எப்படி, எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது? என்று தெரியவில்லை. நான் பாட்டுக்கு காரைச் சிக்னலில் நிறுத்திக் கொண்டு க்ளாடி டீபஸியை சன்னமான டெஸிபல்களில் வழிய விட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு குரல் என் உள்ளேக் கேட்டது. செலீன் டியோன் மற்றும்
ரேத்தா ஃப்ராங்க்ளின் ரெண்டு பேரையூம் சரிவிதமாக மிக்ஸ் செய்த மாதிரி சில சமயங்களில் அந்தக் குரல் கேட்கும்.
“இன்னும் எத்தினி நாட்கள்தான் இதே மனைவியுடன் வாழ்வாய், உனக்கு அலுக்கவில்லையா? அவள் வேண்டாம். அவளைக் கொன்று விடு”
பச்சை விழுந்த பின்னும் அப்படியே உறைந்திருந்தேன். யாமினி என் மனைவி. அதாவது என் முழுவதுமானவள். என்னை முழுக்க முழுக்க உடலாலும் உணர்வாலும் நிரப்பியவள். கல்யாணமாகி ஆறு வருடம்தான் ஆகிறது. செவன் இயர்ஸ் இட்ச் கூட இன்னும்
ஆரம்பமாகவில்லை. அதற்குள் ஏதோ ஒரு குரல் எனக்குள் கேட்கிறது. அவளை கொல் என்கிறது.
ஆபீசுக்கு வந்தமர்ந்த பின்னரும் அதேக் குரல். ரெஸ்ட் ரூம் சென்றாலும் கஃப்டேரியாவில் போய் கருப்புக் காப்பி வாங்கி உதட்டருகே வைத்தாலும் அதேக் குரல். அதே வார்த்தைகள்.
அவளைக் கொன்று விடு.
யாமினி நல்லப் பெண். அரேஞ்ச்டு மேரேஜ்தான். ஆனால், அவளை முன்னரேச் சந்தித்துக் காதல் செய்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டும் என்கிற அளவிற்கு வொர்த் ஆனவள்.
இப்படி எனக்குள் குரல் கேட்பது தெரிந்தால் என்ன நினைப்பாள்? நான் எதற்காக யாமினியை, என் மனைவியை, என்னில் பாதியைக் கொல்ல வேண்டும்? யாராவது என்னை ஏதாவது ப்ரைன் ட்ராக் செய்கிறார்களா? ச்சே... அதெல்லாம் படங்களில்தான் நடக்கும். இது ஏதோ மனோவியாதி
என்றதும் எனக்கு வியர்த்தது. லட்டு கொடுத்து ஆளைத் துரக்கும் மந்திரவாதி மாதவன் போல யாரையூம் நான் சமீபத்தில் சந்தித்திருக்கவில்லையே.
அப்புறம் சோஷியல் மீடியாவில் நரேந்திரனைப் பார்த்ததும்தான் நிம்மதியாக இருந்தது. என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்தவன். இப்போது டாக்டராக இருக்கிறான். டாக்டர் என்றால் நீங்கள் நினைப்பதுதான். சைக்யாட்ரிஸ்ட். ஆனால், ஆன்டனிஹாப்கின்ஸ் போல எல்லாம் பயமுறுத்தலாக இருக்க மாட்டான். அளந்து பேசுவான். அமைதியாக இருப்பான். எட்ட
நின்று பார்த்தால் யோகா குரு போல இருப்பான். அவனிடம் சொல்லி அப்பாய்ன்மென்ட் கேட்டபோது சிரித்தான்.
“சிரிக்காதடா பாவி. நான் ரொம்பக் குழப்பத்துல இருக்கேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அந்தக் குரல் சொல்றதைக் கேட்டு நான் யாமினியை போட்டுத் தள்ளினாலும் பண்ணிடுவேன் போல. நான் ஏதாவது விஜய்சேதுபதி மாதிரி மாறிக்கிட்டிருக்கேனா. எதுக்கும் நலன்குமாரசாமி இல்லைன்னா தியாகராஜன் குமாரராஜா போன்ற ஆட்களைக் கேட்டு விடுவோமா?. எனக்கு
ஏதாவது ஆயிருச்சா..”
நரேந்திரனை நேரில் சந்தித்த போது, நான் சொன்னது முழுக்கக் கேட்டான். கேட்டு விட்டு அமைதியாகப் பார்த்தான். ஏதாவது யோகா கீகா பண்ணச் சொல்வானா?
“இது மென்டல் பிராப்ளம்தான். ஆனா பயப்பட வேண்டாம். ஆரம்ப ஸ்டேஜ்லதான் இருக்கு. சிடி ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து கலவரப்பட வேணாம். உன் புத்தியை நாம கொஞ்சம் ஏமாத்தனும்”
“எப்படி?”
“எப்பவும் நீ உன் மனைவி கூடத்தானே இருக்கே. கூடத்தானே வாழற.அதை மாத்தனும்”
“புரியலை”
“நீ உன் யாமினி கூடவே இருக்கறதால அவளை கொல்லனும்னு உனக்கு என் மனசு ஆட்டோசஜஷன் கொடுக்க ஆரம்பிக்குது. நீ அவ கூட இல்லைன்னா”
“அப்பவும் போய் உன் மனைவியைக் கொன்னுட்டு வான்னு சொல்லாதுன்னு என்ன நிச்சயம்டா”
“அதுக்கும் ஒரு ட்ரிக் வைச்சுக்கலாம். நீ டெம்ப்ரவரியா வேற ஒரு பொண்ணு கூடப் போய்த் தங்கிக்க தனியா. ஒரு மாசம் போல இப்படி தனியா இரு. வீட்டுல உன் பெண்டாட்டிக்கிட்டே ஆபீஸ் வேலையா வேற ஊர்ல இருக்கேன்னு சொல்லிரு. அந்த ஒரு மாசமும் உன் மனைவி நினைப்பே வராத மாதிரி உன்னை முழுக்க முழுக்கத் தயார் பண்றதுக்கு அந்தப் புதுப்பொண்ணு
செய்ய வேண்டிய எல்லாம் செய்வா. அதுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன்”
“அதெப்படிடா. ஒரு மாசம் தனியா வாழறதுக்கெல்லாம் பொண்ணு கிடைப்பாளா? இதெல்லாம் கூட இப்ப அமேஸான்ல விக்க ஆரம்பிச்சிட்டானா?”
“ச்சே.ச்சே ஐ” அரேஞ்ச் ஸம் கால்கேர்ள் வித் மெச்சூரிட்டி.சில பேஷன்ட்டுகளுக்கு இப்படிச் செய்யறது வழக்கம். அதுக்காகவேச் சில பொண்ணுங்க என்கிட்ட கான்டாக்ட்ல இருப்பாங்க. புரொபஷனல் கேர்ள்ஸ்”
அந்த அபார்ட்மென்ட் புறநகரில் சற்று அனாமத்தான இடத்தில் இருந்தது. கட்டாயம் அந்த இடத்தில் ஆறௌ ஏரியோ இருந்திருக்க வேண்டும். அங்கே யாரும் யாருடனும் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து வந்தவர்கள் போல காணப்பட்டார்கள். கதவு திறந்து உள்ளே வந்ததும் அந்தப் பெண் நிறைய மார்புடன் சிறிய புன்னகையுடன் வரவேற்றாள்.
“ஐயாம் காயத்ரி. இது இந்த அசைன்மன்ட்டுக்கு என்னோட பேர். நிசப்பேர் கேட்காதிங்க. உள்ள வாங்க, உங்களை முழுசா மாத்தனும். முழுக்க முழுக்க என் ஞாபகம் மட்டுமே உங்களுக்கு இருக்கற மாதிரி”
அவள் இயல்பாக எல்லா விதத்திலும் ஒத்துழைத்தாள். தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது சுர்ரீரென்றது.
இத்தனை நேரமாக அந்தக் குரல் உள்ளே கேட்கவில்லையே. யாமினியைக் கொல் என்று சொல்லவில்லையே.
அடுத்த நாளும், அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் குரல் கேட்கவில்லை. ஏறக்குறைய யாமினியைத் தற்காலிகமாக மறந்து போய் காயத்ரியைத் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு நாள் சிக்னலில் காரை நிறுத்திக் கொண்டு, இந்த முறை பெஞ்சமின் ப்ரைட்டனை மெல்லியதாகக் கேட்டுக் கொண்டிருந்த போது காரின் இடது கதவைத் திறந்து
பட்டென உள்ளே வந்தாள் யா.. யாமி.. யாமினி.
“யாமினி.. நான் இப்பதான் வந்தேன். வீட்டுக்குதான் போயிட்டிருக்கேன்”
“எதுவூம் சொல்ல வேணாம் கணவனா. ஒரு பொண்ணால உணர முடியும். தன் கணவன் தன்னைத்தான் லவ் பண்றானா, இல்லை வேற எவளையாவது தடவிட்டு இருக்கானான்னு. அவ யாரு. நல்லா இருக்காளா. நல்லா பண்றாளா...”
“யாமினி அது வந்து... எனக்கு குரல். நான்... அது வந்து...”
“பேச வேண்டாம் கணவா. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருக்குது. அல்க்ரீன் மற்றும் ஃப்ரெடி மெர்க்குரி இந்த ரெண்டு பேர் குரலையும் ஒண்ணாப் போட்டு பிசைஞ்ச மாதிரி ஒரு வினோத குரல்.. அந்தக் குரல் ரெண்டு வாரமா அடிக்கடிச் சொல்லிட்டே இருந்துச்சு இனி பேசத் தேவையில்லை. பேசவும் முடியாது. ரெண்டொரு தரம் நானே நேர்ல பார்த்திட்டு ஃபாலோ பண்ணிட்டுப் போய்ப் பார்த்தா, தனி வீடு எடுத்து வாழ்றார்
என் கணவர். சும்மா விடலாமா...? அந்தக் குரல் உங்களைக் கொன்னுடுன்னு சொல்லுது, சின்னதான இந்த கத்தி போதும்ல. ரொம்ப பழைய பழமொழிதான். கொலையூம் செய்வாள் பத்தினி”
யாமினி, அந்தச் சிறிய ஆனால் மிகக் கூரான அந்தக் கத்தியை என் கழுத்தில் இறக்க, இரத்தம் கோடாக வழிய ஆரம்பித்து, நான் காற்றுக்குத் திண்டாடிய போது சிக்னலில் பச்சை விழுந்தது.
யாமினி இறங்கி நடந்து தொலைவில் சிறு புள்ளியாகிக் கொண்டிருந்தாள். அப்புறம் இருட்டு.