இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பாலித்தீன் பை!

அண்டனூர் சுரா


மழை, வானத்திற்கும் பூமிக்குமாக கிருஷ்ணன் அவதாரம் எடுத்தது. மூட்டையை அவிழ்த்து பச்சை அரிசியை மேலிருந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி கொட்டியது அந்தப் புது மழை.

“டேய்... டேய் சன்னலை சாத்துடா...”

ஆலங்கட்டி மழையுடன் வந்த புயல் காற்றால் கதவுகள் அதுவாகவே அறைந்து கொண்டது.

“மெழுகுவர்த்தியைத் தேடுடா...”

“எங்கேண்ணே வச்சீங்க...”

கருணாகரனுக்கு வந்தது மூக்கின் மேல் கோபம்.

விருட்டென்று கல்லாவைத் திறந்தார்.சில்லரைக் காசுகள் சிரித்தன. பழைய விருந்தாளியாக இருந்த அந்த இரண்டு ரூபாய்த் துட்டை எடுத்து நீட்டினார்.

“டேய் குமரா...”

மழை இரைச்சலுக்கிடையில் அந்த அழைப்பு குண்டூசியாக காதிற்குள் நுழைந்தது.

“இதோ வந்திட்டேன் அண்ணே...

“ஓடிப் போய் மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் வாங்கிக்கிட்டு வா”



சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான். காலரைத் தூக்கி விட்டான். தோள்ப்பட்டைகளை உசத்திக் கொண்டு கில்லி விஜய் பாணியில் ”கபடி கபடி” என்று ஓடி சாலையைக் கடந்தான்.

குமரன் கடைக்குத் திரும்பும் போது அவனுக்கு இன்னொரு வேலை காத்திருந்தது.

முதலாளி கருணாகரன் மகன் சினுங்கிக் கொண்டிருந்தான். வழக்கமான பசி நேரம் அது. கூடவே மழையின் சாரல். போதாக்குறைக்கு வானத்திற்கும் பூமிக்குமான மின்னல் கம்பி ”பளிச் பளிச்” என்றது.

ஒரே தும்மலில் மூக்கு அசடுகள் துண்டைக் காணம்; துணியைக்காணம் என ஓடுமே அப்படி ஓடி மின்னலில் மின்சாரம் மறைந்து கொண்டது.

அரக்க இருட்டு மிரட்டியது. தான் மிரட்டுவது போதாதென்று தனது பட்டாளம் இடி, மின்னல் என திரட்டிக் கொண்டு வந்து மிரட்டியது.

குமரன் கண்களை மெதுவாக மூடித் திறந்தான். எந்த வித்தியாசமும் அவனுக்கு தென்படவில்லை. சரளைக்கற்கள் கொட்டினால் எழுமே இரைச்சல் அப்படியொரு இரைச்சல் வானத்திற்கும் பூமிக்குமாக.

முதலாளி கருணாகரன் மகன் வாயை மூடியும் அளவிற்குத் திறந்து அடிவயிற்றிலிருந்து அழுகையை குமட்டிக் கொண்டு வந்து கொட்டினான்.

“குமரன்...”

“என்னன்னே...?”

“தம்பியைக் கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வாரியா?”

“ம் .விட்டுட்டு வாரேண்ணே”

“மழை பெய்தேடா...”

“ஆமாண்ணே!”



“என்னடா செய்யலாம்?”

“குடை எங்கேண்ணே... ?”

“வீட்ல இருக்கேடா!”

“பின்னே என்னண்ணே செய்யலாம்?”

“புதுசா எதையாவது யோசியேடா”

குமரன் இஸ்திரிப் பெட்டியை ஓரங்கட்டினான். தேய்த்துச் சப்பாத்தி போல அடுக்கி வைத்திருந்த ஆடைகளை ஒரு வேட்டியில் அடுக்கி, “சரட் சரட்” டென்று ஆட்டுக்கால் முடிச்சைப் போட்டான்.

மேஜையின் மீது விரிக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து உதறினான்.

“தம்பியை இப்படிக் கொடுங்கண்ணே”

காயத்திற்கு கட்டுப் போடுவது போல போர்வையை குழந்தை மீது சுற்றினான்.

“சரி சுற்றிட்டே, தலை நனையுமேடா...”

“பொறுத்திருந்து பாருங்கண்ணே”

“என்னடா செய்யப்போறே?”

ட்ரவுசர் பாக்கெட்டிலிருந்து பாலித்தீன் பையை எடுத்தான். ஒரே ஊதலில் அந்தப் பை பிள்ளைத்தாச்சி உருவமெடுத்தது.

“தம்பி தலையைக் காட்டுங்கண்ணே”

“டேய் குமாரு. நீ இப்படி வா. தம்பியை பிடி.”

பையை வெடுக்கென பிடுங்கினான் கருணாகரன்.

“பையை தலையில நல்லா மாட்டுங்கண்ணே.”



“நீ தம்பியை மட்டும் நல்லா பிடிடா”

“அண்ணேன்னே... இறுக்கிக் கட்டாதீங்கண்ணே” “தம்பியை இப்படிக் கொடு”

மார்போடு அணைத்தான். தலை விசும்பாத அளவிற்கு ஒரு கையால் இறுகிப் பற்றினான். உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டான்.

முறிந்து விழும் மரக்கிளையைப் போல மீண்டும் ஒரு மின்னல். மரம் சரியும் ஓசையில் இடி முழக்கம்.

“குமரா! நீ கடையைச் சாத்திட்டு வீட்டுக்கு மழை விட்டப்பறம் போ”

“தம்பியை நீங்க கொண்டுக்கிட்டு போகப் போறீங்களாண்ணே”

“ம்...”

“பாத்துண்ணே”

“ம். நீ பார்த்துப் போ”

“சரிண்ணே”

கங்காரு, தன் குட்டியை சுமந்து கொண்டு செல்வது போல மழை, மின்னல், இடி என்று மூன்று தெருக்களைக் கடந்து கருணாகரனின் பயணம்.



குமரன் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். பாலீத்தீன் பை ஒன்றை பாக்கெட்டிலிருந்து எடுத்து தொப்பியாக கவிழ்த்தான். கடையின் வாயைச் சாத்தினான். கதவு சாத்தப்படவில்லை. “இந்த பாச்சா என்னக்கிட்டே பலிக்காது“ என்றவாறு கையை உள்ளே விட்டு வெளியே இழுத்தான். பின் மழையின் இடைவேளை தருணத்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான்.

புற்றுக்குள் நல்லபாம்பு நுழைவது போல அவனது காதிற்குள் தூரத்திலிருந்து வந்த ஒரு செய்தி நுழைந்து கொண்டிருந்தது.

அந்த செய்தி அவனது இதயத்தை முள் கம்பி இறுக்குவது போல இறுக்கியது.

“என்னண்ணே சொல்றே?”

“யாரப்பா குமாரா? உண்மைதாம்பா”

தலையில் கவிழ்த்திருந்த மெல்லிய பாலித்தீன் தொப்பியைக் கசக்கி மிதித்து விட்டு நூல் அறுந்த பட்டமாக அங்கும் இங்குமாக ஓடி கருணாகரன் வீட்டை அடைந்தான். மக்கள் கூடி இருந்தனர்.

“தம்பி குமரா! வந்து தம்பிய பாரேன்டா”

எட்டிப்பார்த்தான். அவனது கண்கள் தண்ணியில்லாத குட்டையில் தத்தளிக்கும் கெண்டை மீனைப்போல அலை பாய்ந்தது.

குமரனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

“ஒரு வினாடி தாமத்திருந்தால் புள்ள எனக்கில்லடா”

“எங்கேண்ணா அந்த பாலிக்கவரு?”

“அதோ கிடக்குடா”

தனக்குத்தானே விசிறிக் கொண்டும் பறக்கவும் தயாராகிக் கொண்டிருந்தது. குனிந்து எடுத்தான்.

“என்ன செய்யப்போறே?”

“அடுப்பில போடப்போறேன் அண்ணே.”

“வேண்டாமடா”

“பின்னே...?”

“புதைச்சிரு”

குமார் மண்வெட்டியுடன் கிளம்பினான். அவனது ஆழ்மனது துடித்தது. பாலித்தீன்கள் கருணாகரன் பிள்ளை போன்று பூமிப்பிள்ளையையும் இறுக்கவே செய்கின்றன. யார்தான் அதற்காக கவலைப்படுவது?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p91.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License