இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

அதிர்ஷ்டசாலி

மலையாளம்: எம். எஸ். உஷாதேவி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


ஜெயனும் தாமசும் தற்செயலாகத்தான் ஒருவரையொருவர் வழியில் பார்த்துக் கொண்டார்கள். கண்களை நம்ப முடியாதவர்கள் போல இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் உற்று நோக்கியபடி நின்றனர். தாமஸ்தான் முதலில் பேசினான். “ஜெயா. நீ என்னை மறந்துட்டியா? நான்தான் தாமஸ்”. ஜெயன் திடுக்கிட்டுப் போய் நின்றான். அவர்கள் இருவரும் ஸ்கூல் முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் காலத்தில் கனவுகளும் இலட்சியங்களும் தற்பெருமை அடித்தலும் தாமஸுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

கல்லூரியில் படிக்கும்போது பல சமயங்களில் ஜெயனை தாமஸ் கிண்டலடிப்பது வழக்கமாக இருந்தது. “என்ன ஒரு பயடா நீ? என்னைப் பார்த்து கத்துக்கடா. இந்த நாட்டுல கிடந்து கஷ்டப்பட நம்மால முடியாது. என்னோட லட்சியம் அமெரிக்கா. வாழறதுன்னா அங்க வாழணும். நான் அத முடிவு செஞ்சுட்டேன். என்னோட லட்சியங்க ரொம்ப பெரிசு. நாம காலேஜை விட்டு வெளியிலப் போயிட்டா நாம இப்ப ஒருத்தர ஒருத்தர் சந்திக்கற மாதிரி அப்பறம் பார்க்க முடியாது.

நீ இங்கயே இருந்து கிடைக்கற வேலைய செஞ்சு கழுத மாதிரி பாரம் சுமந்து வாழ்க்கய உருப்படாமதான் செய்யப்போற” அவனுடைய அந்தப் பேச்சுக்களில் மனம் நொந்து ஜெயன் அவமானத்தோடு அவன் முன்னால் பல சமயங்களிலும் கூனிக் குறுகிப்போய் நின்றதுண்டு. காசு பணம் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த தாமஸால் இதையெல்லாம் பல சமயத்துல சுலபமாகச் செய்ய முடிந்தது. ஒரு நேரம் மட்டுமே அடுப்பு புகையும் தன் வீட்டில் அதை இரண்டு நேரமாக்க, படிப்புச் செலவுக்கு ஆகும் காசைக் கண்டுபிடிக்க அலையாய் அலைந்து படும் கஷ்டங்களுக்கு நடுவில் கனவு காண்பதற்கு உள்ள மனசும் நேரமும் தனக்கு இல்லை என்பதை அவன் உணர்ந்தான்.

“நீ என்னடா இன்னமும் என்னை உத்துப் பாத்துகிட்டு இருக்க? உனக்கு இன்னும் நான் யாருன்னு தெரியலயா?” தாமஸின் கேள்விகள் ஜெயனை சிந்தனைகளில் இருந்து எழுப்பி விட்டன. நாம ஒருத்தர ஒருத்தரு பார்த்துக்கிட்டு எவ்வளவு வருஷமாச்சு? நாப்பது இல்ல, இல்ல அதுக்கும் மேல இருக்கும் இல்ல?” அதற்கு மேல் பேச ஜெயனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

“நாம அந்தப் பூங்காவுக்குப் போய் உக்காந்து பேசலாம்” தாமஸ் நடக்கத் தொடங்கினான். ஜெயன் அவனை நிழல் போலப் பின் தொடர்ந்தான். ஜில்லென்று வீசியக் காற்றை வாங்கியபடி பூங்காவில் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள். “என்னடா விசேஷம்? சொல்லு”. ஜெயன் கேட்டான். “ம். அமெரிக்காவ்ல”


“மனைவி? குடும்பம்? குழந்தைங்க?” ஜெயன் கேட்டான்.

“மனைவி நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னால செத்துப் போயிட்டா. மூனு குழந்தைங்க. பெரியவன் குடும்பத்தோட நியூயார்க்குல இருக்கான். அடுத்தவன் குடும்பத்தோட கலிபோர்னியாவுல. மூனாவது மகள். அவளும் குடும்பமும் சிங்கப்பூர்ல”

“வாவ்! க்ரேட்! நீ கனவு கண்ட வாழ்க்கய பிடிச்சுட்டடா அதிர்ஷ்டசாலி” ஜெயன் சொன்னான்.

“நீ?” தாமஸ் கேட்டான்.

“உன்னை மாதிரி எனக்கு வாழ்க்கயில சொல்றதுக்குன்னு ஸ்பெஷலா எதுவும் இல்ல. ஒரு சராசரி மலையாளி மாதிரி கஷ்டப்பட்டு தேடிப் பிடிச்சு ஒரு அரசாங்க வேலையில சேந்தேன். குடும்பத்த கரையேத்தினேன். என்னோட தகுதிக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணையும் கல்யாணம் கட்டிகிட்டேன். ஒரு மகன். அவனுக்கும் குடும்பம் இருக்கு. அவன் என்ஜினியரிங் படிச்சுட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேல பாக்கறான். மருமக ஸ்கூல் டீச்சர். அவங்களுக்கு ஒரு குழந்தயும் இருக்கு. என்னோட வீட்டுலதான் எல்லாரும் ஒன்னா இருக்கோம். நீ எப்ப அமெரிக்காவ்லேருந்து வந்த? இங்க எங்க தங்கியிருக்க?”தாமஸ் சிறிது நேரம் அவனுடைய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்புறம் புன்முறுவலோடு சொன்னான். “நீதாண்டா ஜெயா அதிர்ஷ்டசாலி. நான் வந்து கொஞ்ச காலமாச்சு. நிறய சம்பாதிச்சேன். எல்லாக் குழந்தைங்களுக்கும் வாரி வாரிக் கொடுத்தேன். ஊர்ல ரெண்டு ஏக்கர் இடத்துல ஒரு பெரிய வீட்டக் கட்டினேன். போதும்ங்கற அளவுக்கு சம்பாதிச்சு முடிச்சப்ப மிச்ச காலத்த சொந்த ஊர்ல வாழலாம்னு நினைச்சு இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். அப்பதான் திடீர்னு அவளோட மரணம் நடந்துச்சு. அதோட நான் தனியாளா ஆனேன். மனைவியோட சாவுக்கு குழந்தைங்க மட்டும் வந்தாங்க. மருமகள்களோ பேரப்பசங்களோ யாரும் வரல. அதுக்கெல்லாம் நிறய செலவாகும் இல்லயா? அதுக்கு அப்புறம் இந்தப் பக்கம் யாரும் தல வச்சு படுக்கல. மனைவி செத்தப்ப பெரிய வீட்டயும் காரயும் சொத்துகளயும் குழந்தைங்க வித்தாங்க. கிடச்ச காச அவங்க எல்லாருமா சேந்து பங்கு போட்டுகிட்டாங்க. அவங்க என்னை முதியோர் இல்லத்துலச் சேத்து விட்டாங்க. என்னோட பாதுகாப்புத்தான் இதெல்லாம். இல்லாட்டா அவங்களால நிம்மதியா இருக்கமுடியாது. எப்படி இருக்கு கத?” சொல்லிவிட்டு தாமஸ் துச்சமாக சிரித்தான்.


“இதெல்லாம் சரிதானே ஜெயா? என் பேர்ல பேங்க்ல கொஞ்சம் காசு இருக்கறதுனால, நான் இப்ப சுகமா வாழறேன். ஆரோக்கியப் பிரச்சனைங்க எதுவும் இதுவரைக்கும் எட்டிப் பாக்கல. இப்படி எத்தன நாள்னு தெரியல” அதைச் சொன்ன போது தாமஸின் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.

“நான் தனியா இருக்கேன்னு என்னோடபசங்களுக்கு எந்த பதட்டமோ கவலயோ இல்ல. நான் ஊருக்கு வந்த புதுசுல என்னை பாக்கவும் சந்தோஷத்த பகிர்ந்துக்கவும் நெருங்கின சொந்தக்காரங்க நிறய பேரு வந்தாங்க. மனைவி செத்துப் போய் நான் தனியா ஆனப்ப சகோதரியும் அவளோட மகனும் எங்கூடவே இருந்தாங்க. அவங்க ஏமாத்தி என்னோட சொத்த பிடுங்கிப் பாங்களோன்னு என் பசங்களுக்கு ஒரே பயம். என்னோட முயற்சிங்களும் கடினமான உழைப்பும் எல்லாம் ஒன்னுமில்லாம போச்சு. வயசாகறப்ப துணைக்கு யாராச்சும் இருக்கறது சமாதானமும் சந்தோஷமும் தர்ற விஷயம். நீ அதிர்ஷ்டம் செஞ்சவன். பெரிசா கனவு கண்ட நான் அத நிஜமாக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். கண்ட கனவு மாதிரியே எல்லாம் நடக்கவும் செஞ்சது. ஆனா இப்ப? எல்லாம் தனியாத்தான்” இதை சொன்னபோது தாமஸின் கண்களில் கண்ணீர்த்துளிகள் பளிச்சிட்டன. குரல் இடறியது.

“முதியோர் இல்லத்துலேர்ந்து பர்மிஷன் வாங்கிகிட்டுதான் இப்ப நான் வெளிய வந்திருக்கேன். பசங்களுக்குத் தெரிஞ்சா அப்பறம் அதுக்கும் தடைதான். நீதாண்டா நிஜமான அதிர்ஷ்டசாலி! தாமஸ் ஜெயனைக் கட்டிப் பிடித்து விடை பெற்றான்.

வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் போல சிலர்... சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத பறவையைப் போல தாமஸ் நடந்து அகன்று போவதை பார்த்தபோது ஜெயன் மனது துடித்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p51.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License