இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

மேக்கப் போட்ட இரகசியங்கள்

மலையாளம்: கே. எஸ். ரெதீஷ்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


புருவத்தை அழகுபடுத்த அழகு நிலையத்துக்குப் போகவேண்டும் என்று மனைவி சொன்ன போது நான் அதைச் செய்தேன். அதோடு சேர்ந்து தலைமுடியையும் சரி செய்துவிட்டேன். முகத்தையும் கன்னங்களையும் மசாஜ் செய்தேன். கால் நகங்களை வெட்டிவிட்டு பாலிஷ் போட்டேன். கால்களில் இருந்த உரோமங்களைச் சீர்படுத்தினேன். தொழில் ரீதியான ஒரு கலைஞனின் நுட்பத்துடன் இதையெல்லாம் செய்து முடித்தேன்.

பெரிய மகிழ்ச்சியோடு குளியல் அறைக்குப் போன அவள் கேட்டாள். “எங்கேயிருந்து இதயெல்லாம் கத்துகிட்டீங்க? எத்தனை பொண்ணுங்களுக்கு இதுக்கு முன்னால இப்படி...?”. அதற்கு மேல் அவள் பேசியதை நான் காது கொடுத்து கேட்கவில்லை. என்னுடைய பழைய ஞாபகங்கள் மீனாட்சி க்ளினிக்குப்கு பின்புறம் ஜுரத்தில் விரைத்துப் போயிருந்த காலத்தை நோக்கி பாய்ந்து ஓடின.

அனாதை இல்லத்தில் சமையல்காரனை அடித்த முதல் வருட மாணவனான நான் கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டேன். அடி வாங்கிய சமையல்காரனுக்கு என்னைப் பழி வாங்கியேத் தீரவேண்டும் என்று சபதம் போட்டுக் கொண்டு அலைந்தான். அதுவும் தேர்வுக்கு முதல் நாள். அவன் செய்வது எதுவும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.

பகல் முழுவதும் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலுடைய பிரியாணி வாசனையில் பசித்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு ஆள் வாங்கிக் கொடுத்த வட்ட வடிவத் தோசையையும் சாப்பிட்டேன். அவன் என்னைக் கூடவே அழைத்தான். அவனுடைய வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனான்.

ஆனால் போன இடம் அந்த மீனாட்சி அழகு நிலையத்துக்குப் பின்புறம். அவனிடம் இருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஏதோ ஒரு கட்சியுடைய கொடி கட்டியிருந்த மூங்கில் கழியைப் பிடுங்கி எடுத்த அவன் என்னை அடித்து நொறுக்கினான். அடுத்த நாள் அழகு நிலையத்தின் குப்பைகளைக் கூட்டி வாரி எடுக்க வந்த போது ராத்திரி முழுவதும் காய்ச்சலில் விரைத்து கிடந்த பதினேழு வயதுப் பையனான என்னை மீனாட்சி அக்கா பார்த்தாள்.


“யாரு?” என்ற கேள்விக்குச் சொல்வதற்கு நான்கரை வயது முதல் உள்ள வரலாறு எனக்கு இருந்தது. மீனாட்சி அக்கா. அந்த அழகு நிலையத்துடைய, எல்லாரும் அவளை மீனாட்சி அக்கா என்றுதான் கூப்பிட்டார்கள். நானும் அவ்வாறே அழைக்க ஆரம்பித்தேன். அக்கா கேட்ட கேள்விக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

அழகு நிலையத்தில் இருந்த அறையில் படுக்க வைத்து காயங்களுக்கு மருந்து தடவிவிட்டாள். குடிக்கக் கஞ்சி கொடுத்தாள். அப்புறம் நான் தூங்கிப் போய்விட்டேன். அடுத்த நாள் கடைக்கு விடுமுறை. ஒரு கவர் ரொட்டியும் பழங்களும் குடிக்கத் தண்ணீரும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தன. கடையின் வாசல் வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. கடையில் கூட்டம் நிறைய இருந்தது. வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்த அக்காவால் நம்ப முடியவில்லை. அழகு நிலையம் சுத்தமாகவும் அழகாகவும் மாறியிருந்தது. “இருந்தாலும் நீ பரவாயில்லயே! நீயே பொறுப்ப எடுத்துகிட்டியே? என்னோட நீயும் எனக்கு உதவியா இரு.

இது பொண்ணுங்களோட ராவணன் கோட்டையாக்கும். இங்க நீ ஒரு பொண்ணு மாதிரியே நடந்துக்கணும். தெரியுதா?”. அந்த நாள் எனக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்தது. எல்லா வேலைகளையும் சீக்கிரமேக் கற்றுக் கொண்டேன். நகம் முதல் முகம் வரை உள்ள பெண்ணின் அழகுகளைக் கண்டறிய ஆரம்பித்தேன்.

“மீனாட்சி? இது என்னடி புது ஜீவியா இருக்கு?”. டாக்டர் ஜமீளா என்னுடைய நவரசப் பாவத்தைப் பார்த்துக் கேட்டாள். “உபத்திரவம் செய்யாத ஆள். வேல நல்லாத் தெரியும். ஊர்க்காரன்”. மீனாட்சி அக்கா ஓட்டை ஒடிசல்களை பூசி மெழுகி அடைத்தாள். நாட்கள் ஆக ஆகப் பலருக்கும் என்னைப் பிடித்துவிட்டது. இப்போது ஜமீளா வந்தால் தலை முதல் கால் வரை பெரிய பாவாடை போன்ற ஒன்றை அணிந்து கொண்டு “டேய் பையா. சீக்கிரமா மேக்கப்ப போடுடா” என்றாள்.

இதற்கு நடுவில் அக்காவின் தூண்டுதலால் பி ஏவை முடித்தேன். பிறகு இங்கே வரும் ஜெஸ்ஸி டீச்சருடைய பரிந்துரையில் பி எட் படிக்க மனு போட்டேன். சனிக்கிழமைதான் அந்தச் சம்பவம் நடந்தது. விஸ்மயா ஹோட்டல் முதலாளியின் மனைவி முக அலங்காரத்துக்கு அங்கு வந்தாள். நாந்தான் அலங்காரம் செய்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது தெரியாமல் என்னுடைய கை அவளுடைய காதைத் தொட்டுவிட்டது.

உடனே அவள் பெரிதாக ஒரு ஆட்டம் ஆடினாள். முகத்தில் ஓங்கி ஒரு அடி! அக்கா ஓடி வந்தாள். முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த அவளை ஒரே தள்ளு தள்ளிவிட்டாள். “ஏய். பாத்துக்கறேண்டி” என்று சொல்லிவிட்டு அவள் ஆக்ரோஷத்தோடு கடையை விட்டு இறங்கிப் போனாள். பத்து நாட்களுக்குப் பிறகு பி எட் சீட்டுக்குரிய அட்மிஷன் கார்டு அக்காவுடைய வீட்டுக்கு வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டேன்.


படிப்புச் செலவுக்கு உரிய ரூபாயை பற்றி ஜெஸ்ஸி டீச்சருடையக் கால்களில் இருந்த விரிசல்களைச் சரி செய்யும் போது சொன்னேன். யாரோ ஒரு ஆள் காலை ஆறு மணிக்கு அழகு நிலையத்துக்கு வருவான் என்று அக்கா போனில் அழைத்துச் சொன்னாள். எட்டு மணிக்கு வெளியில் வந்து நின்ற ஒரு காரில் ஏறி அவள் அதில் போனாள்.

விஷயம் என்ன என்று கேட்டபோது அக்கா சீரியஸாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “இதெல்லாம் ஊர்ல சில மேக்கப் போட்ட ரகசியங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்லி மறைந்தாள். பி எட் வகுப்பில் சேரவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கு நடுவில்தான் அக்கா மகளின் கல்யாணமும் வந்தது.

அழகு நிலையம் சில நாட்கள் பூட்டிக் கிடந்தது. லாட்ஜில் தங்கினேன். காலேஜில் சேரவேண்டிய ஆறு நாட்களுக்கு முன்பு நான் செலவுக்குக் காசு வேண்டும் என்று சொன்னேன். கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அக்கா பதிலாகச் சொன்னாள். அடுத்த நாள் அக்காவின் போன் வந்தது. “காலையில நீ குளிச்சு ரெடியா இரு. கல்யாணத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த டிரஸ்ஸைப் போட்டுக்க. ஒரு கார் எட்டு மணிக்கு வரும். போயிட்டு வா”. அது அன்று வந்த அதே கார். அதற்குள் எங்களுடைய வழக்கமான வாடிக்கையாளராக ஒரு வி ஐ பியின் மனைவி. நான்கு நாட்கள் பயணம். சாப்பாடு. ஓய்வு. அக்கா சொன்ன மேக்கப் போட்ட இரகசியங்களின் சுருள்கள் மெல்ல அவிழ்ந்தன. எனக்கு எல்லாம் புரிந்தது.

“நீ ஒரு ஆம்பள”. என்னை வேறு மாதிரி அதுவரை நினைத்துக் கொண்டிருந்த அவள் என்னுடைய காதோடு சொன்னாள். நான்காவது நாள் காலை. பத்து மணிக்கு க்ளினிக்குக்கு முன்னால் போய்ச் சேர்ந்தேன். நான் காரில் இருந்து இறங்கும் போது சின்ன ஒரு கூட்டம். போலீஸ் ஜீப்புக்கு பின்னால் இருக்கும் மீனாட்சி அக்காவும் எனக்கு முன்னால் நின்று கொண்டு சிரிக்கும் ஹோட்டல்காரனுடைய மனைவியும். ஆச்சரியத்தோடு நான் பார்த்தேன்.

காரில் இருந்து இறங்கியவுடன் என்னை அணைத்து ஒரு முத்தமிட்ட அக்கா என்னிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். அதோடு பி எட் வகுப்பில் சேர செலவுக்கு ஒரு தொகையும். அதில் பாதி கூட எனக்குச் செலவாகவில்லை. வருடங்களுக்கு சில சமயம் ஒரு நறுமண சோப்பின் வாசனை மட்டுமே இருக்கும்.

படிப்பில் தேர்ச்சி பெற்றேன். கல்யாணம் நடந்தது. குழந்தைகளும் புருஷனும் சேர்ந்து தரகராக இருந்த மீனாட்சி அக்காவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். அவள் ரயிலுக்கு முன்னால் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். எல்லாவற்றையும் நினைத்து அழுது கொண்டிருந்த என்னைக் குளியலறையில் இருந்து வெளியில் வந்த என் மனைவி பார்த்தாள்.

என்னைக் கட்டிப் பிடித்தாள். “சும்மா விளையாட்டுக்குத்தானேச் சொன்னேன்”. சொல்லிவிட்டு அவள் எனக்கு முத்தம் கொடுக்கும்போது மேக்கப் போட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரிய இரகசியத்தை நான் அவளிடம் சொல்லவேயில்லை!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p73.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License