இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

சமுத்திர தீரம்

மலையாளம்: மீரா பாலு

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

பீச்சில் இன்று கூட்டம் இல்லாமல் இருந்தது நந்தினிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஞாயித்துக்கிழமைகள்ல சாதாரணமா இப்படி இருக்காதே!”. அவள் நினைத்துக்கொண்டாள். இந்த நேரங்களில் கடற்கரையில் கூட்டம் அலைகளுக்கு சவால் விடுவது போல இருக்கும். அந்தச் சமயங்களில் மணற்துகள்களை மிதித்துச் செல்லும் காலடிச் சுவடுகள் போராங்கள் நடைபெறும் இடத்தைப் போலக் காட்சிதரும்.

பொழுது சாய்வதற்கு இன்னும் அதிக நேரம் இல்லை என்பதை நந்தினி உணர்ந்தாள். சாயும் வேளையில்தானே சூரியன் கடலில் மூழ்கிக் காணாமல்போவான்! மூழ்கி மறைந்தாலும் மறுநாள் காலையில் வெளிச்சத்தோடு திரும்பி வரும் வழக்கத்தை அது ஒருபோதும் மாற்றிக்கொண்டது இல்லை. தவறாமல் மீண்டும் உதயம்.

ஒருவேளை மூழ்கி மறைந்து போகும் சூரியன் அடுத்த நாள் மறுபடியும் உதிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? மனிதர்களில் அது ஏற்படுத்தும் பீதியை கற்பனை செய்து பார்த்தபோது நந்தினியின் உதடுகள் புன்னகை பூத்தன. சூரியனையும் ஆண்களையும் ஒப்பிட்டுப் பார்க்க அவள் மனது ஆசைப்பட்டது.

ஆண்கள் பலரும் சூரியனைப் போல இல்லை. மூழ்கினால் பிறகு அவர்கள் எழுந்து வருவதேயில்லை. தன் வாழ்க்கையில் இதே போல திரும்பத் திரும்ப நடந்தது பற்றிய சிந்தனைகள் அவளைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. மனதை நெறித்தது. ஆண்கள் ஓடிப்போனால் பிறகு திரும்பி வராதவர்கள்தானே?

சூரியனாக ஆக இவர்களால் ஏன் முடியவில்லை? அனிருத்தின் முகம்தான் நந்தினியின் மனதில் முதலில் தோன்றியது. கல்லூரி வாழ்க்கையில் கை கோர்த்த காதலன். “எத்தனையெத்தனை வாக்குறுதிகளை அள்ளி வீசினான்? அதெல்லாம் சத்தியம் என்று நம்பி அவனை நானும் காதலித்தேன்.

முறைப் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குப் பறப்பதற்கு முன் அவன் என் முன்னால தோன்றினான்”. அவன்சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் துளைத்தப் பிறகே காதுகளில் வந்து விழுந்தது. “நந்தினி. உன்னை எனக்கு இப்பவும் பிடிக்கும். ஆனா விதி. அது நம்மப் பிரிச்சிடுச்சு. அந்த விதி. அதுதான் என்னை எதுவும் செய்ய முடியாதவனா மாத்திடுச்சு நந்தினி. உனக்கு நல்ல எதிர்காலம் அமையணும்னு நான் வேண்டிக்கறேன்” எப்போதும் அவளை மிகப் பிடிக்கும் என்று சொன்ன அந்த ஆண்பிள்ளை என்னை ஒரு தடவை கூட திரும்பிப் பாக்காம ஓடி ஒளிஞ்சுட்டான்”


அப்போது அதை வெறுமனே வேடிக்கைப் பாக்கமட்டுதான் அவளால் முடிந்தது. இவர்களால் ஏன் சூரியனாக ஆக முடியவில்லை? கடற்கரை ஆள் அரவம் இல்லாமல் மாற ஆரம்பித்தது. “இன்னிக்கு ஏன் இப்படி? ஓ! பக்கத்துல இருக்கற கோயில்ல உற்சவம்”ஆட்கள் எல்லாரும் அங்கே போக ஆரம்பித்துவிட்டார்கள்.

கடற்காற்று அவளுடைய தலைமுடியை வருடிவிட்டபோது அவளையும் அறியாமல் அவள் விஷ்ணுவை நினைத்துக் கொண்டாள். “தன் முடியழகை எப்போதும் கொண்டாடும் விஷ்ணு” அவன் சொல்லிச் சொல்லித்தான் தன் முடிக்கு இத்தனை அழகு இருக்கிறது என்று அவளுக்குத் தெரிந்தது.

அதற்குப் பிறகுதான் அவள் மற்றவர்கள் தன் முடியை எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க ஆரம்பித்தாள்.”நீ இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கை இல்ல”.ஒரு வருட காலம் நிறுத்தாமல் அவளை எப்போதும் சுற்றிசுற்றி வந்த விஷ்னுவின் வார்த்தைகள் அவை. ஜெர்மனிக்குப் போகும் செய்தியை வேலை நெருக்கடிக்கு இடையில்தான் அவன் சொன்னான்.

“நான் போயிட்டு அங்க செட்டில் ஆனப் பிறகு நம்ம கல்யாணம்” அவன் சொன்னதை அப்படியே நெஞ்சில் பதித்து வைத்துக் கொண்டாள். மூன்று மாதமான போது வாட்ஸ் ஆப்பில் அவன் அனுப்பிய செய்தியைப் பார்த்து தலை சுற்றியது. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு நம்பமுடியாமல் மறுபடியும் அந்த செய்தியை வாசித்தாள்.

ஜெர்மனிக்குக் கூட்டிக்கொண்டு போன தம்பியுடைய சொந்தக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டி வந்தது என்பதே செய்தி. “நீ என்ன மன்னிச்சுடு”அந்த அடிக்குறிப்பை வாசித்தபோது அவளுக்கு இதயம் நின்று போய்விடுவது போலத் தோன்றியது. செத்துப் போஇருந்தா என்ன என்று ஆத்மார்த்தமாக நினைத்த நிமிடமாக இருந்தது அது.

வாழ்க்கையில் இரண்டாவது ஆண் பிள்ளையோடும் துச்சம் தோன்றியது. எதனால் இவர்களுக்கு சூரியனாக ஆக முடியவில்லை? ஒன்று தப்பிப் போனால் மூன்று என்ற பழமொழி அவளை அலட்டியது. இதற்கு மேல் இனி இன்னொரு புருஷனின் காதல் தேர்வுக்கு அவள் தயாராக இல்லை. அதற்காக தன் உயிரையும் இதயத்தையும் வைத்து நீட்ட அவள் விரும்பவில்லை.

இந்தத் தீர்மானத்தில் அவள் உறுதியாக இருந்தாள். அதுவே அவளுடைய விருப்பமாகவும் இருந்தது. பிறகு அதற்காக வேண்டிய கடின பரிசோதனைகள். பெரும் முயற்சிகள். ஆபீசில் கூட வேலை பார்த்த பல ஆண்களும் காதலர் வேஷம் போட்டுக்கொண்டு அவளை வீழ்த்த படாதபாடுபட்டார்கள். யாரிடமும் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் அவள் நிரந்தரமாக ஒளிந்து விலகி மறைந்து கொண்டிருந்தாள்.

அதுவரை இல்லாத கண்டிப்பான சுபாவத்தை அணிந்து கொள்ள வேண்டி வந்ததையும் நினைத்துப் பார்த்தாள். கௌரவம் நிறைந்த அவளுடைய நடத்தையைப் பார்த்து கூட வேலை பார்த்தவர்கள் அவளை விட்டு விலகி நின்றார்கள். ஆசைபட்ட உயர்ந்த பதவியில் அமர்ந்த போதும் வேலையைத் தொடர்ந்தபோதும் அவள் தன்னை அவள் மாற்றிக் கொள்ளவில்லை.


அப்போதுதான் தான் தன் வாழ்க்கையை உண்மையாக அனுபவிக்க முடிந்தது என்று அவள் நினைத்தாள். அது ஒரு வகையான வெற்றி. பகை மீட்டல். “அக்கா. கடல வேணுமா?”. அந்தச் சிறுமியுடைய கேள்வி நந்தினியை கடற்கரைக்குத் திரும்பி கொண்டு வந்தது. “பத்து ரூபாதான் அக்கா. ஒரு பொட்டலம் வாங்கிக்க அக்கா”

நந்தினி அந்தச் சிறுமியைக் கவனித்தாள். ஒரு பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. எண்ணைத் தடவாத தாறுமாறாக பறந்து கொண்டிருந்த தலைமுடி. இருந்தாலும் அந்த முடிக்கு ஒரு தனி அழகு இருந்தது. நிறம் மங்கிப் போன பழைய ஆடை. அது அவளை விடஅதிக வயதுடையது. யாருடையதோ.

கடற்கரையில் தினமும் அடிக்கும் கொளுத்தும் வெய்யில் மொத்தமும் தலை மேல் விழுந்தது போல அவளுடைய நிறம் மங்கிப் போயிருந்தது. பாவம். இதெல்லாம் இருந்தாலும் அவளுக்கு முகத்தில் ஒரு தனி கலையும் அழகும் இருக்கிறது என்று நந்தினி உணர்ந்தாள். “உன்னோட வீடு எங்கம்மா இருக்கு?”

நந்தினி கேட்டதற்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் ஒரு நிமிடம் மௌனமாக நாக்கைக் கடித்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து லேசான பயத்தோடு சொன்னாள். “அதோ அங்க இருக்கற ஷெட்டுலதான் நான் தங்கியிருக்கேன்”. அவள் அந்த இடத்தை சுட்டிக் காட்டினாள்.

அங்கே தூரத்தில் நந்தினி அந்த ஷெட்டைப் பார்த்தாள். “அது வீடு இல்ல அக்கா. என்னோட அப்பா அம்மா யாருன்னு எனக்குத் தெரியாது”

“அப்ப மகளே நீ அங்க யாரு கூடதங்கியிருக்க?”. என்னவோ. என்னவென்று தெரியாத ஒரு பாச உணர்வு நந்தினிக்குத் தோன்றியது. அவள் மறுபடியும் ஒரு பயம் நிறைந்த கண்களோடு சுற்றிலும் பார்த்தாள்.


அவளை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அந்த மண்ணில் முழங்காலிட்டு நந்தினியுடைய காதில் மட்டும் விழும்படி மெதுவாகச் சொன்னாள். “அக்கா. அந்த ஷெட்டுல எங்க கூட இருக்கறது எங்கள விட வயசுல பெரிய அண்ணன்ங்க. குழந்தையா இருந்தப்ப என்னை எங்கேர்ந்தோ கடத்திகிட்டு வந்துட்டாங்க.

நான் யாருன்னோ என்னப் பத்தியோ எதுவும் எனக்குத் தெரியாது அக்கா”. எங்கூட கொஞ்சம் பேரு இருக்காங்க. அவங்க எல்லாரயும் இது மாதிரி பிடிச்சுகிட்டு வந்தாங்க.” அவல் அழுதாள். கடல் அலைகள் பெரிதாக ஓசை எழுப்பின. அந்தச் சிறுமியுடைய வேதனையின் பிரதி பிம்பம் போல அந்த ஓசை கடல் வலியால் துடிதுடித்தது.

கடல் மீது பறந்த பறவைகள் சிறகடித்து கடலை ஆறுதல் படுத்துவதை நந்தினி பார்த்தாள். தன் மனதிலும் கடலின் வேதனையை நந்தினி அனுபவித்தாள். அமைதியில் இருந்து ஆர்பரித்து பொங்கி எழும் கடல் மனது நந்தினியில் உருவானது. “அக்கா. கொஞ்ச நேரத்துல அவங்க என்னை வித்துடுவாங்க. என் கூட இருந்த மூனு அக்காக்கள அவங்க நேத்து யாருக்கோ வித்துட்டாங்க”. தலையில் வந்து விழும் பலமான அடி போலதான் அந்தச் சிறுமியின் வார்த்தைகள் நந்தினியுடைய காதுகளில் வந்து விழுந்தது. அங்கே தூரத்தில் அவள் தங்கியிருந்த இடத்தையும் அதன் சுற்று வட்டாரத்தையும் நந்தினி கவனமாக ஆராய்ந்தாள்.

அந்தச் சிறுமியின் கையில் இருந்து ஒரு பொட்டலம் கடலை வாங்கி பத்து ரூபாய் கொடுத்தாள். “மகளே. அதோ அந்த சிவப்பு காரப் பாத்தியா? மகளே எதையும் கவனிக்காம அங்கே நடந்து போ. நான் இங்கேயிருந்து கதவத் திறந்துவிடறேன். பின்னால சீட்டுக்கு அடியிலப் போய் ஒளிஞ்சுக்க. நாம இங்கேர்ந்து தப்பிக்கலாம். வேகமாப் போ”

அந்தப் பெண்ணின் முகத்தில் சூரியன் பிரகாசித்தது. தூரத்தில் கடலுக்கு அடியில் அதன் எல்லையில் சூரியனுடைய வண்ணமயமான பிரகாசம் கடல் நீரிலும் அடிவானத்திலும் சாயங்கால ராகமாக சங்கீதம் பாடியது. அந்தச் சிறுமி “கடல… கடல…” என்று கூவியபடியே காருக்கு அருகில் நடந்தாள்.

காரின் மறைவை அடைந்த போது நந்தினி ரிமோட்டைப் பயன்படுத்தி கதவைத் திறந்தாள். எதுவும் நடக்காதது போல நந்தினி கடற்கரையில் இருந்து எழுந்து சூரியன் போல அந்தச் சிறுமியுடன் அவளும் தலைமறைவானாள். “அன்பு செலுத்தறதுக்கும் பகிர்ந்து கொள்றதுகும் என் கூட ஒரு பொண்ணு இருக்கா இப்ப! வாழ்க்கைக்கு முதல் முறையா ஒரு அர்த்தம் இருக்கறது போல தோனல்” வஞ்சகராக இருந்த புருஷன்களை பழிக்குப்பழி வாங்கியது போல ஒரு வெற்றி உணர்வோடு நந்தினி தன் பாதங்களை வலுவாக மண்ணில் ஊன்றிக் காரை இலட்சியமாக்கி நடந்தாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p100.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License