இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மெழுகுதிரி

ராதாமேத்தா


சலசல என ஓடும் அந்த அருவியின் சத்தம், நடு இரவில் துல்லியமாக ராகலயம் போட்டுக் கொண்டிருக்கிறது. லயத்து வாசலில் நிலவின் நிழலில் தனிமையாக உட்கார்ந்திருந்தது அவளது உருவம்.

ஏக்கம், எதிர்பார்ப்பு, எதிர்காலத்தின் மீதான பயம் போன்ற எண்ண அலைகள் ஒவ்வொன்றாக வந்து அப்போது அவளை தீண்டி நிற்க, முழங்காலுக்குள் புதைத்துக் கொண்ட முகத்தை மேலேத் தூக்கி லயத்துக்கு வரம் பாதையைப் பார்க்கிறாள்… இருட்டு... இருட்டு... அவளது வாழ்க்கை போல் ஒன்றுமே தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை வெளிச்சம் வருமெனக் காத்திருக்கின்றாள்…

‘கண்டாக்கையா’ என்ற பெருமையோடு, இவளுக்கு எட்டு வயதான போது மலை மண்ணுக்கு உரமானார் இவளது அப்பா! தோட்டத்தில் ஒருவர் வேலை செய்தால்தான், இந்த லயம் என்ற கூடுக்குள் வாழமுடியும் என்ற நிலையில், பருவம் பிடிக்காத மூன்று பச்சிளம் கன்றுகளை எண்ணி தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாள் அம்மா ராமாயி!

கணவன் இல்லை எனத் தெரிந்ததும் புருவம் நெளிக்கும் புறம் போக்குகளின் நெரித்தல்களுக்குத் தப்பி... வயிற்றுக்காய் வாழப்பழகி... எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிடவேண்டும் என்று இரவு, பகல் பாராது பத்து ஆண்டுகளை நகர்த்தியபோதுதான் இவள் குமரியானாள். இவள் குமரியானபோதுதான்... அவள் நெஞ்சுக்குள் குத்துவலி வந்தது. வந்த குத்துவலியும் சாவுக்குத் தந்தி அடித்தது.

“ அக்கா... அம்மா போயிடிச்சே... இனி எங்களை யார் பார்ப்பா? நாங்க என்ன பாவம் அக்கா செஞ்சோம்… ஏன் எங்களுக்கு மட்டும் இப்புடிநடக்குது?” என தம்பியும் தங்கையும் இவளது காலைச் சுற்றி நின்றபோதுதான் அம்மாவின் பிரிவால் நிலை குலைந்து போயிருந்த சுகந்தி தன்சுய நினைவுக்கு வந்தாள்.

சுகந்தி, பிரபா, பிரபு, என்ற அநாதைகளின் முகவரி ஒன்று 18,16,10 என்ற வயதுகளின் அடையாளத்துடன் அந்த மேல்கணக்கில் எழுதப்பட்டது. சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் சோதனைகளின் போது தூர்ந்துபோகும் பந்தங்கள் என்பதை ராமாயியின் மரணத்தின் பின்னரான அத்தியாயம் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது. பட்டுவிட்டக் குடும்பத்தைத் தொட்டுக் கொண்டால் தொந்தரவுதான் எனச் சொந்தங்கள் ஒதுங்கிய போதுதான் சுகந்தி இந்த உலகத்தை உணர்ந்தாள்.

“அக்கா பசிக்குது.. நான் இனி பள்ளிகூடம் போகனுமா? அக்கா விளக்கேத்தலாம் பெண்ணை இல்லை..”இந்த வினாவுகளுக்கு எல்லாம் எப்படி விடைகொடுப்பது? யோசித்து... யோசித்து இதயம் கனத்த போதுதான் பக்கத்து கம்பறா வள்ளியம்மா அக்கா துணைக்கு வந்தாள்.


“பயப்படாத புள்ள நாம இருக்கோம்! நீ ஒண்ணுக்கும் யோசிக்காதே! நான் கணக்கப்புள்ளை ஐயாகிட்ட பேசியிருக்கேன். உன்பேரப் பதியச் சொல்லியிருக்கேன்! எங்களுக்குன்னு ஒரு தொழில் பரம்பரை பரம்பரையா இருக்கிறப்போ... நாம எதுக்கு அடுத்தவன் கையை எதிர்பார்த்து இருக்கனும். இப்ப உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் உதவுறன். நீ வேலைக்குப்போய் தங்கச்சி தம்பியை படிக்க வைச்சிடு… ஒண்ணுக்கும் யோசிக்காதே எதுவா இருந்தாலும் எங்கிட்ட கேளு..”

இந்த வாசகம்தான் சுகந்திக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தான் இதுவரை படிச்சது போதும் என்றாலும் தங்கச்சி தம்பியை நன்றான படிக்க வைக்க வேண்டும் என்ற உணர்வின் வெறியோடு. கூடையைத் தூக்கிய சுகந்தி ஐந்து ஆண்டுகளைக் கழித்து விட்டாள்.

எத்தனை ஏற்றங்கள் இறக்கங்கள், இந்த மலை போன்று அவள் வாழ்விற்குள் வந்த போனது… பருவங்கள் வெளிச்சம் போட்டபோதும்... தனிமையில்தானே இருக்கிறார்கள் என்ற உணர்வின் வெளிப்பாடுகள் வலை விரித்த போதும்... அவள் கொண்டிருந்த உறுதியாலும் பக்கத்து விட்டு வள்ளியம்மாவின் பக்கத்துணையாலும் அவை ஒவ்வொன்றாக உதிர்ந்து கொன்டிருந்தன, தன் நினைப்பை மறந்து தனது சகோதரங்களின் வாழ்வே தன் வாழ்வு என வாழ்ந்த சுகந்தி, பிரபாவை க.பொ.த உயர்தரம் வரையும், பிரபுவை 9ஆம் ஆண்டுக்குள்ளும் தொடர்ந்து படிக்க வைத்த களிப்பில் இருந்தாள்.

இருந்தும் இந்த இருட்டில் எதுக்காக அவள் தனிமையில் உட்கார்ந்து இருக்கிறாள்? இளமை தூறல் வீசும் ஏக்கத்தோடு சுகங்களின் வரவுகளுக்காக காத்திருக்கும் பருவத்தில் இவள் எதுக்காக காத்திருக்கிறாள், தெரியுமா?

டீச்சர் உத்தியோகத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு போன பிரபா இன்னமும் வரவில்லை அவள் வரவை எதிர்பார்த்து இந்தக் காத்திருப்பு,

‘அக்கா நான் போயி சின்னக்காவை பார்த்துட்டு வரட்டுமா?’

‘வேண்டாம்டா தம்பி... அவ வந்துடுவா…’

‘அப்புறம் எதுக்கு நீங்க இந்தப் பனியில உட்கார்ந்து இருக்கிறீங்க உள்ள வாங்க...’

ம்... அவனது அழைப்பும் நியாயமானதுதான்... ஆனாலும் மனதில் ஏதாவொரு அழுத்தம்… மெல்ல எழுந்து கீழேப் பாதையை பார்க்கிறாள்.

வெளிச்சம் பந்தம் தெரிகிறது...

‘தம்பி… அக்கா வருகுது போலத் தெரியுது. என்னாச்சோ தெரியல்ல...’ சொல்லிக் கொண்டே பந்தம் வரும் திசையைப் பார்க்கிறாள்.

அது அவர்களது லயத்து பக்கம் வரவில்லை என்பது தெரிந்தது. இதற்கு மேல் அவளால் பொறுமை கொள்ள முடியவில்லை.

‘வள்ளியம்மாக்கா… வள்ளியம்மாக்கா...’

‘என்ன பிள்ளை என்ன?’

‘பிரபாவை இன்னும் காணல்லக்கா…’

‘பஸ் ஏதும் லேட்டா இருக்கும்.. வந்துடுவா நீ பயப்படதே...’

‘எனக்கு என்னமோப் பயமா இருக்கு...’

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே... பிரபா லயப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள்.

‘இந்த பிரபா வந்துட்டுது…’

‘என்னக்கா பயந்துட்டிங்களா…. பஸ் எடுக்கிறதே பெரிய கஷ்டம்’

‘அது சரி போன விசயம் என்னாச்சு?’

‘அக்கா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு... வள்ளியம்மாக்கா எனக்கு வேலை கிடைச்சுடுச்சுக்கா’

‘நாம கும்பிட்ட தெய்வம் நம்மள கைவிடாது சுகந்தி... பாத்திய இனி என்ன உனக்கு பாரம் குறைஞ் சமாதிரிதான்…

‘வேலை கிடைச்சாலும் ஒரு சின்ன பிரச்சினையக்கா?’

‘பிரச்சினையா என்ன?’

‘நம்ம டிஸ்றிக்கில வேலைக்கான காடர் இல்ல அதனால அடுத்த டிஸ்றிக்கில போட்டிருக்கிறாங்க… போறது. வாறது தான் கஸ்டம். அதனால அங்குள்ள குவாட்டர்ஸிலதான் தங்கியிருந்து வேலை செய்யனும். அத நினைச்சாதான் கஷ்டமா இருக்கு

‘அதுல என்ன? அரசாங்க வேலைன்னா அப்புடித்தான். நம்ம தோட்டத்தில் இருந்து எத்தனை புள்ளைங்க கொழும்புக்கு போய், அங்க போடிங்கில தங்கியிருந்து வேலை செய்யுதுக! அதை எல்லாம் யோசிக்காம கிடைச்ச வேலையை பாரு’ என்றாள் வள்ளியம்மாக்கா.

‘அக்கா சின்னக்கா குவார்ட்டஸில தனியா இருக்கத்தானே பயப்பிடுது... நானும் துணைக்கு போறேனாக்கா... அங்க லைட்டு இருக்கும். அது எனக்கு படிக்கிறதுக்கு உதவியா இருக்கும் என்றான் பிரபு

‘அதுவும் நல்லதுதான் இவனையும் கூட்டிக்கொண்டு போயிடு... சனி, ஞாயிறல்ல வந்து அக்காவை பாத்ததுட்டு போறதுதானே’ என்றாள் வள்ளியம்மாக்கா.

இவர்களது உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த சுகந்தி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதவளாக யோசித்துக் கொண்டேயிருந்தாள்.

‘என்ன பிள்ளை யோசிச்சுகிட்டிருக்கிற... எல்லாம் நல்லதுக்குதான். இதுக படிச்சிருக்கு படிச்சத்துக்கு ஏத்த உத்தியோகம் செய்யத்தானே வேணும். வேலைக்குப் போய் கைநிறைய சம்பாரிக்கட்டும். நீ ராசாத்தி மாதிரி இருடி ஒன்னுக்கும் யோசிக்காமா அதுகளை அனுப்பிவை’ என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றா வள்ளியம்மாக்கா!

சிறிதுநேரம் வர தாமதமான போதும் இவர்களைப் பிரிந்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியாத சுகந்தியால்... எப்படி இந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியும் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.

என்ன செய்ய எனது உழைப்பில் எப்படிதான் அவர்களது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யமுடியும்? அவர்களது நன்மைக்காக இந்தப் பிரிவை தான் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததோடு அவர்களை அனுப்பி வைக்கத் தயாரானாள் சுகந்தி.


ஒரு கூட்டுக்குள் கூடி மகிழ்ந்திருந்த பறவைகள் சிறகுகளை விரிக்க ஆரம்பித்தன. காலங்களும் கரைந்தோடின... சிறகுவிரித்த பறவைகள் தங்கள் எண்ணக் கோலங்களை மாற்றிக்கொண்டு தத்தமது விருப்புக்கு ஏற்ப - தமது சம்பாத்தியம், தத்தமது வாழ்வு, தமது பந்தம் என அவை வேறுபட்டு நின்றன. தமக்காக ஒரு ஜீவன் தனது சுகதுக்கங்களை மறந்து தனியாக ஒரு லய அறைக்குள் தன்னை உருக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த ஜீவன் இன்னமும் இன்னமும் இவர்களுக்காகவே உருகிக் கொண்டிருக்கிறதே இதை என்னவென்பது?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p336.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License