இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

ஞாயிறு மறையும் முன்...?

சந்திரகௌரி சிவபாலன்

தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான்.

எனக்குள் உறைந்த என்னுயிரே!

உன் தைரியத்திற்கு இம்மடல் பாடம் நடத்துகின்றது. பல்கலைக்கழகத்தில் நீ கற்கும் பாடங்கள் மனதின் பண்புகளை உனக்குக் கற்றுத்தரும் பாடங்களாய் இருக்க முடியாது. ஏக்கம் கொண்ட மனம் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை. பால் கெட்டால் திரைந்துவிடும். நெய் கெட்டால் வயிற்றைப் பிரட்டும். நட்புக் கெட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும். பேயோடு பழகினும் பிரிவதரிதே. உன்னோடு பழகிய நான் உன்னைப் பிரிவது எப்படி? என் விழிகள் உன்னையே அதிகம் படம் பிடித்துள்ளன. ஏனெனில், நேரிலும் நிழற்படத்திலும் உன்னைத்தானே என் கருமணிகள் அதிகம் நேசிக்கின்றன. அதனால், ஏக்கத்தில் கூட என் கண்கள் கண்ணீரைச் சேகரித்ததில்லை. ஏனெனில் நீ நனைந்து குளிரடைவதை அவை விரும்பியதில்லை!

ஒன்று சேர்ந்த அன்பு எங்களது. பாகப்பிரிவினை அதற்கில்லை. என்னோடு நீயிருக்கும் பொழுதுகள் உன் பெற்றோர் மற்றோர் உன் நினைவை விட்டு மறைந்த பொழுதுகள். மாற்றானை நீ மணம் முடிக்க என் மூச்சுக் காற்றே முன் நின்று உன்னைத் தடுத்துவிடும் என்பதை அறியாதவன் நான் இல்லை. நீ கணனிக்குள் அகப்பட்ட கவிதை அல்ல. என் மனதுக்குள் எழுதப்பட்ட கவிதை.

பல்கலைக்கழகத்தில் நீ கற்று பதவி வகித்துப் பெறும் பலனை விடப் பல மடங்கு உன்னை என் இதயத்திலும் செல்வாக்கிலும் உயரத்தில் வைத்திருக்க முடியும். அந்தஸ்தில் குறைந்தவன் நான் இல்லை. சாதியில் சரிந்தவன், நானில்லை. உன்னை விட என்னால் கல்வியால் உயர முடியவில்லை. ஆனால், உன்னை விட என்னால் உழைப்பால் உயர முடியும். உன்னையும் என்னையும் இணைத்த அந்தக் காதலுக்குத் தடையென்ன வென்று என் மூளைக்கெட்டியவரை அறிய முடியாதவனாய் உள்ளேன்.



"நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்!
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்!
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்!
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க."

- என்று சென்ற நூற்றாண்டில் பாரதி புலம்பியும் இந்த நூற்றாண்டும் தொடர்கிறது காதலுக்கு சிவப்புக்கொடி. காதலுக்காகக் காதலர்கள் உயிர் துறந்த கதை கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்தப் பெற்றோராவது இறந்து விடுவோம்...! இறந்து விடுவோம்...!! என்று நச்சரித்ததைத் தவிர, எங்காவது இறந்த செய்தி கேள்விப்பட்டிருக்கின்றாயா?

"நம்புபவனுக்கு எல்லாம் கைகூடும்” என்று பைபிள் கூறுகின்றது. ”நம்பிக்கை தான் நிஜங்களை உருவாக்குகிறது” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பிரியமுள்ள பெற்றோர் உன் பிரிவைத் தாங்கார். பொறுத்தது பொன்னான நேரம். போதும் உன் அமைதி. நம்பிக்கையில் நாள் குறிப்போம். வருடங்கள் பல கடந்தும் வாழுகின்ற எம் காதல், வதுவை காணாது முடிவுறாது. நான் உரைத்த வார்த்தைகள் எல்லாம் நானாய் உரைத்தவை அன்று. எனக்குள் இருக்கும் நீயுரைக்கும் வார்த்தை என்பதை உணர்வாய்.



திங்கள் பெண்ணாள் செவ்வாய் மலர்ந்து
புதனன்று சந்திக்க வருஞ்செய்தி சொல்லாயோ?
பூத்திருக்கும் புதுமலர் புனைந்தெடுத்து மாலையாக்கி
மங்கலநாண் மகிழ்ந்தேத்த, வியாழனன்று நாள் குறித்து
வெள்ளிக்கொலுசிட்டு வதுவைவினை முடித்து
சனியன்று சடங்கு வைக்கும் செய்தி சொல்ல
ஞாயிறு மறையுமுன் வந்துவிட மாட்டாயோ
நாமிணையும் நற்செய்தி நம்பெற்றோர் செவிநுழைய.
உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்
சித்திரத்து ரோஜாவைச் சிறைப்பிடித்த
உன் இதயக் காவலன்.
கணனி மூலம் அக்கடிதம் அவள் கண்களுக்குச் சமர்ப்பணம் ஆகியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் காதல் தேவதைக்கு உள்ளத்து நன்றியைப் புன்சிரிப்புடன் உதிர்த்துவிட்டபடி படுக்கையில் சாய்ந்தான், சுதன்.

குறிப்பு: பெற்றோர்களே! பூக்கள் மலரவேண்டும். மொட்டோடு கருகிவிடத் தீப்பந்தமாகாதீர்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p75.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License