Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வாசம் தேடும் தூக்கம்

சகுந்தலா


அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது! இருக்காதா பின்னே? காலையிருந்து அவளுக்கு எத்தனை உளைச்சல்!

இரண்டு நாளைக்கு முன் இரவோடு இரவாக, கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் போன கணவன் உதயாதி நாழிகைக்குத் திரும்பிவிடுவான் என்று, கட்டான இடைப்பகுதியில், வலது கையின் செங்காந்தள் மலர் போல் தொங்கும் விரல்கள் ஒய்யாரமாய்ப் பதிந்திருக்க, இடது கையின் ஆலிங்கனத்தைப் பெற்றிருந்த வெற்றுப் பிரம்புக் கூடை. இடையில் இன்னொரு பகுதியைத் தொற்றிக் கொண்டிருக்க, கடற்கரை மணலில் எவ்வளவு நேரந்தான் காத்துக் கொண்டிருப்பது!

கடல்நீரில் குளித்தெழுந்த செங்கதிர்ச் சூரியன், உச்சிக்கு வந்து வெள்ளிப் பாளமாய் உரு மாறிவிட்ட பிறகும் கணவன் திரும்பாமல் போகவே, தெம்போடு நின்றவள் துவண்டு போய் ஒரு மணல் திட்டில் அமர, சூரியன் மேலைத் திசையில் சுழலுகின்ற பொன் தாம்பாளமாய் மாறியிருந்த நேரத்தில், கட்டுமரத்தில் கணவன் வந்து இறங்க, கொண்டு வந்த மீனையெல்லாம் அவள் கூடையில் அள்ளிக் கொட்டிக் கொள்கிறாள்

அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் சந்தை! அங்கே போனால் தான் மீனை விற்றுக் காசாக்கி, அரிசி வாங்கிக் கொண்டு வர முடியும்!

சந்தைக்குச் சென்றவள் மீனையெல்லாம் நல்ல விலைக்கு விற்றாகிவிட்டது! அரிசியும் வாங்கியாகிவிட்டது! விரைவில் வீட்டுக்குத் திரும்பி, காத்துக் கொண்டிருக்கும் கணவனுக்குப் பொங்கிப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் வேக நடை போட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.



அப்போதுதான் அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போலிருந்தது. சரிதான்! அப்படித் தூங்கிவிட்டால்... கடலுக்குள் சென்று இரண்டு நாளைக்குப் பின் திரும்பியிருக்கும் கணவன் குடிசையில் ஆசையாகக் காத்துக் கொண்டிருப்பானே!

தூக்கக் கிறக்கத்திலும் அவள் கால்கள் நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டன! அவளுக்கும் ஆசை இருக்காதா?

அந்த நேரம் பார்த்துத்தானா பாழாய்ப் போன மழை ‘சடசட’வெனக் கொட்ட வேண்டும்? அதற்கென்ன நேரமா காலமா? இடமா தேசமா? மீன்காரியின் அவசரம் அதற்கெங்கே தெரியப் போகிறது?

பாதைக்குப் பக்கத்திலிருந்த குடிசைக்குள் மழைக்காக ஒதுங்கினாள் மீன்காரி. உள்ளே மினுக்கு மினுக்கென்று ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘கம்’மென்ற மலர் மணம் குடிசை முழுதும் நிரம்பியிருந்தது. ஒரு பக்கத்தில் இரண்டு மூன்று கூடைகள் இருந்தன. எல்லாவற்றிலும் மல்லிகை மலர்கள்.

குடிசைக்குள் தடுத்திருந்த ஒரு சின்ன அறைக்குள்ளிருந்து பூக்காரி வந்தாள். மழைக்காக ஒதுங்கியது பற்றி மீன்காரி சொல்ல, பூக்காரியும் சரியென்று அவளை உட்காரச் சொன்னாள்.

துணியில் முடிந்த அரிசிப் பொட்டலத்துடன் பிரம்புக் கூடையை ஒரு புறத்தில் வைத்த மீன்காரிக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் கணவனின் நினைப்பில் சமாளித்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

மழையோ ‘சோ’வெனப் கொட்டிக்கொண்டிருந்தது. கடற் கணவனைப் பிரிந்த மேகத்திற்கு எத்தனை நாள் ஏக்கமோ? ஆசை தீரப் பொழிந்து கொண்டிருந்தது. நடுநிசியும் ஆகிவிட்டது! இன்னும் நின்றபாடில்லை.



மீன்காரி நினைத்துக் கொண்டாள்: சரி..! கணவன் இதற்குள்ளாக டீக்கடையில் ஏதாவது பொரை பிஸ்கட் வாங்கித் தின்றுவிட்டு, நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பான்! இனிமேல் மழை விட்டாலும் கூட ஒண்டிக் கட்டையாய் ஊருக்குத் திரும்ப முடியாது! அங்கேயே தூங்கிவிட்டுக் காலையில் போகவேண்டியது தான்’- பூக்காரியும் அதை ஆமோதித்தாள்.

பூக்கூடைகளுக்குப் பக்கத்திலேயே இரண்டு பெண்களும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார்கள். அம்மாடி! மீன்காரிக்கு நிம்மதி! நன்றாகத் தூங்கலாம்! கண்ணை நன்றாக மூடிக்கொண்டாள். முதலில் ஒருக்களித்துப் படுத்தவள் பிறகு புரண்டு படுத்தாள்.

இது என்ன ஆச்சரியம்! கண்கள் தாம் மூடிக்கொண்டிருக்கின்றனவே தவிர, தூக்கம் மட்டும் வரவில்லையே! முனகிக் கொண்டே புரண்டு படுத்தாள்.

“என்ன, புருஷன் நினைப்பு வந்திடுச்சா?” பூக்காரி கேட்டாள்.

“புருஷன் நினைப்புமில்லை ஒண்ணுமில்லே! அதை அப்பவே விட்டுட்டேன்!” மீன்காரி பதில் சொன்னாள்.

“பின்னே ஏன் தூக்கம் வரவில்லை?” பூக்காரி மீண்டும் கேட்டாள்.

“அது தான் எனக்குத் தெரியல்லே” மீன்காரி மறுபடியும் புரண்டாள்.


எவ்வளவு நேரந்தான் இப்படியே நகர்வது! மீன்காரியின் முனகல் பூக்காரிக்கும் இடைஞ்சலாயிருந்தது. மீன்காரியின் எள்ளுப் பூ நாசி ‘சர்’ரென்று சொடுக்குப் போட்டு ஏதோ அடைப்பை அடிக்கடி போக்கிக் கொண்டிருந்தது.

. “சனியன், ஏன் தான் தூக்கம் வரல்லியோ?” என்று வாய்விட்டு வேறு பிதற்ற ஆரம்பித்தாள் மீன்காரி.

திடீரென்று பூக்காரிக்கு ஞானோதயம் ஆனது போலிருந்தது!

எழுந்தாள்! தலைமாட்டிலிருந்த பூக்கூடைகளை, தடுத்திருந்த உள் அறைக்குள் கொண்டு போய் வைத்தாள். பிறகு மீன் கூடையை எடுத்துத் தலை மாட்டுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

கூடைக்குள்ளிருந்து ‘குப்’பென்று மீன் வாசைன வீசியது. அடுத்த கணம்… மீன்காரி குறட்டைவிட ஆரம்பித்தாள்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p94.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License