இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கண் தெரியாத காதல்?

பாரதி தேவராஜ்


“திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது.

பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந்தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.”

“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”

“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பார்க்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளா வேலை செய்யும் ஒரு குரலை ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்த முறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”

“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.

“சரி, இன்னிக்கு சனிக்கிழமை.ஆபிஸ்லே வேலையிருக்கோ?”

“இல்லே கண்ணுசாமி பேங்க் வரைக்கும் போகணும்.”

“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”

“ஓயெஸ் போலாமே.”

“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”

“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”

“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”

“அட. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னு முடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சாக் கேட்டு வைப்போமேன்னு.”

“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”

“ஒம்பதரை ஆறது.”

“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் திறக்கறதுக்கு.”

“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போனா சரியாயிடும்.”



“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி திறந்திருக்குமில்லே?”

“ஜி.எம் வருவாரு ப்யூன் நடராஜன் கூட வந்திருப்பார்.”

“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க. சரி போயிடலாம்.”

தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்ல சிவந்த உடல். கட்டான தேகம். எவரையும் வசிகரீக்கும் தன்மை.

ஆபிஸ் வந்துவிட்டது.

“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”

“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்சப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன். ரோட்டைக் கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன்னாங்க அது சரின்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்.”

“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”

“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கிரமா வாங்க.”

காசை பர்சிலிருந்து எடுக்கப் போனார் கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்.

“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தெரியாதா?”



“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச்சல் மாதிரி வந்துச்சு. கண்ணு அப்ப நீல நிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனோ வீசின கல்லு என் கண்ணுலே பட்டுக் காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகாம எண்ணெயக் காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமாப் போயிடுச்சு. அப்புறம் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நான் இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்கு வெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணு தெரியாத நான் தனியாப் போக முடியாது .தம்பிதான் கூட்டிட்டுப் போகணும். அவம் பண்ற அட்டூழியம் சொல்லித் தீராது. சோறு போடற அம்மா ஒரு பக்கம் செத்துப் போற மாதிரி பேசுவா. தம்பி ஒரு பக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக் குடிச்சுட்டே காலத்த ஓட்டினேன். வாரத்துக்கொரு தாட்டி அப்பா டவுன்லேர்ந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்ச நாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ்டல்ல சேத்தாரு.அங்கதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன் சேர் பின்ற தொழில கத்துக் கொடுத்தாங்க. பெரிய பெரிய ஆபிஸ்லே வேலை கிடைச்சது என்ன மாதிரி இருக்கறவங்கள வச்சு காண்ட்ராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்கள மாதிரி நாலு நல்ல சனங்க கூடப் பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அது சரி என்ற கத பெரிசு அது இன்னக்கித் தீராது. நடராசண்ணே வந்தாச்சு போலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”

“ஆமா சாப்பிடுங்க. மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”

*****


பாங்கில் ஏகப்பட்ட கூட்டம்.

தாரணி, “கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”

“இல்ல மேடம். பாஸ் புக் என்ட்ரி போடணும். நான் பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பார்த்துட்டு வாங்க.”

தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியைப் போட்டு விட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.

“கண்ணுசாமி போகலாமா?”

“என்ன மேடம் அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா?”

“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம். அடுத்த வாரம் வரச் சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.

“ஹலோ”

“நான் அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம் நீ உடனே புறப்பட்டு வா.”

“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே. ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”



“மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நானும் கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?” என்று கண்ணுசாமி கேட்கவும், தாரணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆஸ்பத்திரி பக்கம் தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரை பார்க்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே, “சரி வாங்க.” என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.

வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.

“அக்கா அப்பாவ ஐசியூலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருபத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னோட நகை ஏதாச்சும் வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”

“என்னோட நகைய வச்சாக் கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவப் பார்க்க முடியுமா?”

“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ண மாட்டா.”

“கண்ணுசாமி அப்பாவ ஐசியூலே வச்சிருக்காங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கி அங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”

“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நான் ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”

“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிடலாமான்னு யோசனை பண்றேன்.”

“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதை விட இதுதான் முக்கியம். இன்னும் வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம். நீங்க ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பார்த்துக் கட்டுங்க.” தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.

“மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ண வேண்டாம் நா எந்த எதிர்பார்ப்புலேயும் இதைக் கொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவறதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காகக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”

*****




பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியைப் பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அப்புறம் சீர் செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒரு லட்ச ரூபாய் முதலில் கொடுத்து விட வேண்டும் என்று கண்டிசன் எல்லாம் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவைப் பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாள்.

மாலை மணி நான்கு இருக்கும். பத்து நாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,

தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுச்சாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.

“வாங்க கண்ணுசாமி. அப்பாவா?”

“ஆமாம்மா.”

அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள். கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்று மட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா அன்று முழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக் கொண்டேயிருந்தார். இந்தப் பத்து நாளும் தினமும் ஒரு முறையேனும் வந்து விசாரித்து விட்டுச் செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

“எம் பையனுக்கு கண்ணுதான் குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒரு கல்யாணத்தையும் பண்ண வேண்டியது என்கடமை. ஆனா பார்வையில்லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப் பொண்ணு கட்டிக்க வருவா?”

தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது.

“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பண உதவி செஞ்சதுக்கு மட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சரி சரிங்களா?

“சரிதான்.” என்பது போல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள் மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p86.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License