இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

வீடு திரும்புதல்

மூலம்: இரவீந்திரநாத் தாகூர்

ஆங்கிலம் வழி தமிழில்:முனைவர் இர. மணிமேகலை


அந்தக் கிராமத்துச் சிறுவர்களுக்கிடையில் குறும்புக்குத் தலைமை தாங்குவது ஃபதிக்சக்ரவர்த்திதான். ஒரு நாள் புதியதொரு குறும்பு செய்ய அவன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். நதிக்கரையோர மணலில் உருண்டு திரண்ட பெரிய மரமொன்றைப் படகுக்குப் பாய்மரம் செய்வதற்காகப் போட்டு வைத்திருந்தார்கள். அவனது திட்டமென்னவென்றால், அவர்களனைவரும் சேர்ந்து அந்த மரக்கட்டையை விசையுடன் தள்ளிவிட்டுவிடவேண்டும். மரக்கட்டையின் உரிமையாளர் அதை யார் தள்ளிவிட்டிருப்பார்கள் என்று வியந்து பார்ப்பார். அதற்குமேல் அவருக்குக்கோபமும் வரும். இதைக்கண்டால் ஃபதிக்கின் குழுவினருக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அனைவரும் இந்தத்திட்டத்திற்கு ஒரே மனதாய் சம்மதித்தார்கள்.

திட்டமிட்டபடி செயலாற்றத்தொடங்கியிருப்பார்கள், அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஃபத்திக்கின் தம்பி மக்கான் ஒரு வார்த்தையும் பேசாமல் மரக்கட்டையின் முன் வந்தமர்ந்தான். ஒரு கணம் அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். பின் அவர்களில் ஒருவன் மக்கானை பயமுறுத்தும் விதமாக எழுந்திருக்கச் சொன்னான். ஆனால் மக்கான் அசட்டையாக அமர்ந்திருந்தான். அந்த விளையாட்டு தேவையற்ற ஒன்று என்று சிந்திக்கும் ஓர் இளம் தத்துவஞானி போல் அவன் அமர்ந்திருந்தான். ஃபதிக் கோபத்துடன் ‘மக்கான்’ என்று கத்தினான், “நீ இப்ப எழுந்திரிக்கல நான் உன்ன செம்மையா அடிச்சிருவேன்’.இதைக்கேட்ட மக்கான் இன்னும் சௌகரியமாக அமர்ந்தான். அனைவரின் முன்பும் ஃபதிக் தன்னுடைய மரியாதையைக் காக்க வேண்டியதாயிற்று. அவன் பயமுறுத்தலைத் தொடரவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. அந்த இக்கட்டான சூழலில் அவனது மனோதரியம் சற்றுக் குறைந்துதான் போனது. இருப்பினும், துறுதுறுப்பான அவனது சிறுமூளை புதிய திட்டம் ஒன்றைத் தீட்டத் தொடங்கியது. மக்கானுக்கு ஏமாற்றத்தைத் தருவதாகவும் அவனது நண்பர்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கும்படியும் திட்டமிட்டான். மரக்கட்டையை மக்கானுடன் சேர்த்துத் தள்ளிவிடும்படிக் கட்டளையிட்டான். மக்கான் அதைக்கேட்டு மரக்கட்டையுடன் சேர்ந்திருப்பதுதான் மரியாதை என எண்ணிக் கொண்டான். அதைப் பெருமிதத்திற்குரிய விஷயமாக நினைத்ததால் அதில் ஆபத்தும் கலந்திருப்பதை மக்கான் கவனிக்கத் தவறிவிட்டான். சிறுவர்கள் அனைவரும் ‘ஒன்று, இரண்டு, மூன்று…போ’ என்று கூச்சலிட்டவாறே மரக்கட்டையைத் தள்ளி விட்டார்கள். ‘போ’ என்றவுடன் மரக்கட்டை நகர்ந்து விட்டது. மரக்கட்டையுடன் சேர்ந்து மக்கானின் தத்துவம் பெருமை எல்லாம் போனது.

ஃபதிக்கின் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டார்கள். ஆனால் ஃபதிக்குக்குத்தான் கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன நடக்குமென்று அவனுக்குத் தெரியும். அவன் மேல் எந்தத் தவறும் இல்லை. மக்கான் அந்த இடத்திலிருந்து குருடாகிப் போன விதியைப் போல எழுந்திருந்தான் மேலும் சீற்றத்துடன் வீறிட்டான். ஃபத்திக்கை நோக்கி ஓடிவந்த மக்கான் அவன் முகத்தைக் கீறி, அடித்து, உதைத்துப் பின் அழுதவாறே வீட்டை நோக்கி ஓடினான். நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது.



நதிக்கரையோரம் மூழ்கிக்கிடந்த தட்டையான பெரும் படகின் முனையில் அமர்ந்து ஃபதிக் தன் முகத்தை அழுத்தித் துடைத்தவாறு சிறிய புல் ஒன்றைக் கொறித்துக் கொண்டிருந்தான். படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதிலிருந்து நரைத்த தலை, கறுப்பு மீசையுடன் ஒரு புதியவர் இறங்கினார். ஒன்றும் செய்யாமல் அங்கே அமர்ந்திருந்த அந்தச் சிறுவனிடம் அவர், ‘சக்ரவர்த்தி எங்கு இருந்தார்னு தெரியுமா’ என்று கேட்டார். ஃபத்திக் புல்லைக் கொறித்தவாறே ‘அங்கதான்’ என்றான். அவர் மறுபடியும் கேட்டார். அவன் படகின் முன்னும் பின்னும் தன் கால்களை அசைத்துக் கொண்டே, ‘போய்க் கண்டுபிடுச்சுக்கோங்க’ என்று மீண்டும் புல்லைக் கொறிப்பதைத் தொடர்ந்தான். அந்த நேரம் பார்த்து வீட்டில் வேலை செய்பவர் வந்து ஃபத்திக்கை அம்மா கூப்பிடுவதாகக் கூறினார். ஃபத்திக் அந்த இடத்தை விட்டு நகர மறுத்து விட்டான். இப்பொழுது வேலை செய்பவர் முதலாளியானார். அவர் முரட்டுத்தனமாக ஃபத்திக்கைத் தூக்கினார், ஃபத்திக் செயலற்றவனானான்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஃபத்திக்கின் அம்மா அவனிடம் கோபத்துடன், ‘ நீ மறுபடியும் மக்கான அடிச்ச, அப்படித்தான?’ என்றார். அவனும் கோபத்துடன், ‘இல்லையே, உங்ககிட்ட அப்படி யார் சொன்னது? என்று கேட்டான். அவள் கத்தினாள், ‘ பொய் சொல்லாத, நீ அடிச்சிருக்க’ . ஃபதிக் பிடிவாதமாக, “ நான் அடிக்கல, மக்கான்கிட்டயே கேளுங்க” என்றான். தான் சொன்ன சொல்லிலிருந்து மாறக்கூடாது என்று ஃபதிக் முடிவு செய்திருந்தான், “ஆமாம்மா. அவன் என்ன அடிச்சான்” ஏற்கனவே ஃபத்திக்கின் பொறுமை எல்லை கடந்திருந்தது. சட்டென அவன் மக்கானை நோக்கி நகர்ந்து பலமாகத் தன் கரங்களால் தாக்கினான். ‘இந்தா இது பொய் சொன்னதுக்கு” என்று குத்தினான். அம்மா ஃபத்திக்கிடமிருந்து மக்கானை விலக்கி ஃபத்திக்கின் அடிகளைத் திரும்ப அவனுக்குக் கொடுத்தாள். ஃபத்திக் அவளை ஒருபுறம் தள்ளியவுடன் அவள் திட்டத் தொடங்கினாள், “போக்கிரி அம்மாவையே அடிப்பியா நீ”

அந்த இக்கட்டான சூழலில் முன்பு பார்த்த நரைத்த தலைப் புதியவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் நடந்தது என்னவென்று கேட்டார். ஃபதிக் தனது மடத்தனமான காரியத்தால் வெட்கத்துடன் பார்த்தான். திரும்பி வந்து பார்த்த அம்மாவின் கோபம் வியப்பாக மாறியது. அவள் தன்னுடைய சகோதரனை அடையாளம் கண்டு கொண்டு , “தாதா எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டாள்.

ஃபத்திக் அம்மாவுடைய சகோதரன் பிஷாம்பர் அவளது திருமணம் முடிந்தவுடன் வாணிகம் செய்ய மும்பை சென்றார். அவர் அங்கிருந்த போதுதான் அவள் தன் கணவனை இழந்தாள். பிஷாம்பர் இப்பொழுது கல்கத்தா திரும்பி வந்தவுடன் தனது சகோதரியைப் பற்றி விசாரித்து அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளைக் காண விரைந்து வந்திருக்கிறார்.



அடுத்து வந்த நாட்கள் மகிழ்ச்சியில் திளைத்த நாட்கள். பிஷாம்பர் தனது சகோதரியிடம் அவள் எவ்வாறு இரு மகன்களையும் வளர்க்கிறாள் என்று கேட்டார். அவள் தொடர்ந்து தொல்லை தருவது ஃபத்திக்தான் என்று கூறினாள். ஃபத்திக் சோம்பேறியாகவும் சொன்னபடி கேட்காதவனாகவும், கட்டுக்கடங்காதவனாகவும் இருந்தான். ஆனால் மக்கான் சொக்கத்தங்கம். ஆட்டுக்குட்டி போல் சாதுவானவன். படிப்பதில் ஆர்வம் அதிகம் என்று கூறினாள். இதைக் கேட்டவுடன் இரக்கத்துடன் அவர் ஃபத்திக்கைக் கல்கத்தா அழைத்துச் சென்று அங்குள்ள தனது சொந்த மகன்களுடன் சேர்த்து ஃபத்திக்கிற்கும் கல்வி கற்பித்து வளர்ப்பதாகக் கூறினார். அந்த விதவைத்தாய் என்ன செய்வாள். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஃபத்திக்கின் மாமா அவனிடம் தன்னுடன் கல்கத்தா வர விருப்பமா என்று கேட்ட போது, அவனும் உற்சாகத்துடன், “சரி மாமா, நானும் உங்களுடன் வர்றேன்” என்று கூறினான். அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

ஃபத்திக்கை விடுவிப்பது அந்தத் தாய்க்கு மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது. அவள் ஃபத்திக்கைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் முன் அவனைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டாள். ஆனால் இரு சகோதரர்களுக்கிடையிலும் அன்பு குறையவில்லை. ஆனால் அம்மா மட்டும் ஃபதிக் ஆற்றில் மக்கானை மூழ்கடித்து விடுவானோ, அல்லது சண்டையில் மக்கானின் மண்டையை உடைத்து விடுவானோ அல்லது மக்கானுக்கு ஏதாவது அபாயத்தை உண்டு பண்ணிவிடுவானோ என்று நாள்தோறும் பயந்து கொண்டிருந்தாள். ஆனால், அதே நேரத்தில், ஃபத்திக்கிற்கு வீட்டைவிட்டுச் செல்வதிலிருந்த ஆர்வம் அவளுக்கு மனக்கவலையைத் தந்தது. எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பின் ஃபத்திக் அவனுடைய மாமாவிடம் எப்பொழுது கிளம்பப் போகிறோம் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் பெரும்பான்மையான இரவுகளை உறங்காமலேயே கழித்திருந்தான். மேலும் தனது பெரிய மீன் தூண்டில், பெரிய பட்டம்,கோலிக்குண்டு போன்ற தன் சொத்துக்களையெல்லாம் மக்கானிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தான். கிளம்பும் நேரத்தில் அவன் மக்கானிடம் காட்டிய பெருந்தன்மை எல்லையற்றதாயிருந்தது.

கல்கத்தாவை அடைந்தவுடன் அவன் முதல்முறையாக தனது அத்தையைச் சந்தித்தான். அவளது குடும்பத்தில் இந்தத் தேவையற்ற சேர்க்கையை அவள் எவ்விதத்திலும் விரும்பவில்லை. வேறு யாரும் இல்லாமல் அவளது மூன்று குழந்தைகளை மட்டுமே பார்த்துக்கொள்வது போதுமானதாக இருந்தது. கிராமத்திலிருந்து பதினான்கு வயது சிறுவனை அவர்களுக்கிடையில் அழைத்து வந்ததால் அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். பிஷாம்பர் விவேகமற்ற இந்த முடிவை எடுக்கும் முன் இருமுறை சிந்தித்திருக்க வேண்டும்.

இந்த உலகத்தில் பதினான்கு வயது நிரம்பிய சிறுவனை விடத் தொல்லையானது எதுவுமில்லை. அவன் அலங்காரமாகவும் இருக்கமாட்டான், பயனுள்ளவனாகவும் இருக்கமாட்டான். சிறுவனென்று அவன் மீது அன்பைப் பொழிவது இயலாத காரியம். அவன் மழலை பேசினால் குழந்தையென்றும், சற்று விபரமாகப் பேசினால் துடுக்குத் தனமானவனென்றும் அவனைக் கூறினார்கள். அவன் எப்படிப் பேசினாலும் சீற்றத்துடன் பேசுவதாகவே கருதினார்கள். மேலும் அவன் கவர்ச்சியற்ற தோற்றத்தைத் தரும் வயதிலிருந்தான். அவன் அணியும் ஆடைகளை விட, அவன் வளர்ந்து அநாகரிகமான தோற்றத்துடனிருப்பான். அவனுடைய குரல் கரகரப்பாகவும் அதிர்ந்தும் இருக்கும். மேலும் அவனது முகம் விரைவாக வளர்ந்து கோணத்துடன் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் குறைகளை எளிதில் மன்னித்துவிடலாம். ஆனால் பதினான்கு வயதில் ஏற்படும் தவிர்க்க முடியாத தவறுகளைப் பொறுத்துக் கொள்வதும், மன்னிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அவன் வலுவாக சுயநினைவுடன் இருக்க வேண்டியதாய் இருந்தது. பெரியவர்களுடன் பேசும் போது தேவைக்கதிகமாய் முன்வர வேண்டியிருந்தது அல்லது தேவையில்லாமல் அவன் கூச்சத்துடன் இருந்தான். அவனது இருப்பே வெட்கத்தைத் தருவது போல் அவன் காணப்பட்டான்.



இந்த வயதில் இதயம் அங்கீகாரத்திற்காகவும் அன்புக்காகவும் ஏங்கும். யார் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களது அன்பிற்கு அடிமையாகி விடுவார்கள். ஆனால் யாருக்குமே ஃபத்திக்கின் மேல் வெளிப்படையாக அன்புகாட்ட தைரியமில்லை. இதனால் ஃபத்திக் தன் மனம்போன போக்கில் செயல்படத் தொடங்கினான். இது அந்தச் சிறுவனுக்கு மேலும் தீமையாகவே இருந்தது. இப்படிக் கடிந்து கொள்வதாலும் திட்டுவதாலும், எஜமானைவிட்டு வழிதவறிய நாயைப் போலானான் அவன். அவனுடைய சொந்த வீடுதான் அவனுக்குச் சொர்க்கம் போலிருந்தது. பதினான்கு வயதுச் சிறுவர்கள் இதை நன்றாகவே அறிவார்கள். புதிய வீட்டில் புதிய மனிதர்களுடன் வாழ்வது சிறிது சித்ரவதையாகத்தானிருக்கும். இந்த வயதில் பெண்களின் இதமான பார்வை பேரின்பத்தைத் தரும். மேலும் அவர்களுடைய கேலிப்பேச்சோ மனவருத்தத்தை ஏற்படுத்தாது. அத்தையின் வீட்டில் வேண்டாத விருந்தாளியாக இருப்பது ஃபத்திக்கிற்குக் கடும் துயரத்தைத் தந்தது. அவனுடைய அத்தை அவளுக்காக அவனை ஏதாவது செய்யச் சொன்னால் அவனுக்கு மிக்க மகிழ்ச்சியாகிவிடும். அதைக் கண்டால் மிகைப்படுத்தப்பட்ட சந்தோஷம் போல் தெரியும். அதன் பின் அவளுடைய அத்தை முட்டாள்தனமாக ஏதாவது செய்யாமல் ஒழுங்காகப் பாடங்களைப் படி என்று கூறுவாள்.

இப்படியே தொடர்ந்து ஒதுக்குவது ஃபதிக்கிற்கு உடல் மீதான ஒடுக்கு முறையாகப்பட்டது. வெளியே ஊர்ப்பகுதியில் வெட்டவெளிக்குச் சென்று நுரையீரலைத் தூய்மையான காற்றால் நிரப்ப வேண்டும் போலிருந்தது. ஆனால் கல்கத்தாவில் வெட்டவெளியொன்றும் இல்லை. எங்குப் பார்த்தாலும் வீடுகளும் பெருஞ்சுவர்களுமாகவே இருந்தன.அவனது ஒவ்வொரு இரவின் கனவிலும் அவனது கிராமமே இருந்தது. அவன் அங்கு மறுபடியும் செல்ல ஏங்கினான். நாள் முழுவதும் அவன் பட்டம் விட்ட பசுமையான புல்வெளிகள் அவனது நினைவிலாடத் தொடங்கின. எவ்வித நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடித்திரிந்த அந்தப்பெரிய நதிக்கரை நினைவுக்கு வந்தது. அந்த நதியின் சிற்றோடைகளில் அவன் விரும்பும் போதெல்லாம் குதித்து நீந்துவான். அவன் சர்வாதிகாரி போல் அதிகாரம் செய்து வந்த தனது சகாக்களின் கூட்டத்தை நினைத்துக் கொண்டான். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய கொடுமையான தாய், அவனிடம் பாரபட்சமாக நடந்துகொண்ட அவனுடைய அம்மாவின் நினைவு அவனது மனத்தை இரவும் பகலும் ஆக்ரமித்திருந்தது.



விலங்குகளுக்குத் தேவைப்படும் அன்பான அரவணைப்பு அவனுக்கும் தேவைப்பட்டது. அன்புக்குரியவர்களின் அருகாமைக்கு ஏங்கினான். அவனுக்குத் தன் தாயிடம் தீர்க்கமுடியாத பேராவல் ஏற்பட்டிருந்தது. அவனுடைய தாய் அருகில் இல்லாத அந்த நிலையில் அவளுக்காக அவனது இதயம் உள்ளுக்குள்ளாகவே அழுதது. அது மங்கலான மாலைப்பொழுதில் எழும் கன்றுக்குட்டியின் சத்தம் போலிருந்தது. விலங்குகளுக்கு ஏற்படும் உள்ளுணர்வைப் போல் அந்த உணர்வு கூச்சத்துடனும் நடுக்கத்துடனும் ஒல்லியாகவும் அருவறுக்கும்படியும் இருக்கும் அந்தச்சிறுவனின் இதயத்தைக் குழப்பவே செய்தது. யாருமே அவனுடைய உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த உணர்வு அவனைத் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருந்தது.

அந்தப்பள்ளியிலேயே ஃபத்திக்தான் மிகவும் பின்தங்கியவன். அவனைவிடப் பின் தங்கியவர் எவரும் இல்லை. ஆசிரியர் கேள்வி கேட்கும்பொழுது வியப்பில் வாயைத் திறந்து கொண்டு அமைதியாக இருந்து விடுவான். அவனுக்கு ஏற்பட்ட துயரங்களையும் வீழ்ச்சியையும் பொதி சுமக்கும் கழுதை அமைதியாகத் தன் சுமையைச் சுமப்பதுபோல் தாங்கிக் கொள்வான். அவன் வயதை ஒத்த பிற சிறுவர்கள் வெளியில் விளையாடும் போது, அவன் சன்னலருகே நின்று தொலைவில் மாடி மேல் தெரியும் உருவங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பான். மேல் மாடியில் வெட்ட வெளியில் சிறுவர்கள் விளையாடுவதை அவன் பார்க்க நேர்ந்தால் அவனது இதயம் ஏக்கத்தால் வலிக்கத் தொடங்கிவிடும். ஒரு நாள் அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது மாமாவிடம் “மாமா நான் எப்ப வீட்டுக்குபோறது” என்று கேட்டான். அவர், “விடுமுறை வரும்வரை பொறுத்திரு” என்றார். அக்டோபர் மாதம் வரை விடுமுறை வரவேயில்லை. அவன் வெகு நாட்கள் காத்திருந்தான்.

ஒரு நாள் ஃபத்திக் தன் புத்தகத்தைத் தொலைத்து விட்டான். புத்தகத்தை வைத்துப் படிக்கும் போதே அவனுக்குப் பாடங்களைத் தயார் செய்வதும் படிப்பதும் கடினமாக இருக்கும். புத்தகமில்லாமல் படிப்பது நடக்காத காரியம். நாள்தோறும் அவனுடைய ஆசிரியர் இரக்கமில்லாமல் அவனை அவமதித்தார். அவனது நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது. அவனுடைய மாமாவின் பிள்ளைகள்கூட அவனைச் சொந்தம் கொண்டாடத் தயாராக இல்லை. பிற சிறுவர்கள் அவமதித்ததை விட மாமாவின் பிள்ளைகள் அவமதித்தது அதிகம். இறுதியில் அத்தையிடம் சென்று புத்தகத்தைத் தொலைத்ததைக் கூறினான். அவமதிக்கும் தோரணையுடன் அவள் படபடவென பொரிந்தாள், “ நீ பெரிய ஆளாச்சே ! அவலட்சணம், நாட்டுப்புறம் ! மாதத்திற்கு ஐந்து முறை புதுப் புத்தகங்களை என்னால் வாங்கித்தர முடியுமா? எனக்குன்னு சொந்தமா குடும்பம் இருக்குதுல்ல?” என்றாள்.

அன்று இரவு ஃபத்திக் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது அவனுக்குக் கடுமையான தலைவலியும் நடுக்கமும் ஏற்பட்டது. ஒருவேளை மலேரியாக் காய்ச்சலாக இருக்குமோ என்று நினைத்தான். அவனுடைய அத்தைக்குப் பெரிய தொல்லையாய் இருக்குமே என்பதே அவனுக்குப் பெரிய பயமாய் இருந்தது. மறுநாள் காலையில் ஃபத்திக்கை எங்கும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியதெல்லாம் வீணாயிற்று. இரவு முழுவதும் மழை வேறு கொட்டித் தீர்த்தது. ஃபத்திக்கைத் தேடச்சென்றவர்கள் கடுமையாக நனைந்து போனார்கள். இறுதியில் பிஷாம்பர் காவலரின் உதவியை நாடினார். இரவு முடியும்போது காவலர் ஊர்தி வீட்டின் முன்பு வந்து நின்றது. இன்னும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. தெருவெல்லாம் வெள்ளக்காடாகயிருந்தது. இரண்டு காவலர் ஃபத்திக்கைத் தூக்கிக் கொண்டுவந்து பிஷாம்பரின் முன் வைத்தார்கள். ஃபத்திக் தலையிலிருந்து கால்வரை முழுவதும் நனைந்திருந்தான். உடலெல்லாம் மண்ணாகியிருந்தது. அவனது முகம் காய்ச்சலால் சிவந்திருந்தது. கைகாலெல்லாம் நடுங்கியவாறிருந்தது. பிஷாம்பர் உடனே ஃபத்திக்கைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றார். அவருடைய மனைவி இதைக் கண்டவுடன் கோபத்தில் கத்தத் தொடங்கினாள், “ இந்தப்பையன் நமக்கு எவ்வளவு தொல்லைகளை ஏற்படுத்தியிருக்கான் தெரியுமா? நீங்க இவன அவனோட வீட்டுக்குத் திரும்ப அனுப்பக்கூடாதா?” ஃபத்திக் அவளுடைய சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் பெரிதாகத் தேம்பத் தொடங்கினான். “மாமா நான் வீட்டுக்குத்தான் போனேன். ஆனா அவங்க என்னத் திரும்ப இழுத்துட்டு வந்துட்டாங்க” என்று தேம்பலினூடாகக் கூறினான்.

காய்ச்சல் சிறிது சிறிதாக அதிகரித்தது. இரவில் அவனுக்கு ஜன்னி கண்டது. பிஷாம்பர் மருத்துவரை அழைத்து வந்தான். ஃபத்திக் கண்களைத் திறந்து கூரையின் முகட்டைப் பார்த்து, “மாமா இன்னும் விடுமுறை வரவில்லையா” என்று வெறுமையுடன் கூறிக்கொண்டே இருந்தான். பிஷாம்பர் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே ஃபத்திக்கின் மெலிந்திருந்த கரங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். அந்தக்கைகள் கொதித்தன. இரவு முழுவதும் அவனருகிலேயே அமர்ந்திருந்தார். மறுபடியும் ஃபத்திக் மெல்லிய குரலில் பேசத் தொடங்கி இறுதியில் கூச்சலிட்டான், “ அம்மா! என்ன அடிக்காதீங்க. நான் உண்மையாத்தான் சொல்றேன்”.



அடுத்த நாள் ஃபத்திக்குக்குச் சிறிது நினைவு வந்தது. அவனது கண்கள் யாரையோ தேடுவதுபோல் அறையெங்கும் சுற்றிச்சுழன்றன. இறுதியில் ஏமாற்றத்துடன் அவனது தலை தலையணையில் மூழ்கிப் போனது. வெறித்த பார்வையுடன் அவனது தலை சுவரை நோக்கித் திரும்பிக் கொண்டது. பிஷாம்பர் அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவனிடம் குனிந்து மெல்லிய குரலில், ‘ஃபத்திக் உன் அம்மாவை வரச்சொல்லியிருக்கேன்’ என்றார். அந்த நாள் மெதுவாகவே கடந்து போனது. மருத்துவர் ஃபத்திக்கின் நிலை மிகவும் சொல்ல முடியாததாக இருக்கிறது என்றார்.

ஃபத்திக் அழத் தொடங்கினான், “மூன்று முழம் ஆழம், நான்கு முழம்” கப்பலோட்டிகள் நீராவிக்கப்பலை இயக்கும் போது பலமுறை இவ்வாறு கூறுவதை ஃபத்திக் கேட்டிருக்கிறான். இப்பொழுது ஆழம் காணமுடியாத கடலின் ஆழத்தை அவன் அளந்து கொண்டிருந்தான்.

அதன் பின் வந்து சேர்ந்த ஃபத்திக்கின் தாய் உடைந்து போய் சுற்றிச்சுழலும் காற்றைப்போல உணர்ச்சியில் தடுமாறி நிற்க முடியாமல் சுழன்று கொண்டே வேதனையுடன் அழத் தொடங்கினாள். பிஷாம்பர் அவளை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அவள் பொறுமையிழந்து படுக்கையில் விழுந்தாள். “ஃபத்திக் என் அன்பே! அன்பே!” என்று அரற்றினாள். அழுதவாறு இருந்தாள். ஃபத்திக் ஒரு கணம் அவனது அலைபாயும் நிலையை நிறுத்தினான். அவனது கரங்கள் மேலும் கீழும் அடிப்பதை நிறுத்திக் கொண்டன. அவன் ‘ஆ’ என்றான். அவனது தாய் ‘ஃபத்திக் என் மகனே! என் அன்பே!’ என்று அழுதாள். மிக மெதுவாக ஃபத்திக்கின் கண்கள் வட்டமடித்தன. ஆனால் அவனது படுக்கையைச் சுற்றி நின்றிருந்தவர்களை அவன் மறுபடி பார்க்கவேயில்லை. கடைசியாக அவன், “அம்மா விடுமுறை வந்திடுச்சு “ என்று முணு முணுத்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License