இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பகை மாறாத உறவு


காயத்ரி மாணிக்கம்

அந்த இறப்புச் செய்தி, என்னவோ செய்து கொண்டிருந்தது.

நேரம், ஆக, ஆக மனசுக்குள், பெரிய கனத்தை எடுத்து இருந்தது, 'டீ' டைம் கடந்து, மதிய உணவு வேளை, இரண்டு மணி, சுவர்க்கடிகாரம், டிங்க்...டிங்க், டிங்க் ஓசை அடித்தோய்ந்தது. இருக்கையிலிருந்து எழ, அனுமதி இல்லாதது போல், கால்களிரண்டும் தரையை ஒட்டியே இருந்தன.

“என்ன சார், சாப்பிட வரலையா?” உதவியாளர்

“அவசரப் பைல், கொஞ்சம் லேட்டாகும்”

“வேலை இருக்கட்டும் வாசுதேவன், எழுந்து கேன்டீன் வாங்க.” மானேஜருக்கும் அதே பைல் பதிலைக் கூறினேன்.

மற்றவர்களும் டைனிங்ஹால், ஓய்வறைன்னு சென்று விட்டனர். முப்பதுக்கு அறுபது அலுவலக அறை. போகணுமா, வேண்டாமா..? என்ற கேள்வியோடு என்னை மட்டும் தனிமையில், வைத்திருக்கிறது.

வருடங்கள் கடந்தும் பங்காளிப் பகையின் விரிசல், காயம், வலியின் வடு. முன்பு பல விஷேசத்தை தவிர்த்தது போல, தட்டிக்கழிக்கும் யோசனைதான் என்றாலும், வழிமறித்த மனுஷியே இப்ப இல்லேன்னு ஆன பிறகு இருக்கும் உறவில் சேர்துக்கலாமென்ற யோசனையும் இடைச்சொருகாய் வருகிறது.

‘சொந்த சனத்தை அப்படியே விட்றக்கூடாதுப்பா கொஞ்சம் தள்ளிட்டாலும், அதன் போக்கில் தூரமாப்போயிரும்.’ யாரோ, எங்கோ எதார்த்தமாகக் கூறிய ஞாபகத்தில் முடிவெடுப்பதொண்ணும் பெரிய மெனக்கிடு கிடையாதுதான். வருஷக்கணக்கில் போக்குவரத்து கிடையாத வீடு… பேச்சு வார்தையைச் சட்டுனு நிறுத்தி ஒதுங்கிய சொந்தம்… அந்தத் தயக்கம் தடையா நிக்குது.

நூறு வயசத்தாண்டி ஒத்த சீக்குணு படுக்காம வாழ்ந்த மனுஷி பெரியம்மா. உறவு வட்டத்தில் பெரிய சாவுதான். கண்டிப்பாக போயே ஆகணும். என்ன செய்ய... நடந்த கசப்பு எல்லாத்துக்கும் மூலக்கூரான கோபக்காரியும், அதன் பிறகான இம்மியளவு அசைவு காட்டாத வீராப்புக்காரியும் அவளே... இருந்த வரை முறைத்து நாக்கத் துறுத்தி தகாத வார்த்தைகளில் வைது உறவறுக்கும் ஆங்காரத்துடன், அந்த வீட்டாரை இங்க விடாம, எங்களைச் சார்ந்தவர்களை அவளிருக்கும் சந்துப்பக்கம் கூட விடாமல் காவக்காத்த பூதம்ன்ணு.. அப்பா இருந்த மட்டும் கறுவினார்.

சீவம்போச்சு. பூதமுணுருந்தது பூதவுடலாக்கிப்போச்சுனு தகவலும் வந்துருச்சு, பழைய பெருசுக வீம்பு அப்படித்தான். அந்த மனுஷி எப்படி இருந்திருந்தாலும் போன பிறகு. பூதக்கண்கொண்டு பார்ப்பது நல்ல மனசுக்கு அழகல்ல, யார் என்ன நினைத்தாலும், எது பேசினாலும் காதுல வாங்காமல் அந்த வீட்டுக்குப் போய் ஒரு மாலையப் போட்டு, கடைசியா பெரியாத்தா முகத்தைப்பாத்து, அழுது, துக்கத்தை கழிச்சு வந்துரு… உள்ளுணர்வு, முணுப்புக்காட்டியது.


காரணம் என்னணு சுத்தமா மறந்துப் போச்சு, எப்போதோ மூண்டது எப்படியோ அமுங்கிப் போனது. சண்டையின் ஞாபகத்தை இந்தத் துக்கமான நேரத்திலா வெளிக்கொண்டு வரணும்? இந்தப் பகையால் ஒவ்வொரு நல்லது, கெட்டது இடங்களில் இடைவெளியே அதிகமாகிப் போனது. தனித்தனிப்போக்கு மனுஷ பொழப்புக்கு நல்லதில்லனு புத்திக்குத் தெரியும், ஆனாலும் ஒவ்வொருவரின், காழ்ப்புணர்ச்சி பாழாப்போகும் வேண்டவே வேண்டாம்னு பிடித்து, தொங்குது.

“ஒரு எட்டுப்போயி தலையக்காட்டி வந்துருங்க, பழக்கமானவங்க துக்க வீட்டுக்குப் போகலனாவே எப்படியோ இருக்குன்னு புலம்பிட்டே இருப்பிங்க பெரியம்மா முறை… தாங்கமாட்டீங்க போய், வாங்க.’ மனைவிதான்.

கழுத்தைப்பிடித்து தள்ளிவிடுமளவுக்கு அங்கே, மூர்க்கமானவர்கள் யாரும் கிடையாது, அப்படியே நடந்தாலும் பொறுமையாக இருந்துரலாம், ஏதும்னா, 'ஏ.. விடுங்கப்பா, இனி ஒண்ணாவா.. பொறக்கப்போறீக? அவனுக்கும் ஆத்தா தான, மாலையப் போட்டு ஒருதரம் மொகம் பாத்து அழட்டுமே..' இதுக்குன்னே பெருசு இருப்பார்கள். தகாதது ஏற்பட்டாலும், உடனே சரி பண்ணவும், சிலர் வருவார்கள். அதுவுமில்லாமால் துக்கவீட்டிலே பிரச்சனையை அதிகப்படுத்த விடாதவர்களே எழுதப்படாத ரூல்ஸில் அங்கே, உட்கார்ந்திருப்பார்கள்.

பிரிவின் தடயத்தை யோசிக்கக் கூட ஒன்றுமற்றதா வருத்தத்துடன் சென்று, அந்தவீட்டு வாசலில் போய் நிற்கையில், எதுவு‌மே நடக்கவில்லை. நீண்ட இடைவெளியில், உரிமையான வீட்டுக்கு வந்த. உணர்வு. படபடப்பாக துடித்த நெஞ்சம் சராசரி 'லப்.., டப்...லப்... டப்,' ஆனது. பெருமூச்சும் விட்டேன்.

மருத்துவமனையில் உயிர் பிரிந்ததால் அப்போதே ஆம்லன்ஸ் வந்து போயிருக்கும் போல். குளிர்ப்பாட்ட ஏற்பாடகிக் கொண்டிருந்தது. அங்க, ஒண்ணு விட்டசித்தப்பா பையன் ஊதுபத்தி புகை கக்க எடுத்து வருகையில் இன்னும் நம்ம சொந்தம் உயிர்ப்பாக உள்ளதென்பதை அவனின் பார்வை, புன்னகையில் காட்டினான். தெரிந்தவர் முகம் கொடுத்து பேச வந்ததில், என் விசயங்களை விசாரித்ததிலும் ஒதுங்கிப் போய் தலை கவிழ வேண்டிய அந்நியச்சங்கடம் இல்லாதிருந்தேன்.

“வாடா.. வாசு, சித்ரா வரலயா..?” மூத்த அண்ணன்.

“சென்னையில் இருகா.. அண்ணே.” என்று அவர் கைகள், பற்றினேன்.

“பெரியம்மா மொகத்தப்பாத்து அழுதுருப்பா...” அருகே வந்த அக்கா, ஆறுதல் போல் முதுகைத் தட்டிக் கொடுத்தாள், கடைசி தங்கை, என்னைக்கண்டதும் கட்டிக்கொண்டு அழுது, நிற்கிறாள்.

பிரிவின் ஆதங்கத்தை முடியும் மட்டும் நானும் அழுது... அழுது, தீர்த்தேன்.

உறவுகள், வரத்தொடங்கினார்கள்.

'மச்சான்.. இங்க வாங்க, இந்தச் சேலைய அந்த ஜன்னல் கம்பில முடிங்க,' தங்கையின் கணவர், உரிமையாகக் கூப்பிடுகிறார்.


மறைப்புக்கு சேலைகட்டும் போதுதான், பெரியம்மா கிடத்தலைப் பார்க்கிறேன். இந்த உடம்புல உயிர் இருக்க எப்படிலாம் பேசியது… வீம்பா நடந்து திரிந்தது.. சரீரத் திடத்தை எல்லாம் காலம் எடுத்துக் கொண்டது போக, எலும்பு நரம்புகள் மறைத்த சதையோவியமாக நீளவாக்கானப் பெஞ்சில் முகத்தில் மட்டும் அதே நிமிர் படிமமாய்.. வாழ்ந்தது போதும், போதும் போல.. வத்திப்போய்… தலைமுறைக்கே அவள் வாழ்வாதாரமாக, மதிப்பு மனுஷின்னு தெம்புவரை கம்பீரம் காட்டியவளின் முற்று..!

ஒண்ணுவிட்ட தங்கை கணவரின், வாய்வார்த்தை தடித்து, தகறாறு, சின்ன விசயம்தான்.. விட்டுக் கடந்திருக்கலாம் முடியவில்லை. சகிப்பின்மைக்கு என்னைப் பொருத்த உதாரணம் இந்த பெரியம்மா.. கூடவே கூடாதுனு தள்ளி வச்ச உசுரு, 'பார்த்துட்டுப்போ' என்பதாக இதோ கிடக்கிறது, வெத்து உடம்பு!

ப்ரிசரில் தூக்கி வைத்து, பெரியம்மாவுக்கு பிரியமான பச்சைநிறக் காட்டன் சேலையைச் சுற்றி, மற்றவைகளும் செய்து, நான் வாங்கி வந்த பன்னீர் ரோஸ் மாலையை கழுத்திலிட்டு கண்ணாடி, மூடுகையில் மறுபடியும் கவனிக்கிறேன்.

கோபம் நிரம்பிய, அரட்டல் பெரியம்மாவை, இப்போதும் சாந்தமாய் உணர முடியலைனாலும், எனக்குள் எதுவுமற்றவொரு சுத்திகரிப்பு நிலைகொண்டு விட்டது. றெக்ககட்டிய மாதிரி, பந்தல் ஏற்பாடு, டியூப்லைட் கட்ட, டீ கேன் வாங்கி வைக்கவும், அடக்கம் செய்வதற்கு நகராட்சி மயானம் நடைமுறைகள் தெரிந்திட, நீர் மாலைக்கு ட்ரம் தண்ணீர் வண்டிக்கு சொல்லியதும், என்று, ஒவ்வொருவர் கட்டளைக்கும் ஓடியோடி அலைந்து வேலைகள் செய்கிறேன்.

மின்மயான தகன அடுப்பில், துளி நேரத்தில் நினைவுகளை ஞாபகப்படுத்திக்க கொடுத்துவிட்டு, மண் கலயத்தில் சாம்பலாகி, இதுவே மானுட எதார்த்தம்னு உணர்த்தலாய் பெரியம்மா. இறந்த பொழுதும் கடந்தது, போகிறது.

"என்ன வாசுதேவன் மூன்று நாள் லீவு..."

"பெரியம்மா பதினாறு நாள் காரியத்துக்கு போகனும், சார்"

"மார்சென்ட், வாய்ப்பே இல்லை."

"நான்தான் சார் முன்ன நின்னு எல்லா வேலையும் செய்யணும். ரொம்ப நாட்கள் கழித்து, உறவைப் புதுப்பிக்க இதுவொரு நல்ல சான்ஸ், அவசியம் மனசு வைக்கனும்.” வேண்டிக் கேட்டேன்.

“பார்க்கலாம்,” மேனேஜர் இப்படி இணக்கமாய்க் கூறியதில், மகிழ்ச்சி.

குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வந்து உரிமையுடன், பெரியம்மாவின் பதினாறாம் நாள் விசேசத்துக்கு அண்ணன், அழைப்பார்? விட்டுப்போன சொந்தம் தொடரும் எதிர்ப்பார்ப்போடு, இருக்கிறேன்.

அப்படி யாரும் வரவில்லை?

நாள்தான் கடந்தது. அலைபேசியில் கூட அழைப்பு, இல்லை..!

பெரியம்மா முடிச்சுப்போட்டு வைத்திருந்த சண்டையின் அதே பகை, வீம்பு ஒட்டாமை.


‘வாசுதேவன் வந்ததுமில்லாம உருத்தாக வேலைகளை அப்படிச் செய்தான்.. அம்மா சாவோட எல்லா மனக்கசப்பும் போகட்டும். அவனையும் அழைக்கலாம்’ ன்னு எண்ணத் தோணாத, அண்ணன், அக்கா, அல்லது அந்த மொத்தக் குடும்பத்திடமும் இன்னும் மிச்சமிருப்பதாகவே உணரமுடிந்தது.

அவர்களின் இந்தக் குணம் இயல்பாக இருக்காம், இருந்துட்டுப் போகட்டும். அதற்காகச் சாவுக்குப் போன மாதிரி காரியத்துக்கும் அந்த வீட்டுக்குச்செல்ல எனக்கு ஒப்பவில்லை. பெரியம்மா இறந்த அன்று இருந்த வருத்தம், கணம் விசும்பல், எதுவுமே இப்போது இல்லை. என்னவொரு பகைமாறாத உறவு… என்று சலிப்போடு என் அன்றாடத்தில் நடக்கலானேன்.

சமீபத்தில் மார்க்கெட்டில் சந்தித்த சரசக்கா, 'என்ன வாசு, காரியவீட்ல காணோம், அண்ணன் சொல்லலையா?' கேட்கவும். 'இல்லக்கா, வேலையா வெளியூர் போயிருந்தேன்..' சமாளித்தேன்.

'அங்க ஓம் பேச்சுதாம்பா, கேத வீட்டில் பம்பரமா சுத்திச் சுத்தி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்ச.. வந்தவங்க வாயாரிப் போனாங்க,' பெங்களூரில் இருந்து அண்ணன் மகன் சேலம் வரவே ரெண்டு மணி ஆனது. இங்கே வர, இரவு ஆகிடும்னு. நான்தான், யோசனை மேதாவியாக, மதுரை வரவும் காரில் போய் அழைத்து வந்து விடுவதாக, கார் எடுத்துட்டுப்போய், விளக்கு வைக்க, பெரியம்மா உடல் மயானம் கொண்டு செல்ல ஏது செய்தேன், வெளியூர் போக இருந்த சனங்களின் மனசுகளில், பதிந்திருப்பேன். அதான் விஷேசத்தில் பேசப்பட்டிருக்கிறேன்னு புரிந்து கொண்டேன்..!

எதிர்ப்பார்ப்பு இல்லாத செய்தலுக்கு, மனசை தொடும் இப்படியொரு ‘வரம்’ எதார்த்தமா கிடைத்து விடும்தானே! அது சரசக்காவுக்கு புரிந்திருக்கும் போல, அர்த்தமானவொரு புன்முறுவல் காட்டியதும், கிளம்பினார்.

விடுப்பு.. வேண்டாம் என்றதும், கேள்வியாக ஏறிட்ட மேனேஜருக்கு, மெளனம் பதிலாக.. இயல்பாக வாசுதேவன் நிற்கிறேன்… நான்தான், வாசுதேவன்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p380.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License