இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

மழைக்குடை

முனைவர் பி. வித்யா

காலம் எப்பொழுது யார் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் அல்லது குறைக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் மழை காதலை அதிகப்படுத்தும் காரணி ஆகி விடுகிறது. அதிலும் ஒருபடி மேலே மழை நாளில் குடை அறியாத ரகசியங்கள் ஒன்றும் இல்லை என்றும் கூறலாம். மழையில் குடை காதலர்களின் அந்தரங்கத் தோழனாகிறது. மழை நாளில் ஒரு குடையில் இணைக்கப்பட்ட காதல் உயிர்கள் வெளியில் மழையின் குளிரை மறந்து வெப்ப சுவாசம் கொள்கின்றனர்.

இன்றும் இரு உயிர்கள் மழைக் காலத்தில் குடைக்குள் இழுக்கப்படுவதைப் போல காதலுக்குள்ளும் இழுக்கப்படுகின்றனர். அதுவரையில் ஏதோ சின்ன காரணம் பற்றி விலகியிருந்தவர்கள் குடைக்குள் வந்ததும் காதல் மழையில் திகட்டத் திகட்ட நனையத் தொடங்கிவிடுகிறார்கள்.

இப்படித்தான் பார்வையில் மட்டுமே பிடித்திருப்பதையும், விரும்புவதையும் ஒரு நாடகம் போல தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காதல் மலராத இதயங்கள் அந்த மழையில் காத்திருந்தது. முதுகலை வகுப்பில் கருத்தரங்கம் இந்த நான்கு நாட்களாக, வருகை அவசியம் என்பதாலும் தலைப்பு சிறந்த தலைப்பு என்பதாலும் நவீனம் குறித்த கடைசி நாளின் விவாதம் என்பதாலும். அன்றைய நாள் தீப்பொறி விவாதங்களோடு இந்த 5 மணியையும் தாண்டி 5.30 ஐத் தொட்ட பிறகு. மேலும் விவாதிக்கலாம் மற்றுமொரு நாள் என்று சொன்னதன் பின்னேதான். அனைவரும் கைக்கடிகாரத்தையே கவனித்தார்கள்.

இறுதி நாளில் விவாதம் என்பதால் பயின்றதெல்லாம் பயன்தான் என்று தோன்றிற்று. எல்லோருக்கும் அந்தத் தலைப்பில் விவாதிக்க ஏதோவொன்று இருந்தது. இப்படியாக நிறைவு பெற்ற கருத்தரங்கின் இறுதி நாளில் தான் நல்ல மழை. அடுத்தவர் முகம் தெரியா மழை. அனைவரும் வீடு திரும்பும் நேரம். கழிவறை பயன்படுத்தப் போன நேரம் பார்த்து அனைவரும் கிளம்பிவிட, மழை வலுத்திருந்தது.

பல்கலைக்கழக வாசலில் யாருமின்றி தான் மட்டும் நின்றாள் மேகலை. மழையும் அதிகமாகி இருளும் கூடக்கூட கடைசி நிமிடத்தில் தன் பேருந்தை விடப்போகும் பயமும் அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தது. கையில் குடையில்லாத நாளில் வெளுத்து வாங்கும் மழையிடம் கோபித்துக் கொண்டாள். மனதுக்குள் செய்வதறியாமல் பதட்டம் மேலெழுவதும், கொஞ்சமும் கருணை காட்டாத மழையிடம் கோபித்துக் கொள்வதும் என்று உதட்டுப் பிதுக்கலிலும் அதனை கை நீட்டித் திட்டுவதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது அவளுக்கு.


அப்பொழுதுதான் கொட்டும் மழையிலும் கரையாத ஞாபகமாய் அவன் முகம். நான்கு வருடங்களாய்த் தெரியும். நட்பு தான். இப்பொழுது ஆறு மாதங்களாக பேச்சு வார்த்தை கண்களில் தொடங்கி நாளும் நாளும் கண்களில் முடிகிறது. மறுநாள் மீண்டும் தன் நண்பர்களுக்குப் புலப்படா வண்ணம் கண்களில் தொடங்குகிறது. இப்படியொரு சந்தர்ப்பத்தில் அவன் இருந்திருந்தால்….. என்று மனதில் தோன்றிய ஆசையை அதே வேகத்தோடு தலையை ஆட்டி தனக்குத்தானே மறுத்துக் கொண்டாள்.

அப்படி அவள் உதட்டைப் பிதுக்குவதையும் ஏதோ ஒரு பாடலுக்கு நடனமிடுவதைப் போன்று மழையிடம் கையை ஆட்டி நடனமிடுவதைப் போல கோபித்துக் கொள்வதையும். தனக்குத்தானே தலையைச் சிலுப்பிக் கொள்வதையும் பின்னிருந்து சிறு புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான் உதயா. யார் இந்த மழையில் தன் துணையாக இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ அவன்தான் இவளைப் பின்னிருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

இவளைப் பற்றி நன்கு அறிந்தவன். ஆதலால் இவள் குடை கொண்டு வராததையும் அறிந்து அவசரமாக தன் விடுதி போய் நண்பன் “ஏய் எனக்கு கொடை வேணும்டா. வெளில போணும்” என்று சொல்லிவிட்டு நண்பனின் பதிலுக்குக் கொஞ்சமும் காத்திருக்காமல்.

“டேய் நானும் வெளில போணும் டா” என்கிற அவன் சத்தத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் மேகலை பார்க்க ஓடோடி வந்திருந்தான். அவளோடு பேசும் நேரத்திற்காக காதல் மனம் ஏங்கும். இந்த நேரத்தை விட்டுவிட மனமில்லை உதயாவிற்கு. மழையில் நனைந்து நண்பன் குடை எடுத்து மழையில் நனைந்திருந்த உடை மாற்றி வேறொரு உடை உடுத்தி பாதைகளைக் கடந்து அரைக் கிலோமீட்டரை அரை நொடியில் கடந்து வந்திருந்தான்.

இவளோ அனைவரும் சென்று விட்டதை அறிந்துதான் மழையோடு பேசிக் கொண்டிருந்தாள். உதயா அப்பொழுதுதான் பின்புறக் கதவின் வழி வந்து மேகலை கோபிப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவள் மழையோடு உதயனையும் வாய்விட்டுத் திட்டிக் கொண்டுதான் இருந்தாள். இவனாவது இருந்திருக்கக் கூடாதா? என்று அவன் பெயரைச் சொல்லி முடிக்க பின்னிருந்து குடையோடு வந்தான் உதயன்.

இப்பொழுது கோபம் இருந்த இடம் வெட்கத்தால் நிறைந்தது.

கொட்டும் மழையில் ஒரு குடை சில நேரம் தோழனாய், சில நேரம் எதிரியாய் மாறுவதும் உண்டு. அணுக்கம் கூடவும் குறையவும் பேச்சு வார்த்தை இல்லா இந்த அடைமழையில் அவள் மூச்சு விடுவதும் மெல்லிய குளிரில் நடுங்கும் அவளின் இதழ் ஒலி கூட சத்தமாய் அவனுக்குக் கேட்டது.

மழை கொட்டாத வெண்மேகமாய் கொஞ்ச நேரம் முன்பு கருத்திருத்த மேகம் இப்போது கலைந்தது போல அவளாலும் வார்த்தைகளை இதழ் பிரித்துக் கொட்ட முடியாத மௌனம் அந்தக் குடைக்குள் மனம் திறக்காத காதலர்களை இறுக்கிக் கொண்டிருந்தது. பேசினாலும் வெளியில் கேட்காத உரத்த மழை குடையின் வெளியே பெய்து கொண்டிருந்தது.

அவனோடு அந்த மழைநாள் இருவரும் விரும்புவதை நிழற்குடை நீளும் குடையாகி இருவரின் குடையான காதலைக் கைகாட்டிப் போனது. அந்த மழைநாள் அதன் பின் காதலைக் கூட்டிக் கொடுத்தது. சேர்ந்தே பயணித்த நண்பர்கள் அறியா நாட்களே எல்லா நாட்களின் தேவையாகிப் போகக் கரைந்தது.

கொஞ்ச நாளில் காதலும் வெண்மேக மழையாய் நின்றுபோக மழையால் இணைந்த உயிர்கள் வேறு உணர்வுகளுக்க ஆட்பட காதல் குறைந்து பிரிவு அதிகமாகி பிரிந்து நினைவினில் மட்டுமே அந்த மழைநாள் நின்று கொண்டிருந்தது மேகலைக்கு.

அதனாலேயே மழையையும் குடையையும் அதன்பின்னே அவள் வெறுக்க ஆரம்பித்தாள். மறக்கவும் விரும்பினாள். இரண்டு வருடங்கள் இருவரும் சேராத இந்த உலகம் பழகிப்போனது. மழையும் குடையும் இப்பொழுதெல்லாம் காதலை அல்ல காயத்தை உண்டு பண்ணியது.

இன்றும் ஒரு மழைநாள் தான் கடந்த காலத்தின் கனலில் எறியும் இதயத்தை மறைக்க தொண்டைக்குழியிலும் சூடேற்றும் தேநீர் குவளையோடு மேகலை அந்தத் தேநீர் கடையின் தாழ்வாரத்தில் சத்தமாகப் பெய்து கொண்டிருக்கும் மழையில் சாலையைப் பார்த்தவாறு அமர்ந்து பருகக் காத்திருந்தர் மழை அவளைப் பருகிக் கொண்டிருந்தது.

அவ்வாறு அவள் பார்க்கும் போது சாலையின் மறுபுறம் இருவர். இவள் பெரிதாய் வெறுக்கும் மழையையும் குடையையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் பர்க்காத மழைநாள் அவர்களின் நெருக்கத்தைக் கூட்டி இருந்தது. அவன் அவளை இடுப்பைக் கிள்ளி சிணுங்க வைத்து ஒதுங்கிய குடையையும் சிணுங்கிய அவளையும் ஒருசேர இழுத்துப் பிடித்தான். அங்கு ஒரு காதல் நாடகம் நடக்கவும் இயல்பாக மெகலையும் பழைய நினைவுகள் அலையடிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் பின்புறத்தைக் குடை பாதி மறைத்திருந்தது. இந்த மழையில் ஐஸ்கிரீம் சாப்பிட கடைக்கு வந்திருந்தார்கள். ஏனோ திடீரென கொட்டும் மழையில் ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்கும் உதயாவின் முகம் அவளுக்கு தொடரோட்டமாய் நினைவு வந்தது. குடையோடு மெல்ல இணைவதும் பின் அவன் சிரிப்புக்காட்ட அவள் சிணுங்கி நகருவதும் ஒரு இருவரின் காதல் நாடகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் பாதி மறைத்த பின்புறத்தால் பின்பகுதி மட்டும் தான் அவளுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. இருவரும் ஐஸ்கிரீம் கடையில் ஆளுக்கொன்றாய் வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும் காற்றும் சேர்ந்து கொள்ள அந்தப் பெண்ணின் உருவம் சிறிது தெரிந்தது மேகலைக்கு கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டாள். மழைநாளில் விரும்பிய துணையோடு இருப்பதை விட மிகச் சிறந்த வரம் என்ன இருந்து விடப் போகிறது.

இருவருக்கும் முதலில் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களின் ஐஸ்கிரீமை ஊட்டிக் கொண்டனர். இரண்டாவது முறை அவன் வாங்க மறுத்துவிட்டான் போல, இப்பொழுது கொஞ்சம் வாடிய முகத்தோடு அவளது ஐஸ்கிரீமைச் சாப்பிட முயல, அவள் அருகில் வந்து, அவள் ஐஸ்கிரீமோடு உதடையும் சுவை பார்க்க, அதுவரைக் காத்திருந்ததைப்பொல காற்றில் குடை கைவிட்டுப் பறக்க மின்னல் ஒன்று இருவர் முகத்தையும் ஒரு நிமிடம் பளிச்சென காண்பித்தது.

அந்த நேரம் இருவருக்கு நேரம் உறைந்து நின்றது. ஐஸ்கிரீம் இன்னும் உதடுகளிலும் வாயிலும் வைத்துக் கொண்டு விழுங்காமல் இருந்த அந்த இளம்பெண்ணுக்கும், சாலையின் மறுபுறத்தில் தொண்டைக்குழியில் கொதிப்போடு தொண்டைக்குழியில் இறக்கிய தேநீரை விழுங்க முடியாத மேகலையும் தான் அவர்கள்.

“அது… அது…. உதயாதான்… ஆம் அவனேதான்….”

தன்னையும் அறியாமல் மனமும் உதடும் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. மேகலையின் மனது படபடத்தது. அந்த மழையில் உரத்த சத்தத்தோடு இடி விழுந்தது. அவள் மனத்திலும்தான்.

மீண்டும் ஒரு முறை அவள் ஐஸ்கிரீம் சாப்பிட வாய் வைக்க, இவள் இதழை நோக்கி அவன் இதழ் நகர்ந்து ஒரு நிமிடம் கவ்விப் பிடித்து மீண்டது.அவள் அங்கிருந்து அவனைத் தள்ளி விட்டு துள்ளி விலகி எதிர் நிழற்குடைக்கு மாறினாள். அதிகமாகப் பேருந்துகள் கடக்காத அந்தி நேரம் வந்த மழையில் காதல் பெருக இருவரும் அருகருகே யாருமற்ற பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்க மழை கொடுக்கும் தைரியத்தில் காதல் பெருகி வர இதயம் நிரம்பிய காதலின் கனத்தை தனியாகச் சுமக்க முடியாமல் அந்த இளம் பெண் உதயாவின் தோள் சாய எங்கிருந்தோ வந்த பேருந்து, அவர்களின் மீது ஒளி பாய்ச்சி மீண்டும் ஒருமுறைத் தெள்ளத் தெளிவாக மெகலைக்குக் காட்டியது.


இந்த மழையை, குடையை, சிணுங்கலை, சிரிப்பை ஏன் காதலையே மேகலைக்கு வெறுக்க வைத்தவன். இன்றும் அதே சிரிப்போடு சிணுங்கலும் நிகழ பொங்கி வழியும் காதலோடு யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற துணிவில் அவளை முழுவதுமாக வளைத்துப் பிடித்து அமர்ந்திருந்தான். இன்னும் கொதிக்கும் மனதோடு அந்தத் தேநீர் குவளையில் கண்ணீர் கிளிங்கெனப்பட்டுத் தெரிக்க பாதிக் குடித்த குவளையை அங்கே வைத்துவிட்டு எப்போதும் மழையோ வெயிலோ எப்போதும் குடையோடு வழக்கமாகியிருக்க கொஞ்சம் தள்ளி நின்று எதிர்புறம் பார்க்காமலே குடை விரித்து நடக்க ஆரம்பித்தாள் மேகலை.

யார் பார்த்திருக்கக் கூடாதோ? அவளுக்குத்தான் இயற்கையும் ஒளி பாய்ச்சிக் காட்டிக் கொடுத்தது. அவனை மறக்க நினைத்து மழையை வெறுக்கத் தொடங்கியவள். இப்பொழுது மனது முழுவதிலும் எரிமலையை உணர்ந்து கொண்டிருந்தாள். இப்பொழுது மழையை இன்னும் பிடிக்காமல் போனது. மின்னலையும் இடியையும் சேர்த்துத்தான். இந்த மழைநாளும் பிடிக்காமல் போனது அவளுக்கு. குளிர்ந்த இதயங்களையும் வெம்மை கொட்டும் மனதையும் இந்த மழைநாளும் உருவாக்கியிருக்கியிருந்தது.

இதுவும் குடையும் மழையும் அறியாத ரகசியமா? பல நூற்றாண்டுகளாய் இவை அறியாத ரகசியங்கள் இருக்க முடியுமா?

இழுத்துப் பிடித்து முகம் தெரியாமல் குடையை வைத்து மறைத்துக் கொண்டாள். கண்களைத் தாண்டி கண்ணீர் சுடச்சுட அந்தக் குளிர் மழையில் மேகலையின் கண்களில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. காதலை மட்டுமல்ல கண்ணீரையும் குடைகள் அறியும்தானே...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p369.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License