இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வரவு செலவுக் கணக்கு

அண்டனூர் சுரா


இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை கொஞ்சம் இருக்கிறது.

அக்காவை கடைப்பிடித்து எழுதுவதில்; எதோ ஒருவகை சலனம் எனக்குள் உண்டாவதை உணரமுடிகிறது. ஐம்பது பைசா ஊறுகாய் வாங்குவதைக்கூட தவறாமல் எழுதிவிடும் பழக்கம் உடையவள். அவள், இரகசியப் பொருட்களைக் கூட விலையையும் சேர்த்து எழுதி வைக்கும் பழக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதில் வேறு கடைக்காரர் கொடுக்கும் ரசீதுகளைக் கூட மயிலிறகைப்போல நடுப்பகத்தில் வைத்திடுவாள். நல்ல வேலை கொடுக்கும் வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரரிடம் ரசீது கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் மட்டும் அவளிடம் இல்லை. அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால் அடிக்கடி வீட்டை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பாள்.

எனது அக்கா மாதிரி வரவு செலவுக் கணக்கை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். சிகரெட் , தண்ணிச் செலவையும் நான் எழுதியாக வேண்டுமோ….?. அப்படி எழுதி வைக்க என் ஆழ்மனது இடம் கொடுக்கவில்லை. முதலில் எதையெல்லாம் எழுத வேண்டாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். பட்டியல் நீளவில்லை. சிகரெட், தண்ணியோடு நின்று விட்டது.

நான் தினம் வரவு செலவு கணக்கு எழுதுவதை என் அக்காள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனசுக்குள் ரசித்திருக்கிறாள். வரவு செலவு கணக்கு எழுதும் எல்லோரையும் அவளுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. அதற்கான காரணத்தை ஒரு முறைக்கு பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். “எவ்ளோ வேண்டுமானாலும் நம்பி கடன் கொடுக்கலாம் கடன் வாங்கலாம். அவங்கக்கிட்ட வரவு செலவு வச்சிக்கிறது கல்லில் எழுதின எழுத்து” நான் திரும்ப கேட்கிறேன். “எங்கள மாதிரி ஆள்களுக்கிட்ட வச்சிக்கிற வரவு செலவு?” பட்டென்று சொன்னாள். “ என்னா தண்ணியில எழுதுற கணக்குதான்.”



முச்சந்தி வரை மட்டுமே வரும் பெண்களைப் போல வாங்கிய சம்பளம் பதினைந்து தேதியோடு சரி. அதற்குப்பிறகு அக்காதான் எல்லாம். சம்பளத்தேதியில் அக்கா கணக்கு போகத்தான் எனக்கு. இதையும் தாண்டி நண்பர்கள் யாரும் ஊருக்கு சென்றால் அம்மாவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதோடு சரி.

அக்கா என்னைப் பார்க்க பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறாள். ஒரு வாரப்பொழுதுகளை பெங்களுரில் கடத்த வேண்டும் என்பதுதான் அவளுடைய அவா. கூடவே ஐந்து வயதாகும் மகனையும் அழைத்து வந்திருந்தாள். ஆறு நாட்கள் நகரத்தை சுற்றிப்பார்ப்பதிலேயே கடந்து விட்டது. ஏழாம் நாள் இன்று.

“ரகு….. நீ வரவு செலவு நோட் போட்டிருக்கேனு கேள்விப்பட்டேன். எங்கே காட்டுப் பார்க்கலாம்”

எனக்குள் குறுகுறுத்தது.

“அதை என்னதுக்கு நீ கேட்கிறேக்கா……?”

“சும்மா பார்க்கலாமுனுதான்”

நோட்டை எடுத்து நீட்டினேன்.

“ரொம்ப சின்ன நோட்டா போட்டிருக்கே…..”

“விரலுக்கேத்த வீக்கம் “

“எழுத்தெல்லாம் கோழி சீக்கிற மாதிரி எழுதிருக்கே”

“எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமுனுதான்”

“நீ நினைக்கிற மாதிரி இல்ல ரகு, வரவு செலவு கணக்கு. கிட்டத்திட்ட சுய சரிதை மாதிரி அது. ரொம்ப வெளிப்படையாகவே இருக்கணும்”

“வெளிப்படையாக இருக்கணுமுன்னா…?”



“இப்ப நீ சிகரெட்டை புகைச்சிட்டு தூக்கியெறிஞ்சியே. அந்தக்கணக்கெல்லாம் இதுல வரணும்..”

அவளுடைய வாதத்தில் குறுக்கிட்டேன்.

“நீ ஒரு ஆளுக்கா. நேற்றைக்கு ஒரு ரூபா கொடுத்து டாய்லெட்க்குள்; போனேன். அதெல்லாம்மா எழுதணும்.”

“பின்னே எழுதுறதில்லையா…?”

பக்கத்தை முழுவதுமாக புரட்டிவிட்டு உள்ளங்கையில் நோட்டைத் தட்டினாள். நோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த தூசிகள் துண்டைக் காணாம் துணியைக் காணாம் என பறந்தது.

அடுத்தச்சுற்றாக நோட்டை விரித்து வைத்துக்கொண்டு முனுமுனுத்தாள்.

“என்ன ரகு. சம்பளம் ஐய்யாயிரம் வாங்கிருக்கே அது வரவு. ஆனா…. செலவு வெறும் ரெண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு மட்டும் தான் வருது.”

“ஆமாம் மீதி எங்கே….. .? ” மனதிற்குள் அலசினேன்.

“ரகு… நான் கொடுத்த ஆயிரத்தில முந்நூறு ரூபாய்க்கு கணக்கை காணாம்..”

நெற்றி தசைகளை ஒரு சேர இழுத்து வந்து துலாவினேன். முந்நூறுக்கான செலவு தென்பட்டது. ஆனால் சம்பளக்கணக்கில் மீதி…?”

அக்கா பெருமூச்சு விட்டப்படி சொன்னாள்.

“ம்…. ரகு. கண்டுப்பிடிச்சிட்டேன். என் பையன் பிறந்த நாளுக்கு மாமன் ட்ரெஸ் முந்நூறு ரூபாய்க்கு எடுத்து அனுப்பிருந்தியே ஞாபகமிருக்கா… ?”

“..ம்.” தலையாட்டினேன்.

“அடுத்து ரகு . அம்மாவிற்கு மூவாயிரம் கொடுத்து அனுப்பினியே. அதை எழுதல.”

பேனாவை திறந்து எழுதத்தொடங்கினாள்.

“அக்கா நிறுத்துக்கா.”

“ஏன்டா…….?”

“தம்பிக்கு ட்ரெஸ் எடுத்ததையும் அம்மாவுக்கு பணம் அனுப்பி வைத்ததையும்மா எழுதி வைக்கணும்!”

“ஆமான்டா. அப்ப தான் வரவு செலவு கணக்கா வரும்”

“என்ன வரவு செலவு கணக்கா வரும்…..?”

“என்னடா சொல்றே…?”



“நீ நினைக்கிற மாதிரி இல்லக்கா. உழுவுறவன் கணக்குப்பார்த்தா உலைக்கு கூட மிஞ்சாது. அப்பா அப்படியெல்லாம் கணக்கு பார்க்காத வரைக்கும் தான் அவரு தொடர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தார். நானும் நீயும் கணக்குப் பார்த்தோம். உழுத நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு நீ சென்னையிலேயும் நான் இங்கேயும் இருக்கிறோம். “

“நான் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி கொதிக்கிற”
“பின்னே என்னக்கா நீ. பெத்தவளுக்கு கொடுக்கிற பணத்தையெல்லாம் செலவுல எழுதுறது எனக்கு நல்லாதா படல. நம்ம அம்மா நமக்கு கொடுத்த பாசம் நேசம் எல்லாத்தையும் கணக்குப்பார்த்தா நாம அம்மாவுக்கு கொடுக்க பூமியே பத்தாதுக்கா.”

அவளுக்குள் கீறல் விழுந்ததை என்னால் உணர முடிந்தது.

“சரிடா ரகு நான் கிளம்புறேன். லீவு கிடைச்சா சென்னைக்கு வா. இந்தா செலவுக்கு பணம். முன்னூறு வச்சிக்கோ.”

வழக்கமாக அக்கா என்னிடமிருந்து பிரியும் போது கொடுக்கும் சம்பிரதாயமாகிப்போன கரன்சி இது .

கையிலேயே நோட்டு வைத்திருந்ததால் வரவில் முந்நூறு வைத்தேன்.

“வாய் கிழிய பேசினே. அக்கா கொடுக்கிறத நோட்டுல எழுதுற”

“அக்கா… உறவுக்காரங்கக்கிட்ட வாங்கியதை எழுதணும். கொடுக்கிறதை எழுதக்கூடாது”

“அய்யோ…. எனக்கு தலை சுத்துதுடா.” எனச் சொல்லிக்கொண்டு அக்கா அவளுடைய நோட்டைத் வேகமாகத் தேடினாள்.
“எப்பா ரகு…. சொல்லு.”

“எனக்கு முந்நூறு கொடுத்திருக்கிற” அக்கா சிடுசிடுத்தாள்.

“அட அது இல்லப்பா. கடைசியா ஒரு வசனம் பேசினியே”

“அதை வீட்ல போய் யோசிச்சு எழுதுக்கிறலாம். இப்ப வருகிற பஸ்ல சீட் பிடிக்கப்பாரு.” முண்டியடித்துக்கொண்டு ஓடினாள் அக்கா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p98.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License