இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

செல்வியம்மா டாக்டர்

மலையாளம்: ஜெய்கப் ஆப்ரகாம்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

தைக்காடு இசக்கியம்மன் கோயில் நடையில்தான் பிரசவ ஆஸ்பத்திரி. இரண்டு பெரிய ஆலமரங்கள் கேட்டுக்குக் காவலாக உண்டு. “தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில்” என்று சொன்னால்தான் சாதாரணமானவர்களுக்குப் புரியும். குழந்தைகளுக்கான ஆடைகள், பக்கெட், துண்டு, சோப்பு போன்ற சாமான்கள் விற்கும் கடைகளும் ஹோட்டல்களும் ஆட்டோ டாக்சி ஸ்டாண்டும் ஆஸ்பத்திரியைப் பொதிந்து நிற்கின்றன.

பொது இடத்தில் மேம்பாலம் வரை பெரும் பாம்பைப் போல ஒற்றைக்குக் கடந்து பாலத்தில் வைத்து சாலை மூன்றாகப் பிரியும். இணை சேர்ந்து கிடக்கும் இரயில் தண்டவாளங்களைத் தூரத்தில் இருந்து பார்க்கலாம். புறப்படத் தயாராக நிற்கும் இரயில்கள் கூவி அழைக்கும். அதற்கப்புறம் தம்பானூர் பஸ் ஸ்டாண்டு. சுற்றிலும் ஆட்கள் பெருகி நிறைந்திருக்கும் இடங்கள்.

அரசாங்கப் பிரசவ ஆஸ்பத்திரி என்பதால் ஒரே கூட்டம். பாவப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் பிரச்சனை பிரசவம்தான். இவ்வளவு நெருக்கடிகளுக்கும் இடையில்தான் என்னுடைய இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது. வார்டில் ரஜினியுடைய அம்மாவும் இருந்தாள். அவளுடைய முதல் பிரசவமும் இங்கேதான்.

அன்று ஓடிய ஓட்டம். பக்கெட்டிற்கும் சோப்புக்கும் மருந்துக்கும் மந்திரத்துக்கும்... ஓடடா ஓட்டம்! பெரிய ஓட்டம்! இதைப் பற்றி நினைக்காமல் சமாதானத்தோடு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தில் கிடைத்த தைரியத்தோடு அவள் இருக்கிறாள். பெட்டிக்கடையில் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தேன்.

இசக்கி அம்மன் கோயிலில் ஒரே மேளதாளக் கொண்டாட்டம். கர்ப்பிணிகளையும் பிறக்கும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பது போல இருந்தது அது. இந்த சிறிய / பெரிய உலகத்தில்தான் மூன்று நான்கு நாட்களாக வாழ்க்கை. முதல் குழந்தை தம்பி வீட்டில். இவ்வளவு நாள் ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தது.

இப்போது அவனுக்கு ஸ்கூலுக்குப் போகமுடியாத நிலை. பெட்டிக்கடையைச் சுற்றிலும் சிகரெட் புகைப்பவர்கள் அங்குமிங்குமாக இருந்தார்கள். அவர்களிடையில் சில உரையாடல்களும் உண்டு. கவலைகள், கனவுகள், எல்லாம் அதில் கலந்திருந்தன. மனைவியின் முதல் பிரசவத்திற்காக வந்திருந்த இரண்டு பேரின் பேச்சுகளுக்கு நான் காது கொடுத்தேன்.


“அவள விட எனக்குத்தான் டென்ஷன். சில சமயத்துல டென்ஷன் அதிகமாகறப்ப ஒரு சிகரெட் பிடிக்கணும்”. பக்கத்தில் நின்றவன் புகையைப் பரப்பினான். “அடேய். நாம எதுக்காகடா டென்ஷன் ஆகணும். பொம்பளைங்கதான் பிரசவிக்கறவங்க. எனக்குப் பயமில்ல. அவளுக்குத்தான் பயம்”. அவன் பயிற்சி பெற்றவனைப் போல புகை வளையங்களை உண்டாக்கினான்.

காரமான ஒரு சிகரெட்டை பிடித்துக் கொண்டிருந்த வயதான மாமா அந்த உரையாடலில் சேர்ந்து கொண்டான். “நீங்க நினைக்கறது மாதிரி பிரசவம்ங்கறது சின்ன விஷயமில்ல. பொண்ணுன்னு சொன்னா தேவியாக்கும் தேவி. அம்மன்”. ஏதோ ஒரு சம்பவத்தை சொல்லத் துடிப்பது போல இருந்தது அந்தப் பேச்சு. “என் மகளோட மூனாவது பிரசவம் அது.

அவளோட அம்மா பிரசவிச்சதும் இங்கதான். அன்னிக்கு அவ குழந்தையப் பெத்தெடுத்துகிட்டு வர்றதுக்கு முன்னால...! தீயைத்தான் நான் தின்னுகிட்டு இருந்தேன். அந்த அளவுக்கு மன உலைச்சல். அப்பப்பா!”. தொண்டையில் இருந்ததை காரித் துப்பிக் குரலை நன்றாக்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான். “இன்னிக்கு மாதிரி அன்னிக்கு ஒன்னும் இல்லயே?

இத்தன வசதிங்க ஒன்னும் இல்லயே? முப்பது நாப்பது வருஷங்களுக்கு முன்னால நடந்த கதையாக்கும். செல்வியம்மா டாக்டர் இருந்ததுனால தப்பிச்சேன்னு சொல்லணும்”. அவன் கோயிலை நோக்கிக் கைகளைத் தூக்கித் தொழுது கண்களை மூடிக்கொண்டான். மீதியைச் சொல்வதற்காக எரிந்து அணைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசித் தடவையாக இன்னும் ஒரு முறை ஊதினான்.

“இவளோட அம்மா, அதாவது என்னோட மனைவி ஒரு நோயாளி. கர்ப்பிணியானதுக்கு அப்புறம் உடம்பு இன்னும் மோசமாயிடுச்சு. பாறசாலையைச் சேர்ந்த செல்வியம்மா டாக்டர்தான் இந்த ஆஸ்பத்திருயில முக்கியமான பிரசவ டாக்டர்”. அந்தக் காலத்தையே கண்ணில் காண்பது போல அவனுடைய முகம் மலர்ந்தது.


நாங்க நெய்யாற்றங்கரா காரங்க. எனக்கு சிட்டின்னு சொன்னா திருவனந்தபுரம்தான். எல்லாத்துக்கும் வண்டி ஏறி இங்க வரணும். ஒரு தடவ வந்தா பல வேலைங்களயும் பாத்துக்கு போலாம்”. முடிந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான். இளம் சந்தனக் கலர் டெர்லின் ஷர்ட்டும் வேட்டியும் அணிந்து கொண்டிருந்தான்.

நெற்றியில் சந்தனப் பொட்டு. தாடி உரோமங்கள் நிறைந்து எழும்பி அடங்கிய அந்த முக பாவம் அவனுக்கு ஒரு சாமியார் போன்ற தோற்றத்தை அளித்தது. அவனுக்கு ஒரு தனித்துவமான செல்வம் இருப்பது போல எனக்குத் தோன்றியது. மீதிக் கதையைக் கேட்பதற்காக நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.

“அன்னிக்கு இன்னிக்கு மாதிரி வண்டிங்களும் வள்ளங்களும் இல்லயே? கவர்மெண்ட் பஸ்தான் சரணம். உடம்பு முடியாத இவளயும் இழுத்துகிட்டு நான் தம்பானூர்ல இறங்குவேன். ஆஸ்பத்திரிக்கு வருவோம். அன்னிக்கு காலுக்கு நல்ல ஆரோக்கியம் இருந்துச்சு. நல்லா ஓடியாடி வேல செய்யலாம். ஆனா என்ன? மனசு தளர்ந்து போச்சுன்னா போனதுதான்!

இவளுக்கு வேணுங்கறத வாங்கிக் கொடுத்து டாக்டர் செல்வியம்மாவப் பாக்கப் போவோம். அப்புறம் இவளுக்கு வீட்டிலும் சிசுருஷைநடக்க ஆரம்பிச்சது. நம்ம நாயன்மார் சாதியில பிறப்பு, கல்யாணம், சாவு எல்லாம் கொண்டாட்டங்கதானே? கர்ப்பமாயிருக்கறதச் சொல்றது, பிரசவமா இருக்கறப்ப வந்து பாக்கறது, பலகாரங்களோட வரிச வைக்கறது... எல்லாம் ஆசாரங்கதானே?

இதற்கு நடுவில் முதல் பிரசவத்திற்காக வந்திருந்த புருஷன்களில் ஒருவனுடைய மொபைலில் தமிழ்ப் பாட்டு பாடி அழைத்தது. அவன் பட்டென்று பேசி அழைப்பைத் துண்டித்தான். “அவசியமான அழைப்புங்களக் கட் செய்யாதீங்க. விவரம் தெரிஞ்சுக்கறதுக்காக அவங்க அடுத்த முனையில காத்துகிட்டு இருப்பாங்க”. மாமா இளம் வயதுக்காரனைத் திட்டினான்.

“அன்னிக்கு இந்த மாதிரி கையில எடுத்துகிட்டு நடக்க வசதியா போன் ஒன்னும் இல்லயே? ஒரு பஞ்சாயத்துல ஒரு லேண்ட் போன் இருந்தா அதுவே பெரிய புண்ணியம். எங்க சுத்துப்புறத்துல போன் ஒரு இடத்துலயும் இல்ல. விவரம் தெரிஞ்சுக்கணும்னா ஆளு வரணும், இல்ல போய்ப் பாக்கணும். இவளோட விஷயத்துல எல்லாருக்கும் ஒரே கவலை.

அன்னிக்கு எங்க வட்டாரத்துல பிறக்கற குழந்தைங்க எல்லாம் செல்வியம்மா டாக்டரோட கையில இருந்துகிட்டுதான் அது உலகத்த முத தடவையாப் பாக்கும். டாக்டருன்னு யாரும் கூப்பிடறது இல்லை. அம்மான்னுதான் சொல்வாங்க. காச கையால தொடமாட்டாங்க. உயிரத் தொடற தெய்வத்த போல கர்ப்பிணியோட வயித்தத் தொடுவாங்க.

சில பெரியவங்க சொல்வாங்க. புதுசாக் கல்யாணம் ஆன பையங்ககிட்ட “டேய். பிரசவத்துக்கு செல்வியம்மா டாக்டர் போதும். புரியுதா?”. அந்தப் பகுதியில நடக்கற எல்லாக் கல்யாணத்துக்கும் செல்வியம்மா டாக்டருக்கு அழைப்பு கொடுக்கறது வழக்கம். “அம்மா... தாயே... வரணும்னு சொல்லி கால்ல விழுந்து வரச்சொன்னா அவங்ககிட்ட டாக்டரம்மா சண்டை போடுவாங்க.

பெரும்பாலான கல்யாணத்துக்கும் நேரத்த ஒதுக்கிவச்சுட்டு வந்துடுவாங்க. பட்டுப்புடவை கட்டிகிட்டு அலங்காரமா வருவாங்க. கழுத்து நிறைய ஆபரணங்க. மரத்தால செதுக்கியிருக்கற வேலப்பாடுங்களோட நடுவுல தங்கட்தால ஆன சிலுவை. அது பெரிய நிறஞ்ச மார்புல கிடந்து ஆடும். மண்டபத்துக்குள்ள வந்து மணப்பொண்ண ஆசீர்வதிப்பாங்க. அவளுக்கு வெட்கம் ஏற்படற மாதிரி உரத்த குரல்ல சொல்வாங்க

“அடிப் பொண்ணேய். அதையும் இதையும் சொல்லி காலத்த தாமதிக்காத. சீக்கிரமா ஒரு குழந்தயப் பெத்துக்கப் பாரு. பயப்படவேணாம். உன்னோட பிரசவத்த நான் பாத்துக்கறேன்”. புதுப்பொண்ணு வெக்கத்தோடு நிக்கறப்ப அவளோட கன்னத்துல செல்லமா ஒரு கிள்ளு கிள்ளிட்டு மண்டபத்தை விட்டு இறங்கிப் போவாங்க. வெள்ளை நிற அம்பாசிடர் காரோட கதவத் திறந்து பிடிச்சுகிட்டு டிரைவரு நிப்பாரு.

கல்யாணத்துக்கு வந்தா சாப்பாட்டுக்காக நிக்கமாட்டாங்க. பொண்ணுக்கு வாழ்த்து சொல்லி ஏதாச்சும் அன்பளிப்பை கொடுத்துட்டுப் போவாங்க. அம்பாசிடருல ஏறி சுத்திலும் இருக்கறவங்களப் பாத்து கை ஆட்டுவாங்க. மந்திரி வந்துட்டுப் போனது மாடிரி ஒரே கலகலப்பா இருக்கும். உண்டாகும். என்னோட கல்யாணத்துக்கும் வந்தாங்க.


இவள கிள்ளி சீக்கிரமே ஒரு குழந்தயப் பெத்துக்கன்னும் சொல்லிட்டுப் போனாங்க”. வயதான மாமா கதையைச் சொல்வதற்கு நடுவில் பெட்டிக்கடையின் அடியில் இருந்து ஒரு நாய்க்குட்டியின் அழுகை சத்தம் கேட்டது. இரண்டு நாய்க்குட்டிகள் அம்மா நாயின் மார்பைச் சப்பிக்கொண்டு கிடந்தன. அவன் இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்தான்.

சிகரெட் மணம் சுற்றிலும் படர்ந்தது. “செல்வியம்மா டாக்டர் சொன்னது மாதிரியே இவளும் பட்டென்று கர்ப்பிணியாயிட்டா. செக் அப்பும் மருந்துங்களும் எல்லாம் டாக்டரம்மா தான். ஊர்க்காரங்க சொல்ற மாதிரி தோணிச்சு. ஆனா அத்தனயும் சத்தியம். செல்வியம்மா டாக்டர் கூட இருந்தா தெய்வமே கூட இருக்கறது மாதிரிதாண்டா.

அப்பறம் எதுக்காகப் பயப்படணும்? குழப்பம் இல்லாம மாசங்க சீக்கிரமாவே கடந்து போச்சு. பிரசவ தேதியும் நெருங்கிச்சு. நாங்க இங்க வந்துதான் அட்மிட் ஆனோம். இவளுக்கோ பயங்கர வலி. டெலிவரி ரூமுக்குக் கொண்டு போகும் போது அழுகைன்னா ஒரே அழுகை. நான் வேர்த்து விறுவிறுத்துப் போய் வெளியில நின்னுகிட்டு இருந்தேன்.

செல்வியம்மா டாக்டர் வெளியில வந்தாங்க. கொஞ்சம் குழப்பம் இருக்குன்னு சொன்னாங்க. கர்ப்பத்துல குழந்த குடுங்கிப் போய்க் கிடக்குது. நான் அம்மனை பிராத்தனை செஞ்சேன். தளர்ந்து போய் இருந்தேன். கூட இருந்தவங்க எல்லாரும் ஓடி வந்தாங்க. அழுகைக்கு நடுவுலயும் நான் டாக்டரோட நேரத்தப் பாத்துகிட்டே இருந்தேன்.

நான் அலறிகிட்டு இருந்ததப் பாத்து மத்தவங்க “டாக்டர் இருக்காங்க இல்லயா? மத்தவங்க சண்டைக்கு வருவாங்க”ன்னு சொல்லி உபதேசம் செஞ்சாங்க. செல்வியம்மா டாக்டர் எனக்கு பக்கத்துல வந்தாங்க. “டேய். நீ நெய்யாத்தங்கரக்காரன் தானே? அழுதுகிட்டு இருக்கியா? அடேய். உங்கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்லட்டுமா?”.

என்னையும் அழைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் தள்ளிப் போய்நின்றார். வார்டுல இருந்தவங்க எல்லாரும் திகைத்துப் போய் நின்னுகிட்டு இருந்தாங்க”

“உன்னோட பேரு என்ன?”. “நான் பேரை சொன்னேன்.


செல்வியம்மா டாக்டர் லேசா ஒரு சிரிப்பு சிரிச்சாரு. “டேய். குழந்தைக்கு புத்தி இல்லைன்னா நினைக்கற? குழந்தைன்னு சொன்னா பாதித் தெரிஞ்ச ஒரு மனுஷண்டா. அதாவது, பாதி விழிச்சுகிட்டு இருக்கற ஒரு மனுஷன். ஒவ்வொரு குழந்தைக்கும் புத்தியோட ஒரு மூளையும் இருக்கு. எல்லா டாக்டருங்களுக்கும் இது தெரியும். யாரும் வெளியில சொல்றது இல்ல. உண்மையில குழந்தை அது இல்ல. காட்டுல போய் மாட்டிகிட்டா நாம எப்படியாச்சும் வழியக் கண்டுபிடிச்சு வெளியில வருவோம் இல்லயா? அந்த மாதிரி சொந்தமா வழியக் கண்டுபிடிச்சு உன்னோட குழந்தையும் வெளியில வரும். தைரியமா இரு”. சொல்லிட்டு டாக்டரம்மா போனாங்க. அவங்க சொன்னது மாதிரியே நடந்துச்சு. ஒரு குழப்பமும் இல்லாம குழந்தை வெளியில வந்துச்சு. அதனால நீங்க யாரும் டென்ஷனாக வேணாம் பசங்களா. சரி. நான் அங்க போயிட்டுவரேன்”. அவன் அதைச் சொல்லிவிட்டு போனான்.

“பாதி தெளிஞ்ச மனுஷன்தான் குழந்தை”. மாமா கதை சொல்லி முடித்ததை நான் நினைத்துக் கொண்டேன். பெட்டிக்கடையின் அடியில் இருந்து வெளியில் வந்த நாய்க்குட்டி கண்களைத் திறந்து வெளியுலகத்தைப் பார்த்தது. எனக்கு உடனே ரஜினியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நான் வார்டை நோக்கி வேகமாக நடந்தேன்.

(குறிப்பு- தைக்காடு, தம்பானூர், நெய்யாற்றங்கரா, திருவனந்தபுரம் – ஊர்களின் பெயர்கள். மாமா- வயதான ஒரு மனிதன்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p85.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License