இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

ஏழ்மையின் வெற்றி

மலையாளம்: ப்ரியா ஷியாம்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


“ஏங்க? நாம இந்த இடத்த விட்டுட்டு வேற எங்கயாச்சும் போனா என்ன?” ஷாப்பிங் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு கிணற்றடியில் கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த பிஜு, ஷெர்லியுடைய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

“உங்களுக்கு வீடுன்னு ஒன்னு இருக்கறது சொத்து மாதிரிங்கறது சரிதான். ஆனா இங்க குடியிருக்கறது எனக்குப் பயமாயிருக்குங்க... குழந்தைகளுக்கு வீட்டை விட்டு வெளியப் போய் விளையாடக் கூட முடியல. பெரிய பாறாங்கல்லோ பாறத் துண்டோ எப்ப தெறிச்சு விழும்னு யாருக்குத் தெரியும்? நகரத்துல வாழறதுதான் கஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா... இங்க இந்தக் கிராமப்புறத்துல வாழறதுதான் ரொம்பக் கஷ்டம். அதோட பயமும்”

பிஜு எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போனான். அவனுக்கு நன்றாகத் தெரியும். ஷெர்லி சொல்றது சரிதான். ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து செத்துகிட்டுத்தான் வாழறோம். பாறைக் குவாரிக்குப் பக்கத்தில்தான் அவனுடைய வீடு. முன்பு அங்கே குவாரி எதுவும் இல்லை. நல்ல உயரமான ஒரு பாறைக்கூட்டம் மட்டும் இருந்தது.

நல்ல உயரமுள்ள ஒரு பாறைக்கூட்டம் மட்டுமே அங்கே இருந்தது. சின்னச் சின்ன மரங்களும் புற்களும் மருத்துவத் தாவரங்களுமாக பசுமை போர்த்தி நின்ற அழகான இடம். சின்ன வயதில் விளையாட வருபவர்களுடன் எத்தனை தடவை அந்தக் குன்றின் மேல் ஏறியிருக்கிறான் என்று நினைத்த போது ஆனந்தமாக இருந்தது.

குன்றின் நட்ட நடுவில் நின்ற மாமரத்தில் தேனூறும் மாங்கனிகள் பழுத்துத் தொங்கும். மரத்தில் ஏறி மாம்பழங்களைப் பறிக்க அன்று போட்டாப்போட்டி. மாங்காய்களைத் தின்று வீட்டுக்கு வரும்போதுதான் தாத்தாவின் அடி உதை எல்லாம் கிடைக்கும். இரண்டு அக்காக்களும் அடிப்பதை தடுத்து நிறுத்த ஓடி வருவார்கள். ஆனால் அகப்பட்ட அவர்களுக்கும் கிடைக்கும் இலவசமாக அடியும் உதையும். இன்று அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் ஞாபகங்களாக மாறிவிட்டார்கள். அக்காக்களுக்கு கொடுத்தச் சொத்தை விற்று அவர்கள் வேறு இடங்களுக்குப் போய்ச் சொத்துக்களையும் வாங்கி விட்டார்கள்.


“நான் மட்டும்தான் இங்கே இப்படி”. பிஜு பலவற்றையும் யோசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். ஷெர்லி கொஞ்ச நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாள். “இந்த இடத்த வித்துட்டு வேற எங்கயாச்சும் போயிடலாம்”

அவள் சொல்வதும் சரிதானே? முன்பு பாறைக்கூட்டம் இருந்த இடத்தில் இன்று ஒரு கருங்கல் குவாரி. அங்கே பாறைகளை வெடி வைத்து உடைப்பதால் சுற்றிலும் இருக்கும் வீடுகளும் சுவர்களும் எல்லாம் உடைந்து போயிருக்கின்றன. சுற்றிலும், ஒருகாலத்தில் எத்தனை வீட்டுக்காரர்கள் இருந்தார்கள்! கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எல்லோரும் அங்கே இருந்து போய்விட்டார்கள். ஒரு விதத்தில் குடியிருந்த இடத்தை மாற்றிக் கொண்டார்கள் என்று சொல்வதுதான் சரி.

சமீபத்தில் ஒரு சொத்தை சுதர்சனன் முதலாளி வாங்கியதோடுதான் எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்தன. ஊரில் பெரிய பணக்காரன். பிசினெஸ்காரன் அவன். நன்றாகப் பழகும் இயல்புடையவன். நன்றாகப் பேசவும் தெரியும். ஆனால் பார்ப்பதையெல்லாம் வியாபார நோக்கத்தோடு மட்டுமேப் பார்ப்பான். செங்கல்லும் மண்ணும் கருங்கல்லும் பாறைக்கற்களும் என்று மட்டும் இல்லாமல் டைல்ஸ் மார்பிள் பிசினெஸும் அந்த ஆளுக்கு உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள். வாகனங்கள். டிப்பர் லாரிகள். ஆனால், ஆளைப் பார்த்தால் ஒரு பிசினெஸ்காரன் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

புதிதாக ஒரு இடத்துக்கு வந்தால் அங்கே பாறையும் குன்றும் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதுதான் முதல் வேலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக அந்தச் சொத்துகள் எல்லாவற்றையும் விலைக்கு வாங்குவதுதான் அடுத்த வேலை. அப்புறம்தான் பிசினெஸ் ஆரம்பிக்கும். அக்கம் பக்கத்தில் இருக்கும் சொத்துகள் எல்லாம் சொந்தமான பிறகு, யாரும் புகார்கள் சொல்ல வரமாட்டார்கள் அல்லவா? அதுதான் அந்த ஆளுடைய குறுக்குப் புத்தி. பாறைகளை உடைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இடத்தை மாற்றிக் கொண்டு செல்வார்கள். இல்லாவிட்டால் சுதர்சனனே ஆட்களை அனுப்பி அந்தச் சொத்தைக் கொடுக்க முடியுமா? என்று கேட்பான். இதுதான் அவனுடைய வாடிக்கை.

பிஜுவுடைய பெரிய குழந்தைக்கு நான்கு வயது. அடுத்தக் குழந்தைக்கு வயது இரண்டு. பாறைகளில் இருந்து வரும் தூசுத் துகள்களால் சின்னக் குழந்தைக்கு எப்போதும் சுவாசிப்பதில் பிரச்சனை இருந்து கொண்டேயிருந்தது. இரண்டு வருடங்களாக ஷெர்லியுடைய பல்லவியும் இதுவாகவே இருந்தது.

“இடத்த மாத்தணும்” அவனுக்கு இரப்பர் மரத்தில் இருந்து பால் எடுக்கும் தொழிலைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. ஒரு வாடகை வீட்டுக்கு வீட்டை மாற்றினால் எந்த வேலைக்குப் போவது? இந்த இடத்தை விற்றாலும் அல்பமான காசுதான் கிடைக்கும்.


ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து சிந்தித்தபடியே நாட்கள் கடந்து போயின. ஒரு நாள் அங்காடிக்கு இரப்பர் ஷீட்டை விற்று அவசியமான சாமான்களை வாங்கிக் கொண்டு அவன் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்த போதுதான் சதீஷைப் பார்த்தான். பிஜுவுடைய பால்ய கால நண்பண் அவன். இப்போது அவன் சூழல் போராளி. இயற்கையை நேசிப்பவன். செயல்பாட்டாளன். இப்போது மட்டும் என்று இல்லை. முன்பும் அவன் அப்படித்தான். காடும் நதியும் பூக்களும் ஆறுகளும் குன்றும் எல்லாம் அவனுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள். அவனுடைய விளையாட்டுத்தோழன் பிஜு. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே க்ளாஸில் ஒரே பெஞ்சில் இருந்து படித்தவர்கள். வேடத்திலும் முக பாவத்திலும் மட்டுமே அவன் மாறியிருந்தான்.

அவனிடம் புதிதாக இருந்தது தடிமனான கண்ணாடியும் சிறிய தாடியும் தோள் பையும்தான். ஜிப்பாவும் பேண்டும்தான் உடுத்திருக்கும் ஆடை. சதீஷுக்கு அருகில் போய் பிஜு ஸ்கூட்டரை நிறுத்தினான். “பாத்து நாளாயிடுச்சே சதீஷ்?. நீ இங்க இல்லயா?”

“ஓ! நான் எங்கப் போறது? அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தப் படுக்கையா இருக்காங்க. அவங்களப் பாத்துக்க யாரும் இல்ல. அதனால நான் இப்ப எங்கயும் போகறது இல்ல. அம்மாவுக்கு உதவி செய்ய அடுத்த வீட்டுல இருக்கற சுசீலா அக்கா வருவாங்க. அதுதான் கொஞ்சம் ஆறுதலான விஷயம். நான் எங்கயாச்சும் போனா அப்பறம் அம்மா தனியா இருப்பாங்க இல்லயா? அம்மா அப்பாவுக்கு ஒரே குழந்தயா பிறக்கறதுல இதெல்லாம்தான் கஷ்டம்” சொல்லிவிட்டு சதீஷ் கவலையோடு சிரித்தான்.

“நீ இடத்த விக்கறதாக் கேள்விப்பட்டேனே? உண்மையா?”

“யாரு உங்கிட்ட இத சொன்னாங்க?”

“கொஞ்ச நாளைக்கு முன்னால நான் ஜங்ஷன்ல வச்சு ஷெர்லியப் பாத்தேன். உன்னோட சின்ன குழந்தய தூக்கிகிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட்டுத் திரும்பி வந்துகிட்டிருந்தா. குழந்தைக்கு எப்பவும் சுகக்கேடு இல்லயா?”

“ஹும். சரிதான். அந்த சுதர்சனன் முதலாளியோட குவாரியில பாறைங்கள உடைக்கறதுனாலயும் அதோட தூசுக்களாலும் குழந்தைக்கு எப்பவும் உடம்பு சரியாயில்ல. போதாததுக்கு டிப்பர் லாரிங்களோட அங்கயும் இங்கயுமா ஓடற ஓட்டம் வேற. ரெண்டு குழந்தைங்களும் பகல்ல தூங்கறது இல்ல. சின்னக் குழந்தை தூங்க ஆரம்பிக்கறப்பதான் பாறைய உடைக்க ஆரம்பிப்பாங்க. பெரிய சத்தம். திடுக்கிட்டு எந்திரிக்கற குழந்தை இப்ப ராத்திரியிலக் கூடத் தூங்கறது இல்ல. தூங்கினாலும் திடீர்ன்னு தூக்கத்திலேயே எழுந்து விழிச்சுகிட்டு ஒரே அழுகை. குழந்தைங்களுக்கு வீட்ட விட்டு வெளிய போய் விளையாடக்கூட முடியறது இல்ல”

பிஜு எதையும் செய்ய இயலாதவனாக சொன்னான். “அவளுக்கோ குழந்தைங்கள வெளிய விடறதுக்கேப் பயமாயிருக்கு. எப்பப் பாத்தாலும் வாசக்கதவ மூடியே வச்சிருக்க வேண்டிய நிலைமை இப்ப. நாம எல்லாம் எவ்வளவு விளையாடினோம். அப்படிப்பட்ட பூமி இது! ஆனா... என்னோட குழந்தைங்களுக்கு?” பிஜு பேச்சைப் பாதியோடு நிறுத்தினான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சதீஷ் தாடியைத் தடவியபடி சிறிது நேரம் நின்றான். பிறகு எதுவும் பேசாமல் முன்னால் போனான்.

“சதீஷோட பழகற விதத்துல ஒரு மாத்தமும் இல்ல”

பிஜு அவன் போவதையேப் பார்த்துக் கொண்டு நிண்றான். பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

மாதங்கள் கடந்து போயின. ஒரு நாள் மத்தியான நேரம். சதீஷும் பத்துபதினைந்து இள வயதுக்காரர்களும் கூட்டமாக பிஜுவுடைய வீட்டுக்கு வந்தார்கள். சதீஷுடைய கையில் கொஞ்சம் காகிதங்கள் இருந்தன. சட்டையைப் போட்டுக் கொண்டு பிஜு வெளியில் வந்தான். சதீஷுடன் இருந்தவர்கள் எல்லோரையும் பிஜுவுக்குத் தெரியும்.

அக்கம் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள். பிஜுவுடைய அதேப் பிரச்சனைதான் அவர்களுக்கும். கூட்டத்தில் நாலைந்து மாதம் முன்பு டிப்பர் லாரி இடித்து மரணமடைந்த கிரனுடைய அப்பாவும் இருந்தார். சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஏழாம் க்ளாஸ்காரனுடைய தலைக்கும் மேல் ஒரு டிப்பர் லாரி ஏறிய செய்தியை நடுக்கத்தோடுதான் அந்த ஊர்க்காரர்கள் கேட்டார்கள்.

லாரி ஓட்டியவனை போலீஸ் கஸ்ட்டடியில் எடுத்தது என்றாலும் குவாரி தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டுதானிருந்தது. சுதர்சனனுடைய செல்வாக்குதான் அதற்குக் காரணம். “அடேய். பிஜு. இந்த பேப்பர்ல கொஞ்சம் கையெழுத்து போட்டுக் கொடு. நாம எல்லாரும் இங்க சமாதானமா வாழ முடியுமான்னு பாக்கலாம். அதுக்குதான் இந்த பேப்பர். இதெல்லாம் கலெக்டருகிட்ட கொடுக்கறதுக்குத் தயார் செஞ்சு வச்சிருக்கறது.

எதுவும் புரியாமல் பிஜு சதீஷைப் பார்த்தான்.


“நீ எதுக்கு இப்ப அதிர்ச்சி அடைஞ்சவன மாதிரி நிக்கற? அன்னிக்கு நீ ஒரு விஷயம் எங்கிட்ட சொன்ன இல்லயா? அதுதான். எப்படியிருந்தாலும் நாம இந்த இடத்த விட்டுட்டு வேற இடத்துக்குப் போக முடியாது. அதனால அந்த சுதர்சனன் முதலாளி இங்க நடத்தற பிசினெஸ நிறுத்தட்டும். அதுதான் சரி?”. எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். சதீஷ் நீட்டிய காகிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி பிஜு பார்த்தான். சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். பாறைக் குவாரியோட செயல்பாட்டை நிறுத்தணும்னு ஊர்க்காரங்க கொடுக்க விண்ணப்பம். அதில் பிஜுவும் கையெழுத்து போட்டான்.

“நாளைக்கு கலெக்டரப் பாக்க கொஞ்சம் பேர் போறோம். மக்கள் வசிக்கற இடத்துலேர்ந்து அம்பது மீட்டருக்குள்ள குவாரிங்க செயல்படக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. நம்ம நாட்டுல நீதி நியாயமெல்லாம் இருக்கான்னு நமக்கு தெரியணும் இல்லயா?” சொல்லிவிட்டு சதீஷும் அவனோடு வந்தவர்களும் அடுத்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

நாட்கள் நகர்ந்து போயின. ஒரு நாள் பெரிய குழந்தையை நர்சரியில் விட்டுவிட்டு ஷெர்லி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

“அடி ஷெர்லி” குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அடுத்த வீட்டு ருக்மணி அக்காதான் கூப்பிட்டது.

எல்லாத்தயும் எடுக்கறாங்க. நீ எங்கப் போன? சந்தைக்குப் போனியா?”

“இல்ல அக்கா. மகனை நர்சரியில கொண்டு போய் விட்டுட்டு வரப்போயிருந்தேன்”

“உனக்கு விஷயம் தெரியுமா? சுதர்சனனோட குவாரிய சீல் வச்சுப் பூட்டிட்டாங்களாம். கலெக்டரோட ஸ்பெஷல் ஆர்டர் இல்லாட்டி... வேற ஏதோ ஒன்னு. நீ வந்துட்டேன்னு என்னோட பையன் சொன்னான். செய்தித்தாள்ல வந்திருக்காமே? நீ பாக்கலயா?”


“இல்ல அக்கா. எப்படின்னாலும் தெய்வம் நம்மளோட பிராத்தனைய கேட்டாரே! எனக்கு அது போதும். ஷெர்லிக்கு ஆறுதலாக இருந்தது.

அன்று மிக சந்தோஷத்தோடுதான் பிஜு வீட்டுக்கு வந்தான். அவன் வந்ததும் வராததுமாக ஷெர்லியை கட்டிப் பிடித்தான்.

“இனிம நாம எங்கயும் போகவேணாம்டி. அந்த ஆளோட க்வாரிய அரசாங்கமே இழுத்து பூட்டிட்டாங்க. காசு இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைச்சுகிட்டு இருந்தான் அவன். இதுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டியது சதீஷுக்குதான். எத்தனைக் குடும்பங்கள அவன் காப்பாத்தியிருக்கான்!” பிஜு சொல்லி முடித்தான்.

“இனி என்னோட குழந்தைங்களுக்கு சந்தோஷமா விளையாடலாம் இல்லயா? கூட்டுல அடச்சு வச்ச கிளிங்க மாதிரி இல்லயா இதுவரை அவங்க இருந்தாங்க?”. சொல்லிவிட்டு ஷெர்லி வாசல் கதவை அகலத் திறந்தாள். பிறகு சின்னக் குழந்தையை எடுத்துக் கொஞ்சியபடியே வீட்டை விட்டு வெளியில் இறங்கினாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p69.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License