதும் என்ன ஏது என்று தோண்டித் துருவி எடுப்பது வரை தூக்கமே வராது அவர்களுக்கு. இருவருமே அறுத்தவர்கள். வெள்ளைச்சேலைக்குள் புகுந்து கொண்டவர்கள். நெற்றிப் பொட்டை மறைத்து நீற்றைப் பூசியிருக்கும். கழுத்தில் இரட்டை வடம் சங்கிலிகள் வளைத்துக் கொள்ள இருவருமே ஊரை வளைத்து வளைத்து வாயில் போட்டு மென்று மென்று அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தேனப்பன் அப்பச்சி ஒரு நாள் நெஞ்சு வலிக்குது என்றார்கள். உள்ளூர் மருத்துவரிடம் சென்றோம். திருச்சிக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார்.

கையில் காதில் ஏதுமில்லை, யாரிடம் கேட்டாலும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்வார்களே தவிர உள்ளன்போடு உதவக்கூடிய சுற்றமும் இல்லை; மற்றவரும் இல்லை. இருந்தது "அது" மட்டுந்தான். மஞ்சளை முடித்து மாட்டிக் கொண்டு அதைக் கழற்றி விற்றதினால்தான் "அவுகளை"க் காப்பாற்ற முடிந்தது. "அதை" விற்றதுக்குத்தான் இந்த அங்கலாய்ப்பு.

கொண்டவன் செத்துப் போனாலும் ஊர் கூடித்தான் "அதை"க் கழற்றும். அவ்வாறான "கட்டுப்பெட்டி"ச் சமுதாயத்தில் நானே கழற்றி விட்டதுதான், அவர்கள் வாய்க்கு அவல். நான் அன்று கழற்றியிருக்கா விட்டால் ஊர் கூடிக் கழற்றிப் போட்டு ஒப்பாரி வைத்திருக்கும். ஒருவரின் இழப்பை விட அவர்களுக்குச் சடங்குகள்தான் உயிர்.

கண்ணகியும் கோவலனும் என் மக்கள் என்று கவுந்தியடிகள் சொன்ன போது ஏளனமாய்ச் சிரித்த வம்புடையார் நடுவே எப்படி வாழ்வது, கற்றும் முற்றும் சொல்லம்புகளே சூழ இருதலைக் கொள்ளி எறும்பாக எப்படியோ வாழக் கற்றுக்கொண்டு விட்டேன். இருந்தாலும் அடுத்தடுத்து காட்டும் பளிங்காகச் சில வேளை என் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.



இருளாகிய சடங்கு விலக எழுந்து வந்த பெரியார் போல இளநிலா வானில் உலா வர தேனப்பன் அப்பச்சி இல்லம் வந்து சேர இரவுப் பணிகள் தொடங்கி முடிகின்றன.

யாரிடம் மறைத்தாலும் அவுகளிடம் மட்டும் எதையும் மறைக்க முடியாமல் நான் திண்டாடிப் போவதுண்டு. அப்படியொரு "பாரதி"ப் பார்வை.

"என்ன இன்று என்னமோ நடந்திருக்கிறதே"

"ஒண்ணுமில்லே”

பெண்கள் ஒண்ணுமில்லே என்றாலே ஏதோ ஒன்று இருக்குது என்றுதான் பொருள். இதை நான் சொல்லவில்லை ஆத்தா, பரணிக்கோர் சயங்கொண்டார்தான் சொல்கிறார்.

"போதுமே உங்கள் புலமைப் புளுகு"

கண்ணை மூடிக் கொஞ்ச நேரம்.

"ஓ அதற்குத்தானா? எத்தனை முறை உனக்குச் சொவது, பயிருக்காகத்தான் வேலியே தவிர வேலிக்காகப் பயிர் இல்லை, வேலி இருந்து பயிர் இல்லாவிட்டால் என்ன பயன்? வேலி பயிர் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தால் வெட்டியெறிய வேண்டியதுதான். அதைத்தானே நீ செய்தாய்."

"என்ன இருந்தாலும் நீங்க கட்டிய..."

"ஏன் அப்படி இழுக்கிறாய்? கட்டியவனைக் காக்க அவன் கட்டியதைக் கழற்றுவதில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால் நான் கட்டியதே இல்லை அது. நம் குலப்படி வாழ்வாங்கு வாழ்ந்த முதியவர் ஒருவர்தான் உன் கழுத்தில் எனக்காகக் கட்டினார். உனக்கு நினைவில்லையா?"

என் நினைவலைகள் என் "திருப்பூட்டு" நிகழ்ச்சிக்குத் திரும்புகின்றன. குதிரையில் தலைப்பாகையுடன் ஒரு முகம் தெரிகிறது. இறங்கி வருவதும் தெரிகிறது. சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பதும் தெரிகிறது.

யார் கட்டியிருந்தால் என்ன?

உறவுக்காகக் கட்டிய "அதை" அந்த உறவுக்கான உயிரைக் காக்கக் கழற்றியிருக்கிறேன். அதுவா தவறு? நீங்களே சொல்லுங்கள்...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p32.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License