இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

உன் கணவனை எனக்குக் கொடு!

விஜயநிலா


அழைப்பு மணி ஒலிக்க, கதவு திறந்த தன்யா திகைத்தாள். இலேசாகப் புன்னகைத்தபடி நின்றிருந்தாள் அவள். யாரிவள்? இந்த அபார்ட்மென்ட்டில் இவளை இதுவரைப் பார்த்ததில்லையே.

அவள் உள்ளே வந்தாள். ஸோபாவில் புதைந்து கொண்டு மறுபடியூம் புன்னகைத்தாள். இந்த முறை புன்னகையில் கேலி கலந்திருந்தது.

'யார் நீங்க? புதுசா வந்திருக்கிங்களா? இங்க நான் உங்களை இதுவரை பார்த்தில்லையே?"என்றாள் தன்யா.

"இல்லை. இங்க என் ஃப்ரன்ட் இருக்கா. அவளைப் பார்க்க வரும் போது நான் பார்த்திருக்கேன் உங்களையும் உங்க கணவரையும். அது உங்க ஹஸ்பன்ட்தானே?" என்றாள். எதிரேச் சுவற்றில் தன்யாவைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டு நின்றிருந்த குமாரை.

"ஆ.. ஆமா.. உங்களைச் சந்திச்சதுல, ரொம்ப சந்தோஷம். இருங்க. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்"

"வோட்கா இருக்கா" என்றாள்.

"வ்வாட்.. என்ன? என்ன கேட்டிங்க" என்றாள் தன்யா பதட்டத்துடன்.

"லீவிட். ஒண்ணும் வேணாம் எனக்கு, அதென்ன? சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்களையும் உங்க கணவரையும் பார்த்ததிலிருந்தே என் மனசில தோன்றின விஷயம். நான் ஏன் உங்க ஹஸ்பன்ட்டை கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது. உன்னை விட நான் அழகாப் பொருத்தமா இருப்பேன் மிஸ்டர் குமாருக்கு"


திடுக்கென்றது.சட்டென்று எழுந்து கொண்ட தன்யா, ஏறக்குறைய தன் குரல் தனக்கேக் கேட்காத குரலில் கத்தினாள்.

"எழுந்திரும்மா. யூ மஸ்ட் பீ ஜோக்கிங். என்ன சொன்னே? என் கணவனைக் கல்யாணம் பண்ணிக்கறியா? எங்களுக்குக் கல்யாணமாகி ஆறு மாசமாச்சு. இந்த ஊர்லயே சந்தோஷமான தம்பதிகள்னா அது நாங்கதான்னு நினைச்சிட்டிருக்கம். குமாரை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணியிருக்கேன்"

"நானும் இப்ப லவ் பண்றதாலதான் உன் கணவனைக் கேட்கறேன் தன்யா"

"ஸ்டுப்பிட். முதல்ல போ வெளியே"

"தபாரு தன்யா. நான் எதை நினைச்சாலும் அதை அடைஞ்சேத் தீருவேன். இனி உனக்கும் உன் கணவனுக்கும் உறவுல விரிசல் உண்டாக்குவேன். உன் மேல, உன் கணவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி பண்ணுவேன். உன்னை உன் கணவனே வெறுத்து ஒதுக்குவான். அப்புறம் லைன் ஈசியா க்ளியராகிடும். நான் குமாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு.. என்னமோ சொன்னியே, அதென்ன ஆதர்ச தம்பதிகள், அந்த மாதிரி நானும் உன் கணவன் குமாரும் இருப்போம். வரட்ட்ட்டா..." என்று காணாமல் போனாள்.

கனவு போலிருந்தது. கனவுதானே. இல்லை நிஜம் என்பது அவள் போன பின்பும் அறைக்குள் சுற்றிக் கொண்டிருந்த அவளது பர்ஃப்யூம் வாசனையில் புரிந்தது.

அன்றிரவு லேட்டாக வந்திருந்தான் குமார். குடித்திருக்கிறானோ, சே.. நான் ஏன் தப்பிதமாக நினைக்கிறேன். அவள் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளவில்லையே. அவள் ஏதாவது ஆட்டத்தை ஆரம்பித்திருப்பாளோ?. வந்ததுமே லாப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

"ஹனி.. நான் சாப்பிட்டுட்டு வந்திட்டேன். நீ சாப்பிட்டு தூங்கு"

"என்னங்க, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்"

"எதுவா இருந்தாலும் நாளைக்குச் சொல்லு. நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன். ப்ராஜக்ட் ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. க்ளையன்ட் ஆளுங்க எப்ப வேணும்னாலும் ஆன்லைன்ல வந்து நோண்டுவாங்க"

தன்னை அவன் அவாய்டு பண்ணுகிறான் என்று புரிந்தது. இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாளைக்குச் சொல்லிக் கொள்வோம் என்று போய் படுத்துக் கொண்டாள். வெகு நேரம் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போய் காலையில் தாமதமாக எழுந்த போது அருகில் அவன் இல்லை. குமார் காலையிலேயேக் கிளம்பிப் போயிருந்தான்.

என்ன செய்யலாம்?

அந்தப் பெண்தான் ஏதாவது செய்திருக்கிறாளா? இல்லை, நிஜமாகவேப் பிசியாக இருக்கிறானா? போன் செய்து பேசலாமா, இல்லை மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கத்துவானா?

மொபைல் அழைத்ததும் எடுத்தாள்.

"நான்தான். அன்னிக்கு என் பேரைக் கூட கேட்டுக்காம விட்டுட்டியே பேபி. நான்தான் சொப்னா பேசறேன். சொல்லிப்பாரு சொ..ப்..னா.. இனிப்பா இல்லை? இதோட குமாரையூம் சேர்த்து சொல்லிப்பாரு சொப்னா குமார். செம்ம ஸ்வீட்டா இருக்கும்"

"இப்படி அடுத்தவங்களோட பொருளுக்கு ஆசைப்படறியே, உனக்கு வெட்கமா இல்லை?"

"உண்மையைச் சொல்லனும்னா "இல்லை" எனக்கு குமாரைப் பிடிச்சிருக்கு. குமாரை என் கூடவே வைச்சிக்கனும்னு நினைச்சேன். இப்ப அதுக்கான வேலையை துவங்கிட்டேன். நேத்தே என்னோட குமார் உன்னை கத்தரிச்சிருப்பாரே. லாப்டாப்புக்குள்ள தலையைக் குடுத்துக்கிட்டு பிசியா இருக்கேன்னு கடுப்படுடிச்சிருப்பாரே.. சரியா... இப்ப உன்னைப் பத்தி நம்பற மாதிரி சந்தேகத்தைக் கிளப்பி விடப்போறேன். கூடிய சீக்கிரமே குமார் உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு வந்திருவான்."

"ச்சே என்ன பொண்ணு நீ"

"ஏன் தமிழ்ப்பொண்ணுதான். நான் டைனமிக்கா இருக்கேன். நீ சும்மா டிவி சீரியல் கதாநாயகி மாதிரி புலம்பலும் அழுகையுமா இருக்கே. எனக்கே உன்னைப் பிடிக்கலை. குமாருக்கு எங்கே பிடிக்கப் போகுது?"

"என்ன இருந்தாலும், குமார் எனக்கே சொந்தமானவர். அவர் என்னோட கணவர். அடுத்தவர் பொருளை நீ அபகரிச்சா, உன்னோட பொருளை அடுத்தவருக்கு ஒருநாள் இல்லைன்னா தந்துதான் ஆகணும்"

"என்ன சாபமா? அதெல்லாம் கண்ணகி காலத்தோட சரி." என்று சிரித்துக் கொண்டிருந்தாள் சொப்னா.

மொபைலை வீசி எறிந்தாள் தன்யா. ச்சே. இப்படி அபகரிக்கிறாளே. பொண்ணா இவ. இவளுக்கு இங்கிதமே இருக்காதா? இதை யார்கிட்ட சொல்றது. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதால, எனக்கு எங்க வீட்டுல சப்போர்ட் இல்லை. குமார் வீட்டுல போய் சொல்லி ஹெல்ப் கேட்கலாமா...

தன்யா எதையும் செய்ய முடியவில்லை.

சொப்னா அடுத்தடுத்த கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தாள். குமார் அவளை வெறுக்க ஆரம்பித்தான். தன்யாவுக்கு வேறு யார் கூடவோ தொடர்பு இருப்பதாக நம்பினான். அப்புறம் ஒரு நாள் டைவர்ஸ் பேப்பர்களைக் கொண்டு வந்து நீட்டினான்.

அடுத்தவங்க பொருளை அபகரிக்கற அந்த சொப்னா நிச்சயம் அவளோடதை ஒருநாள் தரத்தான் வேண்டியிருக்கும் என்ற நினைப்புடன் கண்ணீர் மல்கக் கையெழுத்திட்டாள்.

அப்புறம் ஒரு நாள் -

மழை நேரத்தில் விரைந்த அந்தக் காரில் முத்தங்கள் சிதறிக் கொண்டிருக்க காரை செலுத்திக் கொண்டிருந்த சொப்னா ஒரு கையால் தன் அருகே அமர்ந்திருந்த குமாரை இழுத்து வளைத்து இன்னொரு தரம் அழுத்தமாக முத்தமிட முயன்ற போது எதிரே ஒரு டாங்கர் லாரி வர.. தான் சீட் பெல்ட் போட மறந்திருப்பதை உணர்ந்து இன்னொரு கையால் சீட் பெல்ட்டைத் தேட அதற்குள் கார் தூக்கி எறியப்பட்டது.

சீட்பெல்ட் அணியாததால் ஏர்பேக் விரிந்து கொள்ளாமல் மௌனமாய் நின்று விட நெற்றிப்பொட்டில் தாராளமாக அடிபட்டாள் சொப்னா.

உன்னுடையதை ஒரு நாள் நீ அடுத்தவருக்கு கொடுத்துத்தான் ஆகனும்.

கண்ணீர் மல்க நின்றிருக்கும் தன்யா அவள் மனதில் ஃப்ளாஷ் அடித்தபடி வந்து போனாள்.

கையெழுத்திட்டுக் கொடுத்தான் குமார்.

"ஸாரி..இப்பதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாக ஒரு வாரம் கூட ஆகலைங்கறாங்க. வெரி பிட்டி சீட்பெல்ட் போடலை. இப்ப பாருங்க அடிபட்டு ரெண்டு நாள் கோமால இருந்து இப்ப ப்ரைன் டெட் ஆகிட்டாங்க சொப்னா. அவங்களோட ஆர்கன்களை எடுத்து அடுத்தவங்களுக்கு தர்ற மாதிரி ஆகிப்போச்சு"

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p351.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License