இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நண்பன் வீட்டில் என் மனைவி?

ராம்ப்ரசாத்

அந்த லண்டன் மாநகரின் அமைதியான தெருவில் அமைந்த ஆடம்பர ஹோட்டலின் நான்காவது தளத்தில் உள்ள 11வது ரூமில் நிர்மலாவும் சாண்டி என்கிற சந்தியாவும் அவசர அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். வடநாட்டுத் தோழி ஒருத்தியின் பார்ட்டி தரை தளத்தில். பார்ட்டிக்கு வருபவர்களில் சிலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள் என்பதால் நிர்மலா, சாண்டி உட்பட வெகு சிலருக்கு ரூம்கள் புக் செய்யப்பட்டிருந்தது. உச்சி முதல் பாதம் வரை இழுத்துப் போர்த்திய சல்வார் அணிய எத்தனித்தவள், சந்தியாவின் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பார்த்தவுடன் பார்ட்டியில் தன் மதிப்பு போய்விடுமோவென எண்ணி தானும் ஒரு ஃப்ராகிற்கு மாறினாள். 10 வயதாய் இருந்த போது பிங்க் நிறத்தில் ஃப்ராக் போட்ட நியாபகம். அதற்கப்புறம் ஃப்ராக் போட வாய்ப்பு கிட்டவில்லை. நிர்மலா, இருக்கும் இடத்திற்கேற்றவாறு உடை அணிய வேண்டுமென்று தோழிகளுக்கெல்லாம் அட்வைஸ் செய்பவள். கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு வீட்டிலிருந்து சுடிதாரில் வந்து, காலேஜில் ஜீன்ஸ்க்கு உடை மாற்றிக்கொள்ளும் ரகம்.

இந்த ஃப்ராக், நிர்மலாவின் காதலன் ரகு வாங்கிக் கொடுத்தது. இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.

அவனும் பார்ட்டிக்கு வருகிறான் என்பதால் நிர்மலாவிடம் துள்ளல் அதிகம் இருந்தது. ரூமை லாக் செய்துவிட்டு, வெளியில் வந்த பின்பு, உள்ளே மறந்து வைத்துவிட்ட மொபைல் ஃபோன் எடுக்க மீண்டும் ரூமிற்க்குள் ஓடி, மறுபடி ரூமை லாக் செய்து, ஒரு வழியாக பெண்கள் இருவரும் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். பார்ட்டி ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தது. ரகு ரெண்டாவது பெக்கை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்த போது நிர்மலா அவன் அருகே அமர்ந்து ஹாய் சொன்னாள். பரஸ்பரம் இருவரும் கன்னங்கள் உரசிக் கொள்ள‌ முத்தமிட்டுக் கொண்டனர். இந்தியாவில் இருந்தவரை, கைகுலுக்கிக் கொள்வதோடு நின்றுவிடும். லண்டனில் இதெல்லாம் சகஜம் என்பதால், நிர்மலாவுக்கும் இது கனநேரத்தில் தொற்றிக் கொண்டது. வேற்று நாட்டில் காலடியெடுத்து வைத்த பிறகு அவள் பழக்கப்படுத்திக் கொண்ட பல செய்கைகளில் இதுவும் ஒன்று.



சுமாராக ஒரு 30 பேர் வந்திருந்தார்கள். மெடையில் மெல்லியதாய், என்ரிக்கின் இசை ஆல்பமும், பேயொன்ஸ் இசையும் சேர்ந்து சிந்தையை மயக்கிக் கொண்டிருந்தது. சந்தியாவும் தன் பங்குக்கு ஒரு பெரிய கோப்பையில் மது ஊற்றி, நிர்மலாவிற்கும் ஒன்று எடுத்து வந்தாள். நிர்மலாவிற்கு இதெல்லாம் பழக்கமில்லை என்பதால் முதலில் பெரிதாகத் தயங்கினாள். கூட வந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கத் தொடங்க, அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காதென்று வாங்கிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அடிவயிறு முட்டத் தொடங்க, ரகு ரெஸ்ட்ரூம் எங்கே எனக்கேட்டு லேசாக தள்ளாடியபடி சென்று விட்டான். திரைப்படங்களிலும், அலுவலக பார்ட்டிக்களில் அடுத்தவர் கைகளில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மதுக்கோப்பை. அதிலும் இரண்டு வருடம் அவள் வேலை செய்த ப்ராஜெக்டில் ரீவ் என்கிற அமேரிக்க பெண்மணி ஸ்டைலாகக் குடிப்பாள். அலுவலகமே அவள் அழகில், நவீனத்தில், ப்ராஜெக்ட் நுணுக்கத்தையும், கோப்பையையும் ஒரே வேகத்தில் கையாளும் அழகில் மயங்கிப் போகும். அப்போதெல்லாம் நினைத்திருக்கிறாள், இந்த மதுவை கையில் கொண்டிருந்தவர்கள் அனைவரும் மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்த, தன்னிறைவு பெற்ற, தனித்தன்மை வாய்ந்த, சுதந்திரத்தின் எல்லைகள் கடந்தவர்கள் போலும் என்று. இன்று அப்படி ஒரு இடத்தில் தானும் நிற்பது பெருமையாகப்பட்டது அவளுக்கு.

கல்லூரி படிப்புவரை தன் ஒவ்வொரு செயலுக்கும் அப்பா அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிகொண்டிருந்துவிட்டு, கேம்பஸில் பன்னாட்டு நிறுவனத்தில், 54 வயது அப்பாவை விட 3 மடங்கு சம்பளம் வாங்கும் வேலையில் அமர்ந்த பிறகு அதுநாள் வரையில் கேள்வி கேட்ட பெற்றோர் அதன் பிறகு தன் மகள் செய்வதெல்லாம் சரி என்கிற அங்கீகாரத்தை வெளிப்படையாய் காட்டத் துவங்க, அந்த சுதந்திரம் அவளுக்கு தன்னை பாரதியின் புரட்சிப் பெண்ணாய் தன்னையே பார்க்க வைத்ததில் அதிசயம் ஒன்றுமில்லைதான்.

சந்தியா இரண்டாவது கோப்பையை எடுத்திருந்தாள். நிர்மலாவுக்கு ஏனோ இந்நேரத்தில் ரீவின் நினைப்பு அதிகம் வந்தது. உலகின் ஃபார்ச்சுன் 500 நிறுவனத்தின் ப்ராஜெக்ட் லீட், ரீவ்வைப்போல் ஒரு பெண்ணாய் தானும் மாறிவிட்டதாய் அந்த‌ நொடி தோன்றிய‌து. மெல்ல‌ மெல்ல‌ ம‌துவை சுவைக்க‌த் தொட‌ங்கினாள். முத‌லில் சுவை ச‌ற்றே வித்தியாச‌மாய்த் தோன்றினாலும் நேர‌ம் போக‌ போக‌, அப்ப‌டித் தோன்ற‌வில்லை. ஒரு அரைம‌ணியில் முழுக்கோப்பை காலி. ச‌ந்தியா மூன்றாவ‌துக்கு தாவியிருந்தாள்.



நேர‌ம் செல்ல‌ செல்ல‌, உள்ளே சென்ற‌ ம‌து த‌ன் வேலையை காட்ட‌த் துவ‌ங்கியிருந்த‌து. நிர்ம‌லாவிற்கு த‌லை சுற்றிய‌து. த‌ட்டாமாலை சுற்றுவ‌து போலிருந்த‌து. ச‌ற்றைக்கெல்லாம் க‌ண்க‌ளைத் திற‌ப்ப‌தே க‌டினமாக‌ இருந்த‌து. அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் முன் குடித்து ம‌ய‌ங்கி விழுந்த‌தாய் பெய‌ர் வ‌ந்துவிடுமோவென‌ ப‌ய‌ம் வ‌ந்த‌து. ச‌ந்தியாவின் காதில் த‌ன்னை ரூம் வ‌ரை கைதாங்க‌லாய் அழைத்துச் செல்லும்ப‌டி கிசுகிசுத்தாள். அப்போதுதான் ஒரு ஆட‌வ‌னுட‌ன் சுவார‌ஸ்ய‌மாய் பேச‌த் தொட‌ங்கியிருந்த‌ ச‌ந்தியா முத‌லில் ம‌றுத்தாலும் பிற‌கு ம‌றுநாள் அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்திக்க‌ வேண்டுமே என்கிற‌ நிர்ப‌ந்த‌த்தில் அவ‌னுக்கு எக்ஸ்க்யூஸ் சொல்லிவிட்டு நிர்ம‌லாவை கைத்தாங்க‌லாய் அழைத்துச் சென்றாள். ச‌ந்தியாவுக்கும் த‌ள்ளாட்ட‌மாக‌வே இருந்த‌து. இருந்தாலும் அவ‌ளுக்கு ப‌ழ‌க்க‌ம் தான் என்ப‌தால் வ‌ழ‌க்க‌ம் போல் ச‌மாளித்தாள். நிர்ம‌லாவை லிஃப்ட் ஏற்றி ரூமிற்கு கொண்டு வ‌ந்து ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்து விட்டு மீண்டும் த‌ரைத‌ள‌த்துக்கு போய்விட்டாள்.

நேர‌ம் ந‌ள்ளிர‌வு தாண்டி விடிகாலை மூன்று ம‌ணி ஆகிவிட்டிருந்த‌து. நிர்ம‌லா மெல்ல‌ க‌ண் விழித்தாள். த‌லை வ‌லித்த‌து. உட‌ம்பெல்லாம் வ‌லியாய் இருப்ப‌தாய் உண‌ர்ந்தாள். இந்த ரூம் தன் ரூம் போல் முற்றிலும் இல்லை என்பதாய் தோன்றியது. தன் பெட்டி, படுக்கை, துணிகள், லாப்டாப் என எதுவும் இல்லை. த‌லைசுற்ற‌ல் ச‌ற்று த‌னிந்திருந்த‌து. மெல்ல‌ எழுந்தாள். ப‌டுக்கையில் அவ‌ள் க‌ண்ட‌ காட்சி அவ‌ளுக்கு தூக்கிவாரிப் போட்ட‌து. அவ‌ள் அணிந்திருந்த‌ ஃப்ராக் த‌னியே கிட‌ந்த‌து. அவ‌ள் உட‌ல் பிற‌ந்த‌ மேனியாய், உள்ளாடைக‌ள் ஆங்காங்கே சித‌றி, அவ‌ள் இடுப்புக்கு கீழே ப‌டுக்கையில் ர‌த்த‌மாய், உட‌ல் வ‌லி பின்னியெடுத்து, ந‌ட‌ந்த‌து என்ன‌வென்று அவ‌ளுக்கு உண‌ர்த்திய‌து. இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ க‌ற்பை அங்கே அவ‌ள் எவ‌னுக்கோ இழ‌ந்து விட்டிருந்தாள்.

அழுகையும் ஆத்திர‌மும் வ‌ந்த‌து. உட‌ல் வ‌லியோடு, துணிக‌ளை அணிந்தாள். வெளியில் வ‌ந்து ரூம் க‌த‌வு பார்த்தாள். ரூம் ந‌ம்ப‌ர் 17. த‌ன்னுடைய‌து 11 ஆயிற்றே. அவ‌ளுக்கு புரிந்துவிட்ட‌து. குடிபோதையில் ச‌ந்தியா ரூம் ந‌ம்ப‌ர் சரியாய் பார்க்காம‌ல் த‌ன்னை இந்த‌ ரூமில் விட்டிருக்க‌ வேண்டும். குடிபோதையில் தான் ம‌ய‌ங்கி இருந்த‌ ச‌ம‌ய‌த்தில், எவ‌னோ த‌ன்னை நாச‌ம் செய்திருக்கிறான். அவ‌ளுக்கு வாய்விட்டு க‌த‌றி அழ‌வேண்டும் போலிருந்த‌து. த‌ட்டுத் த‌டுமாறி த‌ன் ரூமிற்கு வ‌ந்தாள். க‌த‌வு சாத்தி தாழிட்டு, ஆடைக‌ள் க‌ளைந்து, பாத்ரூம் சென்று ஷ‌வ‌ரில் நின்றாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். நெடுநேர‌ம் அழுதாள். உட‌ம்பெல்லாம் புழு ஊர்வ‌து போல் அருவ‌ருப்பாய் இருந்த‌து. தன் முழு உருவ‌மும் சாக்க‌டையாய் உண‌ர்ந்தாள். எத்த‌னை குளித்தாலும் இந்த‌ சாக்க‌டை உண‌ர்வு போகாது போலிருந்த‌து. உட‌ல் துடைத்து, உடை மாற்றி ப‌டுக்கையில் வ‌ந்து அம‌ர்ந்தாள்.



இத்த‌னை வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்த‌ மான‌த்தை, ஆசைக் காத‌ல‌ன் ர‌குவிற்காக‌ பாதுகாத்து வைத்த‌ அன்புப் ப‌ரிசை யாரென்று கூட‌த் தெரியாம‌ல் எவ‌னிட‌மோ இழ‌ந்த‌தை நினைத்து ம‌ன‌ம் வெதும்பினாள். இனி ர‌குவிற்குக் கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து த‌ன்னிட‌ம். ஆசை ஆசையாய் காதலிப்பவன் ரகு என்றாலும் இந்தியாவில் இருந்த‌வ‌ரை அவனை தொடக்கூட விட்டதில்லை. கல்யாணம் முடிந்து முதலிரவன்று தன்னையே அவனுக்கு விருந்தாய் தர அவனிடமிருந்தே தன்னை எத்தனை முறை பாதுகாத்திருக்கிறாள். அவன் பிறந்த நாளுக்குக் கூட ரகு எத்தனை கெஞ்சியும் ஒரு முத்தம் கூட தந்ததில்லை. அப்படியெல்லாம் பாதுகாத்து வைத்த கற்பை இன்று எவனோ அனுபவித்து விட்டு போய்விட்டான். அவன் யாரென்று கூட தெரியவில்லை.

ர‌குவிற்கு இனி தான் எவ்வ‌கையிலும் பொருத்த‌மில்லை. இனி என்ன‌ செய்தாலும் த‌ன் ம‌ன‌ம் அதை ஏற்காது. எதை இழ‌க்கக் கூடாதோ அதையே இழ‌ந்துவிட்ட‌ பின் இனி வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன். செத்துவிடலாம் போலிருந்தது. விர‌க்தி, த‌னிமை, இழ‌க்க‌க் கூடாத‌தை இழ‌ந்துவிட்ட‌ வேத‌னை, அத‌னால் வ‌ந்த‌ அருவ‌ருப்பு அவ‌ளை முழுமையாய் ஆட்கொண்ட‌து. ப‌டுக்கையை ஒட்டிய‌ ட்ராய‌ரை திற‌ந்தாள். அதில் ச‌ந்தியா ப‌ய‌ன்ப‌டுத்தும் தூக்க‌ மாத்திரைக‌ள் இருப‌தை எடுத்து மேஜையில் வைத்தாள். வாஷ்பேசினை திற‌ந்து ஒரு க்ளாஸில் த‌ண்ணீர் பிடித்தாள். ஒரு முடிவுக்கு வ‌ந்த‌வ‌ளாய், மாத்திரைக‌ளை விழுங்க‌ கைக‌ளில் எடுக்கையில் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய், மாத்திரைக‌ளை த‌லைய‌ணைக்கு அடியில் வைத்து விட்டு, முக‌ம் துடைத்து விட்டுக் க‌த‌வு திற‌ந்தாள். ர‌கு நின்றிருந்தான். அவ‌ன் மார்பில் புதைந்து ஓவென்று அழ‌ வேண்டும் போலிருந்த‌து. வெறுமையாய் ஹாய் சொல்லிவிட்டு திரும்பி ந‌ட‌ந்து ப‌டுக்கையில் அம‌ர்ந்தாள். தொட‌ர்ந்த‌ ர‌கு அருகிலிருந்த‌ சோபாவில் அம‌ர்ந்தான்.



“ஹெய் நிர்ம‌லா, ஏன் என்ன‌மோ போல‌ இருக்க‌?”

“ஒண்ணுமில்ல”

“ம்ம்ம்...”

ச‌ற்று த‌ய‌க்க‌த்துக்குப்பின் ர‌கு தொட‌ர்ந்தான்.

“நிர்ம‌லா, உன்கிட்ட‌ நான் எதையும் ம‌றைக்க‌ விரும்ப‌ல‌. நேத்து ஒரு விஷ‌ய‌ம் ந‌ட‌ந்த‌து. நானும் ஒரு பொண்ணும் த‌ப்பு ப‌ண்ணிட்டோம். நான் தெரிஞ்சு ப‌ண்ண‌ல‌. த‌ண்ணிய‌டிச்சிருந்த‌துனால‌ தெரிய‌ல‌. அவ‌ யாருன்னு கூட‌ தெரியாது. நேத்து நைட் த‌ண்ணி அடிச்ச‌தும் த‌ம்ம‌டிக்க‌ ம‌ர்வானா சிக‌ரெட் ரூம்ல‌ இருக்குனு ப்ர‌ண்டு சொன்னான்னு நான் அவ‌ன் ரூம் போனேன். அங்க‌தான் அது ந‌ட‌ந்துடுச்சு. போதைல‌ அந்தப் பொண்ணு யாருன்னு கூட‌ தெரிய‌ல‌......‌'.

“எந்த‌ ரூம்?” நிர்ம‌லா அவ‌ச‌ர‌மாய் இடைம‌றித்தாள்.

“ரூம் ந‌ம்ப‌ர் 17”

நிர்ம‌லாவிற்குப் போன‌ உயிர் திரும்பி வ‌ந்த‌து போலிருந்த‌து. அடி வ‌யிறு ஒருமுறை சுருண்டு திரும்பிய‌து. எழுந்து போய் அவ‌னை க‌ட்டிக் கொண்டாள். ர‌கு, ர‌கு, ர‌கு. ம‌ன‌சு நொடியில் ஆயிர‌ம் முறை அவ‌ன் பெய‌ர் சொல்லிய‌து. த‌ன் ஆசைக் காத‌ல‌னிட‌ம் தான் த‌ன்னை இழ‌ந்திருக்கிறோம் என்ற‌ நினைப்பே தேனாய் இனித்த‌து. புழு ஊரும் அருவ‌ருப்பு ம‌றைந்து, அந்த‌ வ‌லியை ம‌ன‌சு அனுப‌விக்க‌ ஆய‌த்த‌மாவ‌தை உண‌ர்ந்தாள். ந‌ல்ல‌ வேளை, ர‌குதான் அது.

ர‌கு திண‌றினான். எப்ப‌வும் தொட‌க்கூட‌ விடாத‌வ‌ள் இன்று க‌ட்டிப் பிடிக்கிறாளே என‌ குழ‌ம்பினான். அதுவும் த‌ன்னை அறைவாள் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, இது முற்றிலும் புதிய‌தாக‌ இருந்த‌து. ர‌கு குழ‌ம்புவ‌தை உண‌ர்ந்த‌வ‌ள், ச‌ற்றே சுதாரித்து, விடிகாலை மூன்று மணியை காரணம் காட்டி தான் அவ‌னிட‌ம் பிற‌கு பேசுவ‌தாக‌ சொல்லி, அனுப்பினாள்.

எல்லாம் இந்த‌ பாழாய்ப் போன‌ குடியால் வ‌ந்த‌ குழ‌ப்ப‌ம். ந‌ம‌க்கு இதெல்லாம் தேவையா. அணிலைப் பார்த்து முய‌ல் சூடு போட்டுக் கொண்ட‌தைப் போல‌, மேற்க‌த்திய‌ர் க‌லாசார‌த்தை பார்த்து நாமும் செய்ய‌ நினைத்தது த‌வ‌று தான். மேற்க‌த்திய‌ரைச் சொல்லி குற்ற‌மில்லை. ஆங்கில‌ம் அவ‌ர்க‌ள‌து தாய்மொழி. அவ‌ர்க‌ளின் தாய்மொழியைதான் அவ‌ர்க‌ள் பேசுகிறார்க‌ள். ந‌ம் தாய்மொழி த‌மிழ். ஆனால் நாம் ஆங்கில‌ம் தான் அதிக‌ம் பேச‌ நினைக்கிறோம். ஆங்கில‌ம் பேசினால் உய‌ர்வாய் நினைக்கிறோம். ஹாரிபாட்ட‌ர் எழுதிய‌ ஜெகெ ரொள‌ளிங்கின் பேர‌ன்க‌ள் கூட‌ மெர்சிடிஸ் காரில் செல்கிறார்க‌ள். அந்த‌ள‌விற்க்கு அவ‌ரின் நாவ‌ல் விற்க‌ப்ப‌டுகிற‌து த‌மிழ‌க‌த்தில். ம‌து கூட‌ அவ‌ர்க‌ளின் க‌லாசார‌மே. அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள். நாம் ந‌ம் க‌லாசார‌த்தை விட்டு விட்டு அவ‌ர்க‌ள் க‌லாசார‌த்தை பின்ப‌ற்ற‌ முய‌ல்கிறோம். இது முற்றிலும் த‌வ‌றுதான்.

நிர்ம‌லா ஒரு முடிவிற்கு வ‌ந்தாள். முத‌லில் த‌ன்னிட‌மிருந்த ஜீன்ஸ் பாண்ட், ஃப்ராக், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் எல்லாவ‌ற்றையும் தூக்கி எறிந்தாள்.‌ பாந்த‌மாய் ச‌ல்வார் அணிந்து கொண்டாள். க‌ந்த ச‌ஷ்டி க‌வ‌ச‌த்தை லாப்டாப்பில் த‌ட்டி பாட‌ வைத்தாள். ம‌ன‌சு லேசான‌து. நிம்ம‌தி ப‌ர‌விய‌து. அந்த‌‌ நிம்ம‌தியை முழுக்க‌ உண‌ர்ந்தாள். விடிந்த‌தும் ர‌குவிட‌ம் விஷ‌ய‌த்தை சொல்ல‌ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p41.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License