இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

எனக்குள் கேட்ட குரல்

விஜயநிலா


எப்படி, எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது? என்று தெரியவில்லை. நான் பாட்டுக்கு காரைச் சிக்னலில் நிறுத்திக் கொண்டு க்ளாடி டீபஸியை சன்னமான டெஸிபல்களில் வழிய விட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு குரல் என் உள்ளேக் கேட்டது. செலீன் டியோன் மற்றும் ரேத்தா ஃப்ராங்க்ளின் ரெண்டு பேரையூம் சரிவிதமாக மிக்ஸ் செய்த மாதிரி சில சமயங்களில் அந்தக் குரல் கேட்கும்.

“இன்னும் எத்தினி நாட்கள்தான் இதே மனைவியுடன் வாழ்வாய், உனக்கு அலுக்கவில்லையா? அவள் வேண்டாம். அவளைக் கொன்று விடு”

பச்சை விழுந்த பின்னும் அப்படியே உறைந்திருந்தேன். யாமினி என் மனைவி. அதாவது என் முழுவதுமானவள். என்னை முழுக்க முழுக்க உடலாலும் உணர்வாலும் நிரப்பியவள். கல்யாணமாகி ஆறு வருடம்தான் ஆகிறது. செவன் இயர்ஸ் இட்ச் கூட இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் ஏதோ ஒரு குரல் எனக்குள் கேட்கிறது. அவளை கொல் என்கிறது.

ஆபீசுக்கு வந்தமர்ந்த பின்னரும் அதேக் குரல். ரெஸ்ட் ரூம் சென்றாலும் கஃப்டேரியாவில் போய் கருப்புக் காப்பி வாங்கி உதட்டருகே வைத்தாலும் அதேக் குரல். அதே வார்த்தைகள்.

அவளைக் கொன்று விடு.

யாமினி நல்லப் பெண். அரேஞ்ச்டு மேரேஜ்தான். ஆனால், அவளை முன்னரேச் சந்தித்துக் காதல் செய்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டும் என்கிற அளவிற்கு வொர்த் ஆனவள்.


இப்படி எனக்குள் குரல் கேட்பது தெரிந்தால் என்ன நினைப்பாள்? நான் எதற்காக யாமினியை, என் மனைவியை, என்னில் பாதியைக் கொல்ல வேண்டும்? யாராவது என்னை ஏதாவது ப்ரைன் ட்ராக் செய்கிறார்களா? ச்சே... அதெல்லாம் படங்களில்தான் நடக்கும். இது ஏதோ மனோவியாதி என்றதும் எனக்கு வியர்த்தது. லட்டு கொடுத்து ஆளைத் துரக்கும் மந்திரவாதி மாதவன் போல யாரையூம் நான் சமீபத்தில் சந்தித்திருக்கவில்லையே.

அப்புறம் சோஷியல் மீடியாவில் நரேந்திரனைப் பார்த்ததும்தான் நிம்மதியாக இருந்தது. என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்தவன். இப்போது டாக்டராக இருக்கிறான். டாக்டர் என்றால் நீங்கள் நினைப்பதுதான். சைக்யாட்ரிஸ்ட். ஆனால், ஆன்டனிஹாப்கின்ஸ் போல எல்லாம் பயமுறுத்தலாக இருக்க மாட்டான். அளந்து பேசுவான். அமைதியாக இருப்பான். எட்ட நின்று பார்த்தால் யோகா குரு போல இருப்பான். அவனிடம் சொல்லி அப்பாய்ன்மென்ட் கேட்டபோது சிரித்தான்.

“சிரிக்காதடா பாவி. நான் ரொம்பக் குழப்பத்துல இருக்கேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அந்தக் குரல் சொல்றதைக் கேட்டு நான் யாமினியை போட்டுத் தள்ளினாலும் பண்ணிடுவேன் போல. நான் ஏதாவது விஜய்சேதுபதி மாதிரி மாறிக்கிட்டிருக்கேனா. எதுக்கும் நலன்குமாரசாமி இல்லைன்னா தியாகராஜன் குமாரராஜா போன்ற ஆட்களைக் கேட்டு விடுவோமா?. எனக்கு ஏதாவது ஆயிருச்சா..”

நரேந்திரனை நேரில் சந்தித்த போது, நான் சொன்னது முழுக்கக் கேட்டான். கேட்டு விட்டு அமைதியாகப் பார்த்தான். ஏதாவது யோகா கீகா பண்ணச் சொல்வானா?

“இது மென்டல் பிராப்ளம்தான். ஆனா பயப்பட வேண்டாம். ஆரம்ப ஸ்டேஜ்லதான் இருக்கு. சிடி ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து கலவரப்பட வேணாம். உன் புத்தியை நாம கொஞ்சம் ஏமாத்தனும்”

“எப்படி?”

“எப்பவும் நீ உன் மனைவி கூடத்தானே இருக்கே. கூடத்தானே வாழற.அதை மாத்தனும்”

“புரியலை”

“நீ உன் யாமினி கூடவே இருக்கறதால அவளை கொல்லனும்னு உனக்கு என் மனசு ஆட்டோசஜஷன் கொடுக்க ஆரம்பிக்குது. நீ அவ கூட இல்லைன்னா”

“அப்பவும் போய் உன் மனைவியைக் கொன்னுட்டு வான்னு சொல்லாதுன்னு என்ன நிச்சயம்டா”

“அதுக்கும் ஒரு ட்ரிக் வைச்சுக்கலாம். நீ டெம்ப்ரவரியா வேற ஒரு பொண்ணு கூடப் போய்த் தங்கிக்க தனியா. ஒரு மாசம் போல இப்படி தனியா இரு. வீட்டுல உன் பெண்டாட்டிக்கிட்டே ஆபீஸ் வேலையா வேற ஊர்ல இருக்கேன்னு சொல்லிரு. அந்த ஒரு மாசமும் உன் மனைவி நினைப்பே வராத மாதிரி உன்னை முழுக்க முழுக்கத் தயார் பண்றதுக்கு அந்தப் புதுப்பொண்ணு செய்ய வேண்டிய எல்லாம் செய்வா. அதுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன்”

“அதெப்படிடா. ஒரு மாசம் தனியா வாழறதுக்கெல்லாம் பொண்ணு கிடைப்பாளா? இதெல்லாம் கூட இப்ப அமேஸான்ல விக்க ஆரம்பிச்சிட்டானா?”

“ச்சே.ச்சே ஐ” அரேஞ்ச் ஸம் கால்கேர்ள் வித் மெச்சூரிட்டி.சில பேஷன்ட்டுகளுக்கு இப்படிச் செய்யறது வழக்கம். அதுக்காகவேச் சில பொண்ணுங்க என்கிட்ட கான்டாக்ட்ல இருப்பாங்க. புரொபஷனல் கேர்ள்ஸ்”

அந்த அபார்ட்மென்ட் புறநகரில் சற்று அனாமத்தான இடத்தில் இருந்தது. கட்டாயம் அந்த இடத்தில் ஆறௌ ஏரியோ இருந்திருக்க வேண்டும். அங்கே யாரும் யாருடனும் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து வந்தவர்கள் போல காணப்பட்டார்கள். கதவு திறந்து உள்ளே வந்ததும் அந்தப் பெண் நிறைய மார்புடன் சிறிய புன்னகையுடன் வரவேற்றாள்.

“ஐயாம் காயத்ரி. இது இந்த அசைன்மன்ட்டுக்கு என்னோட பேர். நிசப்பேர் கேட்காதிங்க. உள்ள வாங்க, உங்களை முழுசா மாத்தனும். முழுக்க முழுக்க என் ஞாபகம் மட்டுமே உங்களுக்கு இருக்கற மாதிரி”

அவள் இயல்பாக எல்லா விதத்திலும் ஒத்துழைத்தாள். தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது சுர்ரீரென்றது.

இத்தனை நேரமாக அந்தக் குரல் உள்ளே கேட்கவில்லையே. யாமினியைக் கொல் என்று சொல்லவில்லையே.

அடுத்த நாளும், அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் குரல் கேட்கவில்லை. ஏறக்குறைய யாமினியைத் தற்காலிகமாக மறந்து போய் காயத்ரியைத் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு நாள் சிக்னலில் காரை நிறுத்திக் கொண்டு, இந்த முறை பெஞ்சமின் ப்ரைட்டனை மெல்லியதாகக் கேட்டுக் கொண்டிருந்த போது காரின் இடது கதவைத் திறந்து பட்டென உள்ளே வந்தாள் யா.. யாமி.. யாமினி.

“யாமினி.. நான் இப்பதான் வந்தேன். வீட்டுக்குதான் போயிட்டிருக்கேன்”


“எதுவூம் சொல்ல வேணாம் கணவனா. ஒரு பொண்ணால உணர முடியும். தன் கணவன் தன்னைத்தான் லவ் பண்றானா, இல்லை வேற எவளையாவது தடவிட்டு இருக்கானான்னு. அவ யாரு. நல்லா இருக்காளா. நல்லா பண்றாளா...”

“யாமினி அது வந்து... எனக்கு குரல். நான்... அது வந்து...”

“பேச வேண்டாம் கணவா. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருக்குது. அல்க்ரீன் மற்றும் ஃப்ரெடி மெர்க்குரி இந்த ரெண்டு பேர் குரலையும் ஒண்ணாப் போட்டு பிசைஞ்ச மாதிரி ஒரு வினோத குரல்.. அந்தக் குரல் ரெண்டு வாரமா அடிக்கடிச் சொல்லிட்டே இருந்துச்சு இனி பேசத் தேவையில்லை. பேசவும் முடியாது. ரெண்டொரு தரம் நானே நேர்ல பார்த்திட்டு ஃபாலோ பண்ணிட்டுப் போய்ப் பார்த்தா, தனி வீடு எடுத்து வாழ்றார் என் கணவர். சும்மா விடலாமா...? அந்தக் குரல் உங்களைக் கொன்னுடுன்னு சொல்லுது, சின்னதான இந்த கத்தி போதும்ல. ரொம்ப பழைய பழமொழிதான். கொலையூம் செய்வாள் பத்தினி”

யாமினி, அந்தச் சிறிய ஆனால் மிகக் கூரான அந்தக் கத்தியை என் கழுத்தில் இறக்க, இரத்தம் கோடாக வழிய ஆரம்பித்து, நான் காற்றுக்குத் திண்டாடிய போது சிக்னலில் பச்சை விழுந்தது.

யாமினி இறங்கி நடந்து தொலைவில் சிறு புள்ளியாகிக் கொண்டிருந்தாள். அப்புறம் இருட்டு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p352.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License