இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

ஜனாதிபதி அவார்டு கிடைக்கும்!

கலா அமுதன்

“அடிச்சே... மாப்பிள்ள...எம்புட்டு காரு, வண்டி... இம்புட்டு கண்ணு மூக்கு தெரியாம போயி இருக்காங்கோ... கட்சிக்காரங்க மீட்டிங் கீட்டிங் போடுறாங்களோ...” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டபடி நடந்து கொண்டிருந்தான்.

“மூக்கையா... உனக்கு விசயம் தெரியாதா நம்மூரு ஆத்துப்பாலத்துக்கிட்ட சினிமா சூட்டிங் எடுக்கிறாங்களாம்... அதாம் கார், வண்டின்னு நெறைய போயிருக்கு” என்று அவன் புதிருக்கு விடை கொடுத்தான் லெப்ட் பாண்டி.

பாண்டியாக இருந்த அவனது இடது கைப் பழக்கத்தால் லெப்ட் லெப்ட் என்று சொல்லி இப்போது அவன் லெப்ட் பாண்டியாகிப் போனான்.

“அப்டியா மாப்பிள்ள...நாமளும் போயி சூட்டிங் பார்த்துட்டு வருவோம். அப்படியே நம்மளை ஏதாவது நடிக்கக் கூப்பிட்டா நடிச்சுக் காட்டுவோம்... நமக்குத் தெரியாத நடிப்பா? எத்தனை நாடகத்துல நடிச்சிருக்கேன்...” மூக்கையாவிற்கு நடிப்பாசை எட்டிப் பார்த்தது.

இருவரும் ஓட்டமும் நடையுமாக ஆத்துப்பாலத்தை நோக்கிப் போனார்கள்.

அங்கே சூட்டிங் பார்க்க வந்த கூட்டம் அதிகமாக இருந்தது.

பரபரப்புடன் காணப்பட்ட டைரக்டரும், கேமரா மேனும் ஆற்று ஓரத்தில் அவர்கள் நினைத்தபடி படத்திற்கேற்ற இடத்தைத் தேடி அலைந்து ஒரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர்.

அந்த இடம் சூட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

டைரக்டர் தந்து உதவியாளருக்கு அந்தக் காட்சியை விளக்கிக் கூறினார்.

உதவியாளர்கள் அதைக் கேட்டுக் கொண்டு அந்தக் காட்சிக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.



டைரக்டர் “ஆர்ட்டிஸ்ட் ரெடியா? அந்த நடிகையை வரச் சொல்லுங்க...” என்றார்.

சேலையில் இருந்த ஒரு பெண் டைரக்டரை நோக்கி வந்தார்.

கிராமப்புறத்துப் பெண்ணாக சேலையைக் கட்டியிருந்த அவரைப் பார்த்தால் நடிகை என்றே தெரியவில்லை. அவர் புதுமுக நடிகை என்பதால் அவரை யாருக்கும் தெரியவுமில்லை.

டைரக்டர் அந்தப் பெண்ணிடம் காட்சியை விளக்கினார்.

அந்தக் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் போது மரம், செடி, கொடிகளையும் இழுத்துக் கொண்டு வரும். அந்த வேகத்தில் எதிர்முனையிலிருந்து ஒரு பெண் விறகு சுமந்து கொண்டு தன் குழந்தையை முதுகில் தொட்டில் போல் கட்டி நீந்திக் கடக்கிறாள். ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் அவளையும் அவள் குழந்தையையும் உரசிச் செல்வதால் குழந்தை வலி பொறுக்க முடியாமல் அழுகிறது. இவள் விறகுக் கட்டை ஆற்றில் விட்டுவிட்டுக் குழந்தையை மட்டும் காப்பாற்றிக் கரை சேர்க்கிறாள். கரையில் அந்தக் குழந்தையை தனது சேலையால் துடைத்துவிட்டு காது, கண், வாய்க்கு சுடுகாற்றளித்து அவசர சிகிச்சை அளிக்கிறாள்.

இந்தக் காட்சியைக் கேட்ட உதவி இயக்குனர்கள் இந்தக் காட்சி நல்லபடியாக அமைந்து விட்டால் டைரக்டருக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டினார்கள்.

டைரக்டருக்கும் தான் இப்போதே ஜனாதிபதி அவார்டு வாங்கி விட்டதாக கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியடைந்தார்.

சில நிமிடத்தில் அந்தப் புதுமுக நடிகை டைரக்டரிடம் “டேக் போகலாம் சார்!” என்றாள்.

டைரக்டரையும் கேமராவையும் வணங்கிய அந்த நடிகை ஆற்றுக்குள் இறங்கினாள்.



நடிகைக்குப் பாதுகாப்பாக ஆற்றுக்குள் அந்த ஆற்றின் தன்மையைத் தெரிந்த சில நபர்கள் முன் கூட்டியே இறங்கி நின்றிருந்தனர்.

நடிகை ... தயாரானாள்.

டைரக்டர் “டேக் போகலாமா?” என்றார்.

அவரது உதவியாளர்கள் “ஓகே சார்!” என்றனர்.

“ஸ்டார்ட் கேமரா...ஆக்சன்” என்றார் டைரக்டர்.

கேமராமேன் ஆற்றைக் குழந்தையுடன் கடந்து வரும் காட்சியைப் படமாக்கத் தொடங்கினார்.

ஆற்றில் குழந்தையைப் பின் முதுகில் தொட்டில் கட்டியபடி விறகுக்கட்டைத் தலையில் சுமந்தபடி நீந்தி வருவது போல் நடிகை வந்தார்.

இந்தக் காட்சி சரியாயில்லை என்றபடி திரும்பத் திரும்பப் படமாக்கினார்.

டைரக்டர் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

நடிகையைத் திட்டினார். அவர் புதுமுகம் என்பதால் அழுதபடி சென்றார்.

டைரக்டர் பிரேக் என்றபடி உட்கார சேரை நோக்கிச் சென்றார்.

மதிய சாப்பாட்டுக்குப் பின்பு மிகவும் கண்டிப்புடன் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் ஆற்றுக்குள் நீந்தி வந்து காட்டினார்.

இப்போது அந்தப் புதுமுக நடிகை “சார் ரெடி!” என்றார்.

உதவி இயக்குனர்கள் நடிகையை அந்தக் காட்சிக்கேற்றபடி தயார் செய்து குழந்தையைத் முதுகில் தொட்டில் கட்டி விட்டு ஆற்றில் இறக்கி விட்டனர்.

நடிகையும் இந்த முறையாவது இந்த டேக் ஓகே ஆகிவிடவேண்டும் என்று நினைத்தபடி ஆற்றுக்குள் இறங்கினாள்.



குழந்தை வீரிட்டு அழுதது.

நடிகையால் நடிப்பைத் தொடர முடியவில்லை.

டைரக்டர் எதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த ஆற்றங்கரையில் அந்தக் காட்சியைப் படம் பிடிக்க வேண்டுமென்று வந்தாரோ... அந்தக் காட்சி படமாக்க முடியவில்லை...

அவருடைய நோக்கத்தை, அந்த ரியாலிசத்தை செய்து முடிக்க அவளையே அழைத்து வந்து முடிக்க வேண்டும்.

அவளை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

அவள் வேறு யாருமில்லை. வெள்ளைத்தாய்

வெள்ளைத்தாய் அந்த ஆற்றைக் கடந்து காடுகளுக்குள் போய் விறகுகளைப் பொறுக்கி வந்து அதை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தில் அவளுடைய தாயையும்,கைக்குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டிருந்தாள். கணவன் ரோட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் குடிகாரனாக இருந்ததால் குடித்துவிட்டு மிச்சம் பணமிருந்தால் அவளிடம் கொடுப்பான். அவனிடம் பணத்தை எதிர்பார்க்க முடியாமல் இவள் விறகு பொறுக்கி வருவதைத் தொழிலாகக் கொண்டு விட்டாள்.

ஒருநாள் இவள் குழந்தையுடன் விறகு பொறுக்கி வரும் போது ஆற்றில் திடீரென்று வந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்ல அவள் விறகுக் கட்டையும், குழந்தையுடன் காப்பாற்றி கரை சேர்க்க முயன்று கடைசியில் விறகுக் கட்டை ஆற்றில் விட்டுவிட்டு குழந்தையுடன் கரையேறிய அவள் குழந்தையின் வாயுக்குள்ளும் வயிற்றுக்குள்ளும் சென்றிருந்த தண்ணீரை வெளியேற்ற அவள் பட்டபாடு அப்பப்பா... அதை நினைக்கக் கூட முடியவில்லை.



அந்தக்காட்சியை அந்தப் பகுதி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மழை நிலவரம் குறித்த செய்திக்காக ஆற்று வெள்ளத்தைப் படமெடுக்க வந்தவர் படமெடுத்து அனுப்ப அந்த பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விட்டது. இதைப் பார்த்த பலர் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார்கள்.

டைரக்டர் இந்த பரிதாபத்தைப் படமாக்கி விட்டால் தனக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்குமென்று அந்த இடத்துக்கே வந்து விட்டார்.

டைரக்டர் அனுப்பிய ஆள் வெள்ளைத்தாயைக் குழ்ந்தையுடன் கூப்பிட்டு வந்து விட்டார்கள்.

டைரக்டர் வெள்ளைத்தாயிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தபடி இரண்டுமுறை செய்து காண்பித்து விட்டால் நடிகை அப்படியே செய்து விடுவார் என்றார்.

“இல்லைங்க... குழந்தைக்கு அன்றைக்கிருந்தே உடம்பு சரியில்லை...காய்ச்சலாயிருக்கு...” என்றாள்.

படப்பிடிப்புக்கு வந்திருந்த சிலர், “வெள்ளைத்தாயி... நீயும் உன் குழந்தையும் சினிமாவில தெரிவீங்க... மாட்டேன்னு சொல்லாதே... நம்ம ஊரு பேரு வாங்கிடும்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால், வெள்ளைத்தாய் அதற்கு மறுத்தாள். அன்று திடீரென்று தண்ணீர் வந்தது. நான் ஏதோ பிள்ளையைக் காப்பாற்றனுமின்னு நினைச்சு வேகமாக நீந்தினேன். இன்னைக்கு அப்படியெல்லாம் செய்ய முடியாது... என மறுத்தாள்.

படப்பிடிப்பைப் பார்க்க வந்த வெள்ளைத்தாய் புருசன் “தன் மனைவிக்கும், குழந்தைக்கும் நல்ல காசு கொடுத்தால்தான் நடிக்க விடுவேன்” என்று சத்தம் போடத் தொடங்கினான்.

அந்த சினிமாவிற்கான புரடக்சன் மேனேஜர் வெள்ளைத்தாய் புருசனை அழைத்து ஐநூறு ரூபாய்த் தாளை அவன் கையில் திணித்தார்.

அவ்வளவுதான், “வெள்ளைத்தாய்... நீ முதலில் குழந்தையோட ஆற்றில் இறங்கி நடிகைக்கு நடிச்சுக் காண்பி... அப்புறம் நடிகை கடைசியாக நடிச்சுப்பாங்க...” என்று சொன்னான்.

“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்” என்று கிராமத்தில் இன்னும் நம்பிக் கொண்டுதானிருக்கிறார்கள். கணவன் சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் வெள்ளைத்தாய் குழந்தையுடன் ஆற்றில் இறங்கி ஒருமுறை நீந்திக் காண்பித்தாள்.

கேமராமேன் அவள் நீந்தி வருவதைப் படம் பிடித்துக் கொண்டார்.

இப்படியே இரண்டு மூன்று முறை வெவ்வேறி இடங்களிலிருந்து வெவ்வேறு ஆங்கிள்களில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

குழந்தை உடம்பு நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது. நீந்தி வரும் போது சில சமயம் ஆற்று நீரைக் குடித்திருந்தது. கரைக்கு வந்தவுடன் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தண்ணீரை வெளியேற்றினாள்.

கடைசியாக நடிகையின் முதுகில் அந்தக் குழந்தை தொட்டில் கட்டப்பட்டு சிறிது தூரம் மட்டும் குழந்தையுடன் நீந்திக் கரையேறுவது போல படமாக்கப்பட்டது.

கரைக்கு வந்தவுடன் குழந்தைக்கு நீரில் இருந்ததால் கை கால்கள் வெட்டி இழுப்பது போல் காட்சி அடுத்துப் படமாக்க வேண்டும்.

தற்போது குழந்தைக்கு கால், கை வெட்டி இழுக்கத் தொடங்கியது. நடிகை பயந்து போய் அந்தக் குழந்தையின் கை கால்களை நீவிவிடத் தொடங்கினாள்.

கதைக்கேற்றபடி குஅழந்தை கூட் நடிக்கிறதே... என்று கூட்டத்திலிருந்தவர்களெல்லாம் பேச வெள்ளைத்தாய் புருசனிடம் சொல்ல அவன் மகிழ்ந்து போனான்.

வெள்ளைத்தாய்க்கு மனதே சரியில்லை. குழந்தைக்கு ஏற்கனவே காய்ச்சல் வேறு இருந்தது. கணவனிடம் சினிமாக்காரங்க கொடுத்த ஐநூறு ரூபாயில் நூறு ரூபாயாவது அவனிடம் வாங்கி குழந்தையை டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காண்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

கூட்டமே கைதட்டியது.

டைரக்டர் முகத்தில் மகிழ்ச்சி வந்திருந்தது.

டைரக்டர் “டேக் ஒகே!” என்றார்.

வெள்ளைத்தாய் தன் குழந்தையை நடிகையிடமிருந்து வாங்கி உச்சி முகர்ந்தாள்.



அவள் சேலையின் முந்தானையைக் கொண்டு குழந்தையின் உடலிலிருந்த ஈரத்தைத் துடைத்தாள்.

குழந்தை கை கால்கள் குளிர்ந்திருந்தது... எப்போதும் அவளைப் பார்த்தவுடன் சிரிக்கும் அந்தக் குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சிரிப்பைக் காணோம்.

குழந்தையைச் சிரிக்க வைக்க முயன்றாள். அந்தக் குழந்தையின் தலை கீழே கவிழ்ந்தது.

பயந்து போன அவள் குழந்தையின் மூக்கில் கையை வைத்துப் பார்த்தாள். அதன் மூக்கில் மூச்சுக் காற்று வெளியேற வில்லை.

“அய்யோ... என் பிள்ளைக்கு மூச்சு வரலையே...” வெள்ளைத்தாயின் அலறல் அந்தப் பகுதி முழுக்க பிரதிபலிப்பதாக இருந்தது.

சினிமாக்காரர்கள் தங்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அனைத்தையும் பேக்கப் செய்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை இறந்து விட்டதறிந்து கிராமத்துக்காரர்கள் சண்டைக்கு வந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் டைரக்டர், நடிகை, கேமராமேன் என முக்கியமானவர்களெல்லாம் அந்த இடத்தை விட்டுப் போயிருந்தனர்.

புரடக்சன் மேனேஜர் வெள்ளைத்தாயின் புருசனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்.

அவன் அந்தப் பணத்தை வாங்கப் பிடிக்காமல் தூக்கி ஏறிந்தான். கிராமத்துக்காரர்கள் சினிமாக்காரர்களிடம் சண்டை போடத் தொடங்கியிருந்தார்கள்.

“அவங்களை விடுங்க... அவங்க போகட்டும்... என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்குதுன்னு தெரிந்தும் அவங்க கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ... என் குழந்தையை இழந்துட்டேனே...” வெள்ளைத்தாயின் புருசன் வாய்விட்டு அழுது கொண்டிருந்தான்.

டைரக்டருக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்கும். வெள்ளைத்தாய்க்கும் அவள் புருசனுக்கும் அந்தக் குழந்தை கிடைக்குமா?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p87.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License