இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அந்த மூன்று நாள்….!

முனைவர் பி. வித்யா

வெயில் பிசுபிசுக்கும் பங்குனி. எந்தப் பொருளையும் தொடவும்,வெளியில் நடக்கவும் கூட விரும்பாத பங்குனி. கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் தனது மேல் துப்பட்டாவைத் தலையில் போட்டுக் கொண்டாள். எவ்வளவு போர்த்தியும் அனலும் வெயிலும் துப்பட்டாவைத் தாண்டி தகித்துக் கொண்டிருந்தது. தனது கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு நடப்பதற்கு உள்ளாக வெயில் கவிதாவின் ஒட்டுமொத்த சுறுசுறுப்பையும் உறிஞ்சிக் கொண்டது. கால்களை அவள் முன்னோக்கி வைத்தாலும் நடக்க நடக்க வெயிலில் தூரம் குறைவதைப்போல் தோன்றவில்லை.

பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.வெயிலில் ஏற்படும் அனலும் தனலும் ஏற்றிய சூடும் அது அனைவரின் உடலில் ஏற்றிய வியர்வையின் நெடியும் “ஏன்தான் வெளியில் வந்தோமோ?” என்று எல்லோர் மனதிலும் ஒருவிதக் கோபமும் வெறுப்பும் வெயில் மீது குடிகொண்டு விட்டது. அப்படியிருந்தும் இந்த வெயிலிலும் பேருந்துகள் மக்கள் நிறைந்து கொண்டும் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும் தூரமாய் இருந்தாலும் நின்று கொண்டும் என்னென்ன வேலைக்காகவோ ஓடி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

கவிதா வந்து நின்றதன் பின்னே திருச்சி செல்லும் மூன்று பேருந்துகள் நிறைமாதக் கர்ப்பிணியைப் போல் இப்பொழுதுதான் போனது. ஒரே பேருந்தில் போகலாம் இன்னும் முக்கால் மணிநேரம் கூடிவிடும் என்பதால் திருச்சி போய் திருச்சியிலிருந்து மதுரை போகலாம் என்று முடிவெடுத்திருந்தாள். இப்பொழுது தேர்வு விடுமுறை ஆகவே சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்தாள்.

நான்காவது பேருந்தில் ஒருவழியாக ஜன்னலோர இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கையின் சுகத்தை மற்ற நாட்களைப் போல வெயிலில் அனுபவிக்க முடியாது. காலை பத்து மணிக்கு உச்சி பிளக்கும் வெயில் தன் கோபத்தால் உலகை வறுக்கத் தொடங்கும்.


அதனால் பேருந்தின் கம்பிகள், ஜன்னல்கள் என்று எதனையும் தெரியாமல் தொடவோ, சாயவோ முடியாது. இருக்கையிலும் எல்லா இடத்திலும் மனிதர்களுக்கு முன்பேயே வெப்பம் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தது. என்மேல் உட்கார முடியுமா? என்று சவால் விடுவதைப் போல் சம்மணமிட, அதனை மதிக்காமல் அங்கே அமர்ந்தால் தண்டனையும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் கொடுத்துக் கொண்டிருந்தது.

அதே போல வெயில் அமர்ந்த இடத்தில் கவிதாவும் உட்கார்ந்து, “…. என்னா சூடு…” என்று அவளையும் அறியாமல் வெளியில் சொல்லிவிட்டாள். நிமிடத்திற்குள்ளாகவே அந்தப் பேருந்தும் நெரிசல் மிக்க இடமாய் மாறிப் போனது. கொஞ்ச நேரம் சூட்டினைப் பொறுத்துக் கொள்ளவில்லையென்றால் இன்னும் அதிக நெரிசலில் மோதிக் கொண்டு கலவையான வியர்வை நெடியோடு காற்றறும் இல்லாமல் மூச்சு முட்டும். அதனாலேயே பரவாயில்லை என்று ஜன்னல் இருக்கையில் அமர்ந்தாள்.

வெயிலை விடவும் பேருந்தில் மற்றொரு சோதனையும் உண்டு. அது என்னவென்றால் நாம் பேருந்து நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்க நமக்குப் பின் வந்து நிறுத்திய பேருந்துகள் உடனடியாக ஆட்களை ஊற்றி கிளம்புவதுதான். அதை விடக் கோபப்படுத்தும் சோதனை யோசித்து யோசித்து அந்தப் பேருந்தில் ஏறியிருப்போம். நாம் ஊறி இருக்கையில் உட்கார்ந்த பின் சாவகாசமாக ஓட்டுநர் இறங்கி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பேருந்தைப் பார்த்துக் கொண்டே தன் சக பணியாளர்களிடம் பேசிக்கொண்டு தேநீர் அருந்துவது.

அப்படியும் அநியாயத்துக்கு கவதாவிற்குச் சோதனை. இப்படியாக ஒவ்வொன்றும் கவிதாவிற்கு ஒட்டுமொத்தமாக நடந்து கொண்டிருந்தது. அந்த முக்கால் மணிநேரத்தில் இப்பொழுது அரை மணி நேரம் பேருந்தில் உட்கார்ந்தே வீணாகிவிட்டது. பேருந்து சிறிதாவது நகர்ந்தால்தானே கொஞ்சம் காற்றுப் பட்டு முகத்தில் சிறிது உயிர் வரும். ஆனால் இன்னும் பேருந்து கொஞ்சமும் நகரவில்லை.

தொடர்ந்து அடுத்த சோதனை. அப்பொழுதுதான் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர, எங்கிருந்தோ வந்த மற்றொரு ஓட்டுநர் வந்து இப்பொழுது பேசவும் கவிதாவுக்கு பொறுமை எல்லை மீறிவிட்டது. என்ன செய்ய முடியும். அவள் தனக்குத்தானே நொந்து கொண்டு தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயிலும் மாணவி கவிதா. இப்போது விடுமுறை. விடுமுறையிலும் தன் மண்ணையும் மனிதர்களையும் அடையாளப்படுத்தும் நாட்டுப்புறவியல் ஆய்வினைச் செய்யலாம் என்ற யோசனையோடு, தேர்வு முடிந்த நிலையில் விடுதியிலிருந்து புத்தக், ஆடைகள், சாதாரணமாக எப்பொழுதும் தூக்கிச் செல்லும் பொருட்களோடு ஒரு பெரிய பை நிறைய துணியும் கட்டப்பையில் புத்தகமும் சாதாரண பைநிறைய இதரப் பொருட்களும் நிரப்பி நடக்க முடியாமல் நடந்து தூக்கி வந்ததால், அவளால் இறங்கிக் கூட நடக்க முடியவில்லை.

மூன்றாவது இருக்கையில் ஜன்னலோர இருக்கை என்றதும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அமர்ந்து விட்டாள். தன் காலுக்கடியில் பையும் அதன் மெல் கட்டப்பையும் தன் மடியில் கைப்பையும் எல்லாவற்றையும் நிறைத்து விட்டாள். ஆனால் கால் வைக்கத்தான் இடமில்லை. ஒருவழியாக உட்கார்ந்து இருந்த போதும் வேகமாக எடுத்திருந்தாலாவது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் அதுவும் அங்கு நிகழவில்லை.

வேறுவழியில்லை பொறுமையாகச் செல்வோம் என்று பெருமூச்சுவிட்டாள் கவிதா.

சிறிது ஓட்டுநரின் பேச்சுக்குப் பின் தான் பேருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தது. முதலில் தன்னைக் கரைத்துக் கொண்ட காற்று முகத்தில் குப்பென்று வெப்பத்தை வாரி இறைத்தது.

வெந்து தணிகிறதே என்று கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தித் துடைத்துக் கொண்டாள். தஞ்சையிலிருந்து மெதுவாக திருச்சிக்கு பேருந்து ஊர்ந்து போகிறதோ? ஏன்று நினைக்கும்படி மிக மெதுவாக நகர்ந்தது பேருந்து. ஏற்கனவே 4 மணி நேரத்திற்கு மேல் பயணம் என்பதனால் உணவும் அருந்தவில்லை. சிறிது தலைவலிப்பதும், தலை சுற்றுவதும் போல் இருந்தது. சாப்பிடாததால்தான் என நினைத்துக் கொண்டாள். நீரும் குடிக்கவில்லை. வீட்டிற்குச் செல்லும் வரை பேருந்திலிருந்து இறங்க முடியாது என்பதால் தண்ணீர் கூட குடிக்கவில்லை.

திருச்சி பேருந்து நிலையம் ஒருவாராக வந்துவிட்டது. தட்டுத் தடுமாறி மதுரைக்கு அப்போது செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் பேருந்தில் கைகாட்டி ஏறி, நாலாவது இருக்கையில் இடம் கிடைக்கவும் அமர்ந்தாள். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தது அதிசயம்தான். கிடைத்ததும் அமர்ந்து விட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் வயிறு கொஞ்சம் வலிக்கத் தொடங்கியது. முதுகுவலி கூடி மார்பெல்லாம் கெட்டிப்பட்டுப் போனது. “அந்த மூன்று நாளாய் இருக்குமோ?” என்று மனத்தில் கணக்கிட்டுப் பார்த்தாள்.

அதற்கும் இன்னும் ஏழு நாட்கள் இருக்கிறது. இருந்தும் ஏன் இவ்வளவு வலி? வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் சாய்ந்து உட்காருவதும், பின்னர் முன்னிழுத்து அமருவதும் என்று தத்தளித்துக் கொண்டிருந்தாள். எதாவது அவசரம் என்றாலும் பேருந்தை நிறுத்த முடியாது. கவிதா ஏறியதோ இடைநில்லாப் பேருந்து. ஆதலால் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம் சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்வோம் என்று கண்களை மூடிக் கொண்டாள்.

பிரான்மலை தாண்டி பேருந்து குலுங்கியதில் அடிவயிறும் மார்பும் விண்ணென்று தெறித்து வலித்தது. அவசரத்தில் சாப்பிட எதுவும் வாங்காமலேஞம் ஏறிவிட்டாள். என்ன செய்ய? எதற்கும் நிற்காத பேருந்தில், எப்போதாவது கிடைக்கும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இசையோடு ரசித்துக் கொண்டு வருவாள் எப்போதும். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. எதையும் ரசிக்கும் மனநிலை கவிதாவிற்கு இல்லை.

கிட்டத்தட்ட பேருந்து மேலூர் கடக்கையில் எதை வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே வந்தாலோ? அது நடந்தேறிவிட்டது. அவளால் அசையவும் முடியவில்லை.

அவள் இப்பொழுது பேருந்தை நரகமாக உணர்ந்தாள். ஆடையில் கறையாகிவிட்டதா? நனைந்து விட்டதா? என்று நினைத்த மாத்திரத்தில் அவளுடைய இடுப்புக்குக் கீழே எல்லாம் பிசுபிசுப்பதாய் உணர்ந்தாள்.

எதை யாரிடம் சொல்வது? அருகிருப்பவரிடமும் சொல்ல முடியவில்லை. வலியும் ரணமாய் இருக்க. வயிறு பிசைந்து பிசைந்து வலி எடுத்தது. ஜன்னலிலிருந்து காற்று படும்போதெல்லாம் துர்நாற்றம் உடலிலிருந்து வீசுவதாய் உணர்ந்தாள்.

எழுந்து உதவி கேட்கக்கூட முடியவில்லை. நடத்துநர் எங்கே இருக்கிறார்? என்று தேடவும் முடியவில்லை. அவள் நினைப்பெல்லாம் தான் அமர்ந்த இடத்தில் கறைபட்டிருக்குமோ? தனது உடையில் கறை பட்டிருக்குமோ? என்று தட்டுத் தடுமாறி எழுகையில்தான் இன்னும் கொடூரமான ஒன்றும் நிகழ்ந்தது.

அவள் எழுகையில் அவளுடைய இடுப்பையும், மார்பையும் தொட இருக்கையின் இடுக்கு வழியாகத் தொட முயன்று கொண்டிருந்தான் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஆசாமி. அவளது இடுப்பை முன்னிருந்தே தடவிக் கொண்டிருந்திருக்கிறான். ஆனால் இவளோ வலியில் துடித்துக் கொண்டிருந்ததால் இதைச் சரி வர உணரவில்லை. வலி ஒன்றே உடல் முழுவதும் வியாபித்ததில் இது தெரியாமல் இருந்திருக்கிறது. அத்தனைப் பைகளை மடியில் வைத்திருந்ததாலும் வலி அதிகமாய் இருந்ததாலும் அவன் செய்கையை அதற்கு முன் அவளால் அறிய முடியவில்லை. தட்டுத் தடுமாறி எழும்போது “சீ!!! நாயே. உனக்கெல்லாம் அறிவே இல்லையா? என்று மட்டும்தான் கேட்க முடிந்தது.

இதற்கு மேல் கேட்டால் எல்லோரும் தன்னைக் கவனிப்பார்கள் என்று அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டி வந்தது. இருக்கையில் கறைபடவில்லை என்றாலும் உடையில் பட்டிருந்தது. வேறுவழியில்லாமல் நடத்துநரைத் தேடி நான் இங்கு இறங்க வேண்டும் என்றும் அவசரம் என்றும் சொல்லவும், ஒரு வழியாகப் புரிந்து கொண்டு இறக்கினாரா? இல்லையா? எனத் தெரியவில்லை. ஆனால் விசிலடித்து பேருந்தை நிறுத்தினார்.

திறந்திருந்த உணவகம் அருகில் இறங்கி,தனது பைக்குள் வைத்திருந்த துணியையும், நாப்கினையும் எடுத்து கழிவறையில் மாற்றிக் கொண்டு, வலியில் இடுப்பு எலும்புகளும் நரம்புகளும் புடைத்து எழ அவளுக்கு பையை நகர்த்தக் கூட முடியாமல் இருந்தது. ஒரவழியாக பேருந்து நிறுத்தம் வந்து நின்றாள். மாலை நேரத்தின் வெளிச்சம் குறைந்து அதன் வெள்ளை நிறத்தை இருள் நிரப்பிக் கொண்டிருந்தது.

ஆடை மாற்றி நாப்கின் மாற்றி வரவே அரை மணி நேரத்திற்கு மேலானது. பிறகு ஏதோ உள்ளூர்ப் பேருந்து கால் மணி நேரத்திற்குப் பின்புதான் வந்தது. நிற்க முடியாமல் கால், இடுப்பு என்று கடுத்துக் கொண்டிருக்க ஒருவழியாக பேருந்து ஏறினாள்.


அவ்வளவாக ஆட்கள் இல்லாத பேருந்து இன்று அதிசயமாக மீண்டும் ஒருமுறை ஜன்னலோர இருக்கை கிடைத்தது. உட்கார்ந்ததும் வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியது. ஏறி இறங்கியதும் கெட்டிப் பட்டுக் கிடந்த கல் போன்ற மார்பு பயங்கரமாக உயிர் போக வலித்தது.

கொஞ்ச நேரத்திலேயே தன்னை அறியாமலேயே தனது இருக்கையின் இடைவெளி வழியே கவிதாவின் கண்கள் போனது. பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்? என்று நொடி திரும்பிப் பார்த்தாள். நல்லவேளையாக பின் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கவிதாவின் மனது லேசாக வலியையும் தாண்டி லேசாக ஆறதல்பட்டுக் கொண்டது.

பெண்ணின் வெளி சுருங்குவதெல்லாம் இப்படிப்பட்ட ஒரு சிலரால்தானே… பெண்ணின் எல்லை வகுப்பது இப்படிச் சிலரின் கைகளும்தான் என்று மாறுமோ...???

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p371.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License