இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வித்தியாசமான கிராமம்

அண்டனூர் சுரா


குறுஞ்செய்தி ஒன்று மொபைலில் வந்து விழுந்தது.

நீண்ட நேரமாக எதிர்பார்த்திருக்கும் செய்தியாக இருக்கலாம் என வேகமாக திறந்து படித்தார் அணுசக்தி துறை அமைச்சர் பீமராகவ்

”சாரி சார். பிப்டி பேசன்ட் டெத். இன்குலிடிங் டூ டாக்டர்”

செய்தி , அமைச்சர் முகத்தில் துக்கத்தை ஓங்கி அறைந்தது.

அவசரமாக மொபைலில் டெக்ஸ்ட்டை திறந்து ” கௌமெனி சில்ரன்?” என டைப் செய்து அதே நம்பருக்கு அனுப்பினார்.

மறுவினாடிக்குள் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. ” டென் சார்.”

அதைத்தொடர்ந்து மற்றொரு தகவல் ” ஜஸ்ட் நவ். ப்போர் டாக், இலவன் கௌ டெத்”

அமைச்சர் மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரியான ஒரு உணர்வு. மெல்லிய திகில் பற்றியது.

அதே எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். மறுமுனையில் துறை இயக்குனர் பீட்டர் உட்டன்ஸ்

” உட்டன்ஸ் ...நான் சம்பவ இடத்திற்கு வரட்டுமா?”

” சம்பவ இடத்திற்கா சார்? வாய்ப்பே இல்லைங்க சார்..”

” ஏன்....?”

” நுழைய தடைங்க சார்”

” எனக்குமா?”

” இது ஹெல்த் டிப்பார்ட்மென்ட் ஆர்டர் சார். சென்ட்ரல் மினிஸ்டர்களுக்கு எப்படினு தெரியல சார்.”



தனது துறை முள்ளின் மேல் பயணம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தார் அமைச்சர்.

” சரி. மக்களின் மனநிலைதான் என்ன?”

” மக்கள் உண்ணாவிரதத்தை கை விடுவதாக இல்லைங்க சார்.”

” என்னதான் சொல்றாங்க?”

” எல்லா அணு உலைகளையும் மூடும் வரை உண்ணாவிரதத்தை கை விட முடியாதுங்குறாங்க சார்”

அவர் காதிற்குள் தீக்கோலை சொறுகியது மாதிரி இருந்தது அந்த செய்தி.

” அணுக்கதிர் வீச்சின் அபாயம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்களா..?”

” எஸ் சார். முழுமையா சார். சார்... மற்றொரு அணு உலையும் வெடிக்கிற கன்டிசன்ல இருக்காம் சார்”

“ வாய்ப்பில்லைங்க உட்டன்ஸ்”

“ என்னச் சொல்றீங்க சார்.?”



"அந்த அணு உலை சைன்டிஸ்ட் கட்டுப்பாட்டுக்குள் வந்திருச்சு”

” மக்களிடம் பதட்டத்தை தணிக்க அரசின் நிலைப்பாடு என்னங்க சார்?”

”இருபத்து நான்கு மணி நேரத்திற்கு எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தடை விதிச்சிருக்குறாங்க. அது மட்டுமல்ல, இந்த மாத முழுமையும் செய்திப்பிரிவை அரசுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் முடிவு செய்திருக்கிறாங்க”

” நீங்க இப்ப எங்கே சார் இருக்கீங்க?”

”தலைநகரத்தில்”

“உலக நாடுகளுக்கு சம்பவம் தெரியுமா சார்?”

”வல்லரசு நாடுகளின் பார்வைகள் நம் நாட்டுப்பக்கம் திரும்பிருக்கு. அதுமட்டுமல்ல, உதவிகள் கேட்டா செய்ய தயாராக இருப்பதாகவும் சொல்லிருக்கிறாங்க”

”நம்ம துறை அதற்கு என்ன முடிவு செய்திருக்கு சார்.”

”எல்லா பிரச்சனைகளையும் நம்மளே சால்வ் பண்ணிடலாமுனு சொல்லிருக்கிறேன்.. பத்து பிசிக்ஸ் சைன்டிஸ்ட்டை அங்கே உடனே அனுப்பி வச்சிருக்கேன் உட்டன்ஸ்.”

”குட் சார். நான் அவங்கள உடனே மீட் பண்றேன் சார்”

”நோ. அவங்களே சம்பவ இடத்துக்கு வந்திடுவாங்க. இன்னும் பத்து நிமிஷத்திலே எல்லா கம்யூனிகேசன் நெட் வொர்க்கையும் டிஸ் கனைக்ட் செய்யப் போறாங்க”

”வாட் சார்.!என்ன சொல்றீங்க!”

”அதற்குக்குள்ளாகவே கூட இருக்கலாம்”



”சார் . மற்றொரு செய்தி. உண்ணாவிரதம் இருப்பவர்களில் பலர் இரத்த வாந்தி எடுக்குறாங்களாம் சார்.”

தர்மச்சங்கட்டமான செய்தியை வேப்பெண்ணை மாதிரி விழுங்கிக் கொண்டு மேலே சொன்னார் அமைச்சர்.

” ஆம்புலன்ஸ் கூடுதலாக அரேஞ்ச் பண்ணிருக்கு. அவங்கள உடனே ஹாஸ்பிட்டல்ல அட்மிட்பண்ணப் பாருங்க.”

”சரிங்க சார். ”

”ஒரு முக்கியமான செய்தி. அரசே இழப்பீடுகளை அறிவிக்கும் வரை நீ யாரிடமும் செய்தியை கசிய விட்டுவிடக்கூடாது”

” ஓகே சார்”

” திஸிஸ் நாட் மை அனோன்ஸ். பிரசிடன்ட் ஆர்டர்”

அமைச்சரின் அதிகாரம் உட்டன்ஸ் ஆழ்மனதில் தரைத்தட்டி உட்கார்ந்து கொண்ட மறுகணம் இணைப்பு அதுவாகவே துண்டித்துக் கொண்டது.

*****



கடற்கரை ஓரங்களில் புதுக்காலனிகள் கொத்தாக முளைத்திருந்தன. தண்ணீர் தொட்டியை தலைகீழாய் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் அமைப்பாக காலனிகளின் மேல்தளம். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவைகளும் அணு உலைகள் தானோ! என கிலி மூட்டச்செய்தன. மேல் தளத்தின் உயரத்தில் நீள, குறுக்குவாக்கில் கம்பிகள் கட்டி அதில் சேலைகளும் வேஸ்டிகளும் காய்ந்துக்கொண்டிருந்தன.

சிவப்பு சுழல் விளக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாலைகளை உராய்த்துக்கொண்டு காலனி குடியிருப்புக்குள் நுழைந்தன. கட்டியுள்ள புது அங்காடி , சிற்றுண்டி கடைகளை திறந்து வைத்து உரையாற்றினார் அமைச்சர் பீமராகவ்.

” பத்து வருடத்திற்கு முன் நிகழ்ந்த கசப்பான சம்பவத்தை மறந்து விடுங்கள் மக்களே. அதற்கான நிவாரணம் மிக விரைவில் அரசு அறிவிக்க உள்ளது. அணு உலைகளில் உள்ள காலியிடங்களை உங்களைக் கொண்டே நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. மற்றொரு முக்கியமான செய்தி, உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்றுள்ளது. விஞ்ஞானம் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளில் பத்துப்பேர் மிக விரைவில் அணு விஞ்ஞானியாக இந்த அணு உலைகளில் பணியாற்ற வர இருக்கிறார்கள் மக்களே.”

கூட்டத்திற்குள் திடீரென்று ஒருவித சலசலப்பு. குதூகலப் பூரிப்பு

”உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி பள்ளிக்கூடம் ,கல்லூரி , அங்காடி அதுவும் உலகத்தரத்தில். இன்னும் இன்னும் ஏராளமான சலுகைகள் உங்களுக்கென்று அரசு அறிவித்து வருகிறது. அனைவருக்கும் காரிய உடைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த உடை அணுக்கதிர் வீச்சிலிருந்து உங்களை காக்கும் . இந்த அரசைப் போல.......”

சிறிது நேரத்தில அமைச்சர் வாகனங்கள் மூச்சுக்காற்றில் கரி பூசிவிட்டு மறைந்து கொண்டன.



ஒரிரு நாட்களுக்குப்பிறகு தூரத்தில் அணு உலைக்கு நேர் தென்கிழக்கே டேங்கர் லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து சென்றன. சிறிது நேரத்தில் பூமி கொப்பளங்களாக மணல்மேடுகளும் கல் குவாரிகளும்.

மறுவாரத்தில் இன்னும் அழகாய் ஒரு கட்டிடம் உலகத்தரத்தில பிறந்திருந்தது. இத்துடன் கட்டிட வேலைப்பாடுகள் முடிவுக்கு வந்தவிட்டதாக காது வழிச்செய்தி உலாவியது.

அடுத்தொரு நாளில் அதுவாகவே அந்த புதுக்கட்டிடம் திறந்து கொண்டது. இரு வழிப்போக்கர்கள் பேசிக் கொண்டார்கள்.

”இந்தக் கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் வரவில்லை?”

” சுடுகாட்டை திறந்து வைக்க அமைச்சர்களெல்லாமா வருவார்கள்?”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p99.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License