இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

கேள்விகள் இல்லை, ஆனால்…!

மலையாளம்: உரூப்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

பஸ்ஸில் இருந்து இறங்கி அப்புறமும் ஒன்றரை மைல் நடக்கவேண்டும். கால்களுக்கு அடியில் சக்கரம் வைத்து ஓடும் மனிதர்கள் வாழும் இந்த யுகத்தில் இப்படி ஒரு குக்கிராமத்தில் தன்னந்தனியாக வாழும் அவனுடன் எனக்குக் கோபம் வந்தது. ஒரு காலத்தில் தினமும் பதினெட்டு மணிநேரம் பயணம் செய்து கொண்டிருந்த பப்பு அண்ணன் இப்போது எதுக்காக இங்கே வாழவேண்டும்?

இங்கே இறங்காமல் நேராகப் போகலாம். ஆனால் ஏதோ ஒன்று இந்த ஏகாந்தத்தில் வாழும் மனிதனிடம் அவனைப் பிடித்து இழுக்கிறது. ஆறு மாதம் முன்பு இங்கே வந்த போது பப்புவுக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடல் ஞாபகத்துக்கு வந்தது. “இந்த கிஷ்கிந்தாவ்லேர்ந்து இடத்த மாத்துவீங்களா?”

பப்பு அண்ணன் உரக்கச் சிரித்தான். “இந்த வீட்டுக்குப் பொருத்தமான ஒரு பேரத்தான் சொல்லியிருக்க. ஆனா இந்த இடத்த விட்டு நான் போகற மாதிரி இல்ல. மனுஷங்களோட நடமாட்டம் போதாதுன்னு நினைக்கற இல்லயா? அது சரியா இருக்கலாம். முட்டி மோதிகிட்டு நடக்கற மாதிரி மனுஷங்களோட நெரிசல் இல்ல.

வாழ்க்கையே இல்லைன்னு கூட நீ சொல்லலாம். ஆனா இஞ்க இருக்கறவங்க ஒருத்தர ஒருத்தரு நல்லாத் தெரிஞ்சவங்க. கோபத்துலக் கைய நீட்டினா அடிக்க நினைச்சவனோட அந்த அடி விழும். பட்டணத்துல அப்படி உங்களால செய்யமுடியுமா?”

“ஆளுங்கள அடிக்கறதுக்கு வசதி இருக்குன்னுதான் இங்க வந்து குடியிருக்கியா?”. “அடிக்கறதுக்கும் அன்பு காட்டறதுக்கும் ஆள அடையாளம் தெரியணும் இல்லயா? என்னோட தம்பி கோபு இருக்கான் இல்லயா? பாம்பேயில அவனுக்கு அவனயே கண்டுபிடிக்க முடியாமப் போயிடும்.

தெரிஞ்சவங்க அவன பல தெருக்களிலயும் அலைஞ்சு திரிஞ்சு வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்து விட்டுட்டுப் போவாங்க”. பெரிதாகச் சிரித்த போது வாழ்க்கையை இந்த மனிதன் இப்போது எவ்வளவு லாவகத்தோடு பார்க்கிறான் என்று நான் நினைத்தேன். அப்போது எனக்குள் சந்தோஷம் ஏற்பட்டதா என்று எனக்கே தெரியவில்லை.

“வாழ்க்கய இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்காக செலவழிக்கிறானே இவன்” என்று யோசித்தேன். “ஒரு ஏக்கரும் 83 செண்ட்டும் நெல் விளையற வயல் இருக்கு. இரண்டு ஏக்கர் அளவுக்கு நல்ல விளைச்சல் தர்ற நிலம் அது. கணக்கு காட்டறதுக்கும் லெவிய அளக்கறதுக்கும் எங்கயும் போகவேணாம்.


பம்ப் செட் கிடைச்சதுக்கு அப்புறம் ரெண்டு போகம் விவசாயம் செய்யறான். அத வச்சு மனைவி மகளோட சேந்து சாப்பிட்டு குடும்பத்த நடத்தறான். ஓலை வேய்ந்த ஒரு சின்ன வீடுதான் அது”. “இதக் காட்டேஜ்னு வேணும்னா சொல்லிக்கங்க. பட்டணத்துல பெரிய ஹோட்டலுங்கள்ல இந்த மாதிரி குடிச வீட்டக் கட்டி அதுல பெரியபெரிய ஆளுங்கள தங்கவைக்கறாங்க இல்லயா?

இந்த கிஷ்கிந்தாவும் அந்த மாதிரி ஒரு காட்டேஜ்னு நினைச்சுக்க. பதினஞ்சு பதினெட்டு நல்ல கோழிங்க இங்க இருக்கு. அழுகாத முட்டய உடச்சு ஆம்லெட் தயார் செஞ்சு கொடுக்கறேன். ரோஸ்ட் உண்டாக்கறது இல்ல. ரொட்டியில வெண்ண வச்சு சாப்பிடத் தரேன்.

ஆனா கான்ப்ளேக்ஸ் இல்ல. எப்படியிருந்தாலும் பழம் கிடைக்கும். மத்தியானம் வேணும்னா கோழி சூப் தயாராக்கலாம். சாப்பிடறப்ப விரிக்கறதுக்கு நாப்கின் இல்ல. ஆனாலும் மடியில வச்சுக்கறதுக்கு அழகான ஒரு துண்ட மடிச்சுத் தரேன். கத்தியும் முள்ளும் கிடையாது.

கூர்மையாக்கி வச்ச ஒரு ஈர்க்குச்சியயும் ஸ்பூனயும் வச்சு சாப்பிடலாம் இல்லயா? அப்படின்னா நீ எங்கயும் போகவேணாம்”. கடந்த காலம் முழுவதையும் பப்பு அண்ணன் மறந்து போயிருந்தான். அண்ணன் மீண்டும் ஒரு முறை சிரித்தான்.

சமூக அரசியல் அரங்குகளில் அண்ணன் யாராக இருந்தான்? “நான் இங்கயே இருக்கறதுனால யாருக்காச்சும் ஏதாச்சும் குறைவு ஏற்பட்டுச்சா? ஏதாச்சும் ஒரு தொழில செஞ்சுதான் மனுஷங்க வாழறாங்க? அவங்க அப்படி வாழறாங்க. நான் இப்படி வாழறேன். “சமூக அரசியல் காரியங்க எல்லாம் தொழில்தான்”

அண்ணன் அதற்குப் பதில் சொல்லவில்லை. சிரிக்கத்தான் செய்தான். “இன்னிக்குப் போகலயே?”. “இல்ல. போறேன்”. “சரி. நான் கொஞ்சம் முந்திரிப்பருப்பு எடுத்து வச்சிருக்கேன். அத உன்னோட பொண்ணுக்குக் கொண்டு போய்க் கொடு”. அவன் மனைவியை அழைத்தான்.

அக்கா முன்னால் வந்து நின்றபோதுஎனக்குள் ஏதோ ஒரு சங்கடம் தோன்றியது. அவர் அந்த முந்திரிப்பருப்பைக் கொண்டுவந்து தந்தபோது கண்ணீர் வழிந்த கண்களை மஏறைத்து வைக்க நான் முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பிக் கொண்டேன்.

“அக்காவோட வாழ்க்கை ஒருகாலத்துல எப்படி இருந்துச்சு?. பனியில விழுந்த பனித்துளி போல ஆயிடுச்சு அவங்களோட வாழ்க்கை. ஏராளமான பூ விரிச்ச மெத்தைங்க அவங்கள இரண்டு கை நீட்டி வரவேத்தது. அத்தனைக்கு நேரயும் ”த்தூ”ன்னு சொல்லி இந்த மனுஷன் பின்னால வாழ வந்தாங்க.


கைக்கு எட்டிய தூரத்தில் எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தன. பை நிறையப் பணம். எல்லாம் போனது. “ஒரே ஒரு வெள்ளை நிறப் பட்டுப் புடவை வாங்கினது இப்பவும் ஞாபகத்துல இருக்கு. உங்கள யாரோ அடிச்சப்ப வந்த ரத்தத்தத் துடைக்க அத எடுத்தேன்.” ஒரு சமயம் அக்கா என்னிடம் சொன்னது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

அக்கா வீட்டுலேர்ந்து ஆம்பளைங்க அடிக்கடி வந்து கூப்பிட்டாங்க. “நான் இங்க ஒரு மனுஷனோட வாழ வந்துட்டேன் வாழறேன்”னு சொல்லி அக்கா அவங்கள திருப்பி அனுப்பிட்டாங்க. “உனக்கு பணம் ஏதாச்சும் வேணுமா?”. “வேணாம்”. இத எல்லாத்தயும் கேட்டுகிட்டு இருந்த காலத்தப் பத்தி சரடுல தாலியக் கோத்துக் கட்டின அந்த கழுத்தப் பார்த்தப்ப எனக்கு ஞாபகம் வந்துச்சு”

“இப்பவும் ஆம்பளைங்க உதவத் தயாரா இருக்காங்க”. “அப்பறம் என்ன?”. நான் கேட்டேன். அக்கா அதற்கு பதில் சொல்லவில்லை. சிரித்தாள். “அவங்க எல்லாரும் இப்ப பெரிய காண்டிராக்டருங்க தம்பி. அதப் பத்தி நினைச்சாலே சந்தோஷம் வரும். அப்பறம். இப்ப எங்களுக்கு கஷ்டம்னு எதுவும் கிடையாது தம்பி.

எதுவும் வேண்டியதில்ல. எதுவும் இல்லைன்னு நினைக்கறது என் வீட்டுல ஆம்பளைங்களோட தப்பான நினைப்பாக்கும்”. வளரவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் உள்ளதுதானே? தியாகி என்ற பட்டத்தை மட்டும் வெறுமனே வைத்துக்கொண்டு வாழ்வது ஒருவிதத்தில் கபட நாடகம் இல்லையா?

“வளர்றதுக்குன்னு வாழ்க்கையில ஒரு கட்டம் இருக்கறது மாதிரி வாழறதுக்குன்னும் ஒரு கட்டம் இருக்கு இல்லயா? கொலம்பஸும் கூட்டுக் காரங்கலும் ரொம்பக் கஷ்டப்பட்டு அமெரிக்காவக் கண்டுபிடிச்சாங்கங்கறதுக்காக அமெரிக்காக்காரங்க எல்லாரும் இப்பவும் கடல்ல கிடந்து துன்பத்த அனுபவிக்கணுமா என்ன?”

ஒரு நியாயத்தைக் கண்டுபிடித்ததாக எனக்குத் தோன்றியது. இந்தத் தடவை என்ன ஆனாலும் பப்பு அண்ணங்கிட்ட பத்து காரியங்களப் பத்தி சொல்லணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். படிகள ஏறும்போதே சிந்தனையில அந்த விஷயங்கள் என்னோட மனசுல பிறந்தது”

“ஊர்லேர்ந்தா?”. குரலைக் கேட்டுத் திரும்பிய போது தலையில் கூடையோடு நின்று கொண்டிருந்த அக்காவைப் பார்த்தேன். “இதுல இருக்கற உரத்த , வயல்ல கொட்டிட்டு வரேன். அவரு உள்ள இருக்காரு. போங்க தம்பி”. உள்ளே போனேன். அண்ணனைப் பார்த்தேன். “உனக்கு இளநீர் வேணுமா? காபி வேணுமா?”


இளநீரைக் குடித்து முடித்தபோது அக்கா கேட்டார்.”பழுத்த பப்பாளிப் பழம்னா அந்த காலத்துல உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு எப்படி?”. நான் பதில் சொல்லவில்லை. அக்கா பப்பாளியைக் கொண்டு வந்து தந்தார். சாப்பிட்டேன். மத்தியானம் சாப்பிட்டு முடித்தேன். இளைப்பாறும்போது கேட்டேன்.

“அண்ணன் எதுக்காக இப்படி வாழறீங்க?”. “நல்லா இருக்கணும்ங்கறதுக்காக”. சிறிது நேரம் அண்ணன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சிரித்தான். “பூமியோட இந்த பாகத்துக்குன்னு ஏதாச்சும் பெரிய சாபம் இருக்கா? நான் இங்க இருந்தா தம்பி அடிக்கடி இங்க வருவான்.

இது மனுஷங்க வாழற இடமுனு நீ கண்டுபிடிச்சுக்க. அதுவும் நல்லதுதானே?”. பப்பு அண்ணணுக்கு எவ்வளவோ பெரிய இடத்துக்குப் போய்ச்சேர முடியும். மனதிற்குள் நான் நினைத்ததை பப்பு அண்ணந்தான் முழுமைப்படுத்தினான். “நான் இப்ப இருக்கற இடம் ரொம்ப வசதியானது தம்பி.

நான் இப்ப ஒரு வேலயச் செய்யறேன். ஒரே ஒரு வேலதான் செய்யறேன். நீ வேற ஒரு வேலய செய்யற. அதுவும் நல்லதுதான். இதுவும் நல்லதுதான். நீ ஓய்வெடு. நான் வயலுக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடறேன். அவ அங்க காத்துகிட்டு இருப்பா”. அண்ணன் அக்காவை நினைத்துத்தான் சொல்கிறான்.

அவன் வேலியில் வளர்ந்திருந்த செடிகளைப் பிடித்துக் கொண்டு வயலுக்குப் போகும் வரப்பில் இறங்கி நடக்கும்போது என் மனது நிறைந்திருந்தது. கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனால், கூடுதல் பதில்கள் வேண்டும் என்று மனது சொன்னது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p101.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License