இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பாரம்

முனைவர் பி. வித்யா


அவசர அவசரமாய்க் கல்யாணம். இவள்தான் பெண், இவன்தான் பையன் என்று பெரியவர்கள் மட்டுமே முடிவெடுத்துவிட்ட அவசரக் கல்யாணம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமலேயேப் பல திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெரும்பாலும் பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே வீட்டிற்குப் பாரமாய்க் கருதப்பட்டு, பொருட்களின் உடைமையாளர்கள் மாறுவதைப் போல, பெண்களை மாப்பிள்ளை வீட்டிற்குத் தள்ளிவிடும் சடங்கு இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. பணம் இருக்கும் பெண் பிள்ளைகள் வீடு இப்படியென்றால், இதுமில்லாத தனி ரகப் பெண்கள் நிலை இன்னும் மோசம்.

பெண் பிள்ளைகள் பணம் இல்லாததால் பல வருடப் பாரங்களாகத் தாய் தந்தையின் கண்களை உருத்துவர் போலும், குறைந்த வரதட்சணைக்கு யார் கேட்டாலும் வேகமாகத் தள்ளிவிட்டுப் பெருமூச்சு விடக் காத்திருக்கின்றனர். இதில் இரண்டாவது ரகம் ரேவதியின் வீடு. பணப்பசை சிறிது கூட இல்லாத குடும்பம்.

கூல்மாயி மகள் தெய்வாதீனமாகப் பெண் கேட்டதில் மாயியும் பேச்சியும் உச்சி குளிர்ந்து போனார்கள். பெண் கேட்டு வந்தவர்கள், “தனக்கன்குளம் நம்ம கூல்மாயி இருக்காருல்ல, அவக சம்பந்தகாரர் மகனுக்குதான் சுகன்யாவ கேக்குறாக, அவுக நல்ல வசதியா இருக்காக, நன்செய் நிலம் ஒரு ஏக்கர், சொந்த வீடு, கார் வச்சி ஜெகஜோதியா பொழக்கிறாய்ங்க. நம்ம குட்ட தவமணி வீட்டு கல்யாணத்துல ஒம் பிள்ளைய பாத்துருக்காங்க. அதான் சொல்லி விட்டாங்க. மாயி நீ என்ன சொல்ற? அவங்க நம்ம இழுத்த இழுப்புக்கல்லாம் வருவாங்க. நான் சொல்றத சொல்லிப்பிட்டேன். நீ என்னப்பா சொல்ற” என்று மாயியின் முகத்தைப் பார்த்து முடித்தார் ராமு.

முதலில் சந்தோசப்பட்ட மாயியின் முகம் இப்பொழுது சுருங்கிப் போனது.

“என்னய்யா இம்பிட்டு யோசிக்கற” என்று திரும்பிக் கேட்டார் ராமு.

“இல்ல ராமு எந்நிலம ஒனக்குத் தெரியாதா? வாய்க்கும் கைக்கும் பத்தாத பொழப்பு, நான் பொழக்கிறது. இப்படியிருக்கிருக்கும் போது, நீ சொல்ற குடும்பம் நெறைய எதிர்பார்ப்பாக... என்னால அம்புட்டும் குடுத்துப் பிள்ளய வெளியேத்த முடியாது அதான் யோசிக்கிறேன்”


“இதுக்கு எதுக்குக் கவலப்படுற நான் நிண்டு முடிச்சு வைக்கிறேன். நீ கவலப்படாத நான் பேசிப் பார்க்கிறேன்” என்ற பேரத்தில்தான் இந்தத் திருமணப் பேச்சு ஆரம்பித்தது.

மாயியிடம் பணத்தை எடுத்து எடுத்து நீட்ட கை விரசு இல்ல. ‘சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்’ ரம்யாவின் காது, கழுத்து, மூக்கு, கை, கால்களை பொத்தி திருமணம் என்பதை நடத்தவே காசு இல்லை. அத்தனைக்கும் கடன் வாங்கி, இது இப்போ என்னால முடிஞ்சது பெறகு முழுசும் என்று பல முறை பஞ்சாயத்து பேசி ஒரு வழியாகத் திருமணம் நடந்தது. மறுவீடு, ஆடிச்சீர், பொங்கச்சீர், தலத்தீபாவளி, தலப்பொங்கல் என்று வரிசையாக வந்த பணத் தேடல் மாயியின் இதயத்தை ஓட்டை போட்டு விட்டது. வீட்டிலிருந்த பெண்ணின் பாரம் தாங்காமல் கட்டிக் கொடுத்தால், கட்டிக் கொடுத்ததால் வந்த கடன் தாங்காமல் நெஞ்சைப் பிடித்து உட்கார்ந்து விட்டார் மாயி.

ஒரு வாரத்துக்குள்ள ஆபரேசன் பண்ணனும் ஒரு லட்சம் மொதல்ல கட்டணும் என்று கேட்ட இரண்டு மணி நேரத்தில், ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்ட முடியாத மாயி, மற்றுமொரு கடனா? ஏன்ற அதிர்ச்சியிலேயே போய்ச் சேர்ந்து விட்டான். எனவே ஒரு இலட்சம் வேண்டாம், ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டும் கட்டிட்டு பொணத்த எடுத்துட்டுப் போங்க என்று செய்தி வந்தது. மருத்துவமனை ஆட்களிடமிருந்து, பேச்சிக்கு பேரிடி. அவளால் எதைத் தாங்குவது, எதைச் சமாளிப்பது என்று தெரியவில்லை, குழம்பிப் போனாள்.

காட்டு வேலை தவிர எதையும் அறிந்திராத பேச்சி, எதை நினைத்துக் கவலைப்படுவது என்று தெரியாத கவலையிலேயே மூழ்கிப் போனாள். ரேவதிக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகப்போகுது, ஆனாலும் அவள் மூலம் வரும் பணப்பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையில் அவள் பிள்ளை பெறாதது பெரும் பிரச்சனையாகப் பேச்சி முன் வந்து நின்றது.

பிள்ளை இல்லை என்றதும், எந்த ஆணையும் எந்தக் கேள்வியும் இந்தச் சமூகம் கேட்பதில்லை. ஆனால் பெண்ணை என்னென்ன சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறது. ‘திருமணம் முடிந்த மறுநாளேக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். வீட்டில் என்ன விசேசம்’ என்று, அப்படித்தான் ஒவ்வொரு ஆளும் ரேவதியின் புகுந்த வீட்டில் பேசப்பேச அத்தனை மருத்துவமனைக்கும் படையெடுத்தாயிற்று, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இவை எல்லாம் அறிவியல் என்றால், அதையும் தாண்டி, அந்தக் கோவில், இந்தக் கோவில், பூஜை, வேள்வி, மந்திரம், பரிகாரம், அதையும் தாண்டி ரேவதியின் மாமனார் வீட்டு சொந்தத்தில் ஒரு பாட்டி சொன்னது சுடுகாட்டுக் காளி பூஜைக்குச் சென்று வாருங்கள் என்று, ரேவதிக்குப் பயம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. போய்த்தானே ஆக வேண்டும், மனதில் கிலி பிடித்து விட்டது என்றாலும் வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன நேரத்தில் குளித்து முழுகி, பயந்து நடுங்கிக் கொண்டேச் சென்றால், அங்கே இவள் இருநூற்று அம்பதாவது ஆள், ஊர் உறங்கும் நேரத்திலும் இங்கு பூஜை களைகட்டியிருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனாள். இவளுக்குச் சொன்னதைப் போல்தான் எல்லோருக்கும் யார்யாரோ சொல்லியிருந்தார்கள்.

உண்மையில் இத்தனை வைத்தியங்கள் பார்த்துப் பார்த்துத்தான் இப்பொழுது உடலும், ஏன் மனமும் கூட ஒரு வெறுமையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதற்கெல்லாம் செலவுகள் ஆக ஆக இந்தப் பெருந்தனக்காரர்கள் பேச்சியை பணத்திற்காகவும் சாடை பேச ஆரம்பித்தார்கள்.

“அன்னைக்கே வேணாம்டு நெனச்சேன். இப்படி பக்கிரி வீட்டுல கல்யாணம் பண்ணதுனாலதான் இன்னைக்கு எந்தத் தம்பமும் இல்ல. ஒரு பைசாவுக்குக் கூட வக்கில்லாத இடத்துல கல்யாணம் பண்ணி ஒரு புழு, பூச்சி கூட இல்ல” என்று தினமும் சலித்துக் கொண்டாள் ரேவதியின் மாமியார். அந்த பற்றி எரியும் நெருப்பில் நெய் ஊற்றி, யாக வேள்வியாய் மாற்றிக் கொண்டிருந்தாள் ரேவதியின் மாமியார்.

திடீரென இதைப்பற்றி வெறுத்துப்போன மூன்றாவது ஆண்டில் முத்தான செய்தி ஒன்று ரேவதிக்கு கிடைத்தது. தாய்மை என்றொரு தனிப்பதவி. மற்றவர் வாயை இனிப்புகளால் மூட வைக்க வந்து விட்டது. ஒரு சிறு விதைபோன்ற அதன் வடிவத்தை பார்க்கையிலே அவள் உடலெல்லாம் புல்லரித்துப் போனது. உனக்காகத்தானே இத்தனைக் காத்திருப்பு, இத்தனைக் கண்ணீர் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் ரேவதி.

சரி பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்தாள் ரேவதி. ஆனால் இப்பொழுதுதான் பிரச்சனைகள் பயங்கரமாக வெடிக்கத் தொடங்கியது. மருத்துவமனைக்கு ஆகும் செலவிற்கு அம்மாவைக் கேள் என்றாள் ரேவதியின் மாமியார். குழந்தைக்கான ஆசை மறந்து பெரும் சுமை மனசில் உந்தியது ரேவதிக்கு.

அத்தனைச் சிக்கல்களைக் கடந்து அரசு மருத்துவமனைக்கு வலி வந்து அவசரத்தில் அழைத்துச் சென்றதற்கு என்னாலெல்லாம் இங்க இருக்க முடியாது. நான் மாட்டேன் என்கிறாள் ரேவதியின் மாமியார். ஒரு பிரசவ நோவு எடுக்கும் போதும், அம்மாவின் பணக்கவலை அறிந்தே அரசு மருத்துவமனைக்கு வந்தாள் ரேவதி. அங்கும் அவளது அத்தை தனியே தவிக்க விட தனியார் மருத்துவமனை வந்ததும் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பித்தாள் ரேவதியின் மாமியார்.

பிரவச வலியில் சோர்ந்திருந்த ரேவதியை நினைத்து அவள் கணவன் செய்தி சொல்லவும், தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த அவள் அம்மா அப்படியே ஓடிவர முதலில் மருத்துவமனை பில்லைக் கட்டும்படி மாப்பிள்ளை வீட்டார் பில்லை நீட்டவும் நொந்து விட்டாள் ரேவதி. ஏன் இத்தனை பாடுகள், பெண்ணாய் பிறந்தால் இன்னும் உத்தனை பிரச்சனைகளைக் கடக்க வேண்டுமோ என்று மனமுடைந்தாள். ஒரு வேளை இத்தனை பாடுகளடைந்து எனக்குப் பிறப்பதும் பெண்ணாய் இருந்தால் என்ன செய்வது அத்தனைக் கஷ்டங்களையும் அவளும் பட வேண்டுமா? என்று யோசித்ததும் ஒரு நிமிடம் மனதினுள் எங்கோ ஒழிந்திருந்த உசிலம்பட்டி மூளை வேலை செய்தது. அவளால் இந்த வாழ்க்கையில் கடைத்தேற முடியுமா?

இல்லை என்று அடுத்த நிமிடம் மனம் தெளிவடைந்தது. பிறப்பது ஆண் என்றாலும், பெண் என்றாலும் அத்தனைப் பாடுகளையும் சொல்லி வளர்க்க வேண்டும், என்று எங்கோ ஓரிடத்தில் நம்பிக்கையின் வேர் ஊஞ்சலாட அதனைப் பற்றிக் கொண்டு பிரசவ வேதனையிலும் தெளிவடைந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவென்றே மருத்துவமனை அதிர ஓங்கிக் கத்தினாள் ரேவதி. சின்ன ரேவதி ஒன்று வாழ்வின் முதலடியிலேயே, கண்ணைத் திறந்த முதல் கணத்திலே பெண்ணாக பிறந்ததற்கோ அல்லது கருவறையென்னும் பாதுகாப்பை காண முடியுமோ என்ற அச்சத்தினாலோ அழுகையைத் தொடங்கினாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p346.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License