இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!

பாரதி தேவராஜ்


மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள்.

அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சு போட்டு காய்ச்சிய சோளக்கஞசி அடுப்பைச்சுற்றி பரவலாய் ஓடியது.

இருபது வயதை கடந்த கமலாவின் நெஞ்சில் “திக்“ என்று பயம் பரவியது. கண்ணில் நீர் வெள்ளமாய் பெருகியது. என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.

தட்டு வணடிகள் வந்து சேர்ந்தன. கணுவாய் சோமையம்பாளையம் சோளக்காட்டுக்கு கதிரறுக்கப்போன தன் சின்னாத்தா வேறே வந்தால் தன்னைக் கொன்றே விடுவாள்.

தட்டுவண்டிகள்லே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தாள். மூணுமணிக்கே அடுப்பப்பத்தவச்சு, மூணு படி சோளத்தை ராயிக்கல்லுல போட்டு நெருச்சு, கஞ்சி காச்சத் துவங்கினாள் கமலா. பானைக்கடியில் எங்கேயோ லேசா விரிசல் விட்டிருக்கும் போலிருந்தது. கஞ்சி வெந்ததும் இறக்கி வைக்கலாம் என்றிருந்தாள்.

இப்படியாகும் என்று யார்கண்டா?

நல்லாம்பாளையம் கிராமத்தில் கமலாவின் அப்பா வீராசாமி பெருந்தனக்காரர்.அந்தஊரில் அவர்கள் வீடுதான் அரண்மனை மாதிரி.



பெரிய வீடு. பின்னால் மூன்றேக்கராவில் காய்கறி தோட்டம். தானி யங்கள் காயப்போட விஸ்தாரமான சிமெண்ட்தளங்கள் ஓரமாய் பெரிய கவலைகிணறு.எந்நேரமும் மோட்டர்தண்ணி வயலுக்கு பாய்ந்து கொண்டே இருக்கும்.

“அடிஏண்டி பனமரமாட்டம் நிக்கிறே? மலங்க மலங்க முழிக்கறே கண்ணுல வேறே தண்ணி. என்னத்தப் பண்ணினே. சொல்லித்தொலை.பொழுது சாஞ்சாச்சு. தட்டுவண்டிக வேறே வந்தாச்சு. கருதறுக்கப் போன உன்ற சின்னாத்தா வேறே வந்துருவாளே. சொல்லுடீ.” -என்று பக்கத்தூட்டு பங்கஜக்கா கேட்டதும் கமலத்திற்கு கொஞசம் துணிவு வந்தது.

அதுவரை சும்மா இருந்தவள் லேசான விசும்பலுடன்,“அது வந்துக்கா....வந்து......”

“சொல்றீ சிறிக்கி வயசுதா இருவதாகுது. ஒரு வேக்கியானத்தையும் காணம்.”

“தட்டுவண்டிலே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தா. நானும் மூணுமணிக்கே அடுப்ப பத்தவச்சு கஞ்சி காச்சுனே பானைக்கடியிலே எங்கியோ லேசா தூறுட்டிருக்கும் போலிருக்கு கஞ்சி வெந்து வர்ற சமயம் பளோர்னு சட்டி ஒடைஞ்சு முச்சூடும் கொட்டிப் போச்சுக்கா.”

“ஓகோ அவ்வளவு போதுமே. உங்க சின்னாத்தாளுக்கு இன்னிக்கி நீ அவ்வளவுதான். வெறகு கட்டை பொளக்கப் போகுது. எத்தன படி சோளம் போட்டே.”

“மூணுபடிக்கா.”

“மூணுபடியா உன்னய இன்னிக்கி ஊட்ட விட்டே தொரத்துனாலும் தொரத்திடுவா. பாரு. நானு மன்னாடும் சொல்லிட்டுதானே இருக்கேன். பாத்து பதவிசா நடந்துக்கண்ணு. நீ எங்கே உருப்படப்போறே. என்னக்கின்னாலும் ஒருநா உன்னை ஊட்டவுட்டு தொரத்ததான் போறா. அந்த கோவில் மேட்டு செல்லாயி சீரழிஞ்சா மாதிரி சீரழிஞ்சு ரோட்ரோடா அலையத்தான் போறே.” -என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு,



“ பொறைக்கு கொஞ்சம் மோர் குட்றீ.”

கமலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பத்துவயதில் தாயை இழந்த கமலாவுக்கு மறுவருடமே சின்னாத்தா வந்து சேர்ந்தாள்.

இதுவரை பட்ட துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று அடியும் உதையும் வார்த்தைகளும் வசவுகளும் வாங்கி வாங்கி மறத்துப் போனது.

இப்போதைய புதிய கவலை. நொடிக்கு நூறுதரம்.

“உன்னை ஊட்டஉட்டு தாட்றன்னைக்குதான் எனக்கு விடிவுகாலம்” என்கிறாள். எதேச்சையாய் பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் இதுபற்றி விசாரிக்கப் போக, அவள் இதையே பெரிசு படுத்தி ஓடிப்போன செல்லாயிக்கு நேர்நத கதிகளை கதைகதையாய் மீண்டும் ஒருமுறை கூறி பயமுறுத்தத் துவங்கினாள்.

மாட்டு ஜலங்கைகள் ஒலிக்க நான்கைந்து வில்லுவண்டிகள் வரிசையாய் தோட்டத்தில் நுழைந்தன.

“ஏண்டி மச மசன்னு நிக்கறே .போ சீக்கிரமா மூஞ்சியக் கழுவீட்டு, தலையக்கட்டு. பொட்டீல உன்ற சீருக்கெடுத்த பட்டு சீலைய எடுத்து கட்டிக்க உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காங்க.” என்று அவசரப்படுத்தினாள் சின்னாத்தா.

மறுபடியும் அசையாமல் நின்ற கமலத்தைப் பார்த்து, “என்னடி சொல்லிட்டேயிருக்கேன்.”

“சின்னாத்தா கஞ்சிப்பானை ஒடஞ்சுபோச்சு.”



“எனக்குத் தெரியுமடி காலையிலேயே சொல்லணும்னிருந்தேன். அது தூறுட்டுப் போச்சு. தட்டுவண்டகாரங்கள அய்யர் கடையிலே சாப்பிடச் சொல்லி பணங்கொடுத்துட்டேன். போனது போகட்டும் நீ நல்லவிதமா அவிங்க போற வரைக்கும் ஒழுங்கா நடந்துக்க.”

இப்படி பேசுவது சின்னாத்தா தானா இதுவரை இல்லாத புதிய பாசத்தோடு பேசுவது கமலாவுக்கு வியப்பாகவும் இதமாகவும் இருந்தது.

நிஜமாகவே நல்ல வாழ்வு வந்துவிட்டதா? என்று சந்தோசப்பட்டாள். கை கால்கழுவ கிணற்றடிக்கு ஒரு துள்ளலுடன் ஓடிய கமலாவைக் கண்ட பங்கஜம் “என்னடீ ஒரே துள்ளல்”

கமலாவுக்கு சிரிப்பு வந்தது கூடவே, “அக்கா நீ சொன்ன மாதிரியே என்னை ஊட்டவிட்டு தொரத்த ஆளுக வந்துட்டாங்கக்கா”.

“அடிக்கள்ளி அடிச்சனா பாரு அப்பவும் திமிரடங்கலே பாரு.”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p78.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License